மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.. சில மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்தியாசங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்களுடன் அதற்குண்டான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும். மதுபானங்களை விற்பனை செய்யும்போது மட்டுமே பாட்டில்களை ஸ்கேன் செய்ய வேண்டும். மதுபானங்களை முன்கூட்டியே […]
Category: செய்திகள்
ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை! ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம்!- தொல்.திருமாவளவன் அறிவிப்பு..
கட்சியில் இருந்து, விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின், ‘வாய்ஸ் ஆப் காமன்’ அமைப்பு சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா, சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்றார். தி.மு.க.,வை நேரடியாக தாக்கி பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், […]
“பால் முகவர்கள் சங்கத்தின் 17ம் ஆண்டு பொதுக்குழு, 18ம் ஆண்டுக்கான (2025) நிர்வாகிகள் தேர்வு!-18வது முறை மாநில தலைவராக சு.ஆ.பொன்னுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்..
“பால் முகவர்கள் சங்கத்தின் 17ம் ஆண்டு பொதுக்குழு, 18ம் ஆண்டுக்கான (2025) நிர்வாகிகள் தேர்வு!-18வது முறை மாநில தலைவராக சு.ஆ.பொன்னுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் 18வது நிர்வாகக் குழுவை தேர்வு செய்வதற்கான மாநில பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன் அவர்களின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) மாலை 3.00மணியளவில் சென்னை, எருக்கஞ்சேரியில் உள்ள சக்தி பாலக கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு […]
பழனியில் பல மாதங்களாக பூட்டி கிடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகம், கோர்ட் உத்தரவின் பேரில் மீண்டும் திறப்பு..
பழனியில் பல மாதங்களாக பூட்டி கிடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் கோர்ட் உத்தரவின் பேரில் மீண்டும் திறப்பு.. பழனி ரயில்வே பீடர் சாலையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம் எனக்கூறி இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அலுவலகம் தமாக விற்கு சொந்தம் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தமிழ் மாநில […]
சிரியாவை சிதறடித்த கிளர்ச்சியாளர்கள்! ரஷ்யாவில் தஞ்சம் புகுந்த அதிபர் ஆசாத்..
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு இரு தசாப்தங்களாக நடந்து வந்த சூழலில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். இந்த சூழலில் டமாஸ்கஸ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால், பாதுகாப்பு தேடி அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் இருந்து வெளியேறி விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்வது குறித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது..!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்வது குறித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது..! தமிழக சட்டப்பேரவை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய […]
பா.ஜ.க-வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? – செந்தில் பாலாஜி கேள்வி..
பா.ஜ.க-வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? – செந்தில் பாலாஜி கேள்வி. பா.ஜ.க-வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: “தமிழக முதல்வர், எந்த காலத்திலும் குறிப்பாக மின்வாரியம் சம்பந்தமாக அதானியை சந்திக்கவில்லை என […]
பழைய ஸ்கூட்டரை இ-வாகனமாக மாற்றி பிரமிக்க வைக்கும் கோவை பெண்!!
பழைய ஸ்கூட்டரை இ-வாகனமாக மாற்றி பிரமிக்க வைக்கும் கோவை பெண்!! கோவையை சேர்ந்தவர் சிவசங்கரி, எம்.டெக்., செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படித்தவர். படித்த படிப்பின் வாயிலாக புதிய மின்னணு தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதன் படி அன்றாடம் பயன்படுத்தும் இரு சக்கர பெட்ரோல் வாகனங்களை, அப்படியே மின்சார வாகனங்களாக மாற்றித்தருகிறார். இதற்கு புனேவிலுள்ள இந்திய அரசின் ‘ஆட்டோமேட்டிவ் ரிசர்ச் அசோசியேசன் ஆப் இந்தியா’ (ஏ.ஆர்.ஏ.ஐ.) மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையம் ( ஸ்டேட் […]
தேவகோட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..
உத்திர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் ஆறு இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பாஜக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு தலைவர் சாதிக் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் சத்திய பிரபு செல்வராஜ், ஜனநாயக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாவல், கண்டன உரை நிகழ்த்தினர். தேவகோட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் கமருல் ஜமான், நகர இஸ்லாமிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மொய்னுதீன், சாதிக்பாட்ஷா , மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் : மூன்று பேர் கைது..!
ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரையில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவாளிகள் தப்பி விடாத வண்ணம் கீழக்கரை போலீசாருக்கு பிரிவு போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்த நபர்கள் சென்ற காரில் தீவிர சோதனை செய்தபோது, காரில் நான்கு கிராம் உயர்ரக போதை பொருளான […]
கண்காணிப்பு கேமரா சேவை : எஸ்பி தொடங்கி வைத்தார்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் சின்னஉடப்பங்குளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன் ஏற்பாட்டில் பொருத்தி கண்காணிப்பு கேமராக்களின் சேவையையும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் இன்று துவங்கி வைத்தார். அபிராமம் அருகே பாப்பனம் கிராமத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 4 CCTV கேமராக்களின் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பொதுமக்கள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.
காசநோய் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம்; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
தென்காசியில் “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 07.12.2024 அன்று “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் […]
கீழக்கரை 18 வாலிபர்கள் ஜக்காத் கமிட்டிக்கு தன்னார்வலர் விருது..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) சமூக சேவை, மருத்துவ சேவை, கல்வி சேவை, வட்டியில்லா கடன் உதவிகள், பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. மேலும் கோவையில் தனியார் கல்லூரியில் தமிழக குரல் இணையதளம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் […]
கடையம் அருகே இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 5 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து திருமலையப்பபுரம் திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் […]
மண்டபம் மீனவர் 8 பேருக்கு டிச.20 வரை நீதிமன்ற காவல்: ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு…
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் டி – நகர், மேற்கு வாடி, கோயில் வாடி ஆகிய மீன்பிடி இறக்கு தளங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. இப்படகுகளில் மண்டபம் முகாம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் சகாய ஆன்ட்ரூஸ் ஆகியோரது விசைப்படகுகளில் தொழிலுக்கு சென்ற மீனவர் 8 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் […]
இட ஒதுக்கீடு அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மீண்டும் அமல்படுத்தக்கோரி ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம் பட்டியல் & பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மாநில அரசு அமல்படுத்த கோருவது தொடா்பான ஆலோசனனக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமலிலிருந்த இனச்சுழற்சி அடிபடையில் பதவி வழங்கும் நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள், பட்டியல் & பழங்குடி வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பதவி உயர்வு […]
12-ம் வகுப்பில் படித்த பாடப்பிரிவுக்கு பதிலாக இளங்கலை படிப்பில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சேரலாம்..
12-ம் வகுப்பில் படித்த பாடப்பிரிவுக்கு பதிலாக இளங்கலை படிப்பில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சேரலாம்.. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக பட்டப்படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி தொடர்பாக வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் முக்கியமாக 12-ம் வகுப்பு அல்லது நிலை 4-ல் ஒரு மாணவர் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் சேர முடியும். அதேநேரம் […]
தமிழகத்தில் மீண்டும் கன மழை! பொதுமக்களே உஷார்..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். தமிழகத்தில் டிச.,10ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது’ என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும். டிச.,11ம் தேதி தமிழகம்- இலங்கை கடற்பகுதிகளை நோக்கி […]
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள்!- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 5,556 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.இதுவரை சுமார் 62,000-க்கு மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இசிஜி, எக்ஸ்ரே போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது . இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் இறுதி மட்டுமல்லாமல் தேவைக்கு ஏற்ப ஜனவரி மாதமும் […]
மண்டபம் மீனவர் 8 பேர் 2 விசைப்படகு களுடன் கைது:இலங்கை கடற்படை நடவடிக்கை..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றனர். இலங்கை யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மண்டபம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் ஆஸ்டின் ஆகியோரது விசைப்படகுகளில் இருந்த சேசு 47, காளி 50, கண்ணன் 55, முத்துராஜ் 45, பத்தரப்பன் 55 உள்பட 8 மீனவர்களை […]
You must be logged in to post a comment.