மெட்ரோ ரயில் சேவை சரி செய்யப்பட்டது! இனி சீராக இயங்கும்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் டெப்போவிற்கு ப்ளூ லைனில் நேரடி ரயில்கள் 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. ரயில்கள் இயக்கப்படுவது தாமதமான நிலையில், சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ரயில் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 8.50 மணி முதல் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லோன் பெற்ற ஒருவர் இறந்து விட்டால் நிலுவைத் தொகையை யார் செலுத்துவது? வங்கிகளின் விதிமுறை என்ன??

லோன் பெற்ற ஒருவர் இறந்து விட்டால் நிலுவைத் தொகையை யார் செலுத்துவது? வங்கிகளின் விதிமுறை என்ன?? இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் சம்பாத்தியத்தை வைத்து செலவுகளைச் சமாளிக்க முடிவதில்லை. இதனால் பலரும் கடன் வாங்குகின்றனர். அப்படி கடன் வாங்கிய பிறகு கடன் வழங்குனர் கூறிய காலகட்டத்திற்குள் அதை திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரு வேலை கடன் வாங்கியவர் ஒரு ஈஎம்ஐ தவணையைத் தவறவிட்டாலும் அதற்கு கடன் வழங்குனர் அபராதம் விதிக்கவோ அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவோ உரிமையுண்டு. […]

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் நியமனம்..

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தார். அதன்பிறகு தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அங்கிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி. ராமசுப்பிரமணியன், கடந்த […]

நெல்லையில் மின்வாரிய இணைப்பு பணி; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மஜகவினர் கலெக்டரிடம் மனு..

நெல்லை மாவட்டத்தில் ஒரே முகவரியில் உள்ள மின் இணைப்புகளை இணைக்கும் பணிகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் மின்வாரியம் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் கடும் மின் கட்டண உயர்வுக்கு […]

தேஜஸ் இரயில் உட்பட, திருச்சி – திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு..

திருச்சி – திண்டுக்கல் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாக கடந்த 10-ந்தேதி தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருச்சி – திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு […]

தென்காசி மாவட்டத்தில் காவலர்களுக்கு CCTV கேமராக்கள் கையாளும் பயிற்சி..

தென்காசி மாவட்டத்தில் காவல் ஆளினர்களுக்கு CCTV கேமராக்களை கையாளும் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. காவல்துறையின் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் CCTV கேமராக்களை கையாளும் பயிற்சி 23.12.2024 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் விஜயசேகர் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த வகுப்பில் காவல் துறையினருக்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்தல், அவற்றில் பதிவாகி இருக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கான […]

ஆர் எஸ் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24/12/2024) மின் தடை..

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் என் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24.12. 2024) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால்  ஆர் எஸ் மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள்மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திரா நகர், ஆவரேந்தல் பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், A.R.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் இன்று (டிச.24) காலை 10 மணி முதல் 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும் […]

கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்:திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!!

திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு துணிகளை கடற்கரையில் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. இக்கோயிலுக்கு திருவிழா காலங்கள் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இப்பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அமைந்துள்ளதால் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் பரிகார பூஜைகள் செய்துவிட்டு கடலில் புனித நீராடும் […]

தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி! பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் மாற்றமில்லை கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.

இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் சார்பாக அரசு மகளிர் கலைக் கல்லூரி நுகர்வோர் தினவிழா…

இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் வணிகவியல் துறை அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தேசிய நுகர்வோர் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  இராமநாதபுரம் நுகர்வோர் நல சங்கம் தலைவர் பிரேம்சதிஸ் , செயலாளர் லதா இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் இளங்கோ , ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார்  கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் தலைவர் செய்யது இப்ராஹிம் ,  இராமநாதபுரம் வட்டாரம் குழந்தை […]

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது..

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.. தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒரு காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலர்களில் மூன்று வருடங்களை நிறைவு செய்து வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி கலந்தாய்வு இன்று 23.12.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன்  தலைமையில் மாவட்ட […]

ராமேஸ்வரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! புதிய கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிப்பு..

ராமேஸ்வரம் – ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! புதிய கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிப்பு.. ராமேஸ்வரம் – ஹூப்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை ஜுன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹூப்ளி – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 4 முதல் ஜுன் 28 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு […]

2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்! விசிக வன்னி அரசு பரபரப்பு கருத்து! இது அவரது தனிப்பட்ட கருத்து! தொல். திருமாவளவன் பதில்..

2026-ல் திமுக கூட்​ட​ணி​யிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப் ​போன்ற கடைநிலை தொண்டர்​களின் மனநிலை என்னவென்​றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்” எம்று விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துத் தெரிவித்திருப்பது மீண்டும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஆறு மாதகாலம்தான் ஆகியிருக்கிறது, ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. […]

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து!

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து! தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரொமோட் செய்யப்பட மாட்டார்கள். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை, அதே வகுப்பில் மீண்டும் தொடர வைக்கலாம். இருப்பினும், இதில் மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய […]

உசிலம்பட்டி தி மு க நகர் கழக சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 250 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோடு எஸ் கே பி மஹாலில் தி மு க நகர் கழகம் சார்பாக துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தி மு க நகர் கழகம் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் 250 பேருக்கு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா […]

வரும் 28 (டிச) மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினம்! முதல்வருக்கு அழைப்பு கொடுத்த விஜய பிரபாகரன்..

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்  தே.மு.தி.க. கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ்  பார்த்தசாரதி, விஜயகாந்த் அவர்களின் மகன் வி.விஜய பிரபாகரன்,  இளைஞரணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்து,  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, அந்நினைவு தின நிகழ்வில் பங்கேற்க  அழைப்பு விடுத்தனர். அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், […]

சில்மிஷ கில்லாடி; மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் அதிரடி கைது! அவரது வண்டவாளங்கள் தற்போது தண்டவாளங்கள் ஏறி வருகிறது..

உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி, கைதியின் மனைவி மற்றும் அவரது மகளான சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மதுரை மாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு வந்த உதவி ஜெயிலரின் முகத்தில் கைதியின் உறவினரான இளம்பெண் பளார் பளார் என அறைந்தார். சட்டையை பிடித்துக் கொண்டு விடவில்லை. இதை வீடியோ எடுத்த சிலர் இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக்கினர். […]

யூடிஆர் (பட்டா,கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை…!

UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது, சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது, கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர் போன்ற பல ஆவண பிழைகளால் ஏற்படும் சிக்கல்கள் பல பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்றம் செய்தல் இலகு அல்ல, வீடுகட்ட அங்கீகாரம் கிடைப்பது கடினம், கடன் […]

காவல் துறை பதவிகளும், பதவிச் சின்னங்களும்; ஓர் முழுப்பார்வை!

காவல் துறை பதவிகளும், பதவிச் சின்னங்களும்; ஓர் முழுப்பார்வை! காவலர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் வரை அனைவரும் காக்கி சீருடையிலிருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படைத் தகுதிகளும் வேறு என்பதை நாம் அறிவோம். காவலர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் வரை அனைவரும் காக்கி சீருடையிலிருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படைத் தகுதிகளும் வேறு என்பதை நாம் அறிவோம். காவல் துறை அலுவலர்களின் உடையிலுள்ள வேறுபாடுகளை சிறிது காண்போம். காவல் […]

சென்னையில் வரும் 28 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு..

புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது: திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். திமுக கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!