தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (தெற்கு) இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில், மாவட்டச்செயலாளர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைச்செயலாளர் உஸ்மான் மற்றும் ஃபாரூக் ஆகியோர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய இராமநாதபுரம் அலுவலக தலைமை அதிகாரி தினேஷிடம் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை மிகவும் சேதமடைந்த சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும் புகார் கடிதம் வழங்கினர். இச்சாலை தற்போது பெரும் பள்ளம், உடைப்பு […]
Category: செய்திகள்
தென்காசி நகர முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..
தென்காசியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது. முஸ்லிம் லீக் நகர தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சம்சுதீன் கிராத் ஓதினார். மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி வரவேற்றார். மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, மாநில துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில், நகர பொருளாளர் முகம்மது யூசுப், மாநில வர்த்தக அணி தலைவர் […]
தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முப்பெரும் விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 வது ஆண்டையும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுப்பெரும் தலைவர் கே, டி. கே, தங்கமணி நினைவு நாளையொட்டியும் முப்பெரும் விழாவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர குழு சார்பில் தஞ்சை பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். […]
உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு 2 மாததிற்கான உணவுக்கான பொருட்களை வழங்கி திமுவினர் அறுசுவை விருந்து அளித்தனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இயங்கி வரும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் தங்கப்பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் 2 மாததிற்கு தேவையான உணவிற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை […]
கீழக்கரையில் தொடரும் மின்வெட்டு: மின்வாரியத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரையில் முன்னறிவிப்பின்றி தொடர்ச்சியாக மின்தடை செய்வதை கண்டித்தும், மின்கணக்கு எடுக்கக்கூடிய கணக்காளர்கள் கால தாமதமாக கணக்கெடுப்பதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழக்கரை துணை மின்நிலையத்திற்கு கீழ் மொத்தம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், மின் இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப மின் ஊழியர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மின் கம்பியாளர், ஊழியர்கள் பற்றாக்குறை […]
புளியரை சோதனை சாவடியில் மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு..
புளியரை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை தென்காசி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில், இரண்டு சார்பு ஆய்வாளர்கள், நான்கு காவல் ஆளினர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
ரேசன் கடை கேட்டு பொதுமக்களுடன் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல் பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள மேல பெருமாள் பட்டி கிராமத்திற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதாகவும் அதுவும் மாதத்தில் ஒரு நாள் மட்டும் ரேஷன் பொருட்கள் இந்த இரு கிராமத்திற்கும் வழங்குவதாகவும் இவ்வாறு வழங்குவதும் முன்னறிவிப்பின்றி திடீரென வழங்குவதால் வேலைக்கு […]
உசிலம்பட்டியில் நட்டாத்தி நாடார் பள்ளி பரிபாலன சபை சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.
உசிலம்பட்டி நட்டாத்தி நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி பரிபாலன சபை சங்கப் பதிவு எண். 35 /1961 மதுரை மாவட்டம் புதிய நிர்வாக குழு தேர்வாகி பதவி ஏற்றனர்.உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி பரிபாலன சபை தலைவர் வி.பிரசாத் கண்ணன் செயலாளர் எஸ் எம் எஸ் ஆர் நடராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பி சி ஆர் நடராஜன் ஏ எஸ் கே எஸ் […]
தென்காசி நகராட்சியில் தூய்மை காவலர்களுக்கு சமபந்தி விருந்து..
தென்காசி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது. சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமபந்தி விருந்தினை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலர் ராபின், நடிகர் (திருப்பாச்சி) பெஞ்சமின், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், […]
அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி-யை அடுத்துள்ள எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் இன்பராஜ், 2016 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் சேர்ந்த இந்த இளைஞர் தற்போது அசாம் மாநிலம் நிஹாம்பள்ளி முகாமில் இந்திய இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.,இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மதிய வேளையில் மலை பகுதியில் உள்ள தங்களது முகாமிற்கு இராணுவ வாகனம் மூலம் உணவு எடுத்து செல்லும் போது இவர்கள் சென்ற இராணுவ வாகனம் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.,இதில் […]
இட ஒதுக்கீட்டிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா அன்புமணி?- அமைச்சர் சிவசங்கர் கேள்வி..
“அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவோடு கைகோர்த்து மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்” “இட ஒதுக்கீட்டிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா அன்புமணி ?” “வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என்று சொல்கிறார் அன்புமணி” “தேர்தல் நேரத்தில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து கூட்டணி பேரம் பேசும் ராமதாஸ்” “மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அரசியல் சூதுவில் பணயம் வைத்து அரசியல் பேரத்தை வலுப்படுத்த துடிக்கிறார்கள்” “சாதி வாரி கணக்கெடுப்பு – மோடி அரசை […]
“டாம்ப்கால்” நடமாடும் சித்தா மருந்துகள் விற்பனை நிலையம்; கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படும் விதம் “டாம்ப்கால்” நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையத்தினை (24.12.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நடமாடும் டாம்ப்கால் விற்பனை நிலையம் குற்றால அருவிகளின் அருகில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தரமற்ற, உரிமம் பெறப்படாத மருந்துகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் […]
பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலை.பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஜனவரி 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (டிச. 24) இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி நேற்று (டிச. 25) கோட்டூர்புரம் பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். […]
சாலை விதிமுறையை பின்பற்றி பயணம் செய்த சார்பு ஆய்வாளர்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் சாலை விதிமுறையை பின்பற்றி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அச்சன்புதூர் சார்பு ஆய்வாளரை பாராட்டி பண வெகுமதிகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் வழங்கினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காலை வேளையில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே இருசக்கர வாகனத்தில் சீருடையில் முறையாக சாலை விதிமுறைகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்த நிலையில் அச்சன்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சின்னத்துரை வந்து கொண்டிருந்தார். இதனை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..
தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களின் போது இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸ் செல்வது முற்றிலும் […]
கீழக்கரையில் 27/12/2024 அன்று தொடங்கும் வர்த்தக கண்காட்சி (CENTENARY FAIR 2024)..
கீழக்கரையில் 27/12/2024 முதல் வர்த்தக கண்காட்சி ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கீழக்கரையின் பாரம்பரியம் மற்றும் சிறப்பை பறைசாற்றும் வகையில் கீழக்கரையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர்கள், சரித்திரம் சொல்லும் இராமநாதபுரம், கீழக்கரையும் வணிகமும், எங்கள் ஊரும் எங்கள் வாழ்வும், இறந்தும் இரந்த சீதக்காதி என்ற தலைப்புகளில் பேச்சு போட்டி, வினாடி வினா நிகழ்ச்சி, குறும்படம், வியாபார சிந்தனையை தூண்டும் SHARK TANK நிகழ்வு புகைப்பட போட்டி மற்றும் பல்வேறு அறிவு சார்ந்த மற்றும் […]
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னேற விளையும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னேற விளையும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய இரும்பு, கனரக தொழில் துறை இணை அமைச்சர் ஸ்ரீபூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா, தமிழக பால்வளம், கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: சிக்கிய கடையின் உரிமையாளர்..!புண்ணிய ஸ்தலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்…
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு இவர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தம் மாறி விட்டு அதன் பின் கடற்கரை ஓரமுள்ள தனியார் குளியல் மற்றும் உடைமாற்றும் அறைகளில் உடைமாற்றிவிட்டு கோயிலுக்குள் தரிசனத்திற்காக கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய், மகள் மற்றும் மகன் உட்பட நான்கு பேர் ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் […]
தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு..
தென்காசி மாவட்ட நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு!-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.. தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பேரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரிலும் தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம், செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஆலங்குளம் உரிமையியல் நீதிமன்றம், சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் […]
பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு..
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்த வேண்டும், காளைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகம் முழுவதும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், 2025-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான […]
You must be logged in to post a comment.