துணை வேந்தர்கள் மாநாடு:-ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?- செல்வப்பெருந்தகை ஆவேசம்!!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை அனைவரும் அறிவார்கள். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, தலைநகர் தில்லி சென்று, அவரை சந்தித்த பிறகு வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு மூன்று நாட்கள் நீலகிரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதோடு, இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குடியரசு […]

திண்டுக்கல்லில் திடீர் திடீரென கேட்கும் வெடிச்சத்தம்! உரிய நடவடிக்கை கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வராஜ் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் வெடி சத்தம் நில அதிர்வு குறித்து உரிய ஆய்வறிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மண்டலச்செயலாளர் சைமன் ஜஸ்டின், மாவட்ட செயலாளர்கள் கணேஷ்குமார், சங்கிலி பாண்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு! பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்லக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் […]

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 14-ஆம் தேதி, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனையில், போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. 38 நாள்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் வாடிகனுக்குத் திரும்பினாா். அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு […]

எட்டாத உயரத்தில் தங்கம் விலை! ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது..

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.70,000-யைக் கடந்த நிலையில் பின்னர் சற்று சரிவடைந்த நிலையில் ஏப். 16-ல் மீண்டும் 70,000-யைக் கடந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ. 72,000-யைக் கடந்துள்ளது. இன்று(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயா்ந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

துணை வேந்தர்கள் மாநாடு:தமிழக ஆளுநரின் அதிகார மீறல் கண்டிக்கத்தக்கது!- எஸ்டிபிஐ..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி விடுவிக்கப்பட்டு, மாநில முதலமைச்சர் அப்பொறுப்பை ஏற்றுள்ளார். இது மக்களாட்சி மற்றும் அரசியலமைப்பு தத்துவங்களுக்கு உட்பட்ட ஒரு முக்கிய வெற்றியாகும். ஆயினும், ஆளுநர் ஆர்.என். ரவி, தனது அதிகார வரம்பை மீறி, வரும் ஏப்ரல் 25, 26, […]

துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை!- ஜவாஹிருல்லா கண்டனம்..

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான 3 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என ஆர்.என். ரவி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தரும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் தராத ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசின் சட்டப் […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப் -திருடர்களும்..! திருத்தங்களும்.. வஃக்ப் புரிதல் -3 ஒரு சொத்தை அதன் பயன்பாடுகளை வஃக்ப் என்னும் அர்ப்பணம் செய்துவிட்டால் அதன் உரிமையாளராக அல்லாஹ்வே ஆகிவிடுகின்றான். ஒருவர் வஃக்ப் செய்த சொத்துக்களை, அவரோ, அவரின் வாரிசுகளோ திரும்ப பெற முடியாது. வஃக்ப் என்பதற்கு ஆன்மீக ரீதியாக நிலைநாட்டுதல், நிறுத்துதல் என பொருள் கொள்ளலாம். வஃக்பின் மூலம் அதன் நன்மைகளை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து அடையவேண்டும் என்ற நோக்கமே முதன்மையாக இருந்தது. அந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவேறி இருக்கிறதா? என்பது […]

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆர்.என்.ரவி – ஆளுநரின் அழைப்பை புறக்கணிக்க வேண்டும்!-பெ.சண்முகம் வலியுறுத்தல்..

ஆர்.எஸ்.எஸ் கையாளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பேரிடியை தாங்கிக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை கழக துணை வேர்ந்தர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலை கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டியதில்லை என்பதை ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி அனுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதனை சட்டமாகவும் ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. எனவே, […]

வைகோ அறிவுறுத்தலின் பேரில், ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ..

மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளார்.மதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தின் முடிவில் ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற்றார்.முதன்மை செயலாளர் துரை வைகோவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படாது. அதேபோல், மல்லை சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.மேலும், துரை வைகோ மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற கைகோ அறிவுறுத்தி உள்ளார்.மதிமுக நிர்வாக கூட்டத்தில் […]

வாடிப்பட்டி அருகேமண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக்கொலை

மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள தனது நண்பர் முனியாண்டி என்பவர் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அதேபகுதியை சேர்ந்த வினோத், மருதுபாண்டி, பாலமுருகன், மணி ஆகிய 4 பேர் கொண்ட கும்பலால் […]

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மதிமுக நிர்வாக குழு கூட்டம்! பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று(ஏப். 20) சென்னை, எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகம் தாயகத்தில் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை ரா.முருகன், தி.மு. ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் […]

சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை கோவில் முன்பு நடைபெற்றது கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் பக்தர்கள் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திரௌபதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான […]

அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை அறிவிப்பு செய்தது காங்கிரஸ் கட்சி..

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்தப் பொதுக்கூட்டத்தில், அரசியலமைப்பைக் காப்பாற்ற வலியுறுத்தி, ஏப்ரல் 25 முதல் மே 30 ஆம் தேதிவரையில் நாடுதழுவிய போராட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசியதாவது, அரசியலமைப்பைக் காப்பாற்றும் போராட்டம் ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரையில் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி அளவிலும், மே […]

மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக்கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால், 3 பேர் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்டு, திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 15 நாள்களாக குடிநீரில் பிரச்னை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த திமுக அரசு எந்தவித […]

வஞ்சக பாஜக  துரோக அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம்: மாநிலம் முழுவதும் துண்டு பிரசுரங்களை வழங்கிய திமுகவினர்..

அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது வருமாறு; வஞ்சக பாஜகவுடன் சேர்ந்து அடிமை அதிமுக தமிழ்நாட்டுக்கு செய்த துரோகப் பட்டியல்! நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்து மாணவ மாணவியரின் உயிரை பறித்தது. நானும் விவசாயி என்று வேடம் போட்டு மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு,  சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு, மின்சார கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு, இஸ்லாமியர்களை இரண்டாம் தரவகுடிமக்களாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு, இதுபோன்ற மேலும் பல்வேறு,பாதகங்களுக்கு […]

திருவாடானை தீயணைப்பு நிலையம் அருகே புதிய சாலை சேதமடைந்ததாக புகார்.

.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சேந்தினி செல்லும் சாலையில் பிரிவு சாலை சுமார் 200 மீட்டர் தூரத்தில் தீ அணைப்பு மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த நிலையத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட போதே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது ஆங்காங்கே சாலை முற்றிலும் சேதமடைந்து மண்சாலையாக மாறிவிட்டது.சாலை மோசமாக இருப்பதால் அவசர காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் இடத்திற்கு  உரிய நேரத்தில் செல்ல இயலாத அவலநிலையுடன் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். […]

வஃக்ப் -திருடர்களும்..!திருத்தங்களும்..!

(ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -2 வஃக்ப் -திருடர்களும்..!திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -2 பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் காலத்திலேயே பொது சமூகத்திற்கானஅர்ப்பணங்கள் (வஃக்ப்) ஆரம்பமாகிவிட்டது. உமர்(ரலி) அவர்களுக்கு கைபர் போரில் கிடைத்த ஒரு விலையுயர்ந்த நிலத்தை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் ஆலோசனைப்படி, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியதே முதல் வஃக்ப் என்று குறிப்பிடப்படுகிறது. வஃக்ப் சமூகத்திற்கான கட்டாய விதியல்ல என்றாலும், மனிதனுக்குள் இது கருணையை விதைக்கிறது. மறு […]

உசிலம்பட்டி பள்ளியில் போக்‌சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் முனைவர் கல்வியாளர் வேல்முருகன் தலைமையில் ஆசிரியை லயன் அமுதப்பிரியா முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் பொம்மையராஜா தலைமை காவலர் விஜயலட்சுமி மற்றும் மனநல ஆலோசகர் ராஜாராம் ஆகியோர் போக்சோ சட்டம்  குழந்தை திருமணம் 1098 குழந்தைகள் பாதுகாப்பு பற்றி எடுத்துக் கூறினார்கள் கூட்டத்தில் வளர் இளம்பெண்கள் பெற்றோர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் […]

சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா. 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நாளை20.4.25 ஞாயிற்றுக்கிழமை காலை கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது தொடர்ந்து ஏப்ரல் 28 தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருவிழாவின் நிகழ்ச்சிகள் சித்திரை 15 முதல் சித்திரை 26 வரை வரை 12 நாட்கள் மகாபாரத்தில் வரக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்ப தினசரி ஒவ்வொரு வேடம் புரிந்து திருவிழா நடைபெறும். அதன்படி திருவிழாவின் நிகழ்ச்சிகளாக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!