தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தே.மு.தி.க. கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் பார்த்தசாரதி, விஜயகாந்த் அவர்களின் மகன் வி.விஜய பிரபாகரன், இளைஞரணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்து, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, அந்நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், […]
Category: செய்திகள்
சில்மிஷ கில்லாடி; மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் அதிரடி கைது! அவரது வண்டவாளங்கள் தற்போது தண்டவாளங்கள் ஏறி வருகிறது..
உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி, கைதியின் மனைவி மற்றும் அவரது மகளான சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மதுரை மாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு வந்த உதவி ஜெயிலரின் முகத்தில் கைதியின் உறவினரான இளம்பெண் பளார் பளார் என அறைந்தார். சட்டையை பிடித்துக் கொண்டு விடவில்லை. இதை வீடியோ எடுத்த சிலர் இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக்கினர். […]
யூடிஆர் (பட்டா,கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை…!
UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது, சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது, கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர் போன்ற பல ஆவண பிழைகளால் ஏற்படும் சிக்கல்கள் பல பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்றம் செய்தல் இலகு அல்ல, வீடுகட்ட அங்கீகாரம் கிடைப்பது கடினம், கடன் […]
காவல் துறை பதவிகளும், பதவிச் சின்னங்களும்; ஓர் முழுப்பார்வை!
காவல் துறை பதவிகளும், பதவிச் சின்னங்களும்; ஓர் முழுப்பார்வை! காவலர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் வரை அனைவரும் காக்கி சீருடையிலிருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படைத் தகுதிகளும் வேறு என்பதை நாம் அறிவோம். காவலர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் வரை அனைவரும் காக்கி சீருடையிலிருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படைத் தகுதிகளும் வேறு என்பதை நாம் அறிவோம். காவல் துறை அலுவலர்களின் உடையிலுள்ள வேறுபாடுகளை சிறிது காண்போம். காவல் […]
சென்னையில் வரும் 28 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு..
புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது: திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். திமுக கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் […]
பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தலைவர் விஜய்!- ஜி. ராமகிருஷ்ணன் கடும் தாக்கு..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது கோவை மாவட்ட மாநாடு கோவை வரதராஜபுரம் பகுதியில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது.மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடக்க நிகழ்ச்சியாக கோவையின் வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் திறந்துவைத்தார். பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதிகளை அக்கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.இதையடுத்து முன்னாள் […]
18-58 வயது உள்ளவரா! குர்ஆன் ஓத ஆசையா! குறுகிய காலத்தில் ஓர் அரிய வாய்ப்பு!!
18-58 வயது உள்ளவரா! குர்ஆன் ஓத ஆசையா! குறுகிய காலத்தில் ஓர் அரிய வாய்ப்பு!! திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் மௌலானா, மௌலவி, அமீர் தங்கள் பாக்கவி ஹஜ்ரத் என்பவர் தான் இப்படி ஓர் அதிசய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அவரை நமது சத்திய பாதை மற்றும் கீழை நியூஸ் அழைத்து பேசியது; அப்பொழுது ஹஜ்ரத் அவர்கள் கூறியதாவது; குர்ஆன் ஓத ஆசை உள்ளவர்கள் 18வயது முதல் 58வயது வரை உள்ள நபர்கள் யாராக இருப்பினும் […]
மண்டபத்தில் உள்துறை அமைச்சர் பதவி விலக கோரி விடுதலை சிறுத்தையினர் ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் :இந்திய அரசியலமைப்பு சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இழிவு படுத்தி பேசிய உள் துறை அமித் ஷாவை கண்டித்தும், அமித் ஷா பதவி விலகக் கோரியும் மண்டபம் ஒன்றிய விசிகவினர் மண்டபம் பேரூரில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் சீ.கோ.ஆறு, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், இந்திய ஜனநாயக பேரவை மாநிலத் துணைச் செயலாளர் சிறுத்தை முத்து வாப்பா, மீனவர் அணி மாவட்ட […]
ஆதரவற்ற பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் அமைப்பினர்; பொதுமக்கள் பாராட்டு..
குற்றாலம் பகுதியில் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த ஆதரவற்ற பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி, கவுன்சலிங் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே சாலையில், ராகிணி என்ற 55வயது பெண் ஆதரவற்ற நிலையில் குற்றாலம் பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆதரவற்று இருந்த இந்த பெண்மணி மீட்கப்பட்டு குற்றாலம் கலைவாணர் […]
துபாயில் கிரீன் குளோப் மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்..
இன்று (22-12-2024) Green Globe மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) இணைந்து நடத்திய இரத்ததான முகாம், துபாயின் ஜதாஃப் பகுதியில் உள்ள Dubai Health Blood Donation Centreல் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர். Green Globe சார்பில், இரத்த தானத்தில் பங்கேற்ற அனைவருக்கும் துபாய் ஹெல்த் மையத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஏற்பாடுகளை Green Globe அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் மற்றும் […]
சனாதானம் விவகாரம்: வாயை வாடகைக்கு விடுகிறது அதிமுக!-வதந்திக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!!
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாவட்ட அமைப்பாளர் ஆல்பர்ட் ஏற்பாட்டில், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை புனித தோமையர் மலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, 1500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு […]
அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடாதீர்கள்! ரசிகர்களுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வேண்டுகோள்..
உங்களின் உணர்சிகளை பொறுப்புடன் வெளிப்படுத்துங்கள். அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடாதீர்கள்! ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எந்த விதமான தவறான வார்த்தை அல்லது நடத்தையை நாட வேண்டாம் என்றும், எப்போதும் போல் தங்கள் உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு எனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். போலி ஐடிகள் மற்றும் போலி சுயவிவரங்கள் மூலம் எனது ரசிகர்கள் என தவறாக சித்தரித்து, தவறான பதிவுகளை யாராவது வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரசிகர்கள் இதுபோன்ற பதிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று […]
பிரதமர் மோடிக்கு, குவைத் நாட்டின் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான, ‘ஆப் முபாரக் அல் கபீர்’ விருது அவருக்கு வழங்கப்பட்டது..
2 நாள் அரசுமுறைப் பயணமாக குவைத் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் மன்னர் ஷேக் மெஷாலை சந்தித்த மோடி, இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி துறை உள்ளிட்டவை குறித்து பேசினார். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரணமான சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 43 ஆண்டுகளில் குவைத் பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய பிரதமர் என்ற […]
திமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்! கடுமையாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்..
திமுக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுக செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2026-ல் வெற்றி நமதுதான். 200 தொகுதிகள்ல நம்மோட கூட்டணி வெல்லும் என கூறியிருந்தனர். இதற்கு இறுமாப்புடன் பேசி மக்களை ஏமாற்றி தீர்மானம் போடுபவர்களை […]
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அடைப்பு : இணை ஆணையர் அறிவிப்பு..
இராமநாதபுரம்: மார்கழி மாத அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை நாளை (23.12.2024) சாத்தப்படுகிறது. இதையொட்டி பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி நாளை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு சுவாமி – அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ராமேஸ்வரம் நகர் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு […]
இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி! ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், சாக்யூப் மஹ்முத், பில் சால்ட், மார்க் வுட். டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி! ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், […]
பழநி அருகே அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்த கந்தூரி விழா..!
திண்டுக்கல் மாவட்டம்பழனி அடுத்த பாலசமுத்திரத்தில் சுன்னத் வல்ஜமாத் பள்ளிவாசல் சார்பில் கந்தூரி விழா விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக தர்காவில் உலக நலன் வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், […]
உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் திமுக கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தி மு க நகர் கழகம் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியிலுள்ள 25 ஆட்டோ தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச காக்கி சீருடை வழங்கும் […]
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ₹10 லட்சமாக உயர்வு..
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ₹10 லட்சமாக உயர்வு. பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரணத் தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்வு. முழு பார்வை பாதிப்பு, 2 கை, கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ₹3 லட்சமாகவும், ஒரு கை, கால் செயலிழப்புக்கு நிவாரணம் ₹1.50 லட்சமாகவும் உயர்த்தி மின்சார வாரியம் அரசாணை வெளியீடு.
You must be logged in to post a comment.