முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ப்ட 1000 பேர் வரையில் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசின் செயல்திறனைப் பாராட்டியும், தமிழ்நாடு மீதான மத்திய அரசின் வஞ்சகத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். அவற்றில் சில முக்கியத் […]
Category: செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகள்! சர்ச்சைக்கு உள்ளான நிலையில் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லும் அதிகாரிகள்..
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. கேரளத்திற்கு 16 லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது, இதனால் கேரள எல்லை வரை தமிழக அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு […]
ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டறிந்துவிட்டதா? அலசுகிறார் அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்!!
ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டறிந்துவிட்டதா? அலசுகிறார் அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்!! புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்துக் காணும் முன், புற்று நோய் குறித்து இந்தப் பதிவிற்கு சம்பந்தமான ஒரு சிறிய பார்வை, புற்று நோய் என்பது குறிப்பிட்ட இடத்தில் செல்கள் சொல்பேச்சுக் கேட்க மறுத்து அதிகமான எண்ணிக்கையில் பெருகுதல் அதிகமான அளவு வளர்ச்சி அடைதல் தனக்கான காலம் முடிந்தால் மரணிக்க மறுத்தல், உடலின் எதிர்ப்பு சக்தியையும் மீறி சாகாவரம் பெற்று தொடர்ந்து கட்டுப்பாடற்று வளருதல். தனக்குத் […]
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது..
வங்கக் கடலில் மையம்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நீடிக்கக் கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் […]
பாமகவின் 45 தீர்மானங்களை நிறைவேற்றினாலே போதும், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும் என!- அன்புமணி ராமதாஸ் பேச்சு..
பாமகவின் 45 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றினால் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை- செங்கம் சாலை, ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் இன்று தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்து […]
தேவையில்லாமல் எதிர்கட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர் – தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.,இந்நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்.,ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை ஏனென்றால் ஆளும் […]
நெல்லையில் பழிக்கு பழி நடந்த கொலை; காவல்துறை விசாரணையில் தகவல்..
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் விசாரணையில், பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, திருநெல்வேலி மாநகரம் பாளையங் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு 20.12.2024 ஆம் தேதி […]
அகில இந்திய வானொலியான மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி..
அகில இந்திய வானொலியான மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி.. தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் அனைத்து மாணவர்களும் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் பள்ளிக்கே வந்து தேவகோட்டையிலேயே ஒலிபதிவு செய்யப்பட்டது. மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆண்டுதோறும் சென்று நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்வது வழக்கம். ஆனால் இந்த […]
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க செல்பி எடுத்த மாணவர்கள்..
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க செல்பி எடுத்த மாணவர்கள்.. தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க திருக்குறள் எழுதப்பட்ட இடத்தில் நின்று, ‘செல்பி’ எடுத்து அனுப்பினார்கள் . கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், மாணவர்களிடம் திருக்குறளை எடுத்துச் […]
உசிலம்பட்டியில் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டி கிராமத்தில் குப்பை கிடங்கில் அருகில் பண்ணைப் பட்டி ஓடைகளில் நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகள் சேகரித்து வைப்பதாகவும் அப்பகுதியில் குப்பை கிடங்கு அகற்றக் கோரியும் ,உசிலம்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி 24 வார்டுகளில் அள்ளப்படும் குப்பைகளை அந்த வார்டுகளிலே வைத்து தீ வைப்பதை கண்டித்து பண்ணப்பட்டி குப்பை கிடங்கில் அருகில் மயானம் உள்ளது மற்றும் விவசாய விலை நிலங்கள் அதிக அளவில் உள்ளது. அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை […]
உலக தியான தினம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் உலக தியான தினம் கடைப்பிடிக்கப்பட்டது .பள்ளி தாளாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரம்ம குமாரிகள் மதுரை அமைப்பினை சேர்ந்த சகோதரி ஆசா கலந்து கொண்டு உலக தியான தினத்தின் முக்கியத்துவத்தை சொல்லி ,மாணவர்கள் உலக அமைதிக்காகவும் மன அழுத்தத்தை குறைத்திடவும் தியான பயிற்சியை கற்றுக் கொடுத்தார்கள்.இன்றைய தினம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நிறைவாக பிரம்ம குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் சகோதரர் பாலமுருகன் நன்றி […]
குரூப் 2, 2ஏ தேர்வு OMR ஷீட் முறையிலேயே நடைபெறும்!- டிஎன்பிஎஸ்சி..
குரூப் 2, 2ஏ தேர்வு OMR ஷீட் முறையிலேயே நடைபெறும்!- டிஎன்பிஎஸ்சி.. தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 தேர்வர்களில் 5,83,467 தேர்வர்கள் முதல்நிலை தேர்வு எழுதினர். குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் கடந்த […]
மீண்டும் எகிறியது ஆபரணத் தங்கம் விலை..
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (டிச. 21) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கும், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.56,320-க்கும், கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.7,040-க்கும் […]
உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன..?
உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன..? ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது. எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – […]
இராமநாதபுரத்தில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு..
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஓய்வூதியர் தின கருத்தரங்கு நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிக்கண்ணு வரவேற்றார். ஓய்வூதியர்களும் மருத்துவமும் குறித்து டாக்டர் சந்திரசேகரன் பேசினார். மூத்தோர் 3 பேர் கவுரவிக்கப்பட்டனர். மாநில துணைத்தலைவர் குப்பன் சிறப்புரை ஆற்றினார். ஓய்வூதியர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் விஜயராகவன், முதுகுளத்தூர் வட்ட தலைவர் சிவனுபூவன், மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சை, போக்குவரத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் கேசவன், […]
பிரபல செயின் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த பழனி காவல்துறையினர்..
பிரபல செயின் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த பழனி காவல்துறையினர்.. மதுரையை சேர்ந்த கவாஸ்கர்(35) என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு பழனியில் செயின் பறிப்பில் ஈடுபட்டார். பழநி சிவகிரி பட்டி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சார்பு ஆய்வாளர்கள் விஜய் மூர்த்தி, தங்கராஜ், காவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வேகமாக பைக்கில் வந்த கவாஸ்கரரை காவலர்கள் நிறுத்த முயன்றனர். அப்போது வாகனத்தை நிறுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு […]
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது.” எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (சனிக்கிழமை) […]
ஏர்வாடி, வாலிநோக்கம் துணை நிலையங்களில் நாளை (21/12/2024) மின் தடை..
இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (டிச.21) நடைபெற உள்ளது. இதனால் சிக்கல், கீழ, மேலசெல்வனூர். கீழ, மேலகிடாரம், காவாகுளம், கொத்தங்குளம், சிறைக்குளம், பண்ணந்தை, தத்தங்குடி, மறவாய்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்குடி, வாலிநோக்கம் , தமிழ்நாடு அரசு, தனியார் உப்பு நிறுவனங்கள், இறால் பண்ணை பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர்மாலதி […]
தேசிய கராத்தே போட்டி : இரட்டை. சகோதரிகள் வெற்றி..
இராமநாதபுரம் : டில்லி டால்க டோர உள் விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி டிச.12 முதல் 15 வரை நடந்தது. 7 வயதிற்கு மேல் 14 வயதிற்குட்பட்டோர், சப்-ஜூனியர் மகளிர் 30 கிலோ எடை குமித் தே பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4ம் வகுப்பு மாணவி ரித்யா, தமிழ்நாடு சார்பில் பங்கேற்று இறுதிச்சுற்றில் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்தார். இவரது சகோதரி ரிதன்யா முதல் […]
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ராமநாதபுரம், தங்கச்சிமடம் பகுதிகளில் திமுக ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இழிவு படுத்தி பேசினார். இதையடுத்து திமுக தலைமை அறிவிப்பு படி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முததுராமலிங்கம் அறிவுறுத்தல் படி ராமநாதபுரத்தில் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர் கார் மேகம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக […]
You must be logged in to post a comment.