தேவகோட்டை அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி சார்பாக சர்வதேச மகளிர் தின விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அம்பிகா வரவேற்றார். சிவகங்கைத் தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்நாதன் தலைமை உரையாற்றி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேவகோட்டை செயின்மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தியாகிகள் பூங்கா வரை ஊர்வலம் சென்றது. மகளிர் நலன்,குழந்தைகள் நலன், மாணவ மாணவிகள் நலன் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியும் கோஷமிட்டும் ஊர்வலம் சென்றனர். தேவகோட்டை நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் […]
Category: செய்திகள்
மதுரை அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் சாமி தரிசனம் செய்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள 18 ம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு இன்று காலை 11 மணியளவில் வருகை தந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் அங்கு கோவில் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது ரஜினிகாந்தின் மகள் […]
காரமடை கண்ணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா.!
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி கண்ணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா இந்த ஆண்டும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பாடல் பட்டிமன்றம் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும் சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஞானசேகரன் கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவ […]
தகர சீட்டு கொட்டகையில் இயங்கி வரும் அரசு பள்ளிக்கு விடிவு காலம் எப்போது?
கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தகர சீட்டு கொட்டகையில் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு விடிவு காலம் எப்போது? என்ற கேள்வி சமூக நல ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 650 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் சீட்டு கொட்டகைகளிலும், மரத்தின் நிழலிலும் மாணவர்கள் கல்வி பயின்று […]
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா மகளிர் விளையாட்டு போட்டி நடத்தி உற்சாகம்..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து மகளிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கதை கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி நடத்தியது சுவாரஸ்யமாக இருந்தது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெனகை மாரி முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் முத்துராமலிங்கம் […]
சோழவந்தானில் தொமுச சார்பில் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை மனு
சோழவந்தான் அருகே தென்கரையில் மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் மூர்த்தியிடம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொமுச சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது மனுவில் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைக்காலங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சேரும் சகதியுமாக மாறிவிடுவதால் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆகையால் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனைக்கு சிமெண்ட் தரைதளம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அருகில் வெங்கடேசன் எம் எல் […]
தென் மாவட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு..
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்று சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால் மார்ச் 11 முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 11 ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி […]
மார்ச் 10! சாா்பதிவாளா் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்! தமிழக அரசு அறிவிப்பு..
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தின் முகூர்த்த தினமான வரும் 10ம் தேதி அன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான […]
த.வெ.க. சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி; தலையில் தொப்பியுடன் விஜய் பங்கேற்பு!
ரமலான் மாதத்தையொட்டி த.வெ.க சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்ற, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் தலையில் தொப்பி முழு வெள்ளை உடையில் பங்கேற்றார். ரமலான் மாதத்தையொட்டி த.வெ.க சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் வெள்ளிக்கிழமை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்பதால், த.வெ.க-வில் இருந்து மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு அக்கட்சி சார்பில் அழைப்பு […]
செம்பட்டி அருகே டாரஸ் லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது, 19 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசி டாரஸ் லாரி பறிமுதல்..
செம்பட்டி அருகே டாரஸ் லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது, 19 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசி டாரஸ் லாரி பறிமுதல்.. திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில், சார்பு ஆய்வாளர் ராதா, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நாகராஜன்,கணேசன் காவலர்கள் கணேஷ், காளிமுத்து, விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை […]
சோழவந்தான் அருகே தாராப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா
சோழவந்தான் அருகே தாராப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றனர் குறிப்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்று பேசி அசத்தினர் முன்னதாகதிருக்குறள் போட்டி கட்டுரை கவிதை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆசிரியைகள் ரேவதி லட்சுமி வசந்தி ஆகியோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜேஸ்வரி […]
கீழக்கரை வடக்குத்தெரு நாசா சங்கத்தின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வடக்குத்தெரு சமூக நல அமைப்பான நாசா சங்கத்தின் சார்பில் இஃப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நாசா மர்கஸில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் வடக்குத்தெரு மக்களின் வளர்ச்சி குறித்தும் , சமூக முன்னேற்றங்கள் குறித்தும் நாசா சங்கத்தின் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக மக்கள் பணியாற்றிட நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து உங்களுடைய ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சோழவந்தான் அருகே தென்கரையில் திமுக விவசாய அணி சார்பாக 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம் விவசாய அணி சார்பாக சோழவந்தான் அருகே தென்கரையில் 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன் வரவேற்புரை ஆற்றினார் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ முன்னில வகித்தார் நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி […]
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், முத்தாண்டிபட்டி தூய பீட்டர் பவுல் உயர்நிலைப் பள்ளியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு பரீட்சை அட்டை ,பேனா, பென்சில் ,லப்பர், ஸ்கேல் வழங்கப்பட்டது .நிகழ்ச்சிக்கு தூய பீட்டர் பவுல் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சகோதரி ஜெப தலைமை தாங்கினார்கள். ஆசிரியர் ,ஆசிரியைகள் கலந்து கொண்டனர் ,இந்நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிட்சை அட்டை பேனா, பென்சில் […]
ஆன்லைனில் பிரபலங்கள் பெயரில் போலி விளம்பரம்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..
ஆன்லைனில் முதலீடு செய்ய பிரபலங்கள் பெயரில் செய்யப்படும் கவர்ச்சிகரமான போலி விளம்பரம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நடைபெறும் விளம்பர மோசடிகள் குறித்து சென்னை இணையவழிக் குற்றப் பிரிவு, தலைமையகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய செய்திக் குறிப்பில், தொழில் நுட்பம் உலகின் அனைத்து மக்களுக்கும் அதிநவீன வாழ்க்கையை வழங்கி உள்ளது. இருப்பினும், அளவுக்கு அதிகமான எதுவும் தீங்கு விளைவிக்கும் AI மற்றும் IoT ஆகியவற்றின் வருகை நாம் வாழும் முறையை மாற்றியமைத்து அதன் […]
அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா; முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு..
அச்சன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சிறப்பாக நடந்தது. தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளி 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் நூற்றாண்டு விழா தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு நிகழ்ச்சியை […]
கலைஞர் எழுதுகோல் விருது! நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜ்-க்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மூத்த […]
மேட்டுப்பாளையத்தில் சுட்டெரிக்கும் கொளுத்தும் வெயிலில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பள்ளிக் குழந்தைகள் அவதி.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்று வருகிறது இதன் காரணமாக மத்தியம் கல்விக்கூடம் வரும் குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வெளியில் ஆங்காங்கே நிற்கின்றனர் இன்று மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் 36 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகின்றது ஆனால் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் வெயிலில் நீண்ட நேரமாக வெயிலில் நிற்கின்றனர் கோடை தொடங்கும் முன்பு பயங்கரமாக சுட்டெரிக்கும் […]
மதுரையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்த பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன்
மதுரை மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது, பாஜகவினர் அப்பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் உள்ளிட்ட இடங்களில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்துக்களை பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராம.ஸ்ரீனிவாசன் கூறுகையில்._ புதிய கல்விக் கொள்கையை வாயிலாக இந்தியை திணிப்பது போல திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. இந்தியா முழுவதும் மூன்றாவது மொழியாக […]
பழனியில் அதிமுக மற்றும் விசுவாச அறக்கட்டளையின் சார்பில் மாரியம்மன் கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பழனியில் அதிமுக மற்றும் விசுவாச அறக்கட்டளையின் சார்பில் மாரியம்மன் கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பழனியில் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் விசுவாச அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ராஜா முகமது தலைமையில் சாமி தரிசனம செய்ய வரும் பக்தர்களுக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் புளியோதரை, பொங்கல், தக்காளி சாதம், போன்ற உணவகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இளைஞரணி […]
You must be logged in to post a comment.