தென்காசி எம்.பி.ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு முக்கிய ரயில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய ரயில்வே அமைச்சரை புதுடில்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், திருநெல்வேலி தென்காசி இடையே உள்ள பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி டவுண் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பு செய்தல், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் நிலையம் அமைத்து அதனை ரயில் முனையமாக மாற்ற வேண்டும். மேலும், கீழப்புலியூரில் இருந்து […]
Category: செய்திகள்
விசாரணைக்கு ஆஜராகாத பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு பிடி வாரண்ட்..
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.தேனியில் தங்கி இருந்த அவர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைதானார். கஞ்சா பதுக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு […]
காவல்துறையினர் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்!-தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை..
தமிழக காவல்துறையை கண்ணியமிக்க காவல்துறையாக செயல்படும் வகையில் காவல்துறையின் அமைச்சர், தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை மேம்படுத்த போதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சுட்டிக்காட்டும் பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தட்டிக் கேட்கும் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் மிரட்டப்படுவதும் அவர்கள் மேல் பொய் வழக்கு போடுவதும், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்படுவதும் தொடர் கதையாக நடைபெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தனி நபர் மீது சட்டத்திற்கும் புறம்பாக, உள்நோக்கத்துடன் […]
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தென்காசி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் சாதனை..
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்கூல் கேம்ஸ் பெட்ரேஷன் ஆப் இந்தியா சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. சிவகங்கையில் நடந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மு.சந்தியா மற்றும் சி.யோக தர்ஷினி […]
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் காலமானார்..
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் கோவையில் நேற்று உயிரிழந்தார். கோவை தெற்கு உக்கடம், பொன் விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவராக இவர் இருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் […]
கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்! புதுச்சேரி அரசு அறிவிப்பு..
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுவை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது கிடைத்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த […]
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெயரில் மக்களவை, சட்டப்பேரவை தொடர்பான மசோதா, யூனியன் பிரதேசங்கள் தொடர்பான மசோதா அறிமுகம். மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதா வழி வகுக்கும். யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த இரண்டாவது மசோதா வழி வகுக்கும். மசோதாக்கள் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்றாலும் 10 ஆண்டுக்கு பிறகே நடைமுறைக்கு வர வாய்ப்பு. […]
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: வெளியானது அறிவிப்பு!
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: வெளியானது அறிவிப்பு! தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ”சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதியும் சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22 மற்றும் 23-ம் தேதியும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24ம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை […]
ராமநாதபுரத்தில் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை முன்னிட்டு கொடியேற்றம் விழா..
இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் ஆள் ஆத்தி மரங்கள் நடுவே இயற்கையில் எழில் கொஞ்சும் தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் வருகின்ற 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது அதற்காக மண்டல பூஜை முன்னிட்டு இன்று (17/12/2024) அதிகாலை கணபதி ஓமம் க்ஷ அஷ்டாபிஷேகம் மற்றும் ஸ்ரீ வல்லபை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்று ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் கோயில் குருசாமி மோகன் கொடி ஏற்றினர். இதில் […]
இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் 2 நாள் நிறுத்தம் : ஆட்சியர் தகவல்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தொகுப்பு III & V பிரதான குழாய்களை இணைக்கும் பணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 19.12.2024 & 20.12.2024 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் : ரேஷன் கடை பணியாளர்கள் தீர்மானம்..
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் வட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநிலச்செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வர வேற்றார். மாவட்டத்தலைவர் தினகரன் தலைமையில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, ஆர் எஸ் மங்கலம், நயினார்கோவில், வட்டக்கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை, சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், உணவுப் […]
தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : இலங்கை அதிபரிடம், பிரதமர் மோடி வலியுறுத்தக்கோரி ராமநாதபுரம் எம்பி கடிதம்
இராமநாதபுரம் : பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ் கனி எம்பி கடிதம் எழுதிய கடிதத்தில்:- இலங்கை பிரதமர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது. இலங்கை அதிபர் நம் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையான […]
பெருங்குளம், ஆர் எஸ் மடை, ரெகுநாதபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி : நாளை (17/12/2024) மின் தடை
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (டிச. 17) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் செம்படையார்குளம், வட்டான்வலசை, எஸ் கே.ஊரணி, கீழ நாகாச்சி, உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம் கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, சூரங்காட்டுவலசை, மானாங்குடி, கடுக்காய்வலசை, புதுமடம், நாரையூரணி, வளங்காவேரி, ரெட்டையூரணி, தாமரைக்குளம், மான் குண்டு, உசிலங்காட்டு வலசை, பெருங்குளம், நதிப்பாலம், ஏந்தல், உடைச்சியார்வலசை, வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, கீரி பூர்வலசை, சமயன் வலசை, வாணியன்குளம், வடக்கு […]
உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த திமுக நிர்வாகி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் உசிலம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.,இந்த பேருந்து நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியதால் பேருந்துகள் வந்து செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.,இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இது குறித்து அறிந்த சமூக ஆர்வலரும், திமுக […]
உசிலம்பட்டி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பிட்டு முகாம்.
உசிலம்பட்டி வட்டார வள மையம் அலுவலகத்தில் மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைந்து நடத்தும் 0.18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.மதுரைமாவட்டம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி வட்டார வள மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின் படி மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமி […]
இன்று காலை 8.30 மணி அளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு..
தமிழகத்தில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வான வலுப்பெறுவதிலும், புயலாக மாறுவதிலும் போக்கு காட்டியது. கடைசியில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்து புதுச்சேரி, விழுப்புரம், மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று புதிய காற்றழுத்த […]
அதி விரைவு இரயில் சாதா இரயிலாக மாற்றம்! ஏன் எதற்கு எப்படி?
சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரெயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரெயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. 497 கி.மீ. தூரத்தை 9 மணி 15 நிமிடங்களில் கடக்கும் இந்த ரெயில் சராசரியாக மணிக்கு 54 கி.மீ. வேகத்தை கொண்டிருக்கிறது.இந்த ரெயில் முதலில், சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு, 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.இந்த நிலையில், இந்த […]
இதுக்கு மேல உங்களுக்கு அனுமதி இல்லை; கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவிற்கு அனுமதி மறுப்பு..
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு ஆடித் திருப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில், இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த இளையராஜா, ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்காக சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர், ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப […]
ராமநாதபுரத்தில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு..
ராமநாதபுரம், டிச.16 – ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி சார்பில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யதம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக், ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சுந்தரம் செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை […]
25 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் நீதிக்கான கூட்டணி அபார வெற்றி!!
25 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் நீதிக்கான கூட்டணி அபார வெற்றி!! நீதிக்கான கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் 659 வாக்குகள் பெற்று 261 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! (ஆர்.கே. பெற்ற வாக்குகள் 398) பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட அசீப் 734 வாக்குகள் பெற்று வெற்றி. இணைச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட நெல்சன் 697 வாக்குகள் […]
You must be logged in to post a comment.