தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஓய்வூதியர் தின கருத்தரங்கு நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிக்கண்ணு வரவேற்றார். ஓய்வூதியர்களும் மருத்துவமும் குறித்து டாக்டர் சந்திரசேகரன் பேசினார். மூத்தோர் 3 பேர் கவுரவிக்கப்பட்டனர். மாநில துணைத்தலைவர் குப்பன் சிறப்புரை ஆற்றினார். ஓய்வூதியர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் விஜயராகவன், முதுகுளத்தூர் வட்ட தலைவர் சிவனுபூவன், மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சை, போக்குவரத்து ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் கேசவன், […]
Category: செய்திகள்
பிரபல செயின் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த பழனி காவல்துறையினர்..
பிரபல செயின் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த பழனி காவல்துறையினர்.. மதுரையை சேர்ந்த கவாஸ்கர்(35) என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு பழனியில் செயின் பறிப்பில் ஈடுபட்டார். பழநி சிவகிரி பட்டி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சார்பு ஆய்வாளர்கள் விஜய் மூர்த்தி, தங்கராஜ், காவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வேகமாக பைக்கில் வந்த கவாஸ்கரரை காவலர்கள் நிறுத்த முயன்றனர். அப்போது வாகனத்தை நிறுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு […]
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது.” எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (சனிக்கிழமை) […]
ஏர்வாடி, வாலிநோக்கம் துணை நிலையங்களில் நாளை (21/12/2024) மின் தடை..
இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (டிச.21) நடைபெற உள்ளது. இதனால் சிக்கல், கீழ, மேலசெல்வனூர். கீழ, மேலகிடாரம், காவாகுளம், கொத்தங்குளம், சிறைக்குளம், பண்ணந்தை, தத்தங்குடி, மறவாய்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்குடி, வாலிநோக்கம் , தமிழ்நாடு அரசு, தனியார் உப்பு நிறுவனங்கள், இறால் பண்ணை பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர்மாலதி […]
தேசிய கராத்தே போட்டி : இரட்டை. சகோதரிகள் வெற்றி..
இராமநாதபுரம் : டில்லி டால்க டோர உள் விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி டிச.12 முதல் 15 வரை நடந்தது. 7 வயதிற்கு மேல் 14 வயதிற்குட்பட்டோர், சப்-ஜூனியர் மகளிர் 30 கிலோ எடை குமித் தே பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4ம் வகுப்பு மாணவி ரித்யா, தமிழ்நாடு சார்பில் பங்கேற்று இறுதிச்சுற்றில் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்தார். இவரது சகோதரி ரிதன்யா முதல் […]
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ராமநாதபுரம், தங்கச்சிமடம் பகுதிகளில் திமுக ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இழிவு படுத்தி பேசினார். இதையடுத்து திமுக தலைமை அறிவிப்பு படி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முததுராமலிங்கம் அறிவுறுத்தல் படி ராமநாதபுரத்தில் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர் கார் மேகம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக […]
அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும்”:ராகுல் காந்தி MP வலியுறுத்தல்..
மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது.அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றிய அமைச்சர் அம்திஷாவின் இப்பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து […]
விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் திட்டம்!- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!
விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருமபுரியை சேர்ந்த சதீஷ் என்பவரின் தந்தை அருள்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மனைவி மரணமடைந்து விட்டதாகவும், இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தனது மகனுக்கு அவசரகால விடுப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் […]
புரட்சியாளர் அம்பேத்கர் அவமதிப்பு..! – எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நடப்பு நாடாளுமன்ற கூட்ட விவாதத்தின் போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என பேசினார். ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் அரசியல் சாசன […]
கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? சீமான் கேள்வி..
கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? சீமான் கேள்வி.. கேரள மாநிலத்திலிருந்து மண்ணுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நோய் பரப்பும் மருத்துவக் கழிவுகள் மற்றும் அனைத்தும் தமிழ்நாட்டு எல்லையில் மலைமலையாகக் கொட்டப்படுவது தொடர்கதையாகிவிட்டது. பல ஆண்டுகளாகத் தொடரும் இக்கொடுமைகள் குறித்து தமிழ்நாடு அரசிடம் பலமுறை முறையிட்டும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு கழிவுகள் கொட்டுவதைக் கண்டுகொள்ளாது அலட்சியமாகச் […]
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்..
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான […]
கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம்… காரசாரமான விவாதம்… உறுப்பினர்கள் அடுக்கடுக்கான கேள்விகள்..வீடியோ..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்மானங்கள் வாசிப்பதற்கு முன்பாக 21 வது வார்டு உறுப்பினர் சேக் உசைன் எழுந்து கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களை நியமிப்பதற்கு முன் தகவல் பலகையில் பதிவது இல்லை என்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என்றும் நகர்மன்றத்தில் மாதமாதம் வைக்க கூடிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை […]
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இழிவு படுத்தி பேசினார். இதையடுத்து திமுக தலைமை அறிவிப்பு படி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முததுராமலிங்கம் அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூர் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று நடந்தது. பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, முஹமது மீரா […]
தமிழகத்தில் 5 முனை போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சி; அண்ணாமலை ஆரூடம்..
தமிழகத்தில் 5 முனை போட்டி; 2026ல் கூட்டணி ஆட்சி; அண்ணாமலை ஆரூடம்.. தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. 2026ம் ஆண்டு தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், கூட்டணி ஆட்சி தான் அமையும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்த அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: அரசியலுக்கு வந்துள்ள விஜயை நான் வரவேற்கிறேன். உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அரசியலில் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பார். துரோகிளை […]
ரூ.111 கோடி மதிப்பில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் துவக்கி வைத்தார் …
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தனர். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ரூ.111 […]
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஒன்றிய மந்திரியிடம் மனு..
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி சந்தித்து முறையீடு.. இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அளித்த கடிதத்தில் தெரிவித்திருந்ததாவது: சென்னை – தூத்துக்குடிக்கு மானாமதுரை -அபிராமம், பார்த்திபனூர், கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். காரைக்கால் – தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக […]
காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். 70,000 காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை கல்வித் தகுதி அடிப்படையில் 50 சதவீதம் நிரப்ப வேண்டும். ரூ. […]
பாவூர்சத்திரம் ரயில்வே பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; ராபர்ட் புரூஸ் எம்.பி ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை புதுமைபடுத்தி புதிய ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்றும் நெல்லை எம்..பி ராபர்ட் புரூஸ் ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை புதுடெல்லியில் நேரில் சந்தித்து நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் மதுரை-பெங்களூர் வந்தே பாரத் […]
ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு 2025 ஜூன் 14 வரை நீட்டிப்பு..
ஆதார் கார்டு, இந்திய மக்களின் அடையாளமாக இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்சு உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயம் ஆகும். எனவே அனைவரும் தற்போது ஆதார் கார்டு வைத்திருக்கிறார்கள்.இந்த நிலையில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்துகிறது. அதற்காக 10 ஆண்டுகள் ஆன பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் […]
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும்; சந்தையில் இலவசமாக கிடைக்கும் என ரஷ்யா அதிரடி அறிவிப்பு..
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல். புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய நாட்டு செய்தி முகமை TASS உறுதி செய்துள்ளது. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் […]
You must be logged in to post a comment.