கேரள மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபரை புளியரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 496 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை […]
Category: செய்திகள்
உசிலம்பட்டி அருகே பள்ளி முன்பே, பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் செக்யூரிட்டி பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர்யில் இயங்கி (ஆச்சி இண்டர்நேஷனல் பள்ளி) வரும் தனியார் பள்ளிக்கு தினசரி மாணவ மாணவிகள் பள்ளி வாகனம் மூலம் அழைத்து வருவது வழக்கம்., இன்று காலை பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி வாகனம் பள்ளி முன்பு நெடுஞ்சாலையிலிருந்து வளாகத்திற்குள் சொல்ல திரும்பிய போது மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது., இதில் நிலை தடுமாறி பள்ளி வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி திருவேங்கடசாமி மீது மோதியதில் […]
சோழவந்தான் தொகுதிக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில்வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தின் 4ம் கட்ட பிரச்சாரத்தை மதுரை மாவட்டத்தில் கடந்த 1ந் தேதி தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார் இந்த நிலையில் 4ந் தேதி சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் […]
TNUSRB-TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..
தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத […]
சுந்தரவல்லி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ளது சப்பாணி மந்தை கருப்புசாமி கோவில். இந்த கோவிலில் இருந்து சுந்தர வள்ளி அம்மன் கோவிலுக்கு செல்ல கீழ் பகுதியில் பாதை கடந்த காலங்களில்பயன்படுத்தப்பட்டு .வந்தது. 2008ல் மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த தவறான உத்தரவின் பேரில்கீழ் பகுதியில் சுவர் எழுப்பப்பட்டு பாதை மறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து கிராம பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் அடிப்படையில் பாதை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர மதுரை மாவட்ட […]
விக்கிரமங்கலத்தில் சீர் மரபினர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டமமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல விடுதிகள் என்று மாற்றம் செய்ததை கண்டித்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் வழங்க கோரியும் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தவமணி தலைமையில் தமிழ்நாடு […]
விக்கிரமங்கலத்தில் குளத்தை தூர்வார கோரிக்கை
விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குளத்தை தூர்வார கோரிக்கை மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் பின்புறமும் காவல் நிலையத்திற்கு முன்புறமும் உள்ள குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹோட்டல் கழிவுகள் சாக்கடை நீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். கோழி கழிவுகள், திருமண மண்டபத்தில் உண்டாகும் கழிவுகள் ஆகியவை நள்ளிரவு நேரங்களில் வந்து […]
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக உள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், அணையில் உள்ள 58 கால்வாய் மதகு பகுதியை 67 அடியில் இருந்து 65 அடியாக குறைத்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தண்ணீர் திறக்க கோரி சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை […]
கோவை காரமடையில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை பிரச்சாரம்.!
கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் காரமடை பகுதியில் அமைந்துள்ள கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தனர். மாணவ-மாணவிகளிடம் சிறப்பு விருந்தினர்கள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்றினர். இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை […]
கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் அமைந்துள்ள கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது கோவை மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு […]
பாலமேட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் 9 முதல் 15 வார்டுகள் வரை உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் பட்டா மாற்றுதல், குடும்ப ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீடு, ஆதார், உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அரங்குகளில் உள்ள அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றனர்.மேலும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை சட்டமன்ற […]
வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை
சோழவந்தான் அருகே தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை அடிவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் சார்பில் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் கலந்து கொண்ட தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா செய்தியாளர்களிடம் கூறும் […]
வாடிப்பட்டி வட்டாட்சியரை கண்டித்து சாலை மறியல்
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவகாரம் வாடிப்பட்டி வட்டாட்சியரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக பரபரப்பு புகார் மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூர் கிராமத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை அரசு புறம்போக்கு இடம் எனக் கூறி வாடிப்பட்டி வட்டாட்சியர் காவல்துறை உதவியுடன் முள்வேலியை அகற்றியதாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட இஸ்லாமிய பொதுமக்கள் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திருவாலவாயநல்லூர் பிரிவு அருகில் […]
முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி
கோவை மாவட்டம் சிறுமுகை புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறகுகள் சங்கமம் 2025 நிகழ்ச்சியின் மூலம் 2001 முதல் 2008 வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிறகுகள் சங்கமம் 2025 நிகழ்ச்சியின் மூலம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு மற்றும் தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.இந்நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் செல்வ பாரத் தலைமையேற்று நடத்தினார் நிகழ்ச்சியில் சுகன்யா வரவேற்புரை வழங்கினார் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் […]
சோழவந்தான் பேருந்து நிலைய சர்வீஸ் சாலை அமைப்பதில் மூன்று துறைகளுக்கு இடையே நீயா நானா போட்டியால் பரிதாபத்தில் மக்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் புதிய பேருந்து நிலையம் கட்டவும் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது இந்த நிலையில் ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது ரயில்வே நிர்வாகம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டும் மாநில அரசு தங்களுக்குரிய இடத்தில் மேம்பால ப்பணிகளை முடிக்காத நிலையில் […]
வாடிப்பட்டி நீரேத்தான் வளையல்கார தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் மண்டல அபிஷேக விழா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் வளையல்கார தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கடந்த 48 நாட்களும் தினசரி காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது தொடர்ந்து மண்டல பூஜை விழா கோவிலில் நடைபெற்றது இதில் பால் தயிர் நெய் இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது தீபாராதனை நடைபெற்றது மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு யாகமும் நடைபெற்றது வாடிப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் இருந்து […]
எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம். பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த செல்லூர் ராஜு
பரவையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்து அரசு பேருந்தில் ஏறி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார் அதிமுக முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜீ தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுபயணத்தில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மதுரையிலுள்ள 10 தொகுதியிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் […]
சோழவந்தானிலிருந்து தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்துக்கு பேருந்து வராதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு எந்த ஒரு பேருந்தும் வராதால் பொதுமக்கள் பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் முகூர்த்த நாளாகவும் இருந்ததால் சோழவந்தான் திருவேடகம் பச்சம்பத்து தேனூர் ஆகிய பகுதிகளில் அதிக பயணிகள் காத்துக் கிடந்தனர். மேலும் வழிபாட்டு தலங்களுக்கு செல்வோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் சிகிச்சையில் […]
சோழவந்தான் பகுதியில் இறந்து கிடக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் வயது மூப்பு மற்றும் நோய் தொற்று காரணமாக இறந்து கிடக்கும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான் வைகை ஆற்று பாலம் நடுவில் தெரு நாய் ஒன்று இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதே போன்று காமராஜர் சிலை அருகில் கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடக்கும் தெரு நாய் வயிறு உப்பி துர்நாற்றம் வீசி வருவதால் […]
சோழவந்தானில் பெண்கள் சுகாதார வளாகத்தில் இருந்த மின்சாரப் பெட்டிகள் திடீர் தீ விபத்து
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி ஆறாவது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகம் உள்ளது இந்த வளாகத்தில் உள்ள மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மின்சார பெட்டியில் தீப்பிடித்து எறிந்தது சுகாதார வளாகத்திற்குள் பெண்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக தீ கொழுந்து விட்டு எறிந்ததால் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு […]
You must be logged in to post a comment.