மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் ஒரு வாரத்திற்கு மேல் அள்ளப்படாத நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குப்பைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டு வருகிறது பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் பேரூராட்சி கழிப்பறை […]
Category: செய்திகள்
வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றுக்கு உட்பட்ட உத்தரகோசமங்கை திருப்புல்லாணி உட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பற்றி தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நடத்தினர். மேலும் விவசாயிகளுக்கு மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நல திட்டங்களையும், அரசு வழங்கக்கூடிய விவசாய அடையாள அட்டைகளையும் பற்றி எடுத்துரைத்தனர் விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கு, தங்களுடைய ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் […]
சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை..!
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று மாநில அளவிலான செயற்குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை ஆட்சி பொறுப்பேற்று நான்கு வருட காலங்களாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாக திமுக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.இதை கண்டித்து நடந்த கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு, 40 ஆண்டுகளாக, 2,000 ரூபாய்தான் ஓய்வூதியம் தரப்படுகிறது. […]
சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார்சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ்கே ஜெயராமன் பொதுக்குழுஉறுப்பினர் ஸ்ரீதர் துணைத் தலைவர் லதா கண்ணன் பிற்பட்டோர் நலவாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி பொருளாளர் எஸ் எம் பாண்டியன் வார்டு கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில் வேல் சிவா கௌதம ராஜா முத்து செல்வி சதீஷ் தொமுச செயலாளர் […]
சோழவந்தான் அருகே பொம்மன் பட்டி காளியம்மன் கோவில் உற்சவ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஸ்ரீ முனியாண்டி சாமி கன்னிமார் தெய்வம் உற்சவர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனர் நேற்று இரவு கிராமத்தின் அருகில் உள்ள ஆற்றப்பகுதியில் இருந்து சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர் பின்னர் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனை நடைபெற்றது இதில்பொம்ம்ன் பட்டி கிராமத்தைச் […]
சோழவந்தான் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி புதுப்பட்டி தென்கரை ஊத்துக்குளி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்திருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது இந்தப் பகுதிகளில் தென்கரை கண்மாய் பாசனம் மூலமும், வைகை பாசனம் மூலமும், நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூல்கிசேதம் அடைந்த தில் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்துள்ளனர் இது குறித்து சோழவந்தான் வெங்கடேசன் எம் […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றதுபூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடினர் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் […]
சோழவந்தானில் ஜெனக புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெனக புஷ்ப கண்ணன் சிலைக்கு நூதன பிரதிஷ்டை விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு கோ பூஜை உடன் யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது பின்னர்தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு குங்குமப்பிரசாதம் தீர்த்தம் சடாரி வழங்கப்பட்டது இதில் கோவில் செயல் அலுவலர் திருக்கோவில் பணியாளர்கள் பணியாளர்கள் மற்றும் மதுரை பாகவதர் […]
சோழவந்தானில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியீடு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் அஜித் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே திரையிடப்பட்டது முன்னதாக காலை 8 மணி முதலே நூற்றுக்கு மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரையரங்கு இருந்த சாலையில் குவிய துவங்கினர் சாலையில் சென்ற பேருந்துகளை வழிமறித்தும் போக்குவரத்தை நிறுத்தியும் குத்தாட்டம் போட்டு தங்கள் உற்சாகத்தை கொண்டாடினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாட்டத்துடன் ஒரு கிலோ மீட்டர் […]
திருப்புவனம் அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் பங்குனி திருவிழா இரண்டாம் நாள் மண்டகப்படி மண்டகப்படியை முன்னிட்டு சாமியும் அம்பாளும் திருவீதி உலா
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு சௌந்திர நாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமான திருக்கோவிலின் பங்குனி திருவிழாவில் இரண்டாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக மண்டகப்படி உபயோதாரர்கள் இருப்பிடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் மண்டபடியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது விழாவில் மீனாட்சி அம்மன் கோவில் […]
திரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் 45 பவுன் நகை திருட்டு.!
திரு உத்தரகோசமங்கை ஆலய கும்பாபிஷேகத்தன்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் சுமார் 45 பவுன் நகை திருட்டு; கொள்ளையர்கள் கைவரிசை செய்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா கடந்த நான்காம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதில் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான […]
பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் புகார்..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரிக்கோட்டை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது இங்கு 60 லட்சம் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளிக்கு அதங்குடி, நெய்வயல், அல்லிக்கோட்டை, இளங்குன்றம், டி நாகனி, மாவிளங்கை, பூவாணி மற்றும் சாந்திபுரம், ஒரிக்கோட்டை சின்ன ஓரிக்கோட்டை சேந்தனி பல கிராமங்களில் உள்ள மாணவர்கள் இப் பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளிக்கு அருகே […]
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு சட்டை அணிந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் தினகரன் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது பொது விநியோகத் திட்டத்தில் தனித்துறையை உருவாக்கிடவும் உணவுப்பொருள் அனைத்தையும் பொட்டலமாக வழங்கிடவும் எடை தெராசுடன் பி ஓ எஸ் மிஷின் […]
வக்பு சட்டம் திருத்த மசோதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரம், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்பபெறக் கோரி ராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் சிறுபான்மை மக்களின் சொத்துக்களை பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டம் திருத்த மசோதாவை கண்டித்தும் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறக்கோரியும் ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]
ரயிலை மறிக்க முயன்ற விவசாயிகள் 500 பேர் கைது..!
ராமநாதபுரத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்த முயன்ற வைகை விவசாயிகள் சங்கத்தினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஒன்று கூடிய 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் மழையால் நோய் பாதி கருகல் நோய் தாக்கி பாதிக்கப்பட்ட மிளகாய் செடிகளில் முளைத்த மிளகாய் வற்றல்களை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக ராமநாதபுரம் […]
காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ‘கட்டிவயல்’ ஊராட்சி தலைவராக முத்துராமலிங்கம் (45) என்பவர் கடந்த 5 வருடமாக ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் எட்டுகுடி கிராமத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம் (42) என்பவரிடம் தனது தேவைக்காக 3 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக காசோலை ஒன்றை கொடுத்து அந்த காசோலை மூலம் இரண்டு மாத காலத்திற்குள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று உறுதி அளித்துள்ளார். அதை நம்பிய […]
தமிழ்நாட்டை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்! வக்ஃப் தீர்மானம் நிராகரிப்பு!- மெகபூபா முப்தி கண்டனம்!
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வக்ஃப் சட்ட திருத்த மசோதாகை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், இதை ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கிறது.குறிப்பாக இந்த மசோதாவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, உச்சநீதிமன்றததை எதிர்க்கட்சிகள் நாடியுள்ளன. இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,ஜமாயத் உலமா, சமஸ்த கேரளா ஜாமாயத் உலமா, […]
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்திற்குசர்வீஸ் ரோடு இல்லாததால் 5 கிராம மக்கள் அவதி
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே முறையாக சர்வீஸ் சாலை அமைக்காததால் ரயில்வே மேம்பாலத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ள கிராம மக்கள் உசிலம்பட்டி திருமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்வதில் தற்போது வரை சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர் சர்வீஸ் சாலை உடனடியாக அமைத்து அனைத்து மக்களும் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து ரிஷபம் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனியப்பன் கூறுகையில் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருமங்கலம் […]
விக்கிரமங்கலம் அருகே குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தால் சேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் இருந்து கீழப்பட்டி வரை புதிதாக சுமார் 2 கோடி செலவில் ரோடு போடப்பட்டுள்ளது இந்த ரோடு சுமார் 20 நாட்களுக்கு முன்பாக போடப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய்க்காக சாலையில் தோன்றிய பள்ளங்களை சரிவளர் மூடாமல் விட்டுச் சென்றதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சேதமடைந்த […]
வேண்டாம் மணிமண்டபம். உசிலம்பட்டியில் சட்ட கல்லூரி வேண்டும். டிஎன்டி மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை.
இது குறித்து டிஎன்டி மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவதுமதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் தாங்கள் விதி 110 படி கடந்த வாரம் சட்டசபையில் கல்வித்தந்தை பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்தீர்கள்,தமிழக அரசின் எண்ணத்திற்கும் பி.கே. முக்கிய தேவர் மீது தாங்கள் வைத்துள்ள அபிமானத்திற்கும் மிக்க நன்றி, கல்வித்தந்தை மூக்கையா தேவரின் கனவு இச்சமுதாய மக்கள் படிக்க வேண்டும் என்பது மட்டுமே, அதைப் பெற்றுத்தர […]
You must be logged in to post a comment.