பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்மீது பற்று இருப்பதாக பாஜக கூறுவது உண்மையெனில், ரயில்களின் சமஸ்கிருத பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மும்மொழிக் கொள்கையால் தாய்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பிரதமர் மோடிக்கு தமிழ் மீது […]
Category: செய்திகள்
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம்..
இந்த வகையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் […]
திருநெல்வேலி தமிழ் பண்பாட்டு வளர்ச்சி மையம் – மீண்டும் செயல்படுமா?
திருநெல்வேலி தமிழ் பண்பாட்டு வளர்ச்சி மையம் – மீண்டும் செயல்படுமா? திருநெல்வேலியில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நிகழ்வுகள் நடத்துவதற்காக என்.ஜி.ஓ.காலனி, உழுவைச் சாலையில் 2000-ம் ஆண்டுகளில் “தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம்” கட்டப்பட்டது. சுமார் 50 சென்ட் நிலப்பரப்பில் அமைந்த இந்த கட்டிடம், தரைத்தளத்தில் 5000 சதுரஅடி, முதல் மாடியில் 5000 சதுரஅடி என மொத்தம் 10,000 சதுரஅடி பரப்பளவைக் கொண்டுள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், இது தமிழ் வளர்ச்சி துறை […]
தனியார் தொழிற்சாலை நச்சு புகையால் பொதுமக்கள் திடீர் போராட்டம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை வெளியேற்றும் நச்சுப் புகையால் சுவாசக் கோளாறு பொதுமக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளி கோயில் செல்லும் சாலையில் சத்தியமூர்த்தி நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான சாயத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலையில் சாயப் பணிக்காக பயன்படுத்தப்படும் கழிவுகள் மற்றும் நச்சுப் புகையால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் இந்த தனியார் தொழிற்சாலையை சுற்றி பூங்கா, வழிபாட்டுத் தலங்கள், வியாபாரக் கடைகள், […]
வாடிப்பட்டி அருகேஓடும் பஸ்ஸில் திடீர் தீ
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து ராமராஜபுரத்திற்கு தனி யார் மினிபஸ் மதியம் 3 மணிக்கு புறப்பட்டது. அந்த பஸ்ஸில் செவ்வாய்க்கிழமை வார சந்தைக்கு வந்துவிட்டு காய்கறிகள் வாங்கிக் கொண்டு பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பஸ் சாணாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு குரங்கு தோப்பு பகுதியில் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக பஸ்ஸின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எறிய தொடங்கியது. அதை சாலையோரம் நின்றவர்கள் பார்த்து சத்தம் […]
தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை: தவெக தலைவர் விஜய்..
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (மாா்ச் 5) நடைபெறுகிறது. நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக திமுக, அதிமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மக்கள் நீதி மய்யம், பாமக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் […]
தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் எக்மோர் செல்லாது! தெற்கு இரயில்வே அறிவிப்பு..
சென்னை கடற்கரை – எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூா் வரும் பல்லவன் விரைவு ரயில் புதன் மற்றும் வியாழக்கிழமை (மாா்ச் 6, 7) தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இதேபோல், மன்னை விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், முத்துநகா் விரைவு ரயில், புதுச்சேரி மெமு பயணிகள் […]
ரமலானுக்கு வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது என்றால், இன்னும் நூறு முறை கூட மீண்டும், மீண்டும் நாங்கள் ரமலான் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டே இருப்போம்!-உதயநிதி ஸ்டாலின்..
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (4.3.2025) சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஏற்பாட்டில் நடக்கின்ற இந்த சிறப்புக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புனித இரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களை எல்லாம் […]
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்..
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின. இந்நிலையில் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்று பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கிய […]
சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு;
சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. எனினும் சிலநிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக யாரும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு பதிவிடப்பட்டிருந்தது. மேலும், டிஎம்டிகே ஃபார் டிஎன் (DMDKforTN) என்ற ஹேஷ்டேக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது. கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய […]
சோழவந்தானில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ராஜ்குமார், ஜெயகுமார், சந்திரமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரத்தில் ஆய்வு பணி மேற்கொண்டதில் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் மணி ஸ்டோர் என்ற மளிகை கடையை நடத்திவரும் ரா. சுகுமாரன் M/64, த/பெ.ராஜசேகர், என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் கூல்லிப் போன்ற புகையிலை பொருட்களை வாடிக்கையாளர்களுக்கும், எதிரே உள்ள பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து விற்பனை செய்து வருவது கண்டறிப்பட்டது. […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அன்னதானம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ் தலைமை வகித்தார் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். தொகுதி அமைப்பாளர் தவசதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பேரூர் ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். துணை அமைப்பாளர் அய்யனார், மாவட்ட பிரதிநிதி பேட்டைபெரியசாமி, அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர், மாவட்ட தொண்டர் […]
சர்க்கரை நோய், கிருமி தொற்றுக்கான 145 மருந்துகள் தரமற்றவை: மத்திய அரசு தகவல்..
சர்க்கரை நோய், கிருமி தொற்றுக்கான 145 மருந்துகள் தரமற்றவை: மத்திய அரசு தகவல்.. சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளையும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஆய்வின்போது போலி, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை […]
ஆட்டோவில் தவறவிட்ட 15 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு..
ஆட்டோவில் தவறவிட்ட 15 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு.. மதுரை மாநகர் தவிட்டுசந்தையைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் தவிட்டுசந்தையில் ஏறி தெப்பகுளம் பகுதியில் இறங்கும்போது 15 பவுன் நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். இது குறித்து தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் ஆட்டோவில் பயணிகளை இறக்கி விட்ட பின் […]
முதல் நாள் நடைபெற்ற ப்ளஸ் 2 மொழிப்பாடத் தோ்வு: 11,430 போ் மிஸ்ஸிங்..
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 11,430 போ் எழுதவில்லை. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 3,316 தோ்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவிகள் உள்பட 8 லட்சத்து 21,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதுகின்றனா். அதில் 18,344 போ் தனித்தோ்வா்கள், 145 போ் சிறைவாசிகள். இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை […]
அரசு மாணவர் விடுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என புகார்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாணவ மாணவியர் விடுதிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்ற 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு தொகுப்பூதியம் ரூபாய் 2000 மும், அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ரூபாய் 4200 வும் சிறப்பு கால முறை ஊதியம் விகிதம் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு தங்களது ஊதியம் உயர்த்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். […]
கச்சத்தீவு பற்றி நீங்கள் பேசாதீர்கள்; ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!
மீனவர்களை சந்திப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிமை இல்லை என்றாலும் வழிப்போக்கர்கள் கூறுவது போன்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,” ஒரு பிரச்சனை குறித்து முதலமைச்சரிடமோ அல்லது தலைமைச் செயலாளரிடமோ ஆலோசனை நடத்தாமல் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு ஆளுநர் பணி முடிவடைந்து, பணி நீட்டிப்பான லீவ் ப்ளேஸில் இருந்து வருகிறார். இதனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து […]
மேட்டுப்பாளையத்தில் மக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம்
மேட்டுப்பாளையத்தில் மக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யு பி எல் பிளீச்சிங் தனியா நிறுவனம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு புகையால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் காற்றுடன் கலந்து பல துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று இரவு வெளியான கழிவு புகையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் திடீரென்று தனியார் நிறுவனத்தின் முன்பு நிறுவனத்தை மூடக்கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால பகுதியில் சிறிது […]
நியூஸ் பேப்பரில் எண்ணெய் பலகாரங்கள் கொடுத்தால் ₹1,000 அபராதம்..
நியூஸ் பேப்பரில் எண்ணெய் பலகாரங்கள் கொடுத்தால் ₹1,000 அபராதம்.. நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ₹1,000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறையினர், மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். பல மாவட்டங்களில் […]
அ.தி.மு.கவை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை உதிரியாக பார்க்கிறோம் : அமைச்சர் சேர்பாபு கடும் தாக்கு..
சென்னை கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் CMDA சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், ‘மக்கள் சேவை மையம்’ ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” வட சென்னை மக்களின் கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. சில சமூக விரோதிகளால் இந்த இடம் ஆக்கிரமிப்பு உள்ளாக இருந்ததை தடுத்து இந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அழிந்து கொண்டிருக்கும் […]
You must be logged in to post a comment.