சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர் எம் எஸ் காலனி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் இரண்டாவது வருட அபிஷேக விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர் எம் எஸ் காலனி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் இரண்டாவது வருடாபிஷேக விழா நடைபெற்றது. மங்கள இசை கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.கடம் புறப்பாடு ஆகி விநாயகருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை […]

உசிலம்பட்டி அருகே புளிய மரத்தில் கார் மோதி விபத்து கார் மூவி விபத்து இரண்டு பேர் பலி 5 பேர் காயம்

உசிலம்பட்டி அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி – மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் சிவகாசியிலிருந்து தேனி நோக்கி சென்ற கார் அதிகாலை 2 மணியளவில் சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது., இதில் காரில் பயணித்த கடமலைக்குண்டு காவேரி தோட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், மாயக்கிருஷ்ணம்மாள் என்ற கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

கருப்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பேருந்து நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டிக்கு வரும் பேருந்துகள் கருப்பட்டி பேருந்தை சாலை நடுவே நிறுத்திவிட்டு போக்குவரத்து தற்காலிக பணியாளர்கள் சென்று விடுகின்றனர் இதன் காரணமாக காலை நேரங்களில் பணிகளுக்கு செல்பவர்கள் தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் அடுத்தடுத்து வரும் வாகனங்கள் செல்வதில் சிரமங்கள் […]

சோழவந்தானில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் மதுரை கே கே நகர் லயன் சங்கம் சார்பில் ஆழ்துளை கிணறு மற்றும் ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ராபின்சன்செல்வகுமார் வரவேற்றார். அரிமா சங்க கவர்னர் செல்வம் நிகழ்ச்சிக்கான கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.அரிமா ராஜ்குமார் மற்றும் கவிதா ராஜ்குமார் ஆகியோர் ஆழ்துளை […]

வ உ சி பிறந்தநாளை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்

வாடிப்பட்டி வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக வ உ சி பிறந்த நாளை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வ உ சி பிறந்த நாளையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது தொடர்ந்து திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி பழைய நீதிமன்றத்தில் இருந்து நாடார் மஹால் வரை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ. சிதம்பரனார் […]

அதிகாரிகள் தோண்டிய பள்ளங்களை சொந்த செலவில் மூடிய பொதுமக்கள்

சோழவந்தான் பேரூராட்சயில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களை இரண்டு வருடங்களாக மூடாத அதிகாரிகள் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து சொந்த செலவில் பள்ளங்களை மூடும் அவலமம.,, துரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 2 மற்றும்7 வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி நகரில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில். கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக வெங்கடாஜலபதி நகரின் முக்கிய வீதியில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக குழாய் தோண்டும் பணிகள் […]

சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கர்ப்பிணி பெண்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இதில் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி ஜி மஹால் முன்பு உள்ள வளைவில் ஆபத்தான நிலையில் ஆளை விழுங்கும் வகையில் குண்டும் குழியுமாக சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கர்ப்பிணி தாய்மார்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக இந்த பகுதியில் உள்ள மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குழந்தைகள் […]

கோர்ட் உத்தரவிட்டாலும் மேலிட உத்தரவு வரவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சகுந்தலா மீண்டும் பதவி ஏற்பதில் நீடிக்கும் சிக்கல்

உசிலம்பட்டியில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நகராட்சி சேர்மன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் – தகுதி நீக்கத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் சேர்மனாக பதவியேற்க அலைய வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா, திமுக சார்பில் வெற்றி பெற்று, நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார்., இந்நிலையில் இவரை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு […]

செக்கானூரணி நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் ஒன்று இணைவோம் வெற்றி பெறுவோம் என கூறி செங்கோட்டையன் கருத்தை வலியுறுத்தும் விதமாக சுவரொட்டிகள்

அதிமுகவில் கடந்த ஐந்தாம் தேதி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் அதிமுக அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தால்தான் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்க முடியும் அதற்கு அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டுமென பேட்டி அளித்திருந்தார் அவரது இந்த கருத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் பல்வேறு இடங்களில் அவரது கருத்தை ஆதரித்து சுவரொட்டிகள் […]

சோழவந்தான் பேட்டை 1 மற்றும் 2வது வார்டு பகுதியில் நியாய விலை கடை அமைக்க வார்டு பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் பேட்டை 1 மற்றும் 2வது வார்டு பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கின்றனர் அவர்களுக்கான நியாயவிலைக்கடை முதலியார் கோட்டை நடுத்தெரு கோட்டைமேடு செல்லும் பகுதியில் அமைந்துள்ளது இந்த கடைக்கு செல்ல பொதுமக்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்து கடந்த நகர்புற உள்ளாட்சித் […]

முள்ளி பள்ளம் ஊராட்சியில் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் அரசு மேல்நிலைப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக கூறுகின்றனர் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குறுக்கு நெருக்கமாக தெரு நாய்கள் ஓடுவதால் வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் பெண்கள் குழந்தைகளை கடைகளுக்கு அழைத்துச் செல்லும்போது […]

சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சி யின் 154 வது பிறந்தநாள் விழா வெங்கடேசன் எம் எல் ஏ மரியாதை

செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ.உ.சி.யின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் சோழவந்தானில் உள்ள வடக்கு ரத வீதி தெற்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சார்பில் அதன் நிர்வாகிகள் வ உ சி யின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் முன்னதாக […]

தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் பேரவை சார்பில் அஞ்சலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்களின் கல்வித் தந்தை என எல்லோராலும் போற்றப்படும் பிகே முக்கையார் தேவரின் 46 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.அவரது நினைவு தினத்தை ஒட்டி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்துள்ள முக்கையா தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தமிழ் மாநில பிர மலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் ராஜபாண்டியன் மாநில பொதுச் செயலாளர் பூபதி ராஜா கழிவரத ஐயப்ப சாமி மற்றும் நிர்வாகிகள் […]

உசிலம்பட்டியில் வ உ சி பிறந்தநாள் விழா

உசிலம்பட்டி வட்டார பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை 153 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி வட்டார பிள்ளைமார் சங்கம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கௌரவத் […]

மேட்டுப்பாளையம் ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு லயன்ஸ் இன்டர்நேஷனல் நல்லாசிரியர் விருது.!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் கோஇன்டியா வளாகத்தில் லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார்  “நல்லாசிரியர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதற்காக சென்னை சென்றிருந்ததால், அவரின் சார்பில் மனைவி  நர்மதா ஆனந்தகுமார் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விழா கோவை மாவட்ட கவர்னர் Ln. ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. விருதை அண்ணா பல்கலைக்கழக சேர்மன்  […]

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா .!

  கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாரிமுத்து (மு.கூ.பொ.) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ. கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமது உரையில் அவர், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி, அறம் காப்பது மற்றும் உழைப்பின் மேன்மையை வலியுறுத்தி, “விதைத்தவன் உறங்கினாலும் […]

மாதாந்திர மின் பராமரிப்பு பணி; செப்.06 (நாளை) மின்தடை

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் வரும் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 06.09.2025  அன்று பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி பகிராமான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.   திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் […]

உசிலம்பட்டியில் வ. உ .சிதம்பரனார் 153 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழா மதுரை மாவட்டம் உச்சமான. காங்கிரஸ் கட்சியினர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டி சரவணகுமார், எம் .மகேந்திரன் ஆகியோர் தலைமையில் முன்னாள் நகரச் செயலாளர் ஓ காந்தி சரவணன் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில் ஐ என் டி யூ சி தொழிற்சங்கத்தினர் பிரேம் ஆனந்தன், யோக்கியன், மகா மந்திரி, கண்ணன், மார்நாடு, […]

Corruption, Collection, Commission மட்டுமே இந்த ஆட்சியில் நடக்கிறது என உசிலம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.,

உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி பயணத்தின் 2 ஆம் கட்ட பரப்புரை மேற்கொண்டார்., வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று முளைபாரி எடுத்தும், மேள தாளத்துடன், வான வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்., தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி., இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் பூமி அதிருகிறது., அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற […]

இலஞ்சி பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா..

இலஞ்சி பி.எட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை ஆகிய இரு பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலா வின்சிலா தலைமை வகித்தார். நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்களை மாணவ ஆசிரியர்கள் வாழ்த்தினர். தொடர்ந்து, அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. இதில் உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!