சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் -ன் 108 வது பிறந்தநாள் விழா..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் -ன் 108 வது பிறந்தநாள் விழா நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ரமேஷ், உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புது மடத்தில் கால்பந்து போட்டி.! வண்ணாங்குண்டு டி டி எப் டி கால்பந்து வீரர்கள் முதல் பரிசு .!!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே புதுமடம் ஜமாத்தார்கள் மற்றும் புதுமடம் புட்பால் கிளப் இணைந்து ஆண்களுக்கான கால்பந்து போட்டி நடத்தினர். இதில் பல ஊர்களை சார்ந்த 32 பணிகள் கலந்து கொண்டு நான்கு நாட்கள் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் வண்ணாங்குண்டை சார்ந்த டி டி எஃப் டி கால்பந்தணியும் புதுவலசை அணியும் இணைந்து விளையாடினர். இதில் வண்ணாங்குண்டை சார்ந்த டிடி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் அங்கமான டி டி எப் டி கால்பந்து வீரர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் .!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் P.T.பழனிவேல் தியாகராஜன் மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தேனி நாடாளுமன்ற உறுப்பினர்தங்க தமிழ்ச்செல்வன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகா ஈஸ்வரி திமுக கட்சி நிர்வாகிகள் […]

தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும்; வெதர்மேன் ராஜா தகவல்..

தமிழ்நாட்டில் கடுமையான குளிரும், பனிப் பொழிவும் அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்த வானிலை அறிக்கையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் சாரல் மழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.   இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்யும். வறண்ட வாடைக் காற்றின் ஊடுறுவல் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் அதிகரிக்கும். வேலூர், […]

அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) 18வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி துவக்கம்..

இராமநாதபுரம் கீழக்கரையை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக  செயல்பட்டு வரும்அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) சார்பாக நடத்துப்ஙனும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி இன்று (14/01/2025) கீழக்கரையில் உற்சாகமாக தொடங்கியது. இந்த போட்டியில் பல் வேறு இடங்களில் இருந்து போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்..

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பல விதமான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளையும், தற்காலிக பணியாளர்களுக்கு மஞ்சள் பையில் பொங்கல் பரிசு தொகுப்பினையும் மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் வழங்கினார். மஞ்சள் பை பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் […]

சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம்ஜல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரங்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்களது விவரங்களை sivaganga.nic.in என்ற இணையதளத்தில், குறிப்பிட்ட தேதிகளில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல்.சிவகங்கை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சனவரி முதல் மே ஆம் மாதம் வரை ஜல்லிக்கட்டு/ மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 16.01.2025 அன்று சிராவயல் ஜல்லிக்கட்டு /மஞ்சுவிரட்டு நிகழ்வும் 18.01.2025 அன்று […]

மதுரை ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பொங்கல் போனஸ் தராததால் போராட்டம்.இலவசமாக செல்லும் வாகனங்கள்

மதுரை டு ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பசேத்தியில் அருகே அமைந்துள்ளது திருப்பாசேத்தி சுங்கச்சாவடி இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பாண்டிகையின் போது போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது அப்பொழுதுபாதி போனஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மீதியை பொங்கல் பண்டிகையின் போது மீதி போனஸ் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறவே அவர்களும் சரி என்று கூறி இருந்துள்ளார்கள் ஆனால் தற்போது பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்காததால் ஊழியர்கள் யாரும் சுங்கச்சாவடியில் பணி செய்யாமல் நான்கு மணி முதல் தற்போது வரை […]

ஆளுநர் பதவிக்கே ஆர்.என்.ரவி அவமானம்; வில்சன் MP கடும் தாக்கு!!

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தொடர்ச்சியாக சட்டபேரவையின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார். அண்மையில் இந்த ஆண்டுக்கா முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்படி செய்துள்ளார்.இப்படி தொடர்ந்து அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து ஆளுநர் மாளிகை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது.இதற்கு, வில்சன் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஆளுநர் […]

ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது; கர்நாடகா உயர்நீதிமன்றம்..

ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது; கர்நாடகா உயர்நீதிமன்றம்.. ஜெயலலிதாவின் சொத்துகளை ஒப்படைக்க கோரி தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி தீபா தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஒப்படைக்க கோரி தீபா மனு சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக சொத்துக்கள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய உத்தரவு- கர்நாடகா உயர்நீதிமன்றம். மேல்முறையீடு செய்ய […]

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!- எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை […]

15 சிறுமிக்கு பாலியல் தொல்லை; பா.ஜ.க நிர்வாகி போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!

பா.ஜ.க.வின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் தனியார் கல்லூரியில் தலைவராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவர் எம்.எஸ்.ஷா மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சிறுமியின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில் ‘தன்னுடைய மகளின் செல்போனுக்கு பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா ஆபாசமான உரையாடல்களை அனுப்பி […]

தைத் திருநாளில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் பாடுபடுவோம்!-வைகோ பொங்கல் வாழ்த்து!!

தைத் திருநாளில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் பாடுபடுவோம்!-வைகோ பொங்கல் வாழ்த்து!! உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில், அறுவடைத் திருநாளைத் தைப்பொங்கல் திருவிழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர். இஞ்சி, மஞ்சள், கரும்புடன், புதுப்பானையில் புத்தரிசி இட்டுச் சர்க்கரைப் பொங்கல் படைத்துப் பெற்றோரோடும் இல்லத்து அரசியோடும், மக்கள் செல்வங்களோடும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குதூகலத்தோடு குலவையிட்டு மகிழ்கின்ற நாள்தான் தைத்திருநாள் ஆகும். ‘உலகத்தாருக்கே அச்சாணி’ […]

புதுமடம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா.!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்    அலங்கரித்து வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, பானையில் பச்சரியில் பொங்கல் வைத்து பால் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என சத்தம் எழுப்பி உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.   பள்ளி தலைமை ஆசிரியர் சரண்யா தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.   அதனைத் […]

இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம்.!

இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் . ஆதித்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாஸ்கரன் வரவேற்புரை […]

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் வைகோ அறிக்கை.!

.திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிரிவினையாக கட்சி வேறுபாடு […]

கல்வியின் தரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி திருச்சியில் தமீமுன் அன்சாரி பேட்டி.!

திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையும் விழா திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஹோட்டலில் நடந்தது நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், முன்னால் எம்எல்ஏ வுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது  ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நல பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக வெற்றி […]

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கிய அமைச்சர் .!

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு […]

தஞ்சாவூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீர்வரிசையுடன் பொங்கல் பரிசு.!

  தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை கரும்பு , புத்தாடை , பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது  தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினார்கள் .  தஞ்சை மாநகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 பேர் என மொத்தம் 610 பேர் தினமும் தஞ்சை மாநகர் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]

தஞ்சாவூரில் நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் விழா.!

விழிம்பு நிலை நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ தஞ்சையை அடுத்துள்ள பூதலூர் நரிக்குறவர் காலனியில் கோலப்போட்டியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை. தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் மற்றவர்களை களை போல் விழிம்பு நிலை நரிக்குறவர் இன மக்களும் பொங்கல் கொண்டாட தஞ்சை ஜோதி அறக்கட்டளை ஏற்பாடில் கோலப்போட்டி நடைபெற்றது 30 பேர் கோலப்போட்டியில் பங்கேற்று வண்ணக்கோலமிட்டு அசத்தினர். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!