பணியிலிருக்கும் போது தன்னை தாக்கிய சக பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் மிரட்டுவதாக புகார்.150க்கும் மேற்பட்ட முறை மதுரை ஆட்சியரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அவலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை ஆத்தகரப்பட்டியைச் சேர்ந்தவர் தவசி (60).இவர் கடந்த 1980 முதல் எழுமலை மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்து தற்போது பணிநிறைவு பெற்றுள்ளார். இலருக்கு கீழ் பணியாற்றுபவர்கள் வயர்மேன் த.தவசி உதவியாளர் கதிரேசன் .இவர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும் வேலையில் அஜாக்ரதையாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.இது குறித்து தவசி பலமுறை இவர்களை கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 4.6.2022ம் ஆண்டு பணியிலிருக்கும் போது இவர்கள் வேலை செய்யாதது குறித்து தவசி கேட்ட […]

வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தொண்டியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் .!

ஹிந்தி மொழிக்கும் சமஸ்கிருதம் மொழிக்கும் நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு ஏன் செம்மொழியான எங்கள் தாய் மொழிக்கு ஒதுக்கவில்லை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கேள்வி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், ‘அரசியலமைப்பு விரோத வக்பு மசோதா 2024’ஐ ரத்து செய்யக் கோரியும், 1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி இறை இல்லங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எஸ்டிபிஐ […]

கீழக்கரையில் பாஜகவின் தெருமுனை கூட்டம்.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மத்திய அரசின் 2025 2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்   கீழக்கரை நகர் தலைவர் K.C.V. மாட முருகன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் தரணி R. முருகேசன் மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் T. பாரதி ராஜன் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.   இதில் மக்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டையை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது.    இந்நிகழ்ச்சியில் நகர் பொதுச் செயலாளர் கருங்கதாஸ் விளையாட்டுப் பிரிவு மாவட்டச் […]

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில்2 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க வெங்கடேசன் எம் எல் ஏ பூமி பூஜை

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் அளவில் ரோடு மிகவும் மோசமாக இருந்து குண்டு குளியுமாக இருந்தது இதனால் பல விபத்துகள் நடந்து வந்தது. இது குறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி இந்த ரோடு புதுப்பித்து கொடுப்பதற்கான நிதியைப் பெற்றுத் தருமாறு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்தார். இதன் பேரில் அந்த ரோட்டை புதிதாக போடுவதற்கு 2 கோடியே20 லட்சம் செலவில் போடுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. […]

சோழவந்தான் அருகே திருவேடத்தில் நெடுஞ்சாலைத் துறையினரின் தொடரும் அலட்சியத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் சாலையின் நடுவே முழங்கால் அளவு ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் திருவிடகம் ஏடகநாதர் கோவில் நுழைவாயில் முன்பு சாலையின் நடுவில் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது இதன் அருகிலேயே வைகை அணைகளில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் பைப்புகள் செல்கிறது இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறும் குடிநீர் பள்ளத்திற்குள் விழுந்து சாலை முழுவதும் தண்ணீர் செல்கிறது மேலும் […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வாசலை மறித்து நிற்கும் வாகனங்களால் பக்தர்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இந்த கோவிலில் தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர் இந்த நிலையில் கோவிலின் முன்பு மூன்று மாதக் கொடி கம்பம் அருகில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த இந்த பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் […]

மாற்றுத்திறன் படைத்தோருக்கு அரசு அடையாள அட்டைகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் ஆலங்குளம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வ மீனாட்சி, தென்காசி மாவட்ட மாற்றுத் […]

சிறுபான்மையினர் விரோத போக்குடன் செயல்படும் இராமநாதபுரம் நகராட்சி.! எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தலைவர் கண்டனம்.!!

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சாலையோர வியாபாரிகள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி […]

கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா .!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க். முபாரக் மதனி INTJ கீழக்கரை நகர் தலைவர் ஹாஜா அனீஸ் , 1வது வார்டு கவுன்சிலர் முகமது பாதுஷா , தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாஹ் கான் , KECT தலைவர் மன்சூர் Committee Of Mif நிர்வாகிகள் மற்றும் MYFA நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ISOUQ நிறுவனத்தின் தலைவர் அஹமது மற்றும் நிர்வாகிகள் யாசின் அக்ரம் […]

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி.!

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், மாறனேரி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மண்புழு தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் மண்புழு தயாரிக்க உதவும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாறனேரி பஞ்சாயத்தின் கிராம நிர்வாக அலுவலர் அருள் மாணிக்கம் கலந்து கொண்டார் . விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சியை இயற்கை விவசாயி பசுபதி வழங்கினார் . 20 இயற்கை விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. […]

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வு கருத்தரங்கம்.!

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு பயிற்சி தேர்வுக்கான கலந்தாய்வு கருத்தரங்கம் பாவை அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நேர்முக உதவியாளர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வித்திறன் பற்றியும் தேர்வு எழுதும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர். கருத்தரங்கு பயிற்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் செந்தில் குமார் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து […]

வேதாளையில் மின்னொளி கைப்பந்து போட்டி.! 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.    இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற முத்தப்பா பிரியாணி அணியினர் முதல் பரிசு வென்றது. பரீத் ஓட்டல், ஜே டி காகா அணிகள் 3ம், 4ம் […]

வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக வக்ஃப் மீட்பு பொதுக்கூட்டம்

மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தேவகோட்டையில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காந்தி ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச. உமர் பாரூக், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் எஸ்.முகமது அனஸ் சிறப்பு உரையாற்றினார்கள். மாவட்ட தலைவர் டாக்டர் அப்துல் கலாம், மாவட்ட பொதுச் செயலாளர் இன்ஜினியர் அகமது அலி, […]

மதுரை அழகர் கோவிலில் ரூ. 19.49 கோடி மதிப்பிலான புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

, மதுரை அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைதுறை சார்பாக ரூபாய் 19. 49 கோடி மதிப்பீட்டில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளிக்கு நான்கு வகுப்பறைகள், கருணை இல்லத்தில் சமையலறை, உணவருந்தும் கூடம், கருட தீர்த்தம் நடை பாதை மராமத்து , தென்மேற்கு கோட்டைச்சுவர் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் பணி நிறைவு பெற்ற மலைச்சாலை புதுப்பித்தல், மழை நீர் வடிகால் மற்றும் பாலம் அமைத்தல், பெரியாழ்வார் திருவரசு மேம்படுத்துதல், […]

ஸ்ரீ நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் ராஜமான்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அன்னதானம் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா […]

ஒன்றிய அரசின் மும்மொழி கல்வி திட்டம்; வைகோ கடும் கண்டனம்…

மும்மொழி திட்டத்தை ஏற்றால் தான் ஒன்றிய அரசு நிதி கிடைக்குமா? என கேள்வி எழுப்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஒன்றிய அரசு மும்மொழி திட்டம் எனும் பெயரில் மாநில கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஏற்க முடியாது எனக்கூறி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (எஸ்எஸ்ஏ) மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2023-24 […]

சிவகங்கையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இந்து முன்னனினர் எதிர்ப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் காதலர்களை ரோசாப்பூ கொடுத்து வரவேற்பு ஆஃபர் அளித்து உள்ளதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். இதற்கு எதரிப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் தாலிக் கயிறுடன் காதலர் தின ஆஃபர் அறிவித்த தனியார் பேக்கரி நிறுவனத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைத்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் பேக்கரி நிறுவனம் ஆஃபர்களை கேன்சல் செய்து […]

சத்திரக்குடி கலை ஸ்போர்ஸ் அகடாமியின் சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் செயல்பட்டு வருகிறது கலை ஸ்போர்ட்ஸ் அகடாமி இங்கு கராத்தே மாஸ்டரும் அகடாமியின் நிறுவனருமான கலைக்குமார் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே, செஸ், பரதநாட்டியம், பயிற்சி வழங்கப்படுவது வழக்கம் இந்த நிலையில் இன்று ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள உப்பூர் டோனி நர்சரி அண்ட் ப்ரைமரி பள்ளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கராத்தேவில் குமித்தே சண்டை பயிற்சி, சிறப்பு கராத்தே கட்டா பயிற்சிகளும் மாணவர்களுக்கு […]

தஞ்சையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா தஞ்சையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்டத் தலைவர் கருப்பசாமி சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டத்துணை தலைவர்கள் கனகராஜ், சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குணசேகரன் துவக்கவுரையாற்றினர். தமிழ்நாடு இரண்டு சக்கர மோட்டார் வாகன ஒட்டுனர் பாதுகாப்பு சங்க மாநிலதலைவர் பிரகலாதன் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜரத்தினம் , கல்யாண சுந்தரம், சத்தியசீலன், ராஜன், சரவணபால்ராஜ், […]

பள்ளி வேன் மோதி இருவர் பலி..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் தேவகோட்டை நோக்கி செல்லும் போது சிறுவாச்சி சாலையில் ஞானஒளிபுறம் கிராமத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம் விபத்து நடந்த இடத்தில் துணைக் கண்காணிப்பாளர் கவுதம் விசாரணை நடத்தி வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!