தொண்டியில்,தொண்டி பாவோடி ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் SDPI-கட்சியின் SDTU-தொழிற்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். SDPI-கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தொண்டி பாவோடி ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் பாவோடி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத் தலைவர் மீரான், துணைத் தலைவர் ஷேக் மைதீன், செயலாளர் சாதிக் பாட்சா, பொருளாளர் சேகு அபுபக்கர் தலைமையில் SDPI-கட்சியின் தொழிற்சங்கமான SDTU தொழிற்சங்கத்தில் SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்டம் அமைப்பு பொது செயலளர் அப்துல் ஜெமீல் & SDTU தொழிற்ச்சங்க மாவட்ட தலைவர் ஆசாத் முன்னிலையில் […]
Category: செய்திகள்
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! புவிஈர்ப்பு விசை..!(gravitational force) அத்தியாயம் 15 “வானங்களும், பூமியும், இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால், அவனன்றி எவரும் அவற்றை தடுத்த நிறுத்த முடியாது.அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும், மன்னிப்பவனாகவும்இருக்கிறான்.” (அல்குர்ஆன் 35:41) இன்னும் சில வசனங்கள் 13:2,31:10,22:65 திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் நிறைய ஆராயத் தூண்டுகிறது. வானமும்,பூமியும் இடம் பெயராதபடி தடுக்க வேண்டுமானால் ஏதோ ஒருவகை பிணைப்புகளோ, தூண்களோ இருக்க வேண்டும். “வானத்திற்கும், பூமிக்கும் தூண்கள் உண்டு.ஆனால் அதனை […]
உசிலம்பட்டி சி எஸ் ஐ ஆலயத்தில் கிறிஸ்மஸ் மர விழாவில் ஞாயிறு பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
உசிலம்பட்டி சி.எஸ்.ஐ ஆலயத்தில் ஞாயிறு பள்ளி கிறிஸ்மஸ் மரவிழாவை சபையின் குருவானவர் ஜான்சன் கார்ட்டர் தலைமையேற்று ஜெபத்துடன் தொடக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சிறு பிள்ளைகள் கிறிஸ்து பிறப்பு நாடகத்தையும் கிறிஸ்மஸ் பாடல்களையும் பாடி நடன கலைநிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். இந்த கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை உசிலம்பட்டி சி.எஸ்.ஐ ஞாயிறு பள்ளி இயக்குனர் சி.எஸ்.ஐ ஆலயம் மாமன்ற உறுப்பினர் ஜீவா பிரேம் சந்தர் அனைவரையும் வரவேற்றார். ஞாயிறு பள்ளி பொறுப்பாளர் டாக்டர் பிரியங்கா ஏஞ்சலின். வதனா .ஸ்வீட்டி. நிகழ்ச்சிகளை […]
பசும்பொன் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில் வருட அபிஷேக விழா நடைபெற்றது. மூன்று தெய்வங்களுக்கும் பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி சந்தனம் பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கருப்பு குருநாதர் ஐயப்ப பக்தர்கள், […]
உசிலம்பட்டி அருகே 9 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்க பூமி பூஜை
மதுரை மாவட்டம்உசிலம்பட்டி ஒன்றியம்வகுரணி ஊராட்சி அயோத்திபட்டியில் சுயம்பு ஆஞ்சநேயர் சிலை வளர்ந்த நிலையில் புதிதாக ஒன்பது அடி உயர சிலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும்அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில்தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் செ பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட செயலாளர் கூ […]
மதுரை காமராஜர் பல்கலையில் வணிக பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு சர்வதேச மாநாடு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வணிக பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவின் சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர்.அப்துல் கலாம் கலையரங்கில், இந்திய செயல்பாட்டு ஆராய்ச்சி சங்கம், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் மேலாண்மை ஆய்வுகள் துறை, இந்திய பகுப்பாய்வு சங்கம் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை ஆகியவை இணைந்து நடத்திய வணிக பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு 12 வது சர்வதேச […]
திண்டுக்கல் மாவட்ட ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்!
திண்டுக்கல் மாவட்ட ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்! திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே வாங்கி வைத்துக்கொண்டு கைதிகளுக்கு விற்பனை செய்துள்ளார். சமீபத்தில் வெளியே சென்று வந்த கைதி மூலமாக வாங்கி வந்த கஞ்சாவை சிறைக்காவலர் அன்பரசு டூவீலரில் மறைத்து வைத்திருந்தார். இதுகுறித்த சிறை […]
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நீருக்குள் பிரசவம்..! அத்தியாயம் 14 ‘கப்ளிசேட்’ “கவலைப்படாதீர்! இறைவன் உமக்கு கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்! (அல்குர்ஆன் 19:24) நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்கிறது மருத்துவ இயல். இதனையே திருக்குர்ஆனும் கூறுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக்கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் நடைபெறும் பிரசவம் எளிதாக நடைபெறுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது. குழந்தை கருப்பையில் நீருக்குள் மிதந்தபடிதான் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறும்போது, […]
அலங்காநல்லூர் அருகேஅய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் முறையாக கட்டாத கழிவுநீர் கால்வாயால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுநோய் தொற்று பரவும் அபாயம்…
அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் முறையாக கட்டாத கழிவுநீர் கால்வாயால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுநோய் தொற்று பரவும் அபாயம்… பாதியில் விட்டுச்சென்ற கழிவு நீர் கால்வாய் பணி காரணமாக கழிவு நீர் தேங்கி இருப்பதால் கொந்தளிக்கும் பொதுமக்கள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் தனியார் பிஸ்கட் கம்பெனி அருகில் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் சொல்ல முடியாத துயரத்தில் நீண்ட நாள் இருந்து வந்தனர் கழிவு நீர் கால்வாய் கட்டித்தரச் […]
நெற்பயிர்கள் செவட்டை நோய் தாக்குதல்.நிவாரணம் வழங்க கோரிக்கை
சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மேல மட்டையா மலைப்பட்டி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்கள் செவட்டை நோய் தாக்கியதில் விவசாயிகள் கடும் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் போக நெல் நடவு பணிகள் தற்போது முடிந்த நிலையில் நடவு செய்த நெல் பயிர்கள் வளர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்களாகும் நிலையில் பயிர்களில் செவட்டை நோய் தாக்குவதால் […]
சோழவந்தானில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை ஆர் பி உதயகுமார் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி திண்ணைப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததுடன் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் […]
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! கருத்தரிப்பின் அதிசயங்கள்..! அத்தியாயம் 13 “பிரசவலி அவரை ஒருபேரீச்சைமரத்தின் அடிபாகத்திற்கு கொண்டு சென்றது. “நான் இதற்கு முன்பே இறந்து அடியோடு மறக்கடிக்கப் பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?”என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 19:23) அன்னை மர்யம் (அலை) அவர்கள் நபி ஈசா (அலை) அவர்களை பிரசவிக்கும் நேரத்தில் ஏற்பட்ட வலியால் வேதனையுற்றார்கள். பொதுவாக, மிகவும் கொண்டாட்டமாக துவங்குகிற திருமணங்களும், அதை ஒட்டிய சடங்கு, சம்பிரதாயங்களும், ஒரு பெண் கருத்தரித்து விட்டால் அந்தக் குடும்பங்களில் ஏற்படுகிற […]
முடங்கியது தேர்தல் ஆணைய இணையதளம்.!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே […]
எஸ்ஐஆர் பட்டியல் வெளியீடு: பல்வேறு மாவட்டங்களில் பல லட்சம் ஓட்டுக்கள் நீக்கம்!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. தேர்தல் கமிஷன் 2 முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று உள்ளனர். பெரும்பாலான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர். […]
கடலூர் சிப்காட் தனியார் ரசாயன ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி மறுக்க வேண்டும்! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழில்வளாகத்தில் இயங்கி வரும் தனியார் கெம்பிளாஸ்ட் கடலூர் வினைல்ஸ் ரசாயன ஆலையின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்கத் திட்டம், சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இத்தகைய விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். ஒன்றிய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களால் ஏற்கெனவே “மிகவும் மாசுபட்ட பகுதி” (Critically Polluted Area) […]
சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்தவரின் கால் முறிந்தது மற்றொரு கால் சேதம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா பாலக் கோம்பையைச் சேர்ந்த காட்டு ராஜா என்பவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வேலை செய்துவிட்டு பாலக்காடு திருச்செந்தூர் ரயிலில் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறங்கும்போது தவறுதலாக கால் இடறி ரயிலிற்க்கும் ரயில் தண்டவாளத்திற்கும் இடையில் கால் சிக்கியதில்ஒரு கால் முற்றிலும் துண்டானது மற்றொரு கால் அதிக சேதம் ஆகிய நிலையில் அருகில் இருந்தவர்கள் ரயிலை நிறுத்த சொல்லி முதல் சிகிச்சை செய்து […]
மதுரையில் மொட்டைமாடியில் துணி காய வைத்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற திமுக இளைஞர் அணி பிரமுகர் கைது
மதுரை மாவட்டம் துவரிமான் கீழத்தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(31).இவர் திமுக இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.இந்த நிலையில்அதே ஊரில் களத்து மேட்டு தெருவில் வசித்து வரும் பானிப்பூரி வியாபாரம் செய்து வரும் சக்கரவர்த்தி என்பவர் மனைவி ராதிகா (34), கணவர் பானிப்பூரி வியாபாரத்திற்கு சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருப்பதையறிந்த கருணாகரன் அங்கு சென்று மொட்டை மாடியில் துவைத்த துணிகளை காயவைத்துக் கொண்டிருந்த போது அங்கு சென்ற கருணாகரன் தான் அணிந்திருந்த சட்டை மற்றும் வேஸ்டியை அவிழ்த்து விட்டு […]
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! மன அமைதியே மாமருந்து..! அத்தியாயம் 12 “பின்னர் கவலைக்குப்பிறகுஉங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறுதூக்கத்தைத் தந்தான்.உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரை கவலை பிடித்துக்கொண்டதுஅவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமை காலஎண்ணம் கொண்டனர்”! …..வசனம் தொடர்கிறது…!(அல்குர்ஆன் 3:154) உலகில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளநன்மைகளும், தீமைகளும் ஒரு தேர்வின் வினாத்தாள் என்று கூறப்படுகிறது. உலகில் கெட்டவர்கள் சிறப்பாக வாழும்போது, நல்லவர்கள் சிரமப்படும் போது, இறைவன் ஒருவன் இருந்தால் இப்படி நடக்குமா? என்று […]
இரும்பாடியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே அரசு நடுநிலைப் பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள மாணவ மாணவிகளின் கழிப்பறை கட்டிடம்
விபத்து ஏற்படும் முன் புதிய கழிப்பறை கட்டிடம் கட்டித் தர பெற்றோர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை திருவள்ளுவர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் விளம்பர திமுக அரசு தடுக்க பொதுமக்கள் கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் இரும்பாடி சின்ன இரும்பாடி மற்றும் அருகில் உள்ள கிராம […]
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! மனம் என்னும் மாயக்கண்ணாடி.! அத்தியாயம் 11 “உங்களுக்கு பின்னால் இத்தூதர் (முஹம்மது) உங்களை அழைத்துக்கொண்டு இருக்கும் போது எவரையும் திரும்பி பார்க்காமல் நீங்கள் (மலைமேல்) ஏறிச் சென்றதை எண்ணிப்பாருங்கள்.!உங்களுக்கு வெற்றி தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும், நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதைவிடப் பெருங்கவலையை அவன் உங்களுக்கு பரிசளித்தான்.நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் 3:153) மனித மனம் ஒரு மாயக்கண்ணாடி. அதில் சிறிய கவலைகளையும், பெரியதாக பெருக்கிக் காட்டும். மனதில் வலிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் […]
You must be logged in to post a comment.