அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும்”:ராகுல் காந்தி MP வலியுறுத்தல்..

மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது.அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றிய அமைச்சர் அம்திஷாவின் இப்பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து […]

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் திட்டம்!- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருமபுரியை சேர்ந்த சதீஷ் என்பவரின் தந்தை அருள்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மனைவி மரணமடைந்து விட்டதாகவும், இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தனது மகனுக்கு அவசரகால விடுப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் […]

புரட்சியாளர் அம்பேத்கர் அவமதிப்பு..! – எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நடப்பு நாடாளுமன்ற கூட்ட விவாதத்தின் போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என பேசினார். ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் அரசியல் சாசன […]

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? சீமான் கேள்வி..

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? சீமான் கேள்வி.. கேரள மாநிலத்திலிருந்து மண்ணுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நோய் பரப்பும் மருத்துவக் கழிவுகள் மற்றும் அனைத்தும் தமிழ்நாட்டு எல்லையில் மலைமலையாகக் கொட்டப்படுவது தொடர்கதையாகிவிட்டது. பல ஆண்டுகளாகத் தொடரும் இக்கொடுமைகள் குறித்து தமிழ்நாடு அரசிடம் பலமுறை முறையிட்டும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு கழிவுகள் கொட்டுவதைக் கண்டுகொள்ளாது அலட்சியமாகச் […]

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்..

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான […]

கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம்… காரசாரமான விவாதம்… உறுப்பினர்கள் அடுக்கடுக்கான கேள்விகள்..வீடியோ..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்மானங்கள் வாசிப்பதற்கு முன்பாக 21 வது வார்டு உறுப்பினர் சேக் உசைன் எழுந்து கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களை நியமிப்பதற்கு முன் தகவல் பலகையில் பதிவது இல்லை என்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என்றும் நகர்மன்றத்தில் மாதமாதம் வைக்க கூடிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை […]

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இழிவு படுத்தி பேசினார். இதையடுத்து திமுக தலைமை அறிவிப்பு படி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முததுராமலிங்கம் அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூர் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று நடந்தது. பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, முஹமது மீரா […]

தமிழகத்தில் 5 முனை போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சி; அண்ணாமலை ஆரூடம்..

தமிழகத்தில் 5 முனை போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சி; அண்ணாமலை ஆரூடம்.. தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. 2026ம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், கூட்டணி ஆட்சி தான் அமையும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்த அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: அரசியலுக்கு வந்துள்ள விஜயை நான் வரவேற்கிறேன். உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அரசியலில் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பார். துரோகிளை […]

ரூ.111 கோடி மதிப்பில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் துவக்கி வைத்தார் …

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தனர். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ரூ.111 […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஒன்றிய மந்திரியிடம் மனு..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி சந்தித்து முறையீடு.. இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அளித்த கடிதத்தில் தெரிவித்திருந்ததாவது: சென்னை – தூத்துக்குடிக்கு மானாமதுரை -அபிராமம், பார்த்திபனூர், கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். காரைக்கால் – தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக […]

காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். 70,000 காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை கல்வித் தகுதி அடிப்படையில் 50 சதவீதம் நிரப்ப வேண்டும். ரூ. […]

பாவூர்சத்திரம் ரயில்வே பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; ராபர்ட் புரூஸ் எம்.பி ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை புதுமைபடுத்தி புதிய ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்றும் நெல்லை எம்..பி ராபர்ட் புரூஸ் ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை புதுடெல்லியில் நேரில் சந்தித்து நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை மனு அளித்தார்.    அந்த மனுவில் மதுரை-பெங்களூர் வந்தே பாரத் […]

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு 2025 ஜூன் 14 வரை நீட்டிப்பு..

ஆதார் கார்டு, இந்திய மக்களின் அடையாளமாக இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்சு உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயம் ஆகும். எனவே அனைவரும் தற்போது ஆதார் கார்டு வைத்திருக்கிறார்கள்.இந்த நிலையில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்துகிறது. அதற்காக 10 ஆண்டுகள் ஆன பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் […]

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும்; சந்தையில் இலவசமாக கிடைக்கும் என ரஷ்யா அதிரடி அறிவிப்பு..

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல். புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய நாட்டு செய்தி முகமை TASS உறுதி செய்துள்ளது. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் […]

குற்றாலம் அருவியில் கலெக்டர் ஆய்வினை தொடர்ந்து குளிக்க அனுமதி..

குற்றாலம் அருவியில் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆய்வினை தொடர்ந்து பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையால் அணைகள், குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி தீர்த்தது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றாலத்தில் […]

தென்காசியில் புதிய இ-சேவை மையம் திறப்பு..

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மைய கட்டிடத்தில், தமிழ்நாடு அரசின் புதிய இ-சேவை மையம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தினை 18.12.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் புதிய இ-சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது.  புதிய இ-சேவை மையத்தில், சாதிச் சான்றிதழ், […]

“சிறுபான்மையினருக்கு என்றென்றும் அரணாகத் திகழும் திராவிட மாடல் அரசு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2024) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழாவில் ஆற்றிய உரை:- அனைவருக்கும் என் மாலை வணக்கம். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறும் சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழாவிற்கு என்னுடைய வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் சூழல்களையெல்லாம் பார்க்கும்போது, சிறுபான்மையினர் நலனில் அக்கறையும் – ஜனநாயகத்தின் மீது பற்றும் […]

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சியில் பறிக்கப்பட்ட தபால் நிலைய தரத்தைத் திருப்பி‌ கொடுக்க‌ வேண்டும்.! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் வேதாளை கிராமம்  என்பது மிகவும் பழைமையான பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சிறுபான்மை சமுதாய மக்களும், மீனவர்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த ஊராட்சியில் 6000 வாக்காளர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக 623804 என்ற அஞ்சல் குறியீட்டைக் கொண்ட இந்த ஊராட்சியின் தபால் நிலையம் […]

மண்டபம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் நாளை (19/12/2024) மின் தடை : மின்வாரியம் அறிவிப்பு..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (19.12.2024) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா பகுதிகளில் நாளை காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.  முதுகுளத்தூர் துணை […]

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!- தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) நன்றி அறிக்கை..

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!- தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) நன்றி அறிக்கை.. இது தொடர்பாக “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் மீது அக்கறையோடும் கரிசனத்தோடும் நடந்து கொள்ளும் தமிழக முதல்வர் அவர்கள் மீண்டும் உதவித்தொகையினை அதிகரித்து அரசாணை வெளியிட்டது […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!