சோழவந்தான் அருகே வாகன விபத்தில் புகைப்படக் கலைஞர் உயிரிழந்த சோகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிரப்பு கிராமத்தை சேர்ந்த மணி இவர் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் வாடிப்பட்டியில் குடியிருந்து வருகிறார் பணி நிமித்தமாக சோழவந்தான் வந்துவிட்டு திரும்பி வீட்டிற்கு சென்ற போது சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் நாகம்மாள் கோவில் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் […]

நலம் காக்கும் ஸ்டாலின்; உயர் மருத்துவ சேவை முகாம்..

தென்காசி மாவட்டம் நெட்டூர் வட்டாரம் ஊத்துமலை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 01.11.2025 (சனிக் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம் இருதயவியல். நரம்பியல் தோல், பல், கண் காது, மூக்கு, தொண்டை, […]

முதலமைச்சரின் கவனத்தை எதிர் நோக்கி பொது மக்கள்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் நிலையில் முதல்வரின் கவனத்தை சுரண்டை நகராட்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரங்களுள் சுரண்டை நகராட்சி ஒன்றாகும். மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள சுரண்டை நகராட்சியில் தற்போது சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமும், வர்த்தகமும் இப்பகுதி மக்களின் பிரதானமாக உள்ளது. மேலும் சுரண்டையை சுற்றியுள்ள சுமார் 40 ஊராட்சி 4 […]

சோழவந்தான் திமுக சார்பாக மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவப்படத்திற்கு வெங்கடேசன் எம் எல் ஏ மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குருபூஜை ஒட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவர்களது திருவுருவப்படத்திற்கு வெங்கடேசன் எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், […]

போட்ட ரோடெல்லாம் தண்ணியில கரைஞ்சு போச்சு.4 வருஷம் முடியப் போகுது. ஒருவேளையும் நடக்கல. திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் எம் பி முன் கொந்தளித்த திமுக நிர்வாகி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம் பி ஆய்வு பணி மேற்கொண்டார். இதில் ஆணையாளர் இளவரசன் கவுன்சிலர்கள் 24 வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகளை மற்றும் பேருந்து நிலையம் விரிவாக்க பணிகள் வளர்ச்சி பணிகளை குடிநீர், சாக்கடை தெரு விளக்கு வசதிகள் குறித்து ஆய்வுப் பணி மேற்கொண்டார். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து […]

சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவிலில் சூரசம்ஹார விழா

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சூரசம்ஹார விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த 22 தேதிஅன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்றைய முன் தினம்மாலை 4 மணி அளவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை […]

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா அகமுடையார் முன்னேற்ற சங்கம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை, அன்னதானம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கம் அறக்கட்டளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குரு பூஜையை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அகமுடையார் முன்னேற்ற சங்க அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் தெய்வேந்திரன் பொருளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியதிமுக செயலாளர் பசும்பொன் மாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முள்ளி பள்ளம் கேபிள் […]

சோழவந்தானில் அதிமுக சார்பாக மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜையொட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக மாமன்னர் மருது பாண்டியர்களின் 224வது குருபூஜையையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ஏற்பாட்டில் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமையில். மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, […]

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

நெல்லின் ஈரப்பதம் குறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நடப்பு நெல் கொள்முதல் சீசன், கடந்த செப்., 1ல் துவங்கியது. இந்த சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தஞ்சை, திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில், குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. இதனால், மழையில் நெல் நனைந்ததால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, […]

“அன்பு” எனும் கரங்கள் தந்து அரவணைத்த முதல்வருக்கு மனதார நன்றி..

தமிழ்நாடு அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகள் 18-வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2025 அன்று அன்புக் கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.   தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற […]

விக்கிரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மயில்களை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த சோழவந்தான் தீயணைப்புத் துறையினர்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மூன்று மயில்கள் விழுந்துள்ளதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் மற்றும் நாகராஜ் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் விழுந்த மூன்று மயில்களை உயிருடன் மீட்டனர் மீட்கப்பட்ட மூன்று மயில்களை வனத்துறை அலுவலர் ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்

சோழவந்தானில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே ஏற்பட்ட முழங்கால் அளவு பள்ளத்தை ஒரே நாளில் சரி செய்த நெடுஞ்சாலை துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேருந்து நிறுத்தம் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலை நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டிருந்தது இந்த பள்ளம் காரணமாக பள்ளி மாணவிகள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகி இருந்தது இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் சாலையின் நடுவே முழங்கால் அளவு இருந்த பள்ளத்தை சரி செய்யும் பணிகளில் […]

சோழவந்தானில் தனியார் வணிக நிறுவனங்களுக்குள் சர்வ சாதாரணமாக நுழைந்து ஓய்வு எடுக்கும் தெரு நாய்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாக குறுக்கும் நெறுக்கமாக ஓடுவதும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு குறைப்பதுமாக ஒருவித அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது இதன் உச்சகட்டமாக ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மொத்தமாக சேர்ந்து வணிக நிறுவனத்திற்குள் நுழைவதும் அங்குள்ள பொருள்களை சேதப்படுத்துவதுமாக வணிகர்களிடத்தில் […]

நெல் கொள்முதல் மையம் திறக்காதால் தனியாருக்கு குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள்

அலங்காநல்லூர் மற்றும் குமாரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 2000திற்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவலம் விரைவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் தண்டலை கோட்டைமேடு கல்லணை மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி […]

சோழவந்தானில் மைய பகுதிகளில் நிழற்குடை வசதி இல்லாததால் கடை, தனியார் மண்டப வாசலில் வழங்கும் பள்ளி மாணவ மாணவிகள்

மதுரை சோழவந்தானில் பேருந்து நிழல் குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி முடிந்து மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு செல்லும் அவலம் பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் அமைக்கவும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் சோழவந்தான் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து சோழவந்தான் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசன் […]

உசிலம்பட்டியில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சென்னையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் மற்றும் திருச்சியில் வழக்கறிஞர் அழகேசன் தாக்கப்பட்டதை கண்டித்தும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் என்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.மேலும் வழக்கறிஞர் சங்க தலைவர் வீர பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர்கள் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தமிழகத்தில் வழக்கறிஞர் தாக்கப்படுவதை […]

குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்

சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறி பத்துக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்  சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி கணேசபுரம் பொம்மபன் பட்டி அம்மச்சியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது சுமார் 4,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் கருப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் […]

சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் ஐப்பசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஐப்பசி மாத விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது முன்னதாக பல்வேறு திரவியங்களால் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் பூஜைகள் செய்தார் இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டு சென்றனர்

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மழையால் சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளி மற்றும் அருகில் வைகை ஆற்று மேம்பாலம் மற்றும் முக்கியமான ஆன்மீக தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடும் இடமான சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் உயிர் சேதம் […]

தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 80 ம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டு வைப்பவத்துடன் விழா துவங்கியது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமய ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 80 ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இத் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கு வருகிறார் ஆண்டு தோறும் கந்த சஷ்டி பெருவிழா பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான விழா முருகப்பெருமானுக்கு காப்பு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!