காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து கட்டிடம் சேதம்!

நீலகிரி எல்லநல்லி உள் வட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கேத்தி காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதம் அடைந்தது நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியில் புதிதாக […]

பரவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை மாவட்டம் பரவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்திற்கு பாஜக மண்டல் தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார்முன்னாள் மாவட்டசெயலாளர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார் ஊர்வலத்தில்பரவை பாலாஜி பிச்சை. ஆனந்தன் ஜெகநாதன். துரைபாஸ்கர் இருளப்பன். அழகுராஜா MK .முருகன். கண்ணன் ,ரமணி,ராஜபாண்டி, முருகானந்தம். கார்த்திகேயன் , மணிநாகராஜ்,தனபால், தமிழ்மாநிலகாங்கிரஸ் தலைவர் ராமு அமமுக. செயலாளர் நாகேந்திரன் அதிமுக சரவணன் மகாதேவன்,செந்தில் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ஊர்வலம் பரவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று […]

மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார் அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில் உரிய மரியாதை தரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மரியாதை வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை இதனை கண்டித்து சமயநல்லூரில் அரசு பள்ளி எதிரே தேனூர் கிராமத்தினர் மற்றும் அரசியல் சமூக அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். […]

உசிலம்பட்டியில் வைகாசி பொங்கல் திருவிழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள தில்லை நாயகபுரம் ஊரில் அருள் பாலிக்கும் மகா ஈஸ்வரி அருள் மிகு பத்திரகாளியம்மன் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. உசிலம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் அம்மன் சிம்மவாகனத்தில் ஊர்வலம் மற்றும் இன்று காலை பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி ஷத்திரியகுல இந்து நட்டாத்தி நாடார்கள் உறவின் முறை மற்றும் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி ஷத்திரியகுல நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் […]

கூடை பந்தாட்ட போட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு பள்ளி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி மாலை மின்னொளியில் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. சோழவந்தான் கூடை பந்தாட்ட கழக சேர்மன் தொழிலதிபர் டாக்டர் எம். மருதுபாண்டியன் போட்டியினை துவக்கி வைத்தார். இதில் சென்னை கோவை மதுரை திண்டுக்கல் சிவகங்கை தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் சென்னை வி .கே […]

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம்..

தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்து உள்ளதால் மத்திய மேற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.   இந்த நிலையில் பருவமழை மேலும் தீவிரமடையும் […]

ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை வீட்டில் இருந்தபடியே நீக்குவது எப்படி??

ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை வீட்டில் இருந்தபடியே நீக்குவது எப்படி?? ரேஷன் கார்டில் இறந்தவர்களின் பெயர்களை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே நீக்கலாம். எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு ஆன்லைன் மூலம் பல சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை எந்த அலுவலகத்துக்கும் நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடியும். இதற்கு உங்களிடம் மொபைல் அல்லது லேப்டாப் இருந்தால் போதும். அந்தவகையில் இன்று ஆன்லைன் மூலம் ரேஷன் […]

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் மழை பரவத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் தமிழகத்தில் […]

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளைகளின் சார்பாக ஒன்றிய அரசின் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாவட்டத் தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், புளியங்குடி பிலால் வடகரை சையது அலி, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாத் […]

செங்கோட்டை நூலகத்தில் புத்தகம் வெளியீடு..

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. சிறந்த எழுத்தாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் பேராசிரியருமான மாலிக் பாதுஷா எழுதிய “எங்க வீடு” என்ற நாவல் வெளியீட்டு விழா செங்கோட்டை அரசு நூலகத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வரிசைக் கனி புத்தகத்தை வெளியிட்டார். தமிழ் செம்மல் விருதாளர், பாப்பாக்குடி அ.முருகன் நூலை பெற்றுக் கொண்டார். விழாவிற்கு, வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் […]

புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு விசிகவினர் கடும் எதிர்ப்பு! தனியார் ஹோட்டலில்  போலீசார் குவிப்பு! வத்தலக்குண்டுவில் பரபரப்பு..

புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு விசிகவினர் எதிர்ப்பு! தனியார் ஹோட்டலில்  போலீசார் குவிப்பு! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. வத்தலகுண்டு வருகை புரிந்த, புரட்சி தமிழகம்  பறையர் பேரவை தலைவர்  ஏர்போர்ட்  த.மூர்த்திக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் தங்கியுள்ள ஹோட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவர் அந்த மாநாட்டில்  கலந்து கொள்ள விடாமல் தடுத்ததால்,  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டுவில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் […]

நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து போலீஸ்காரர் பலி..

நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து போலீஸ்காரர் பலி.. மதுரை, போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40) மற்றும் அவரது மனைவி சங்கீதா(40) ஆகிய இருவரும்  இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை  வத்தலக்குண்டு சாலையில் உள்ள  தியாகராஜா மில் அருகே வந்து கொண்டிருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மதுரையைச் சேர்ந்த […]

உடன்காட்டுப்பட்டியில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொடிக்குளம் 5 ஊர் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி உடன்காட்டுப்பட்டியில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ராமன் வரவேற்றார். இதில் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை […]

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் தேவர் மகாலில் மதுரை மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் உசிலம்பட்டி ஒன்றிய ஐந்தாவது மாநாடு நடைபெற்றது.

பட்டாசு வெடித்ததில் சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்

மதுரைசெக்கானூரணி தேவர் சிலை அருகே சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்தில் ஒருவர் படுகாயம் மராமத்து பணிக்காக மேல் மாடியில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது அருகில் சுப நிகழ்ச்சிக்கு ஊர்வலமாக சென்றவர்கள் பட்டாசு வெடித்ததில் அதிர்வு ஏற்பட்டு கட்டடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே குடியிருந்து வருபவர் சின்னத்திரை நடிகை சந்திரசேகரி இவரது கணவர். கணேசன் இவர்களின் வீட்டின் […]

பாகிஸ்தானுடன் போரில் வெற்றி! பழநியில் 200 அடி தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்.

பாகிஸ்தானுடன் போரில் வெற்றி! பழநியில் 200 அடி தேசிய கொடி ஏந்தி ஊர்வலம். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 200 அடி நீளம் உள்ள தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் தீவிரவாதிகளை அழித்து வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. சுபாஷ் சந்திரபோஸ் சிலை முன்பு பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் துவங்கிய […]

செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் செம்பட்டியில் 5 மணி நேரம்  சாலை மறியல் போராட்டம்..

செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் செம்பட்டியில் 5 மணி நேரம்  சாலை மறியல் போராட்டம்.. செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வெள்ளிக்கிழமை இரவு  வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் செம்பட்டியில் சனிக்கிழமை  அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணி நேரம்  சாலை மறியல் போராட்டத்தில் […]

உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கார் மோதி பலி.

உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் குஞ்சாம்பட்டியில் தேனியில் இருந்து வந்த கார் பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதியது. இதில் மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட 4 பேர்கள் சம்பவ இடத்தில் பலி. மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.ஜோதிகா வயது 20 லட்சுமி வயது 55 பாண்டிச்செல்வி வயது28 குழந்தை பிரகலாதன் வயது 2 மற்றும் ஜெயபாண்டி கருப்பாயி வயது 65 […]

பழநியில் ரோப்கார் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி!  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை..

 பழநியில் ரோப்கார் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி!  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை.. பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மலை மீது எளிதாக சென்று வர வசதியாக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரோப் காரில் பக்தர்கள் செல்லும் போது பழுதாகி நின்றால் அந்தரத்தில் பெட்டியில் […]

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! ஏழு பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

பழனியில் கஞ்சா விற்பனை செய்த ஏழு பேர் கைது- கைதானவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பழனி திண்டுக்கல் சாலையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீசார் திடீரென திண்டுக்கல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன், பழனி நகரைச் சேர்ந்த மணிகண்டன், கார்த்திக், நாகேந்திர பிரசாத், முகமது சேக் ,சரவணகுமார் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!