உசிலம்பட்டியில் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவரான ஓய்வு பெற்ற தலைமை காவலரும் உயிரிழந்த சம்பவம் – இறப்பிலும் இணைபிரியா தம்பதி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் – பவளக்கொடி தம்பதி, 86 வயதான தங்கராஜ் தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், பவளக்கொடி இல்லத்தரசியாக இருந்தாக கூறப்படுகிறது., இந்த தம்பதிகள் திருமணமான நாளிலிருந்து இருவரும் இணைந்தே இல்ல விழாக்கள், கோவில்களுக்கு சென்று வருவது, குழந்தைகளிடம் அன்பு செலுத்தி வாழ்ந்து வந்துள்ளனர்., இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மனைவி பவளக்கொடி தனது 76 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார், மனைவி இறந்த சோகத்தில் இருந்த […]

அரசாணை இல்லாததால் பழைய அரசுப்பள்ளி கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்.மூக்கையாத்தேவர் மணிடண்டபம் கட்டுவதில் நீடிக்கும் சிக்கல்.

நடந்து முடிந்த சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் மறைந்த முன்னாள் எம் பியும்,முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே மூக்கையாத்தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து மணிமண்டபம் அமைக்க ரூ 8கோடி நநி ஒதுக்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்த மணிமண்டபம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பள்ளி கல்வித் துறைக்குச் சொந்தமான பழைய அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளயில் மணிமண்டபம் அமைக்க இடம் […]

முள்ளிப் பள்ளம் கிராமத்தில் கும்பாபிஷேகம் பணிகளை தொடங்க இடையூறாக இருந்த மரம் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உள்ள சங்கையா ஊர்காவலன் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலானதாக கூறப்படுகிறது இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தற்போது உள்ள யாரும் பார்க்கவில்லை எனவும் கூறுகின்றனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் கோவில் முன்பு இருந்த பெரிய மரம் அதற்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]

திருவேடத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது முகாமில் திருவேடகம் தென்கரை மேலக்கால் காடுபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுடைய தேவைகளை மனுக்கள் மூலமாக வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது இம்மாமிற்கு வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார். […]

பேரணையில்திருமங்கலம் ஒருபோக விவசாய பாத்திற்கு நீர் திறப்பு உசிலம்பட்டி ஐயப்பன் எம் எல் ஏ விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொதுப்பணி துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒருபோக விவசாய பாசனத்திற்காக 19000 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் அணைப்பட்டி பேரணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் பாசன கோட்ட விவசாய சங்க தலைவர் ராமன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். விக்கிரமங்கலம், கொடிக்குளம் குறவக்குடி உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 19,000 ஏக்கர் வாசன வசதி பெறுகிறது. ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்து பூஜை செய்து பூத்தூவி வழிபாடு செய்தனர். தற்போது ஒருபோக விவசாயத்திற்காக […]

மதுரை அருகே கோவில் பாப்பாகுடியில் வீட்டின் முன்பாக சென்ற மின் வயரை மாற்றக் கோரிய நபரிடமிருந்து லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி பி ஆர் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது வீட்டின் முன்பாக அருகே மின்சார வயர் செல்வதால் அதனை இடமாற்ற கூறினார். கூடல் நகரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மின் வயரை இடம் மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் மின்சார வாரியத்தில் போர்மனாக பணியுரையும் கணேசன்.லஞ்சம் தர விரும்பாத சாமுவேல் இது குறித்து லஞ்ச […]

தமிழக பாஜக விவசாய அணி மாநில துணை செயலாளராக சோழவந்தான் தொழிலதிபர் மணி முத்தையா, 2 வது முறையாக தேர்வு பாஜ நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் தொழிலதிபர் மணி முத்தையா. இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில்,2 வது முறையாக மாநில விவசாய அணி துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.வி.எம்.குழுமத் தலைவர், தொழிலதிபர் மணி முத்தையா அவர்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகளும் மாலை மற்றும் […]

சாந்தி வனம் தகன கூடத்தில் பராமரிப்பு பணி; தகன சேவை நிறுத்தம்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி வனம் எரிவாயு தகனக் கூடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் தகனக்கூடம் தற்காலிகமாக செயல்பாட்டில் இருக்காது எனவும் மீண்டும் 11.10.2025 முதல் சேவைகள் தொடங்கும் என்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து மேட்டுப்பாளையம் நெல்லித் துறை சாலையில் எரிவாயு தகன மேடை அமைத்துள்ளன. கடந்த ஜனவரி 21, 2013 அன்று அதிகாரப் பூர்வமாக தகனக்கூடம் திறக்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் […]

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழி முறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும், […]

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; பரிசு மற்றும் சான்று வழங்கல்..

தென்காசி மாவட்டம் பாட்டாகுறிச்சி விளையாட்டு வளாகத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் (18.09.2025) இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி […]

முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கால் என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ரோட்டரி கிளப் மற்றும் மதுரை தமிழ் சங்க நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கால் இவருக்கு இரண்டு கால்களும் இல்லாத நிலையில் தனது அன்றாட வேலைகளை செய்வதற்கு சிரமப்பட்டு வந்தார் இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட முறை மனு அளித்திருந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படாமல் இருந்தது இதனை தொடர்ந்து […]

உசிலம்பட்டி சமத்துவ புரத்தில் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் விழா திராவிட கழகம் சார்பாக கொண்டாடப்பட்டது. சமத்துவ புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிட கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன் தலைமையில் ம தி மு க மாவட்ட செயலாளர் கே.பி.ஜெயராமன் நகரச் செயலாளர் ஜெ.டி. குமார் ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ஏ.ஓ.பெரியபாண்டி வடக்கு பி. பழனித்துரை மாநில பொதுக்குழு […]

புதிய பாலம் கட்ட பூமி பூஜை

பாலமேடு அருகே ரூ.3.60 கோடியில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை – எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ராமக்கவுண்டன்பட்டி கிராமத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் சாத்தியார் அணை நீர் வரத்து ஆற்றில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட இயக்குனர் வானதி, […]

தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி

சோழவந்தான் அருகே முள்ளி ப்பள்ளம் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது ஆட்டு மந்தையில் புகுந்த தெரு நாய் கடித்ததில் ஐந்துஆடுகள் பலியான பரிதாபம் இறந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளை தெரு நாய் இழுத்துச் சென்றதால் விவசாயி வேதனை மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெரு நாய்களால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக பொதுமக்கள் நடமாடும் இடங்கள் விவசாய நிலங்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் பொதுமக்கள் […]

உசிலம்பட்டி நகராட்சியில் மீண்டும் பதவி ஏற்றுக்கொண்ட நகர் மன்ற சேர்மன் சகுந்தலா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்த சகுந்தலா என்பவரை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு தகுதி நீக்கம் செய்தது., சகுந்தலா சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய சூழலில், தமிழ்நாடு அரசின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது., இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி மீண்டும் நகர் மன்ற தலைவராக பதவியேற்க வந்த சகுந்தலாவை பதவியேற்க அனுமதிக்காத சூழலில் நகர் மன்ற […]

மேட்டுப்பாளையத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அமமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கூட்டம் சார்பில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் P. சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் JH. ஹக்கீம், நகரச் செயலாளர் PS. கார்த்திகேயன், அவைத் தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள […]

மேட்டுப்பாளையத்தில் அண்ணா பிறந்தநாள் விழா.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அமமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கூட்டம் சார்பில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் P. சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் JH. ஹக்கீம், நகரச் செயலாளர் PS. கார்த்திகேயன், அவைத் தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் […]

வாடிப்பட்டியில்அண்ணா பிறந்தநாள் விழா.ஆர். பி. உதயகுமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, மாநில பேரவைஇணை ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், ரவிச்சந்திரன்,கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் […]

பாலமேட்டில் பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர்.

பாலமேட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வர முடியாத நிலையில் பொதுமக்கள் அவதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்காக பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது இதனால் பாலமேட்டில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கும் மற்றும் நகர் பகுதிகளுக்கும் […]

விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை புறநகர் மேற்குமாவட்ட செயலாளர் ஊர்ச்சேரி சிந்தனை வளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கேட்டு கடையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை ஏழை தலித் மக்களிடம் ஒப்படைப்பு செய்யவும், அலங்காநல்லூரில் தேசிய […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!