தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் ஆவுடையானூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கலை கதிரவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜே.கே.ரமேஷ் வரவேற்றார். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன் தொகுப்புரை ஆற்றினார். திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். […]
Category: செய்திகள்
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர் ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! குகைவாசிகள்..! அத்தியாயம் 3 கப்ளிசேட் “அவர்கள் விழித்துக்கொண்டு இருப்பதாக நீர்நினைப்பீர்! ஆனால்அவர்கள் உறங்கிக் கொண்டு உள்ளனர்.அவர்களை வலப்புறமாகவும், இடப்புறமாகவும்,புரட்டுகிறோம்.அவர்களின் நாய் தனது முன்கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப்பார்த்து இருந்தால் அவர்களை விட்டு வெருண்டோடி இருப்பீர்!அவர்களால் அதிகம் அச்சமடைந்து இருப்பீர்!” (அல்குர்ஆன்18:18) குகைவாசிகள் வரலாறு சுவராசியமானது. இறைவனின் ஆற்றலை அற்புதத்தை புரிந்துகொள்ள அதிசய நிகழ்வு. இன்றைய அறிவியலுக்கு காரண காரியங்களை கற்றுத்தரும் நிகழ்வு.! மனிதர்கள் எழாமல் […]
சைபர் கிரைம் ஆன்லைனில் மோசடி குறித்த விழிப்புணர்வு பேரணி..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், 09.12.2025 அன்று கடையநல்லூர் பகுதியில் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மற்றும் சோசியல் […]
கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு. ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய அவலம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது., இன்று இந்த சாலை விரிவாக்க பணிக்காக எஸ்.ஓ.ஆர். நகர் எதிரே சாலையோரம் பள்ளம் தோண்டிய போது, உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு ஆண்டிபட்டி கணவாய் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, பள்ளத்தில் தேங்கியும், சாலையிலும் சென்றது., உடனடியாக குடிநீர் திறப்பு […]
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்.
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம். நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிராத போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வட்டார வழகறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, உண்ணாவிரத போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். உணாவிரதத்தில், நிலக்கோட்டை தாலுகாவில் சார்பு நீதிமன்றம் […]
புதுச்சேரியில் புது ரூட்டை கையில் எடுக்கும் விஜய்: பொருத்திருந்து பார்ப்போம்..
புதுச்சேரி பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், என்.ஆர். காங்கிரஸையும் முதல்வர் ரங்கசாமியையும் விமர்சிக்காதது பேசுபொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய போதே அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் திமுக மற்றும் பாஜகவை மட்டுமே விமர்சித்து வருகிறார். காங்கிரஸ், அதிமுக குறித்து பெரியளவிலான விமர்சனங்களை விஜய் முன்வைத்தது இல்லை. இதனால், தமிழகத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் […]
உசிலம்பட்டியில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது-யை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாச்சியரை கண்டித்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணை வட்டாச்சியர் தாணுமாலயன் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்., தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷணன் புறக்கணித்து வருவதாகவும், பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளாத நிலை நீடித்து வருவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் […]
சோனியா காந்தி பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி 79 பிறந்த நாள் விழா உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் டி. சரவணகுமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். மகேந்திரன் முன்னிலையில் […]
திமுகவிடமிருந்து பறிபோகின்றதா சோழவந்தான் தொகுதி?.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியை திமுகவிடம் கேட்டு காங்கிரஸ் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தயாராகி வருகிறதா என பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மேலூர் மதுரை மேற்கு திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி என ஐந்து தொகுதிகளில் அதிமுகவும் மதுரை கிழக்கு மத்தி வடக்கு மற்றும் சோழவந்தான் ஆகிய நான்கு தொகுதிகளில் திமுகவும் மதுரை […]
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! அத்தியாயம் (2) .சாக்கடல் சாசனச்சுருள்கள்…! கப்ளிசேட்! அந்தக்குகைக்கும் அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்” என்று நீர் நினைக்கிறீரா? (அல்குர்ஆன் 18:9) 1947 ஆம் ஆண்டு ஒரு ஆடு மேய்க்கும் அரபுச் சிறுவன் தனது காணாமல் போன ஆட்டுக்குட்டியை தனது ஊரின் அருகில் சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதியில் தேடி அலைந்தான். அந்த மலைப்பகுதி “கும்ரான் மலைப்பகுதி” என்று அழைக்கப்படுகிறது. ஆட்டுக்குட்டியை தேடிய சிறுவன், அங்குள்ள குகைக்குள் பார்த்தபோது, மண்பாண்டங்களில் சுருட்டி […]
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கும் உணவை மாணவ மாணவிகள் நிழலில் அமர்ந்து உணவருந்த ஏதுவாக அமைக்கப்பட்ட மேற்கூரை திறப்பு விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது., சுமார் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த துவக்கப்பள்ளியில் காலை உணவை ஓர் இடத்தில் அமர்ந்து உணவருந்த நிழல் இல்லாத நிலையை அறிந்த மதுரையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன தலைவர் குருசாமி, சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் […]
ஆளுநரை புறக்கணித்த பல்கலைக் கழக மாணவி! ஒரு போதும் ஏற்க முடியாது! நீதிபதிகள் கருத்து..
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 32- வது பட்டமளிப்பு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, ஜீன்ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டத்தை வாங்க மறுத்து துணைவேந்தர் சந்திரசேகரிடம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சம்பந்தப்பட்ட மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில், “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது […]
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்.
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம். நிலக்கோட்டை வட்டார வழகறிஞர்கள் சங்கத்தினர், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, திங்கள்கிழமை கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வட்டார வழகறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் சார்பு நீதிமன்றம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் […]
சோழவந்தானில் கழிவு நீர் கால்வாயில் விழுந்த சினை பசுமாடு பத்திரமாக மீட்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராயி இவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசுமாட்டினை தனது வீட்டில் வளர்த்து வருகிறார் இந்த பசுமாடு தற்போது சினை பருவத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தனது சினை மாட்டினை சோழவந்தான் பேரூராட்சி மயான பகுதி அருகில் வைகை ஆற்று பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற போது மயானம் அருகே தேங்கி இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கால்வாயில் விழுந்த பசுமாடு உயிர் பிழைப்பதற்காக கழிவுநீரில் […]
திருப்பரகுன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா யார்? திருப்பரங்குன்றம் மலை, ஓர் ஆய்யு!..
சிக்கந்தர் பாதுஷா அவர்கள் மிகச் சிறந்த ஆன்மீகவாதியாகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் என்னேரமும் இறை தியானத்தில் இருப்பவராகவும் 5 நேர தொழுகையாளியாகவும் இருந்தார்கள். இவர்கள் சவூதி ஜித்தா என்ற துறைமுக நகரின் ஆளுநராகயிருந்தார்கள் ஏர்வாடி இப்ராகிம் பாதுஷா அவர்களின் கனவில் தோன்றிய நபிகள்நாயகம் தமிழகம் சென்று இஸ்லாம் பரப்ப வேண்டியதன் பேரில், இப்ராகிம் பாதுஷா தலைமையில் 4000 பேர்களில் ஒருவராக சிக்கந்தர் பாதுஷாவும் தமிழகம் வருகிறார்கள். கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள் நெல்லை, மதுரை, நாகை […]
சோழவந்தான் பேருந்து நிலைய சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல முடியாமல் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது மேலும் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திற்கு வரும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மின்கம்பத்தில் […]
உசிலம்பட்டி அருகே கோவிலில் நள்ளிரவில் பெரிய கடிகாரத்தை திருடும் மர்ம நபர். சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கொக்குடையான்பட்டி கிராமம்.இக் கிராமத்து அருகில் உள்ளது தோப்பு கருப்புசாமி கோவில்.வத்தலக்குண்டு உசிலம்பட்டி சாலையில் இக்கோவில் அமைந்துள்ளதால் காவல் தெய்வமான தோப்பு கருப்பசாமியை டிரைவர்கள் ,நடந்து செல்வோர் உட்பட அனைவரும் இக்கடவுளை வணங்குவதால் கோயில் எப்பொழுதும் திறந்து காணப்படும். கோவில் பூசாரி வாரம் ஒரு முறை மட்டும் கோவிலுக்கு பூஜைக்கு வருவார் என கூறப்படுகின்றது. இந்நிலையில் கோவில் பூசாரி ஆறுமுகம் வழக்கம் போல் கோவிலுக்கு வந்த போது கோவில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த […]
திருக்குர்ஆனின் ஒளியில் அறிவியல் ஆச்சரியங்கள்!!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்.! இன்றும் அழியாத ஃபிர்அவ்னின் உடல்.! கப்ளிசேட்: அத்தியாயம் 1 எனினும் உனக்கு பின்னுள்ளவர் களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலை பாதுகாப்போம்.நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”.(அல்குர்ஆன் 10:92). சாக்கடல் (Dead sea) என்பது ஒரு ஆச்சரியம். சாக்கடல் என்று அழைக்கப்பட்டாலும் அது கடல் அல்ல அது ஒரு உப்பு ஏரி.சாக்கடலின் மேற்கே இஸ்ரேல்,மற்றும் பாலஸ்தீனமும், கிழக்கே ஜோர்டானும் அமைந்துள்ளன. மூன்றுபுறமும் நிலத்தால் சூழப்பட்ட […]
டிரஸ்ட் மூதாளர் பேணலகத்தில் இருபெரும்விழா
வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் மற்றும் மூதாளர் இல்லத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் இந்தோ-இத்தாலியன் கௌரவ விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இத்தாலி நாட்டவர் பங்கேற்று விருதுகள் வழங்கினர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம் பட்டியில் டிரஸ்ட் மூதாளர் பேணலகம் இயங்கி வருகிறது. இங்கு வி.ஜி.பி சார்பில் 190-வது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக பணிகளில் உள்ளவர்கள் பலர் கெளரவிக்கப் பட்டனர். டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இருபெரும் விழாவில், சமூகத்தில் […]
திண்டுக்கல்லில் பிஎல்ஒ-க்கள் வாக்காளர்களை சேர்ப்பதற்கு களத்திற்குச் செல்லவில்லை, அறையிலேயே அமர்ந்து பெயர்களை நீக்கி விட்டார்கள்!-அமைச்சர் ஐ.பெரியசாமி..
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். கருத்து கூறவில்லை என்றால், அது பற்றி பேசி என்ன பயன். நாஞ்சில் சம்பத் தவெக-வில் […]
You must be logged in to post a comment.