சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை திடீரென மூடியதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்துள்ளது

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற கிராமப் பகுதிகளில் நெல் நெல் கொள்முதல் நிலையங்களை பாதியிலேயே மாவட்ட நிர்வாகம் மூடியதால் கொள்முதல் நிலையங்களில் மூடைகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது மேலும் நெல்கள் முளைத்தும் உள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்தும் பணிகளில் தற்போது விவசாயிகள் […]

வடகாடுபட்டியில் மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் விக்கிரமங்கலத்தில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் வடகாடுபட்டி பகுதியில் சாலை அமைக்காமல் பல வருடங்களாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர் மேலும் இது குறித்து அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்திருந்தனர் இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு […]

அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளான அரியூர் கட்டப்புலி நகர் பொதும்பு அதலை ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மாநில அம்மா பேரவை செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி […]

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (19.05.2025) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி […]

அமெரிக்காவில் வாழும் நபரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த நபர் கைது

அமெரிக்காவில் வாழும் நபரின் வங்கிக்கணக்கில் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தை சேர்ந்தவர் முத்துசுவாமி என்பவரது மகன் ராமச்சந்திரன் சுவாமி. இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம், செங்கோட்டை இலத்தூர் சாலையில் வசித்து வரும் ராயல் நாயுடு என்பவரது மகன் […]

ரஜினி பெயரில் இரத்ததான கழகம்..

திரைப்பட நடிகர் ரஜினியின் இயற்பெயரான “சிவாஜி ராவ் கெய்க்வாட்” பெயரில் ரஜினி படித்த பெங்களூரு ஏ.பி.எஸ் கல்லூரியில் ரத்ததானக் கழகம் தொடங்கப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பூ.திருமாறன் தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்து உள்ளது புகழ்பெற்ற ஏ.பி.எஸ் கல்லூரி. இக்கல்லூரியில் 5000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நடிகர் ரஜினி 1964ஆம் ஆண்டில் இங்குள்ள மாலை நேர கல்லூரியில் படித்துள்ளார். அதற்கான ஆதார ஏட்டினை இன்றளவும் முதல்வர் சுதர்ஸன் பாதுகாத்து […]

சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் கம்ப்யூட்டர் கண் பரிசோதனை கண் கண்ணாடி பரிசோதனை மாறுகண் குறைபாடு கண்டறிதல் பரிசோதனை தூரம் மட்டும் கிட்டத்து பார்வை குறைபாடு கண்டறிதல் பரிசோதனை கண்புரை நோய் கண்டறிதல் கண்ணில் தசை வளர்தல் நோய் கண்டறிதல் சர்க்கரை நோய் காரணமாக கண்ணில் ஏற்படும் குறைபாடுகள் குறித்த […]

பாஜக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..

தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58). இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்நிலையில், இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து […]

தென்காசி இ.விலக்கில் வரவேற்பு பூங்கா..

தென்காசி அருகே உள்ள இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தென்காசி அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூர் இ.விலக்கு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரவுண்டானா பராமரிப்பு இன்றி புற்கள் மற்றும் புதர்கள் மண்டி கிடந்தன. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக பசுமை […]

தன்னைக் காப்பாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த மாணவன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் கள்ளழகர் தரிசனம் செய்தனர் இந்த நிலையில் வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவர்கள் இருவர் உயிருக்கு போராடிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதில் விருதுநகர் […]

அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் பப்பாளி உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட துணைச் செயலாளர் விமல் ராஜ் ஒன்றிய செயலாளர்கள் ரவி ஜெயபிரகாஷ் பேரூர் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

உசிலம்பட்டியில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி

பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூவர்ண தேசிய கொடி பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக மூவர்ணக் தேசிய கொடி பேரணி நடைபெற்றது. ஜம்முவில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்த்து அழித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முப்படை வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை ரோடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் […]

விக்கிரமங்கலம் ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா பால்குடம் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமம் இந்து நாடார் உறவின் முறைக்கு சொந்தமான ‌அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சக்தி கரகம் எடுத்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாடார் மகாஜன […]

அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் பலி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சிவகங்கை மாவட்டம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிநடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த மதுரை சத்திரப்பட்டி அருகே உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாழி என்பவரை வலது மார்பில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு […]

அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆய்வு

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் கோவில்பட்டியில் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூட்டத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

உசிலம்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சி நடைபெற்றது.

உசிலம்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சி நடைபெற்றது. திமுக அரசின் நான்காண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உசிலம்பட்டி பொது இடங்களில் காணொளி காட்சியாக திமுக கட்சியின் சாதனைகளை ஒளிபரப்பி வருகின்றனர். உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பாக எல் இ டி திரையின் மூலம் உசிலம்பட்டி நகராட்சி சார்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சியை திமுக நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் […]

சோழவந்தான் அருகே தச்சம்பத் துசதுர்வேத மகா கணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா

சோழவந்தான் அருகே தச்சம்பத்து ஆறுமுகம் திருக்கோவில் அருகே உள்ள சதுர்வேத மகா கணபதி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது நேற்று முன்தினம் முதல் காலயாக பூஜை தொடங்கி நடைபெற்றது இந்த நிலையில் நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜையும் மாலை மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது இன்று அதிகாலை 5 மணி அளவில் நான்காம் கால யாக பூஜை நடைபெற்று சரியாக காலை 9 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தில் சோழவந்தான் தச்சம்பத்து திருவேடகம் மேலக்கால் […]

தென்கரை காளியம்மன் கோவில் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர். பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை காளியம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிரமத்திற்கு உள்ளாகினர் மன்னாடிமங்கலம் பகுதியில் இருந்து திருமங்கலம் செல்லும் குடிநீர் குழாயில் தென்கரை காளியம்மன் கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறிய பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பேருந்துகளை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டிய […]

பாலமேடு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் சம்பவ இடத்தில் வாலிபர் பலி. சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் முடுவார்பட்டி சாலை வழியாக மதுரைக்கு தனது நண்பருடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளையம்பட்டி – முடுவார்பட்டிபிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சுமோ கார் ஒன்று கணேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த அடிபட்டு கணேசன் சம்பவ […]

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 முதல் 2021 காலகட்டத்தில் இருந்த பா.நீதிபதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், இன்று காலை உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மதுரை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!