மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினசரி உள்நோயாளியாக 500க்கும் மேற்பட்டோரும், புறநோயாளியாக 1000க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.,இந்த மருத்துவமனையில் இயங்கி வரும் ஸ்கேன் செண்டர் மூலம் எலும்பு முறிவு, தசை மற்றும் வயிறு, தலை உள்ளிட்ட ஸ்கேன்கள் ஒரு நாளைக்கு 50 முதல் 100 ஸ்கேன்கள் எடுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாதமும் வயிறு, தலைக்கு மட்டும் 500க்கும் மேற்பட்ட ஸ்கேன்கள் எடுக்கப்படுவதாக கூறப் படுகிறது.,இந்நிலையில் தற்போது மருத்துவர் பற்றாக்குறையால் ஸ்கேன் […]
Category: செய்திகள்
தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை வரைவுத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!-வைகோ அறிக்கை!
தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை வரைவுத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!-வைகோ அறிக்கை! பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, டி.ஏ.பி. உரமானியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி “கிசான் மஸ்தூர் மோர்சா” (Kisan Mazdoor Morcha), “சம்யுக்தா கிசான் மோர்சா” (Samyukta Kisan Morcha) விவசாயச் சங்கங்களின் தலைமையின் கீழ் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி விவசாயிகள் டெல்லி முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், பத்து மாதத்திற்கும் […]
உலகை அச்சுறுத்தி வரும் HMPV வைரஸ்! விரிவாக அலசுகிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா…
தற்சமயம் சீனாவில் பரவி வரும் ஹெச் எம் பி வி எனும் வைரஸ் தொற்று குறித்து அனைவரும் அச்சத்துடன் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. இந்நிலையில் தற்போதைய நிலை குறித்தும் ஹெச். எம். பி.வி குறித்தும் இந்தப் பதிவின் மூலம் விரிவாக விளக்குகிறார்; Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்சிவகங்கை 2019இல் சீனாவின் வூஹான் நகரில் இருந்து புதிய கொரோனா வைரஸ் 2019 உருவெடுத்து உலகம் முழுவதும் பரவி அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றாக மாறி உலகை […]
“18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை”!-ஒன்றிய அரசு அதிரடி..
இந்தியாவில் சிறுவர்கள் சமூக வலைதளக் கணக்கு தொடங்க பெற்றோரின் அனுமதியை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறுவர், சிறுமியரின் தரவுகளை பெறும் சமூக வலைதள நிறுவனங்கள், அதற்கு முன்பாக பெற்றோரின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதலைப் பெறும் வரை சிறுவர்களின் தரவுகளை நிறுவனங்கள் சேமிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை […]
திருச்சி தொட்டியத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் நேரு…
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் மைக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். […]
திருச்சி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…
3 கோடியே 85 லட்சத்து ஐயாயிரம் ரூபாய் மதிப்பீட்டில்முடிவடைந்த திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் உள்ள திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்ததுடன் சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கியும், உணவு மற்றும் நிவாரண பொருட்களை […]
பரமக்குடி அருகே வாளுடன் புகைப்படத்தை வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் கைது .! வலைத்தளங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை .!! மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சிநேயர் என்பவர் சமூகவலைதளத்தில் (Instagram) சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக வாள் உடன் தனது புகைப்படத்தை ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 31.12.2024-ம் தேதி பார்த்திபனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு வைக்கப்பட்டுள்ளார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று சட்டம்-ஒழுங்கு மற்றும் இரண்டு மதங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை பதிவிடும் இளைஞர்களுடைய சமூக […]
திமுக அரசின் நவீன எமர்ஜென்சி அடக்குமுறைக்கு மக்கள் அடிபணிய மாட்டார்கள்!-பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை..
திமுக அரசின் நவீன எமர்ஜென்சி அடக்குமுறைக்கு மக்கள் அடிபணிய மாட்டார்கள்!-பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை.. இது சம்பந்தமாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பெண்ணுரிமைக்கு எதிரான, வல்லூறுகளின், திராவிட மாடல் திமுக ஆட்சியை, தமிழகப் பெண்களே அகற்றுவர்! திமுக அரசு மூன்றாண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், நடுத்தர பெண்கள் முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருமே திமுக அரசின் […]
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; குஷ்பு கைது..
பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் தடையை மீறி போராட்டத்தை மேற்கொண்டன.. இதனால், கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், தமிழக பாஜக மகளிர் அணியினர் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு இன்று மதுரையில் இருந்து சென்னை நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர். கண்ணகி வேடமிட்டும், கைகளில் சிலம்புடனும் ஏராளமான பெண்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதேபோல் அம்மனுக்கு மிளகாய் அரைத்து பூசியும் தீச்சட்டி ஏந்தியும் பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். “தமிழகத்தின் அநீதியை […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் நாளை (ஜன.04) மின்தடை..
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள உபமின் நிலையங்களில் 04.01.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும் மாதந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு கருதி பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊத்துமலை, கீழப்பாவூர் உப மின் நிலையங்களில் 04.01.2025 சனிக்கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்ப புரம், […]
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம்; தவெக தலைவர் விஜய்..
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்று அழைக்கப்படும் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாள் இன்று(ஜன. 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள அலுவலகத்தில் வேலு நாச்சியாரின் திருவுருவப் […]
காதல் இளம் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் ஜெயசூர்யா 21 பட்டதாரி இளைஞரான இவர் அதே ஊரில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார், இவரும் இவரது தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகளான கல்லூரி மாணவி பாண்டீஸ்வரி 18 என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.,இந் நிலையில் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாண்டீஸ்வரிக்கு அவரது தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றதாக […]
இராமநாதபுரத்தில் வாடிய நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… வீடியோ..
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதலால் பாதித்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அதிக கனமழை, இயற்கை இடர்களால் பாதித்த நெல் பயிருக்கு 100 விழுக்காடு தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தொடர்மழையால் பாதித்த மிளகாய் சாகுபடி ஏக்கருக்கு நிவாரணம் ரூ.25 ஆயிரம், இழப்பீடாக ரூ.50 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் […]
குழந்தைகள் பராமரிப்பு இல்ல வளாகங்களில் மரக்கன்றுகள் நடும்பணி..
இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் குழந்தைகள் இன்பமாக வளர இயற்கையோடு இணைக்க வேண்டும் என்ற முன்னெடுப்புக்காக “யாதும் உயிரே” என்ற முன்னெடுப்பின் மூலம் அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் உள்ள குழந்தைகளை மரக்கன்று நட்டு புத்தாண்டை துவங்க வைத்தல் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 அரசு, அரசு சாரா குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஒவ்வொரு இல்ல வளாகத்திற்குள், தலா 10 மரக்கன்றுகள் குழந்தைகளால் நடப்பட்டு, மரக்கன்றுகளை சுற்றி மரக்கன்று […]
நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!!
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை 2019 மக்களவைத் தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காட்பாடி அருகே திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் மருத்துவ முகாம்.!
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்P. V. வெங்கட் அறிக்கை. தமிழகத்திலே முதல் முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக இரண்டாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் வரும் […]
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாநகர கலைஞர் பகுதி சார்பில் பொதுக்கூட்டம்.!
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாநகர கலைஞர் பகுதி சார்பில் பொதுக்கூட்டம். திமுக கழக இளைஞரணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் பகுதி தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பகுதிச் செயலாளர் மணிவேல் அவர்கள் தலைமை வகித்தார் இந்தக் கூட்டத்தில் […]
அதிகாலையில் பயங்கரம்! கோவையில் கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை..
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளம் மாநிலம், கொச்சியில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது ஆக்சில் துண்டாகி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் லாரியில் இருந்து டேங்கர் […]
தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது! – எஸ்டிபிஐ..
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை அண்ணா பல்கலை., மாணவியின் பாலியல் வன்கொடுமை ஊடக வெளிச்சத்தாலும், எதிர்கட்சிகளின் போராட்டங்களாலும் பூதாகரமான நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இராமநாதபுரம் அருகே நேற்று இரவில் ஆட்டோவில் சென்ற பெண் கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை..
தானியங்கி மழைமானிகளில் ஏற்படும் பழுதுகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய அவரது செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் 1300-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டு குறு வட்டங்கள் அளவில் மழை அளவுகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டது. இந்நிலையில், 1300-க்கும் மேற்பட்ட தானியங்கி மழை மானிகள் மூலம் ஒரு மாவட்டத்தில் எந்த பகுதியில் அதிகமழை, எந்த பகுதியில் […]