திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இஞ்ஜினை சோதித்து புதிய மைல்கல்லை எட்டியது இஸ்ரோ..!

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இஞ்ஜினை சோதித்து புதிய மைல்கல்லை எட்டியது இஸ்ரோ..! வழக்கமான ராக்கெட் என்ஜின்களை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் மற்றும் மிகவும் சிக்கலான விண்வெளி பயணங்களை மேற்கொள்ள உதவும் கிரையோஜெனிக் இஞ்ஜினை சோதித்தது இஸ்ரோ. மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் ப்ரோபல்ஷன் காம்ப்ளக்ஸில், கிரையோஜெனிக் இஞ்ஜினை சாதாரண சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (Ambient Contions) சோதித்து வெற்றிகண்டுள்ளது. திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்ஸிஜன் போன்ற அதீத குளிரூட்டப்பட்ட திரவ எரிபொருட்கள் இந்த […]

பழநியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 4- ம் ஆண்டு துவக்க விழா..

பழனி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழனி மாவட்ட. 4 ஆம் ஆண்டு துவக்க விழா மாவட்ட தலைவர் ஜே.பி. சரவணன் தலைமையில் நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பி செந்தில்குமார்,பழனி நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி,நகர மன்ற துணைத் தலைவர் கந்தசாமி ,திமுக நகர செயலாளர் வேலுமணி,மேலும் வணிகர் சங்க நிர்வாகிகளான கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர […]

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு..

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. செப். 14ம் தேதி நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள், 57 நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் www.tnpscresults.tn.gov.in இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வனக் காவலர், துணை வணிக வரி அலுவலர், வனவர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.

தொடர்கன மழை எதிரொலி: திருவண்ணாமலை விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை..

தொடர்கன மழை எதிரொலி: திருவண்ணாமலை விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை.. திருவண்ணாமலையில் கடந்த 1ம் தேதி பெய்த் கனமழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் புதையுண்டு உயிரிழந்தனர். இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருவிழாவான கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய விழாவாக மகாதீபம் மற்றும் பரணி தீபம் கருதப்படுகிறது. வரும் டிச.13ம் தேதி அதிகாலை கோவிலின் கருவறை முன்பு 4 மணியளவில் பரணி தீபமும் […]

ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்..

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிச.,12) […]

டங்ஸ்டன் விவகாரம், சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.இந்த நிலையில் […]

திருவண்ணாமலைசாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு! திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த டிசம்பர் 1-ந்தேதி நள்ளிரவு மற்றும் 2-ந் தேதி அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை தெரிவித்திருந்தது. பின்னர், மழையின் தாக்கம் […]

தமிழியக்கம் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பகத்சிங் மணிமண்டபத்தில் கே.எம்.எஸ். சிந்தனைச் சோலை கூட்ட அரங்கில் தமிழியக்கம் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் லண்டன் முருகேசன் பிள்ளை தலைமையில் நடந்தது. சிந்தனைச் சோலை நிறுவுநர் பாரதி புகழ் வாணன் தெய்வசிகாமணி வரவேற்றார். தமிழியக்கம் பொது செயலாளர் அப்துல்காதர், செயலாளர் சுகுமாறன், அமைப்பு செயலாளர் வணங்காமுடி, இணை அமைப்பு செயலாளர் சிதம்பர பாரதி, மண்டல செயலாளர் கார்த்திகேயன் நோக்கம் செயல்பாடுகள் பற்றி பேசினர். மணிபாரதி தொகுத்து வழங்கினார். தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு! இன்றும் நாளையும் கடும் கன மழை இருக்கும்..

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும்.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி காரைக்காலில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.13, […]

இலங்கை வாலிபர் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மண்டியிட்டு தர்ணா.. வீடியோ..

இராமநாதபுரம் : தன்னை தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் இல்லையேல் உரிய அடையாள அட்டை வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இலங்கை வாலிபர் மண்டியிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இலங்கையில் கடந்த 1983 ல் ஏற்பட்ட உள் நாட்டு போர் காரணமாக 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜாய் (30) தனது 9 வயதில் இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடி வந்தார். இதையடுத்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு […]

 “டிஜிட்டல் அரஸ்ட்” செய்திருப்பதாக கூறி ரூ.8 லட்சம் அபேஸ், மும்பை ஆசாமி அதிரடி கைது – திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் பர பர நடவடிக்கை..

 “டிஜிட்டல் அரஸ்ட்” செய்திருப்பதாக கூறி ரூ.8 லட்சம் அபேஸ், மும்பை ஆசாமி அதிரடி கைது – திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் பர பர நடவடிக்கை.. திண்டுக்கல் பழனியை சேர்ந்த அரவிந்த்(22) இவருக்கு செல்போனில் பேசிய நபர், தான் மும்பை போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு மூலம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும். உங்களை ‘டிஜிட்டல்அரெஸ்ட்’ செய்து இருக்கிறோம் ஆகவே உடனடியாக தனி அறைக்கு சென்று ‘ஸ்கைப்’ […]

பழனியில் தூய்மை பணியாளர் அரசு அலுவலக அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

பழனியில் தூய்மை பணியாளர் அரசு அலுவலக அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர் நகரை சேர்ந்தவர் பாபு.(38) பழனி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த பாபுவுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்திருந்த பாபு வழக்கம் போல இன்றும் காலை முதல் தூய்மை பணிக்கு சென்றார். இந்நிலையில் இன்று இரவு 8மணியளவில் பாபு பழனி காந்தி ரோட்டில் […]

அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை: இதுவா சமூகநீதி காக்கும் அரசு?பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்..

அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை: இதுவா சமூகநீதி காக்கும் அரசு?பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.. தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியாளர்களாக பணியாற்றி வரும் 30 ஆயிரம் பேருக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மிக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தைக் கூட ஓராண்டாக வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. […]

சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்க! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..

டங்ஸ்டன் கனிம சுரங்கம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது எனவும், மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்தால், கலாச்சார மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை. எனவே கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! என்றும் மக்களவையில் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.  மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கனிமொழி எம்.பி பேசியதாவது: “தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் […]

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை! பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை…

கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், டிச.12-ஆம் தேதி சென்னை தொடங்கி […]

கடை வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி  வணிகர்கள் ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் :வணிக நிறுவனங்கள் செலுத்தும் கடை வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்,  உள்ளாட்சி சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.  மத்திய அரசு 10.10.2024 முதல் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. உள்ளாட்சிகளுக்கு செலுத்தவேண்டிய சொத்து வரியை கடைகளுக்கு 100% வரை 2022-2023 காலத்தில் உயர்த்திய தமிழக அரசு தற்பொழுது ஆண்டுக்கு ஆண்டு 6% உயர்த்தி உள்ளது, தாமதமாக செலுத்தும் சொத்து வரி மீது ஒவ்வொரு […]

வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு நடவடிக்கை ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலர்களுடன் ஆலோசனை..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஓரிரு தினங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுசுகாதாரம், நகராட்சி, பேரூராட்சிகள் உள்பட […]

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு..

சாம்பவர் வடகரை பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தென்காசி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் சாம்பவர் வடகரை மூக்கன் என்பவரின் மகன் மாடசாமி @ சங்கிலி மாடன் (48)  என்பவரை சாம்பவர் வடகரை காவல் […]

இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகாகவி பாரதி பிறந்த தின விழா..

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அக்காள்மடம் தொடக்கப்பள்ளி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகாகவி பாரதி பிறந்த தின விழா இன்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியை பெட்ரீசியா தலைமை வகித்தார். ஆசிரியை அமுதா வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் வாழ்த்துரை வழங்கினார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து வினாக்கள் கேட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் பாரதி முகமூடி அணிந்து இருந்தனர். இனிப்பு வழங்கப்பட்டது. இல்லம் தேடிக் […]

திருப்புல்லாணி அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.18 கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகள்..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் ரெகுநாதபுரம் ஊராட்சி கிராம மக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 180 முன் மனுக்கள் மீது  அரசின் பல்வேறு துறைகள் மூலம்  நடவடிக்கை எடுத்து 146 பயனாளிகளுக்கு ரூ1.18 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன். வட்டாட்சியர் ஜமால் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!