TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். – எப்படி?..

TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். – எப்படி?.. யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள்? பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பந்தப்பட்டவர்கள் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. எங்கே வகுப்புகள்? பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு -26 (கி.பி 661-750) ஒருவாரம் தொடர்ந்து நடைபெற்ற போரில் பின்வாங்கி ஓடிய ரோட்ரிக்ஸ் மன்னன்என்ன ஆனார் என்பது தெரியவில்லை.அவரது குதிரையும்,குதிரையின் சேணமும் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதால் அவர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம். தாரிக் இப்னு ஸியாத்முஸ்லீம்களின் வெற்றியால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார். தனது படைப்பிரிவை நான்காக பிரித்து நான்கு முக்கிய நகரங்களை கைப்பற்ற அனுப்பி வைத்தார். கார்டோவா, மலாக்காநகரங்களை உபதளபதிகள் எளிதாக கைப்பற்றினர்.ஸ்பெயினின் அன்றைய தலைநகரான தொலதோவை தளபதி […]

அறுபடை ஆன்மீகப் பயணம் திட்டத்தின் மூலம் வருகை தந்த 207 பேரும் பழனியில் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்..

அறுபடை ஆன்மீகப் பயணம் திட்டத்தின் மூலம் வருகை தந்த 207 பேரும் பழனியில் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் என்பது மிகச் சிறப்பான புதிய திட்டம் என்பதால் பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது. அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் […]

எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம் !

மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் சமூக ஊடக அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் SMK.சதாம்  தலைமையில் சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில பொதுச் செயலாளர் S.அகமது நவவி, மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் A.முஜிபுர் ரஹ்மான் ,மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன்,மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் N.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத்திற்குட்பட்ட […]

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாற்றுத் திறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கல்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் […]

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கமல் கிஷோர் பொறுப்பேற்பு..

தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றிய ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே.கமல் கிஷோர் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஜன.27 அன்று பிறப்பித்திருந்தார். இந்நிலையில் […]

கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நகர் தலைவர் செய்யது அபுதஹிர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அப்துல் ஜெமில், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அக்பர் ,விம் மாவட்ட துணை தலைவி முபீனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கிர் அருஸி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி நடக்கும் மீனவர் களுக்கான ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் […]

மதுரையில் வெளிநாட்டு ரூபாயை மாற்றுவது போன்று வெளிநாட்டு பணத்தை திருடி தப்பிய நபர் கைது..

மதுரையில் வெளிநாட்டு ரூபாயை மாற்றுவது போன்று வெளிநாட்டு பணத்தை திருடி தப்பிய நபர் கைது.. மதுரை நேதாஜி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் (SRS Forex) வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றும் மையத்தில் ஈரான் நாட்டு பணத்தை மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணத்தை திருடி சென்றதாக அந் நிறுவனத்தார் கொடுத்த தகவலின் பெயரில் மதுரை திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வந்த நிலையில் தப்பிச் சென்ற நபர் நாகர்கோயில் பகுதியில் […]

மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், இந்தப் பாம்பு தலை தூக்கும்- எச்சரிக்கை.. கி. வீரமணி எச்சரிக்கை..

  ஓபிசி -எஸ்சி -எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடில் “தகுதியானவர்கள்” கிடைக்காவிட்டால், பொதுப் பிரிவாக அறிவிப்பாம்! கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது; மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், இந்தப் பாம்பு தலை தூக்கும்- எச்சரிக்கை! நமது இந்திய அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள முக்கிய உரிமை – அதுவும் மக்கள் அவர்களாகவே அவர்களுக்கு அளித்துள்ள மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத உரிமை (inalienable right) சமூகநீதியாகும்.மற்றும் பொருளாதார நீதி, அரசியல் நீதி என்பவற்றின் வரிசையில் […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாகிகள்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாகிகள்.. கடந்த 7.1.2024 அன்று மதுரையில் நடைபெற்ற SDPI கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்ததையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை  சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (29.1.2024- திங்கட் கிழமை), அக்கட்சியின் மாநிலத் தலைவர்  நெல்லை முபாரக், பொதுச் செயலாளர்களான நிஜாம் மொய்தீன், உமர் பாரூக், செயலாளர் ஏ.கே. கரீம், பொருளாளர் அமீர் அம்சா, […]

மதுரை விமான நிலையத்தில் மீண்டும் அடாவடி செய்யும் வடமாநில டோல்கேட் ஊழியர்கள். – நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் வசூல் செய்ய முயற்சி..

மதுரை விமான நிலையத்தில் மீண்டும் அடாவடி செய்யும் வடமாநில டோல்கேட் ஊழியர்கள். – நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் வசூல் செய்ய முயற்சி.. மதுரை பெருங்குடி பகுதியில் அமைந்துள்ளது மதுரை விமான நிலையம். மதுரை விமான நிலையத்தில் பயணிகள் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 3000 திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகளுடன் அவர்கள் உறவினர்களும் அதே போல் மற்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் […]

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கண்டன போராட்டம் ..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவளம், நீர் வளம், கடல் வளம், பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தி மண்ணுரிமை பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. இது […]

மருத்துவக் காப்பீட்டில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வசதி அறிமுகம்..

மருத்துவக் காப்பீட்டில் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் வசதி அறிமுகம்.. மருத்துவக் காப்பீடு எடுக்கும் பயனாளிகள், சிகிச்சைபெறுவதை எளிமையாக்கும் முயற்சியாக, பொது காப்பீட்டுக் கவுன்சில், பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, “எங்கும் பணமில்லா” சிகிச்சை பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியின் கீழ், மருத்துவக் காப்பீடு வைத்திருப்போர், தங்களது காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் இருக்கும் மருத்துவமனை அல்லாத வேறு மருத்துவமனையிலும் பணமில்லாமல் சிகிச்சை பெறும் வசதியை பெறுவார்கள். இதன் மூலம் காப்பீடு எடுப்போர், […]

மேலிட ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில்இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தகராறுகூச்சல், குழப்பம் – அடிக்கடி தடை பட்ட ஆலோசனை கூட்டம்..

மேலிட ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தகராறு கூச்சல், குழப்பம் – அடிக்கடி தடை பட்ட ஆலோசனை கூட்டம்..  வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக்குழு தலைவர் மலேசியா பாண்டி தலைமை வகித்தார். . கடந்த காலங்களில் ஏற்பட்ட உட்கட்சி பூசல், காழ்ப்புணர்ச்சி அரசியல் காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தேன். இங்கு உழைப்பவருக்கு மதிப்பில்லை. இனிமேல் நான் எந்த […]

தென் மாவட்டங்களில் கல்வியின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். -அமைச்சர் அன்பின் மகேஷ் பேச்சு..

தென் மாவட்டங்களில் கல்வியின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். -அமைச்சர் அன்பின் மகேஷ் பேச்சு.. அரசு பள்ளி கல்வி துறை சார்பாக தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா மதுரை விரகனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்பேற்று 400க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிடுகையில்: தனியார் பள்ளிகள் வந்து அரசு […]

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாதுஷா சந்தனக்கூடு விழாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து சமய நல்லிணக்க விழாவாக கொண்டாடினர்..

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாதுஷா சந்தனக்கூடு விழாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து சமய நல்லிணக்க விழாவாக கொண்டாடினர்.. மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு விழா கொண்டாடப்பட்டது. சந்தனக்கூடு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய விழாவில் இந்துக்களும் கலந்து கொண்டனர். அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகவும் ஒற்றுமைக்காகவும் சிறப்பு தூவா பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்கும் சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்கா […]

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது..

 மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது.. மகளிர் பட்டிமன்றம் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகுமாரி அவர்களுக்கு மணிமேகலை ஆட்சி, கலைச்செல்வி இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மனோகரன், சத்யநாராயணன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சத்யா மற்றும் நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள், புதியவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகைச்சுவை […]

அரசு பள்ளிக்கு தனியார் நிறுவனம் கழிப்பறை வசதி பொதுமக்கள் பாராட்டு..

அரசு பள்ளிக்கு தனியார் நிறுவனம் கழிப்பறை வசதி பொதுமக்கள் பாராட்டு.. சோழவந்தான் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வரும் பிரிட்டானியா நியூட்ரிசன் பவுண்டேஷன் தனியார் நிறுவனம் பள்ளியின் கழிப்பறை வசதிகளை மறு சீரமைப்பு செய்து கொடுத்தனர் நிறுவனத் திட்ட அலுவலர் ரஞ்சிதா மற்றும் களப்பணியாளர்கள் ஆனந்த் ராஜா பானுப்பிரியா தேவிப்பிரியா வாஞ்சிநாதன் ஜாகின் ஆகியோர் புதுபித்த கழிப்பறையை […]

திருமங்கலம் சி பி எஸ் இ பள்ளி ஆண்டு விழாவில், பிஞ்சு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் அசத்தல்..

திருமங்கலம் சி பி எஸ் இ பள்ளி ஆண்டு விழாவில், பிஞ்சு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் அசத்தல்.. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் சி பி எஸ் இ பள்ளியின் ஒன்பதாவது ஆண்டு விழாவில், எல்கேஜி , யுகேஜி பயிலும் பிஞ்சு குழந்தைகள் வண்ண, வண்ண கலரில் ஆடை அணிந்து கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி பார்வையாளர்களை கவரும் வகையில் அசத்தினர்.விழாவில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ , மாணவியர்கள் தங்களது திறனை […]

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு..

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு.. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரியின் பிரார்த்தனை கூடத்தில் கொடுத்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். முதல்வர்  முனைவர். தி. வெங்கடேசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!