ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் . !  மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில்  மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம்  அணியாமல் வருகின்றனர் இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.  எனவே  இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை […]

வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது.! 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வனச்சரக வனதுறையினருக்கு கமுதி டீ.கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வன உயிரின வேட்டை நடப்பதாகவும் வன உயிரனங்களின் இறைச்சி விற்பனை செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து. சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வனபாதுகாப்புபடை உடன் தனிப்படை அமைக்கப்பட்டு வன உயிரினங்களை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை தேடும் பணி நடைபெற்றது.    அதனைத் தொடர்ந்து டீ. கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆட்காட்டி பறவையை சுட்டு […]

வெளிப்பட்டணம் ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டணம் தாயுமானவர் சுவாமி கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலயம் இங்கு ஸ்ரீ மகா கணபதி, பாலமுருகன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஆலயத்தின் முன் அமைந்துள்ள குண்டத்தில் அக்னி வார்த்து யாகசாலை நடைபெற்று பூர்ணாகுதியும் சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை மங்கள வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்து வானில் கருடன் வட்டமிட்டபடியே விமான […]

மதுரையில் துணை முதலமைச்சரை வரவேற்ற திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ

ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தபோது திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தார் இதில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்

சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் அமெரிக்க இரட்டைய பட்ட திட்டம்

கல்வித் துறையில் புதிய முன்னேற்றமாக, கல்வி குழும பள்ளிகள் மற்றும் அகாடமிகா இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (Academica International Studies, USA) இணைந்து அமெரிக்க இரட்டைய பட்ட திட்டத்தை (American Dual Diploma Program) அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 14 மாநிலங்களில் 205 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பங்காளித்துவத்தில் கொண்டு செல்லும் அகாடமிகா, உலகளவில் 55 நாடுகளில் 50,000 மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், இந்திய மாணவர்கள், இந்திய உயர்நிலை […]

தஞ்சையில் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடை பயிற்சி.

தஞ்சையில் தொடர்ந்து நடைபெறும் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சி… இன்று காலை நடைபெற்ற நடைபயிற்சியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் துவங்கப்பட்ட நடப்போம் நலம்பெறுவோம் என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை தொடரும் வகையில், மாதந்தோறும் முதல் ஞாயிறன்று 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சியை தஞ்சை சத்தியா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது . அந்த வகையில் இன்று காலை நடைபெற்ற […]

சோழவந்தான் பேருந்துக்காக மூன்று மணி நேரம் காத்திருந்த பயணிகள்.போக்குவரத்து துறையின் தொடரும் அலட்சியம்

மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இருந்து சோழவந்தான் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் காத்திருந்த அவலம் அரங்கேறியது முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் மக்கள் பல்வேறு பணிகளுக்கு வெளியூருக்கு சென்று வரும் நிலையில் திருமங்கலம் மற்றும் செக்கானூரணியில் இருந்து சோழவந்தான் மற்றும் அதன் சுற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் செக்கானூரணி பேருந்து நிலையத்தில் இரண்டாம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பேருந்துக்காக வெயிலில் […]

தமிழகத்தில் இன்று (பிப்.2ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்:

தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 5-ந் தேதியன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238 கோடியே 15 லட்சம் வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கடந்த 31-ந் தேதி 23 ஆயிரத்து 61 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.231 கோடியே 51 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 2-வது முறையாக அதிக வசூல் செய்து புதிய […]

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? :ஒன்றிய நிதிநிலை அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நெடுஞ்சாலைகள் – இரயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு […]

லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது நாட்டை அந்நிய நாட்டுக்கு காட்டி கொடுப்பதற்கு சமம் காங் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி ஆவேசம்.!

தேவகோட்டையில் தியாகி கே.எம்.சுப்பையா 107 வது பிறந்த நாள் விழா, தியாகிகள் தின விழா கே.எம்‌. எஸ். சிந்தனைச் சோலை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. நிறுவுநர் தெய்வசிகாமணி வரவேற்றார். செயலாளர் துரை தமிழ்ச்செல்வன் அறிக்கை வாசித்தார். இவ்விழாவில் கே.எம்.எஸ். படத்தை திறந்து வைத்து காங். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி பேசுகையில், இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை முத்து இவ்விழாவில் பங்கேற்று உள்ளார். பாராட்டுக்கள். இஸ்ரோ விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகள் செய்து அதில் […]

ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா :சர்வதேச, தேசிய, பல்கலை. போட்டிகளில் வென்ற மாணவியருக்கு டிஐஜி பரிசு வழங்கினார்.!

இராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடந்தது. கல்லூரி நிறுவனர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். நேபாள் நாட்டில் 2024 ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை நடந்த டென்னிஸ் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனி நபர் கோப்பை வென்ற ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர் ரக்ஷ்யா தேவி ( சிறந்த பந்து வீச்சாளர்), நவீனா (சிறந்த விக்கெட் […]

தவெக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அதிரடி காட்டி வரும் விஜய், மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி பொறுப்புகள் வழங்கப்பட்டுவருகிறது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள விஜய், தேர்வு செய்யப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களை தனித்தனியாக நேர்காணல் நடத்தி பொறுப்புகளை வழங்கிவருகிறார். சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாக கழகமானது பிரிக்கப்பட்டுள்ள […]

கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் பெண்ணை கோடாரியால் வெட்டி கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தங்க செல்வி (வயது 37). சுரேஷிற்கும் அதே தெருவைச் சேர்ந்த ஜான் பாக்கியராஜ் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.   இந்நிலையில் கடந்த 26.06.2016 அன்று தங்க செல்வி தனது சகோதரியுடன் வீட்டின் முன் […]

சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனர்.அரசு பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள திருவேடகம் பகுதி பள்ளிவாசல் அருகே சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் பேருந்து தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து ஓட்டுநர் இயக்கி வந்தார் நாச்சிகுளம் கிராமத்தில் இருந்து மதுரை அண்ணா நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து நிலை தடுமாறி வைகை ஆற்றுக்கரையில் உள்ள 10 அடி பள்ளத்தில் தென்னை மரத்தின் மீது பலமாக மோதியது இதில் அரசு பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர் […]

கடையம் அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா..

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவி மைதீன் பீவி ஹசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் ஆண்டறிக்கை வாசித்தார். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ரஹ்மான், தென் பொதிகை வியாபாரிகள் நலச் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் […]

சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை. வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா பழைய சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி பி ஆர் சரவணன் பிற்பட்டோர் நலத்துறை […]

தஞ்சாவூரில் மகாத்மா காந்தி நினைவு தினம்.! 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை தஞ்சை மாநகரம் சார்பில், தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.      இதில், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் என்.குருசாமி,    மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் இரா.புண்ணியமூர்த்தி,    மக்கள் ஒற்றுமை மேடை ப.சத்தியநாதன்,  […]

கல்லூரி மாணவியின் கல்லூரி கட்டணத்தை செலுத்திய தஞ்சை ஜோதி அறக்கட்டளை.!

மகள் படித்து பட்டம் பெற வீட்டில் இருக்கும் கடைசி பொருளான மறைந்த கணவர் நினைவாக வைத்திருந்த தாலியை விற்று கல்விக்கட்டணம் செலுத்த முயன்ற ஏழைத்தாய் . அடகு கடைக்காரர் மூலம் கேள்விப்பட்டு கல்லூரி கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றை முழுமையாக செலுத்தி தாயின் தாலியை மீட்ட சமூக ஆர்வலர் . நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் கிரமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் – பெரியநாயகி தம்பதிகள் . இவர்களுக்கு ரோகிணி,துர்காதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர் . முருகதாஸ் அன்றாடம் கூலி வேலைக்கு […]

ராமேஸ்வரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் சென்ற பயணிகள் இல்லாத ரயில் .!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.545 கோடி மதிப்பில் கட்டி முடித்த செங்குத்து தூக்கு புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் பாம்பன் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரத்திற்கு 2022 டிச 23 முதல் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய மதுரை ரயில் நிலையத்திற்கு கடந்த 2 […]

தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியேற்ற காவலர்கள்..

ஜனவரி 30 தீண்டாமை ஒழிப்பு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணு கோபால் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் துறையினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.   இதில் இந்திய அரசியலமைப்பின் பால் இடைவிடாத, […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!