ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கீழக்கரையை அடுத்த செங்கல்நீரோடை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றைப் பார்த்து அதனை சுற்றி வளைத்து சோதனை செய்த போது அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூடைகள் இருந்ததை கண்டறிந்தனர். போலீசார் வந்ததை அறிந்து கடத்தலில் ஈடுபட முயன்ற கடத்தல்காரர்கள் கடலுக்குள் இறங்கி தப்பி ஓடி விட்டனர் . உடனே […]
Category: செய்திகள்
தமிழகத்தில் கொத்தடிமை தொழில் அகற்றப்படும் – மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் பேட்டி !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கொத்தடிமை தொழிலை அகற்றுவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை தொழிலாளர் துறை மதுரை மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணசெந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மற்றும் தொழிலாளர் துறை […]
தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா.!
மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா அவரின திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேரன் சீவாபாவாணர் […]
மதுரை மாவட்டத்தில் புதிய விரிவான மினிப்பேருந்து திட்டம் .! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .!!
மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம் – 2024 , பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள்/ குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியினை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த “புதிய விரிவான மினிபேருந்து திட்டம் 2024” அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- 1. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் நீளம் 25 கி.மீ. ஆக இருக்க வேண்டும். 2. குறைந்த பட்ச சேவை […]
தஞ்சாவூர் கார்மேல் குழந்தை இயேசு ஆண்டு பெருவிழா மற்றும் தேர் பவனி.!
தஞ்சை மாநகரில் காமேல் சபை குருக்களால் 1987ஆம் ஆண்டு முதல் அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு பக்தி ஆரம்பிக்கப்பட்டு. அதன்மூலம் அனைத்துத் தரப்பினரும் குழந்தை இயேசுவின் அற்புதங்களையும், அதிசயங்களையும் பெற்று வருகின்றனர். மகிமைநிறைந்த அற்புத குழந்தை இயேசுவின் ஆண்டு பெருவிழா கடந்த வியாழன் அன்று திருக்கொடி யேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 8 நாட்களாக ஒவ்வொரு நாளும் மாலை திருஜெபமாலை, சிறப்புத் திருப்பலி, குணமளிக்கும் ஜெபக்கொண்டாட்டம் என சிறப்பு வழிபாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இறுதி […]
பொட்டல்புதூர் அரசு பள்ளியில் இரத்ததான முகாம்..
பொட்டல்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் IC TRUST & IUML இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் 08.02.2025 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமினை ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் டிஎஸ்பி தொடங்கி வைக்கிறார். இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்பவருக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. மேலும் ஹெல்மெட் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. இரத்ததான கொடையாளர்கள் மற்றும் […]
குப்பைகளை ரோட்டில் தீ வைப்பதை தடுக்க கோரி உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளரிடம் மனு
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை தீ வைப்பதையும் சாலையில் மற்றும் வார்டு பகுதியில் குப்பைகளை சேகரித்து சுகாதாரப் பணியாளர்கள் தீ வைப்பதை தடுக்க கோரி நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளில் உள்ள குப்பைகளை சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளில் குப்பைகளை வாங்கி பேரையூர் சாலையில் உள்ள மின் மயானம் அருகே குப்பை கிடங்கில் தரம் பிரித்து வருகின்றனர். மேலும் பேரையூர் சாலை பண்ணப்பட்டி […]
இலஞ்சி டி.எஸ் டேனியல் கல்லூரியில் புற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டம் இலஞ்சி டி.டி.டி.ஏ. டி.எஸ். டேனியல் ராசம்மாள் கல்வியியல் கல்லூரியில், உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவ சந்திரன், நிர்வாக இயக்குனர் பாரதி ராஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் படி புற்று நோய் தடுப்பு முறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் தென்காசி கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் […]
தென்காசியில் சுகாதாரத்துறை மாதாந்திர ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 05.02.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவது, புகையிலை தடுப்பு பணி குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வது, பருவ கால நோய்கள் தடுப்பு பற்றிய நடவடிக்கைகள், இள வயது திருமணம் மற்றும் இள வயது கர்ப்ப தடுப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பொது […]
உசிலம்பட்டி தேவர் கல்லூரி அருகில் போதை மாத்திரை,கஞ்சா விற்ற 4 பேர் கைது
உசிலம்பட்டியில் தேவர் கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது.,உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் சந்தேகப்படும் படி நின்றிருந்த 4 பேரிடம் சோதனை நடத்தியதில் அவர்களிடமிருந்து 200 போதை […]
சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் குவிந்துள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் சிலை அருகே மது பிரியர்களால் காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் குவிந்து கிடக்கின்றது இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காலை முதல் இரவு வரை காமராஜர் சிலையின் பின்புறம் அமர்ந்து மது அருந்துபவர்கள் காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகளை அங்கேயே விட்டுச் சென்று விடுகின்றனர் இதனால் சுகாதாரத் கேடு ஏற்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக […]
ரூ.4 ஆயிரம் இருந்தால் போதும். கெட்டுப் போன உணவையும் விற்கலாம். சுகாதாரத்துறையினரின் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி
கெட்டுப்போன கிரில் சிக்கனால் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாக காரணமான தனியார் உணவகம் மீது நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறையினர் மீது பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றுகரையில் உள்ள தனியார் உணவகமானபிரிடா ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 20க்கு மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதில் இன்னும் 8 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் இதில் கூடைப்பந்தாட்ட […]
கீழக்கரையில் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அல் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா நிறுவனர் வழக்கறிஞர் நஃபீல் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஹஜ் உம்ரா சேவை மற்றும் ஹலால் ஷாப்பி மற்றும் டவுன்ஷோர் கார்மெண்ட்ஸ் என்ற ஆண்கள் ஆடையகம் போன்றவை விற்பனை செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கு கீழக்கரை துணை சேர்மன் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் , திமுக அயலக அணி மாவட்ட தலைவர் ஹனீஃபா ,தமுமுக மாநில துணை செயலாளர் சலிமுல்லாஹ் […]
சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு. மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தியும் ஏற்பட்டதுஇதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீதி 13 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர் சோழவந்தான் வைகை பாலம் அருகே உள்ள பிரபல அசைவஹோட்டலில் நேற்றைய முன் தினம் இரவு கூடை பந்தாட்டவிளையாட்டு வீரர் பிரசன்னா உட்பட 10 பேரும் மற்றும் குழந்தை உட்பட 12 பேரும் இங்குள்ள தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் […]
ஹைதராபாத் நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷன்; கீழக்கரை மாணவன் சாதனை
ஹைதராபாத்தில் நடந்த நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷனில் மூன்றாவது இடம் பெற்று கீழக்கரை மாணவன் அப்துல்லா சாதனை படைத்துள்ளார். நேஷனல் அகாடமி பள்ளியில் பயிலும் ஷகீல் மைதீன் என்பவரது மகன் அப்துல்லா என்ற மாணவன் 24 பள்ளிகளுக்கு இடையே நடந்த குவிஸ் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து இரு பள்ளிகள் மட்டுமே இதில் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேஷனல் அகாடமி பள்ளி மற்றும் மதுரையைச் சார்ந்த மற்றொரு […]
செங்கோட்டை அரசு பள்ளியில் அழகிய ஓவிய கண்காட்சி..
செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியரின் அழகிய ஓவியப் படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி 05.02.2025 புதன் கிழமை நடைபெற்றது. மின்நகா் ஹியூமன் அப்லிப்ட் டிரஸ்ட் இயக்குநா் ரெங்கநாதன் தலைமை தாங்கி ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்தார். மின்நகா் சுற்றுச் சூழல் விஞ்ஞானி விஜய லெட்சுமி, வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்ல இயக்குநா் திருமாறன் மற்றும் தேசிய பசுமைப் படையின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி […]
டெல்லியை நோக்கிய பயணத்தில் திமுக மாணவரணி..
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாணவர் அணியினர், மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி பயணம் மேற்கொண்டனர். ஒன்றிய பாஜக அரசின் பல்கலைக் கழக நிதிக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறி முறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக […]
டெல்லியை ஆளப்போவது யார்.? விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..
தலைநகர் டெல்லியை ஆட்சி செய்யப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் 23- ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், இதற்கான சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. ஒரே கட்டமாக நடைபெறும் இத்தேர்தலுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் மத்திய துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை! அச்சத்தில் நடுத்தர மக்கள்..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள் கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது. இந்த நிலையில், புதன்கிழமை(பிப்.5) கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம் அதேபோன்று வெள்ளி விலை […]
பாஜக இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்..
திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சுரண்டை மகாத்மாகாந்தி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகர துணைத் தலைவர் திரவிய குமார் தலைமை வகித்தார். பாஜக நகர தலைவர் கணேசன் வரவேற்றார். முன்னாள் நகர தலைவர் அருணாசலம், சங்கர நாராயணன், முருகேசன், டி.கே எம் ஆறுமுகசாமி, ஓவியா சிவனைந்த பெருமாள், கீழப்பாவூர் […]
You must be logged in to post a comment.