மதுரை மாவட்டம் ராஜமான்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அன்னதானம் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா […]
Category: செய்திகள்
ஒன்றிய அரசின் மும்மொழி கல்வி திட்டம்; வைகோ கடும் கண்டனம்…
மும்மொழி திட்டத்தை ஏற்றால் தான் ஒன்றிய அரசு நிதி கிடைக்குமா? என கேள்வி எழுப்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஒன்றிய அரசு மும்மொழி திட்டம் எனும் பெயரில் மாநில கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஏற்க முடியாது எனக்கூறி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (எஸ்எஸ்ஏ) மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 2023-24 […]
சிவகங்கையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இந்து முன்னனினர் எதிர்ப்பு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் காதலர்களை ரோசாப்பூ கொடுத்து வரவேற்பு ஆஃபர் அளித்து உள்ளதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். இதற்கு எதரிப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் தாலிக் கயிறுடன் காதலர் தின ஆஃபர் அறிவித்த தனியார் பேக்கரி நிறுவனத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைத்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் பேக்கரி நிறுவனம் ஆஃபர்களை கேன்சல் செய்து […]
சத்திரக்குடி கலை ஸ்போர்ஸ் அகடாமியின் சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் செயல்பட்டு வருகிறது கலை ஸ்போர்ட்ஸ் அகடாமி இங்கு கராத்தே மாஸ்டரும் அகடாமியின் நிறுவனருமான கலைக்குமார் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே, செஸ், பரதநாட்டியம், பயிற்சி வழங்கப்படுவது வழக்கம் இந்த நிலையில் இன்று ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள உப்பூர் டோனி நர்சரி அண்ட் ப்ரைமரி பள்ளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கராத்தேவில் குமித்தே சண்டை பயிற்சி, சிறப்பு கராத்தே கட்டா பயிற்சிகளும் மாணவர்களுக்கு […]
தஞ்சையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா…
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா தஞ்சையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்டத் தலைவர் கருப்பசாமி சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டத்துணை தலைவர்கள் கனகராஜ், சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குணசேகரன் துவக்கவுரையாற்றினர். தமிழ்நாடு இரண்டு சக்கர மோட்டார் வாகன ஒட்டுனர் பாதுகாப்பு சங்க மாநிலதலைவர் பிரகலாதன் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜரத்தினம் , கல்யாண சுந்தரம், சத்தியசீலன், ராஜன், சரவணபால்ராஜ், […]
பள்ளி வேன் மோதி இருவர் பலி..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் தேவகோட்டை நோக்கி செல்லும் போது சிறுவாச்சி சாலையில் ஞானஒளிபுறம் கிராமத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம் விபத்து நடந்த இடத்தில் துணைக் கண்காணிப்பாளர் கவுதம் விசாரணை நடத்தி வருகிறார்.
சத்தியபாதை பிப்ரவரி மாத இதழ்..
சத்தியபாதை மாத இதழின் மின் இதழை படிக்க கீழே சொடுக்கவும்.. Sathiyapathai_Feb.2025 மின் இதழ்..
வக்ஃப் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்…
மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை எஸ்டிபிஐ ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக வக்ஃபு திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் ஒபுளாபடித்துரை பகுதியில் நடைபெற்றது. கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அபுதாஹிர் தொகுப்புரை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பக்ருதீன் வரவேற்புரை நிகழ்த்தினர். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் கண்டன உரை நிகழ்த்தினார். தெற்கு மாவட்ட […]
இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்த காவல் துறையினர்..
தஞ்சை மாநகர காவல் துறையினர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தனர். இருபாலர் மட்டும்தான் காதலர் தினம் கொண்டாட வேண்டும் என்பது இல்லை அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்தி காதலர் தின வாழ்த்துகள் கூறலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சை மாநகர காவல்துறையினர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலையில் காதலர் தினத்தை ஓட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை […]
நெல்லையில் இலச்சினை வெளியீட்டு விழா..
நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழாவிற்காக புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழா வருகின்ற மார்ச் மாதம் 7-ஆம் நாள் அன்று பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடக்க உள்ளது. விழாவில், சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவிற்காக சிறப்பு இலட்சினை (லோகோ) ஒன்று […]
நெல்லையில் 262 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு..
திருநெல்வேலி சரகத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 262 கிலோ கஞ்சா பொருட்கள் திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வைத்து காவல் துறையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டன. திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் பொருட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்திருந்தன. இந்நிலையில், திருநெல்வேலி சரக […]
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.! 03 பேர் இறப்பு ஒருவர் காயம்..!!
இராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த குவாலிஸ் காரும் ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக வந்த தனியார் […]
மதுரை ரேடியோ மிர்ச்சியின் (தனியார் பண்பலை) “லவ் மாங்க்” நிகழ்ச்சி.!
மதுரை, பிப்ரவரி 14: காதலர் தினத்தையும், வானொலி தினத்தையும் முன்னிட்டு 98.3 ரேடியோ மிர்ச்சி தனது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “லவ் மாங்க்” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அன்பை மட்டுமே பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, இதில் மிர்ச்சி RJ நிதீஷ், “காதல் ஞானி” ஆக தோன்றி, நேயர்களை ஆச்சரியப்படுத்தினார். காதல், அன்பு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வேடிக்கையான முறையில் விளக்கி, அனைவருக்கும் மனமகிழ்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை கேகே நகரில் உள்ள ரேடியோ […]
கீழக்கரையில் பட்டமளிப்பு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் சின்னமாயாகுளம் அருகே அமைந்துள்ள இர்ஃபானுல் உலூம் எத்தீம்கானா & ஹிஃப்ளு மதரஸாவின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா & 19 ஆம் ஆண்டு விழா மதரஸா நிறுவனரும் வட்டார ஜமாத்து உலமா சபை தலைவருமான அப்பாஸ் அலி மன்பஈ தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை கௌரவ தலைவர் அஹ்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஃபாழில் ரஷாதி ஜாமிஆ அருவிய்யா தைக்கா முதல்வர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி உட்பட […]
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ். அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் முடிவு
பூதலூர் ஒன்றியத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நீண்ட நாள் சம்பள பாக்கியை உடனே விடுவிக்க கோரியும்,கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் பூதலூரில் பிப்ரவரி 14 அன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று மாலை (பிப்ரவரி 13) போராட்டக்காரர்களுடன் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மறிய ஜோசப் தலைமையில் […]
அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 4 கிலோ திமிங்கலத்தின் உமிழ் நீர் பறிமுதல்.! ஆறு பேர் கைது.!!
ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும், அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த சிலர் வாங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோதமாக […]
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல் .!
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..! ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த […]
திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் விழா.!
திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமரிசையாக நடந்தது.! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களகுடியை அடுத்துள்ள கஸ்பார்நகர் புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமர்சியாக நடந்தது. இந்த ஆலயத்திற்கு திருப்பலி மற்றும் சப்பரபவனியானது கடந்த பிப் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடைசி நாளான இன்று புனித லூர்து அன்னை ஆலயம் சிறப்பு சொரூபம் பல்லக்கில் எழுந்தருளி அதனை இறை மக்கள் கூட்டத்துடன் குருந்தங்குடி […]
ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்..!
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் தடுப்பு […]
கல்வியும்,சுகாதாரமும் இரு கண்களாக கருதி முதலைமைச்சர் வழியில் அமைச்சர்கள் பணியாற்றி வருகிறோம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தத்தனேரி அருள்தாஸ்புரம் வார்டு 22இல், மாநகராட்சி திரு.வி.க மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஹனிவெல் நிறுவனத்தின் அறிவியல் உபகரணங்கள் தொகுப்பினை வழங்கினார்.இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த்,மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்,மண்டலத்தலைவர் சரவண புவனேசுவரி,மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன்,மாமன்ற உறுப்பினர் மகாலெட்சுமி,பள்ளித்தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன்,ஹனிவெல் நிறுவனத்தின் அதிகாரி கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பேசிய […]
You must be logged in to post a comment.