உசிலம்பட்டி திமுக நகரம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி நகர் தி மு க சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில்q தொழிலாளர்கள் உழைப்பாளர்கள் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாq தேனி ரோட்டில் உள்ள எம் பி பழனி மஹாலில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகர கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பத்திரப்பதிவுத்துறைஅமைச்சர் மூர்த்தியின் ஆலோசனையின் படி சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]

சோழவந்தான் அருகே மேலக்காலில் ஆயுர்வேத மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் கிராமத்தில் ஒருங்கிணைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் மாவட்ட சித்தா மருத்துவர் அன்னகாமு வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் முன்னிலை வகித்தனர் மேலக்கால் […]

குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவிலில்திருக்கல்யாணம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக மேடை அமைக்கப்பட்டது. கோவிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் மேடைக்கு வந்திருந்து சிறப்பு அலங்காரம் நடந்தது. இதைத் தொடர்ந்து சடகோப பட்டர், ஸ்ரீ பாலாஜி பட்டர், ஸ்ரீதர் பட்டர், சௌமியா நாராயணன் பட்டர், வெங்கடேஷ் பட்டர், ராஜா பட்டார் உள்பட 12 பட்டர்கள் யாக பூஜை நடத்தினர். […]

பலத்த மழை பெய்ததால் மரம் சாய்ந்து மீன் வியாபாரி பெண் பலி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் வாரச்சந்தை நடைபெறும். அக்டோபர் 5ஆம் தேதி மதியம் பலத்த காற்றுடன் மழை பெய்தது உழவர் சந்தையில் மீன் வியாபாரம் செய்த பாசி பட்டணத்தை சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி மரம் சாய்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மற்றும் மூன்று பெண்கள், ஒரு நபர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .மலையுடன் சூறைக்காற்று வீசியதில் உழவர் சந்தையில் தகரக் கூரைகளும் சாய்ந்தது நான்கு சக்கர வாகனமும் […]

சோழவந்தானில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர் ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன் மாறன் பால ராஜேந்திரன் தன்ராஜ் பரந்தாமன் சரந்தாங்கி முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய […]

சமயநல்லூரில் அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் துவக்கி வைத்தார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் சமயநல்லூரில் திண்ணை பிரச்சாரத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் தமிழரசன் நீதிபதி ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ரவிச்சந்திரன் எம் வி பி ராஜா முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மகளிர் அணி […]

சோழவந்தான் அருகே பல மாதங்களாக சேரும் சகதியமாக உள்ள சாலையை சரி செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் பல மாதங்களாக சேரும் சகதியுமாக உள்ள சாலையை சரி செய்ய பொதுமக்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இந்த பகுதியில் ஊத்துக்குளி பேருந்து நிலையம் அரசு பள்ளி முன்பு உள்ள சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் பல மாதங்களாக இருந்து வருகிறது மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வாகனங்கள் பொதுமக்கள் செல்ல முடியாத அளவில் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது […]

சோழவந்தான் ஸ்ரீ பிரளயநாதசிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதசிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம். மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலான அருள்மிகு ஸ்ரீ பிரளயநாத சுவாமி கோவிலில் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் இளநீர் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரிசப வாகனத்தில் சுவாமி அம்பாள் இருவரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் […]

சோழவந்தானில் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

சோழவந்தானில்இந்திய தேர்தல் ஆணையமும் பி ஜே பிமற்றும் அதன் துணை அமைப்புகளும் சேர்ந்து ” வாக்கு திருட்டை ” மேற்க்கொண்டு வரும் ஜனநாயக கேலிக்கூத்தைகண்டித்து பொதுமக்களிடம் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது. சோழவந்தான் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ்பாண்டியன் சோழவந்தான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராமன் முன்னாள் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தலைவர் தனிச்சியம் கணேசன் தொகுதி ஊடகப்பிரிவுத்தலைவர் வையாபுரி சமயநல்லூர் பவுன்ராஜ் தென்கரை […]

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்கு மாவட்டம் தி மு க உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பாகமுகவர்கள் பிளாக் 2 ஆலோசனை கூட்டம் மாதரை அருகே தேனி ரோட்டில் உள்ள ஆர் எஸ் டி செல்வ தமிழரசி மஹாலில் நடைபெற்றது. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் தலைமையில் வணிகவரி அமைச்சர் பி. மூர்த்தி ,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை நகர செயலாளர் […]

சோழவந்தான் அருகே தென்கரை சங்கர மடத்தில் விஜயதசமியையொட்டி லலிதா ஹோமம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி நிறைவு நாள் விஜயதசமியை முன்னிட்டு லலிதா ஹோமம் நடைபெற்றது. சங்கர மட வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி லலிதா ஹோமம் மற்றும் அர்ச்சனைகள் செய்தார். தொடர்ந்து கன்னிகா பூஜை, சுகாசினி பூஜை நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இதில் தென்கரை முள்ளி பள்ளம் சோழவந்தான் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலமேடு பகுதியில் சுமார் 4 கோடி மதிப்பில்அரசு கட்டிடங்கள், மற்றும் தார்சாலை அமைக்க வெங்கடேசன் எம் எல் ஏ பூமி பூஜை

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜாகாள்பட்டி ஊராட்சி மறவபட்டியில் மறவபட்டியிலிருந்து கிருஷ்ணாபுரம்வரை 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு 91 லட்சத்தில் தார்சாலை அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில்வெங்கடேசன் எம் எல் ஏ கலந்துகொண்டார். தொடர்ந்து, ராஜாக்காள் பட்டியில்39.70 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் இசேவை மையம் பாலமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 99 லட்சத்தில் புதிய வகுப்பறை பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான ரூபாய் 75 லட்சத்தில் பூமி பூஜை கீழச்சின்னனம்பட்டியில்90 லட்சம் மதிப்பில் […]

சோழவந்தான் பேரூராட்சியில் அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் எட்டு பேர் அதிமுக சார்பில் ஆறு பேர் சுயேச்சைகள் நாண்கு என வெற்றி பெற்றிருந்தனர் இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கான போட்டியில் பெரும்பான்மை இல்லாத திமுக சுயேட்சையாக போட்டியிட்ட ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சத்திய பிரகாஷை திமுகவில் இணைத்து பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அப்போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் வார்டு கவுன்சிலர் […]

உலக முதியோர் தினம் குறித்து கவிஞர் பேரா..

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட முதியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் பே. இராஜேந்திரன் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில், “முதியோர்களை மதிப்பதும், அவர்களைக் காப்பதும் அவசியமானது என்பதை உணர்ந்த ஐக்கிய நாட்டு சபை 1990- ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் நாளை உலக முதியோர் நாளாக அறிவித்தது. அதன்படி 1991-ஆம் ஆண்டு முதல் அக்டோபர்-1 உலக முதியோர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   முதியோர்களின் அறிவு, அனுபவம் ஆகியவற்றை உணர்ந்து மதித்தல் இளைய சமுதாயத்தினருக்கு […]

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவில் திமுக நகரம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி நகர் தி மு க சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் தொழிலாளர்கள் உழைப்பாளர்கள் பெண்களுக்கான 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரையூர் சோலை குரு மஹாலில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகர கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பத்திரப்பதிவுத்துறைஅமைச்சர் மூர்த்தியின் ஆலோசனையின் படி 2000 சுடுகாட்டு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் […]

சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தடை செய்யப்பட்ட மின்சாரம் . எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பாக முகவர்களுக்கான‌ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாக முகவர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் மின்சார வாரியத்திற்கும் மின்சார பணியாளர்களுக்கும் மாற்றி மாற்றி போன் செய்தார்கள் […]

மேட்டுப்பாளையத்தில் நாய்களுக்கான தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் இல்லத்தில் உள்ள நாய்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மேட்டுப்பாளையம் நகராட்சி உடன் இணைந்து தமிழ்நாடு அரசு உத்தரவின்படி “WVS” தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை துறை நடத்தும் “நாய்களுக்கான தடுப்பூசி முகாம்” செப்டம்பர் 29 ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை மேட்டுப்பாளையம் […]

கரூர் மரணங்கள்; வலியும்! வேதனையும்!

கரூர் மரணங்களின் வேதனையும், வலியும்! எனும் தலைப்பில், தென்காசி மாவட்ட எழுத்தாளர் ஆலடி எழில் வாணனின் இரங்கல் பதிவினை இங்கு பதிவு செய்கிறோம். நேற்று (27.08.25) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி தற்போதைய நிலவரப்படி 39 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொலைக் காட்சியிலும், செய்தித் தாள்களிலும், சமூக ஊடகத்திலும் வரும் இந்த சம்பவத்தைப் பற்றிய செய்திகள் மற்றும் காணொலிகள் நமக்கெல்லாம் வேதனையையும், […]

மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு.!

சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு – மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சாலையோர சிறு வியாபாரிகளுக்காக புதியதாக கட்டப்பட்ட கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்களுக்கு இன்று மனு வழங்கப்பட்டது. மார்க்கெட் பகுதியில் நீண்ட காலமாக தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்து வரும் ஏழை மக்களுக்கு, நகராட்சி கட்டியுள்ள புதிய கட்டடங்களில் அமைந்துள்ள கடைகள் ஒதுக்கப்பட்டால், அவர்கள் […]

மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மனு

மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சாலையோர வியாபாரிகளுக்கு மார்க்கெட் பகுதியில்புதியதாக கட்டப்பட்ட கடைகளை அப்பகுதியில் நீண்ட காலமாக சாலை ஓரத்தில் தினசரி வாழ்வாதாரத்தை தேடி வியாபாரம் செய்து வரும் ஏழை எளிய மக்களுக்கு நகராட்சியால் கட்டப்பட்ட புதிய கட்டடங்களில் அமைந்துள்ள கடைகளைகொடுக்குமாறு கோரிக்கை மனுவினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசாவிடம் கொடுக்க வேண்டிய கோரிக்கை மனுவை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலியிடம் மனு கொடுக்கப்பட்டது தங்களது கோரிக்கையபரிசீலனை செய்து தங்களுக்கு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!