மதுரை மாவட்டம் சோழவந்தான் 13 வது வார்டு சிவன் கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது இந்த அலுவலகத்திற்கு முன்பு உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது மேலும் மின் வயிர்களும் குறுக்கும் நெடுக்கமாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பத்தால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது இதுகுறித்து இந்த பகுதி பொதுமக்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு மின் வாரிய அலுவலகத்தில் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை […]
Category: செய்திகள்
தொழிலாளர் யூனியன் சங்க ஆலோசனை கூட்டம்
சோழவந்தானில் நடைபெற்ற மதுரை மாவட்ட திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்க கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இணை ஆணையர் அலுவலகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தீர்மானம் நிறைவேற்றம். மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை மாவட்ட திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்க கூட்டம் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுக்கு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி மதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து […]
சோழவந்தானில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பாக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டன. மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் மாவட்ட துணை செயலாளர் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி தலைமை வகித்தனர். பேரூர் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன் வரவேற்றார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சசி, முன்னாள் […]
பல்வேறு குளறுபடிக்கு மத்தியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
அலங்காநல்லூரில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் அமைச்சருக்காக 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள் காலை 9 மணிக்கு மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைப்பார் என கூறியிருந்த நிலையில் 4 மணி நேரம் தாமதமாக ஒரு மணிக்கு வந்த அமைச்சரால் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்ட அவலம் பொதுமக்கள் பயன்படக்கூடிய வகையில் நடத்த வேண்டிய மருத்துவ முகாமை பத்துக்கு […]
ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் உசிலம்பட்டி மாணவனுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரைச் சேர்ந்த கார்த்திக் – இந்திரா தம்பதியின் மகன் வியாஷ் ஆத்விக்., ஸ்கேட்டிங் போட்டியில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் . தமிழக CISCE பள்ளிகளுக்கு இடையிலான சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தனது பயிற்சியாளர் ஆனந்த் பாபு முயற்சியில் பங்கேற்றுள்ளார். இந்தப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் என்று தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழக அணி சார்பில் தேர்வாகி உள்ளார். பதக்கம் வென்று […]
உசிலம்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் வைத்த ப்ளக்ஸால் பொதுமக்கள் குழப்பம்
திமுகவில் இணையப் போவது ஒபிஎஸா ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ.உசிலம்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் வைத்த ப்ளக்ஸால் பொதுமக்கள் குழப்பம. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அஇஅதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகின்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக மீட்புக் குழு என தணி அணியாகி பா.ஜவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்ததால் மீண்டும்; தனித்து […]
1000 ஆண்டு பழமை வாய்ந்தசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் 1.52 கோடி மதிப்பில்புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் 1.52 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்வதற்கான பூமி பூஜை நடைபெற்றது பூமி பூஜையில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் […]
சோழவந்தான் அருகே தென்கரை நவநீத கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ ஆறாவது நாள் விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அருகிலிருந்து சீர்வரிசை சுமந்து வந்தனர் தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை மாற்றுதல், பாத பூஜை, நடைபெற்று மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோபாலாஎன தாங்கள் மனம் உருகி வேண்டினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. […]
சோழவந்தான் பேரூராட்சியில் 1.5 கோடி மதிப்பில் நவீன மின் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணி நிறைவடைந்து மின் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். மூலதன மானிய திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோழவந்தான் பேரூராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் நவீன மின் எரிவாயு தகனமேடை கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணி நடைபெற்று கடந்த சில நாட்களுக்கு […]
தவெக 2வது மாநில மாநாட்டிற்கு வந்த கோத்தகிரியை சேர்ந்த இளைஞர் இறப்பு.
தமிழக வெற்றிக்கழக சார்பில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்ற நிலையில் மாநாட்டிற்கு வந்த நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயதானரோஷன் இவர் குன்னூர் தொகுதி தமிழக வெற்றி கழக இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் . என்பவருடன் TN02AX2005 என்ற காரில் மதுரை மாநாட்டிற்கு வந்தபோது இன்று மதியம் 3 40 மணியளவில் மயக்கம் ஏற்பட்டு மாநாட்டு மருத்துவ முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று ஊருக்கு திரும்பும் போது […]
சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மின்சாரம் தடைபட்டதால்பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளான மேலக்கால் திருவேடகம் சோழவந்தான் பசும்பொன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் திடீரென மழை பெய்ததால் மின்சாரம் முன்னறிவிப்பின்றி திடீரென துண்டிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகல் முழுவதும் வெயில் சுமார் 104 டிகிரிக்கு மேல் வாட்டி வதக்கிய நிலையில் இரவு 8 மணிக்கு மேல் திடீரென கரு மேகங்கள்சூழ்ந்து பலத்த மழை கொட்டியது இதனால் சோழவந்தான் சுற்றுப்பகுதிகளான […]
சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேசும் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் கருத்தரங்கு சந்திரன் பேலஸ் மகாலில் நடைபெற்றது. ஜே சி ஐ மதுரை மீனாட்சி தலைவர் சொர்ணாம்பிகா தலைமையேற்று துவக்கி வைத்தார். ஜவுளி நிறுவனர் பி எஸ் மணி, ராஜாராம் முன்னிலை வகித்தனர். பயிற்றுவிப்பாளர் காயத்ரி வரவேற்றார். மாணவ மாணவர்களின் ஆங்கில உச்சரிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் நிறுவனர் மகாலட்சுமி பயிற்றுவித்தார். இதில் […]
சோழவந்தானில் ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளால் பொதுமக்கள் அவதிஒரு வழி பாதையாக மாற்ற கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் நகருக்குள் வியாபாரம் நிமித்தமாகவும் பணிகளுக்காகவும் வந்து செல்கின்றனர் தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சோழவந்தான் நகரம் ஆக்கிரம்புகளாலும் போக்குவரத்து நெருக்கடிகளாலும் சிக்கி திணறி வருகிறது குறிப்பாக பிரசித்தி பெற்ற ஜெனகை […]
உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா.
உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக தேவர் சிலை அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 81 வது பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவில் ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் டி . சரவணகுமார் தலைமையில் சேடபட்டி வட்டார தலைவர்கள் புதுராஜா, ஜெயராஜ் செல்லம்பட்டி வட்டார தலைவர் செந்தில் உசிலம்பட்டி வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன் ஆகியோர் முன்னிலையில் […]
புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்
பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் பெயர் பலகையை அகற்றிய வருவாய் துறை மற்றும் காவல்துறையினரை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல். ஆர்ப்பாட்டம் நடத்தினர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த வாரம் வந்து திறந்து வைத்த பெயர் பலகையினை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வருவாய் மற்றும் காவல்துறையினர் அகற்றினர்.பொது இடங்களில் […]
மின் கட்டணத்திற்கான குறுந்தகவல் அனுப்பாமல் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணங்களுக் காண மின் கணக்கீட்டை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மின்வாரியம் அனுப்புவது வழக்கம் ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு சில மின் இணைப்புக்கு மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள் எது என்ற குருந்தகவல் அனுப்பாமல் திடீரென மின்கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள் முடிந்து விட்டதாக கூறி மின்வாரிய பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வீடு […]
தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு பேரணி..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் அதிக அளவு மாணவர்கள், இளைஞர்கள், மத்தியில் அதிக அளவு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இளைய சமுதாயம் சீரழிவதை தடுக்கும் விதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நான்கு மாத காலங்களாக சமூக தீமைகளை கண்டித்து துண்டு பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக அனைத்து கிளை சார்பில் போதை […]
தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் சங்கம் முக்கிய கோரிக்கை..
தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர் எனக் கூறி, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் […]
சோழவந்தான் அருகே இலவச பேருந்து மற்றும் சாலை வசதி கேட்டு பெண்கள் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு சிமநாதபுரத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பில்கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த வெங்கடேசன் எம் எல் ஏ தொடர்ந்து இதுபோன்று பொதுமக்களின் கோரிக்கைகள் முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றி வருவதாக வருவதாக கூறினார் அப்போது அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதிக்கு மகளிர் இலவச பேருந்து வருவதில்லை எனவும் ஒரே ஒரு பேருந்து காலை மற்றும் […]
கடையில் பணம் திருடிய நபர் அதிரடி கைது..
புளியங்குடி பகுதியில் கடையில் இருந்து பணம் திருடிய நபரை அதிரடியாக கைது செய்த காவல் துறையை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள ஓர் கடையில் கடந்த 16.08.2025 அன்று மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்து உள்ளார். இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஷாம் சுந்தர் மற்றும் சார்பு […]
You must be logged in to post a comment.