காவலர்களுக்கு கீழை நியூஸ் பாராட்டு..

விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு தடுப்பை முறைப்படுத்திய தென்காசி மாவட்ட காவல் துறையினரை கீழை நியூஸ் செய்தி நிறுவனம் பாராட்டுகிறது. தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில், (இ.விலக்கு ரவுண்டானா அருகில்) வைக்கப்பட்ட பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையில் விழுந்து காணப்படுகிறது என்றும், விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கீழை நியூஸில் 06.06.2025 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி சமூக ஆர்வலரால் தென்காசி மாவட்ட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு […]

தென்காசி இ.விலக்கு பகுதியில் ஆபத்தான நிலையில் பேரிகார்டு..

தென்காசி இ.விலக்கு பகுதியில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சாய்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இ.விலக்கு ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு சாலையில் சாய்ந்து விபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. தென்காசி பகுதியில் இ.விலக்கு சாலை அதிக போக்குவரத்து நிறைந்த முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் […]

பிரமலைக் கள்ளர் சமுதாயத்திற்கு சொந்தமான இடங்களை தமிழகஅரசு கையகப்படுத்தி வருவதைக் கண்டித்து உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் பல நுறாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுடைய வீரதீர செயல்களை பாராட்டி பிரிட்டிஷ் அரசு சுதந்திரத்திற்கு முன் பல நிலங்களை மானியமாக கொடுத்துள்ளது.சுதந்திரத்திற்கு பின் பட்டா மற்றும் பதிவுப்பத்திரம் மூலமாக இச்சமுதாய மக்கள் அனுபவித்து வந்தனர்.தற்போது தமிழக அரசு கையகப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு பிற சமூகத்தைச் சேர்ந்த போலியான ஆட்கள் மூலம் ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகின்றது.உதாரணமாக உசிலம்பட்டி அருகே புத்தூர் சுப்பிரமணிய கோவிலைச் சுற்றியுள்ள நிலங்களை வேறு சமுதாய நபர்கள் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உசிலம்பட்டி தாலுகா 25 ஆவது மாநாடு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உசிலம்பட்டி தாலுகா 25 ஆவது மாநாடு உசிலம்பட்டி சந்தை தேவர் மகாலில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சின்னா தேவர் கொடியேற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டில் மாநில கட்டுப்பாட்டு குழு பி காளிதாஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில செயற்குழு தீ ராமசாமி மாவட்ட செயலாளர் பி முத்துவேல் விவசாய தொழிலாளர் சங்கம் விருமாண்டி என். ஜீவானந்தம் கலந்து கொண்டனர் . மாநாட்டில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு […]

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலாவில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இரண்டாம்நாள் பெருந்திருவிழாவில் மண்டகப்படிதாரர் பூ மேட்டு தெரு கிராமத்q தலைவர் மணி முத்தையா ஏற்பாட்டில் காலை 9 மணிக்கு திருக்கோவிலில் இருந்து அம்மனை […]

18 ஆண்டு கனவு! ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி!

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். […]

தென்காசி மாவட்டத்தில் (ஜூன்-04) மின்தடை..

திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் மற்றும் தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஊத்து மலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஊத்து மலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்பபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலி யூத்து, கல்லத்திக்குளம், […]

சோழவந்தானில் கருணாநிதி பிறந்த நாள் விழா

சோழவந்தானில் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பேரூர் மூன்றாவது வார்டு ரயில்வே பாலம் அருகில் சோலை ராம்குமார் தலைமையில் மு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் அவைத் தலைவர் வேதநாயகம், முன்னாள் தொமுச செயலாளர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது கொடியேற்றத்துக்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார் அதனைத் தொடர்ந்து கொடியேற்றத்திற்கான பூஜை பொருட்களுடன் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர் பின்னர் கோவிலில் உள் பிரகாரத்தில் […]

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முள்ளிப்ள்ளம் கிளைக் கழகம் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய முள்ளிப்பள்ளம் திமுக கிளைக் கழகம் சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இனிப்புகள் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் கேபிள் ராஜா தலைமை வகித்தார். மகளிர் அணி சந்தான லட்சுமி முன்னிலை வகித்தார். இளங்கோவன், காமாட்சி ,பாஸ்கரன், ராஜமாணிக்கம், முத்துராமலிங்கம் மார்நாடு, தெய்வம், சங்கர் ,காளிமுத்து, யாகூப் கான், வண்டிக்காரராசு, ஆனந்தன், சக்திவேல், லீலாவதி, பாண்டி […]

வாடிப்பட்டி வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ. 75லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இந்த சந்தைக்கு மதுரை,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 […]

வாடிப்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது பதவி காலம் வரை ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்த பணத்தை வழங்க கோரி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கிருஷ்ணவேணியிடம் கடிதம் மூலமாகவும் […]

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழா . செம்மொழி நாள் விழா.

உசிலம்பட்டி நகர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா மற்றும் செம்மொழி நாள் விழாவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே கலைஞர் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட […]

வீரவநல்லூர் நூலகத்தில் பாராட்டு விழா..

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற்கழகம் இணைந்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வாசகர் வட்ட தலைவர் ஆதம் இல்யாஸ் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். இசக்கி சரவணன், அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுழற்கழக தலைவர் நவமணி எழுச்சி உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சுழற் கழக செயலாளர் (தேர்வு) பரமசிவன் […]

பட்டிவீரன்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறை, ரூ.11.500 அபராதம்!

பட்டிவீரன்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறை, ரூ.11.500 அபராதம்! திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே கோணம்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு துரைப்பாண்டி என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ்மூர்த்தி(46) மற்றும் பழனிக்குமார் ஆகிய 2 பேரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் […]

சார்’ என்ற வார்த்தை மிரட்டலுக்காக சொல்லப்பட்டது: ஞானசேகரன் வழக்கில் நீதிபதி தீர்ப்பின் முழு விவரம் உள்ளே!

நீதிபதி எம். ராஜலட்சுமி பிறப்பித்துள்ள விரிவான உத்தரவில், ஞானசேகர் மீதான பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 329 ( விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) குற்றத்துக்காக 3 மாதம் சிறை தண்டனை.  126(2) (செல்ல விடாமல் தடுத்து நிறுத்துதல்) குற்றத்துக்காக 1 மாதம் சிறை தண்டனை, 87 (வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல்) குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம்.127(2) – ( உடலில் காயத்தை ஏற்படுத்துதல்) குற்றத்துக்காக ஓராண்டு […]

நாலாந்தர பேச்சு பேசுவதற்கு ஒரே மேடை போடுங்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாராமுதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சவால்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரந்தாங்கி பாறைப்பட்டி கோடாங்கி பட்டி சேந்தமங்கலம் 66 மேட்டுப்பட்டி சத்திர வெள்ளாளப்பட்டி வலையபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பூத் வாரியாக ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் […]

பள்ளி மழலை குழந்தைகளுக்கு மலர் மாலை சூடி வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்

உசிலம்பட்டியில் முதல் நாள், முதல் வகுப்பில் சேர்ந்த 100 க்கும் அதிகமான மழலைகளுக்கு மலர் மாலை சூடி, இனிப்பு வழங்கி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்., விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் பள்ளி திறந்த சூழலில், இன்று புதிதாக முதல் வகுப்பில் நண்பகல் 12 மணிக்குள் 100 க்கும் அதிகமான மழலைகள் புதிதாக சேர்ந்துள்ளனர்.,புதிதாக சேர்ந்த இந்த […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பக்தர்களின் நேர்ததி கடனுக்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காப்பு மஞ்சள் கயர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றுத்துடன் இன்று தொடங்க உள்ள நிலையில் கொடியேற்றம் தொடங்கியவுடன் ஆயிர கணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் பால்குடம் அக்னி சட்டி பூக்குழி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக காப்பு கட்டுவதற்கு கோவில் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்பு மஞ்சள் கயிறுகள் கோவிலில் பணியாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு உள்ளது இரவு 7 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றவுடன் இரவு முழுவதும் பக்தர்கள் காப்பு காட்டுவார்கள் […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதை ஒட்டி மின்னொளியில் ஜொலிக்கும் கோவில் வளாகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் இன்று இரவு நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் மின்னொளி மற்றும் ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடுகளை பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்துள்ளனர் இன்று […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!