புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியை மண்டல தலைவர் முகேஷ் சர்மா கொடியை அசைத்து துவக்கி வைத்தார். வீடியோ..

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் 4 சார்பாக 18 வார்டுகளுக்கு ஒரு வாகனம் வீதம்18 தூய்மை பணி மேற்கொள்ளும் வாகனத்தை கொடியாசித்து தெற்கு மண்டல தலைவர் முகேஷ் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம், சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர்கள் அலாவுதீன், மாரிமுத்து, ராமநாதன், சரவணகுமார் மற்றும் அவர்லேண்ட் மேலாளர் […]

கீழக்கரையில் எம்ஆர்எப் ஒருங்கிணைப்பு குழு இளைஞர்களின் செயல்.! பொதுமக்களிடம் வரவேற்பு.!! 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வாலிபர்கள் தர்கா ஜகாத் கமிட்டியின் அங்கமான எம்.ஆர்.எப் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இரவு நேரத்தில் அதிக குளிர் ஏற்பட்டதால் கீழக்கரை சுற்றியுள்ள ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி முள்ளுவாடி போன்ற இடங்களுக்கு சென்று சாலைகளில் உறங்கிக் கிடக்கும் நபர்கள் மற்றும் தர்காவில் உறங்கிக் கிடக்கும் யாத்திரைகள் ஆகியோருக்கு போர்வைகள் உணவுப் பொருட்களை இளைஞர்கள் நேரடியாக சென்று வழங்கினர். இன்றைய காலகட்டத்தில் ஆடம்பரமாகவும் தவறான வழியில் செல்லக்கூடிய இளைஞர்கள் மத்தியில் இது போன்று சமூக […]

கடையநல்லூர் காவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டு..

கடையநல்லூரில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புளியங்குடி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பொது நல சேவை அமைப்பு சார்பில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றிய சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமை தாங்கினார். அப்துல் கலாம் பொது நல அமைப்பின் தலைவர் சின்னராஜ், செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் காந்தி, ஆலோசகர் […]

திருச்சி மணப்பாறையில் சாரண சாரணியர் வைர விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாரண சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெரும் திரளனி நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்

திருச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன்…

திருச்சியில் தனியார் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது,  “மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன், கடுமையான பயிற்சியின் முயற்சியும் செய்தால்தான் இந்திய அணியில் இடம்பெற முடியும்”. தமிழ்நாடு பிரிமியர் லீக் பல திறமையான வீரர்களை உருவாக்கி வருகிறது . தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடியதால் தான் நான் இந்திய அணிக்கு தேர்வானேன். கிராமத்தில் இருந்து வந்த […]

ஜனநாயக வழி நடைபயண நிகழ்வு.. அமைதியான முறையில் தீர்வு எட்டபட்டதால் கைவிடப்பட்டது..

கீழக்கரை இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. இந்த சாலையை சீரமைப்பு செய்ய பல்வேறு சமூக, சமுதாய அமைப்புகள் தொடர்பு குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த பணி தாமதம் செய்யப்பட்ட வந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைப்பு செய்ய சம்பந்தப்பட்ட துறையிரை வலியுறுத்தி நாளை 11/01/25 சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து […]

மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்..

திருவண்ணாமலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா ஜெயந்தி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உழவுக்கு உயிரூட்டு, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற கோஷத்துடனும், தமிழ்நாடு தமிழர்கள் பெருகுக வளம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி மாணவ-மாணவிகள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்

அநாகரீகமான பேச்சுக்கு சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!

தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ள சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கும் தந்தை பெரியார், தமிழ்நாடு கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர். அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்கு சக்திகளும், சங் […]

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா…

தஞ்சாவூர். ஜன.11.தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. செம “வைபாக” மாணவிகள் தொடர்ந்து அட்டகாசமாக நடனம் ஆடி கொண்டாடினர். தமிழர்களின் மிக முக்கியமான திருநாள் பொங்கல் பண்டிகையாகும். வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக சமத்துவ பொங்கல் […]

கோவையில் மாட்டுக்கறி விற்ககூடாது என மிரட்டிய பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது தமுமுக புகார்..

கோவையில் மாட்டுக்கறி விற்ககூடாது என மிரட்டிய பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது தமுமுக புகார்.. மதரீதியாக பதட்டம் ஏற்படுத்த முயலும் பா.ஜ.க நிர்வாகி சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்திட வேண்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் வழங்கப்பட்டது தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான்  தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். கோவை உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா என்ற பெண்மணி சில்லி மற்றும் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார் இவரின் […]

மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) துறை சார்பாக சமத்துவ பொங்கல்..

மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) துறை சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மதுரை கோட்டம் தலைமை பொறியாளர் செல்வராஜ் அவர்கள் தலைமையிலும், கண்காணிப்பு பொறியாளர் அய்யாச்சாமி, துணை கண்காணிப்பு பொறியாளர் மதி மணி ஆகியோர் முன்னிலையிலும், சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என பலர் கலந்து […]

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,  திமுக நகரச் செயலாளர் பெரி பாலமுருகன், நகராட்சி ஆணையாளர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரியாரை விமர்சிக்கும் சனாதன சக்திகளுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்தி!- திருமாவளவன் விமர்சனம்!!

கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை முடித்துக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், பெரியார் குறித்து அவர் பேசிய கருத்துகள் மாநிலம் முழுவதும் கடுமையான கண்டனங்களைச் சந்தித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் சீமான் மீது காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் […]

பழனியில் சுப்ரமண்யா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!

பழனியில் சுப்ரமண்யா அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா! திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாளையத்தில் செயல்பட்டு வரும் சுப்ரமணிய அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா 16 ம் ஆண்டு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாரம்பரியமிக்க திருவிழா போன்று வளையல் கடைகள் ,பஞ்சுமிட்டாய் கடை அமைக்கபட்டது. மாணவர்களுக்கு கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்கிளில் இருந்து வள்ளி கும்மி ஆட்டத்தை ஆடியும் மாணவர் மாணவிகளுக்கு கற்று கொடுத்தனர். மேலும் வள்ளி கும்மி […]

ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தை அலங்கரிக்கும் ஜல் ஜல் மணிமாலை தயாரிப்பு தீவிரம்..

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு சீசன் துவங்க உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தை அலங்கரிக்கும் மணிமாலை வாங்க ஜல்லிக்கட்டின் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால் சலங்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைக்களுக்கான வண்ணமிகு அலங்காரத்தோடும் சலங்கை சத்தத்துடன் மணி மாலை கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. கண்கவரும் வண்ண வண்ண உள்ளன் நூல்களைக் கொண்டும் சப்தம் மிகுந்த சலங்கைகள் கோர்க்கப்பட்ட தயாரிக்கப்படும் இந்த மணி மாலைகள் தைப்பொங்கலில் ஜல்லிக்கட்டு காளைகளின் […]

போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார் போதை பழக்கத்தில் தாக்கங்கள் குறித்து சத்திரப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஹரிஹரசுதன் விளக்க உரை ஆற்றினார் மாவட்ட நீதிபதி சேர்மன் திலகம் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் போதை […]

போதை இல்லா தமிழகம், விபத்தில்லா மதுரை என்ற தலைப்பில் நட்சத்திர நண்பர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி..

மதுரை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் குருசாமி, மதுரை மாநகர் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஆய்வாளர் சேது மணி மாதவன், ரெட் கிராஸ் ஆகியோர் இணைந்து, அவர்கள் தலைமையிலும், மதுரை மாநகர் காவல்துறையே வடக்கு இணை ஆணையாளர் அனிதா, கலால் உதவி ஆணையாளர் ராஜகுரு, கலால் தாசில்தார் ஆனந்தி ஆகியோர் முன்னிலையிலும், போதையில்லா தமிழகம், விபத்தில்லா மதுரை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, மதுரை தமிழ் அன்னை சிலை […]

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல்!

அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆளுநர் விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்தை மீறி அவர் நடந்து வருகிறார்.எனவே அவரை நீக்க ஒன்றிய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் உத்தரவிட […]

பழநியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

பழநியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான ஶ்ரீ இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு மணி அளவில் சொர்க்கவாசல் […]

விறு விறு வென உயர்ந்து வரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன..

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது. கடந்த மாதம் (டிசம்பர்) 26, 27-ம் தேதிகளில் விலை அதிகரித்து, பின்னர் விலை குறைந்த தங்கம், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த 3-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில் மறுநாள் ரூ.360 குறைந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!