ராமநாதபுரத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு.!

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாம்பூரணி வடக்கரை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தட்சணாமூர்த்தியின் மனைவி கீதா என்பவர், தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக தனது கருப்பை அகற்ற நேர்ந்துள்ளதாகக் கூறி, குற்றம் சாட்டிய மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தற்போது ஒரு குழந்தையின் தாயான கீதா, இரண்டாவது குழந்தை […]

கமுதி பேரூராட்சியில் தூய்மை பணிகள் பாதிப்பு.!

கமுதி பேரூராட்சியில் சாதி வேறுபாடுகள் காரணமாக தூய்மை பணிகள் பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் மனு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாக்கு உட்பட்ட கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பணியிடங்களில் சாதி வேறுபாடுகள் நடைபெறுவதால் தூய்மை பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனுவொன்று வழங்கினர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 தூய்மை பணியாளர்கள் கமுதி பேரூராட்சியில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுடன் பணியாற்றும் குருதாம், ராமமூர்த்தி, மாரி, விஜயராகவன், […]

வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு.!

வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் 20 ஆண்டுகளாக பட்டா கோரி போராடுகின்றனர்: மாவட்ட ஆட்சியரிடம் மனு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள வேதாளை பஞ்சாயத்தின் கீழ் functioning அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் பட்டியல்வகுப்பு மக்களுக்கு நில உரிமை (பட்டா) கிடைக்காமல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பட்டா கோரி அதிகாரிகளிடம் மனு வழங்கியும், எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் […]

கருக்காத்தி காலணி மக்கள் குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தின் கீழ் இருக்கும் மேலமடைப் பஞ்சாயத்திலுள்ள கருக்காத்தி காலணி கிராம மக்கள், தங்களுக்கான குடிநீர் வழங்கல் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட குடிநீர் சேவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர். நாங்களும் ஓட்டு போட்டோம் எனவே மற்ற கிராமங்களைப் போன்று நாங்களும் குடிநீர் வசதியை பெற வேண்டும்,” என்கிறார்கள். தற்போது உப்பு தண்ணீரையே குடிக்க […]

இராமநாதபுரம் ஆனந்தா ஜவுளி நிறுவனம் வழங்கிய தூய்மை பணி இயந்திரம்.!

சேதுக்கரை ஊராட்சிக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பிலான தூய்மை பணியந்திரம் வழங்கப்பட்டது இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் தூய்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இராமநாதபுரம் ஆனந்தா ஜவுளி நிறுவனம் சார்பில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணிக்கான இயந்திரம் சேதுக்கரை ஊராட்சிக்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று  நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதிய தூய்மை பணியந்திரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. […]

அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்..

தென்காசி மாவட்டத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள், அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது […]

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காளியம்மன் கோவில் ஆடிப்பூரத்தை ஒட்டி அம்மன் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு அணிந்து கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் , பகவதி அம்மன் விநாயகர், நாகம்மாள் கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன்களுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து வளையல் அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது‌ தொடர்ந்து கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியாக இருந்தது . இதில் நாச்சிகுளம் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் […]

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை; ஒருவர் கைது..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 36 ஆயிரம் மதிப்புள்ள 720 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். செங்கோட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருப்ப விநாயகம் மற்றும் காவலர்கள் கணேசன், உதயசங்கர், ஆகியோர் திருச்சி இருப்பு பாதை மாவட்ட காவல் துறை காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி உட்கோட்ட […]

அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. மேலாண்மை குழு தலைவி பரிதா அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார், ஊராட்சி மன்ற தலைவி முகைதீன் பிவி அசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை ஹெப்சிபா வரவேற்றார். ஆசிரியர் முத்துராஜா நன்றி கூறினார்.   மேலாண்மைக் குழு கூட்டத்தில், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது, நம் ஸ்கூல் நம் ஊரு […]

அமைச்சர் மூர்த்திகலந்து கொண்ட நிகழ்ச்சியில் முறையான முன்னேற்பாடு இல்லாததால் குறைந்த அளவு பயனாளிகளுடன் நடைபெற்ற அரசு விழா

சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கி அதற்கான ஆனைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு நடைபெறுவதாக இருந்தது தொடர்ந்து காலை 7 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 50க்கும் குறைவான பயனாளிகளே வந்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனாளிகளை […]

அலங்காநல்லூர் அருகேகணவர் ஒட்டி வந்த லாரி மோதிமனைவி பலி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45) சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார்.இவரது மனைவி ரெங்காதேவி (39) இவர்களுக்கு சந்தியா தேவி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று மார்நாடு பெருமாள் பட்டி மந்தையில் கழிவுநீர் சாக்கடை பணிக்காக எம் சாண்ட் மண்ணை லாரியில் கொண்டு வந்தார். பின் அதை கொட்டிய போது லாரி டயரில் மண் இருந்ததால் அதை ரெங்காதேவி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக […]

பொதும்பு ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் பொதும்பு ஊராட்சியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பொதும்பு ராகுல் வரவேற்புரை ஆற்றினார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா […]

ராமநாதபுரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் 34வது ஆண்டு பேரவை கூட்டம் .!

ராமநாதபுரம் மாவட்டம், தனியார் மஹாலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் 34வது ஆண்டு பேரவை கூட்டம் திட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக, மின்துறையை பொது துறையாகவே பாதுகாக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2026-ஐ அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், 60,000-க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக […]

311 வாக்குறுதி என்னாச்சு? –இடைநிலை ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.!

ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக, இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வினோத் பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலையில் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோஷத்துடன், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், திமுக அரசு 2021 தேர்தலில் வெளியிட்ட அறிக்கையில் வழங்கிய 311வது வாக்குறுதியை மேற்கோளாகக் காட்டி, “மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நிலைநாட்டப்படும் என நம்பிக்கை இருந்தது. ஆனால் 311 […]

திருவாடானை: சினேகவல்லி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஆதி ரத்தினேஸ்வரர் சுவாமி, அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனமைந்து கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 8-ம் நாள் விழா இன்று விழாவூர்வாக நடைபெற்றது. இதில், முன்னதாக விநாயகர் மூஞ்சூறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர், அருள்மிகு சினேகவல்லி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி முழுவதும் பக்தர்கள் உற்சாகமாக […]

கோவையில் விளையாட்டு போட்டி..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் தாளாளர் M. துரைசாமி நினைவாக பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கோத்தகிரி C.S.I மேல்நிலைப் பள்ளி, தென் பொன்முடி E.A.B அரசு மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மேட்டுப் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான கபடி போட்டியில், […]

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் TV நல்லூரில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் TV நல்லூரில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் முன்னாள் […]

சோழவந்தானில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளை ஒட்டி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிஅவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் ஆளுநர் ஸ்ரீமான் வழிகாட்டுதலின்படி மதுரை சோழவந்தான் பகுதியில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் செந்தூர்பாண்டியன் இளைஞர் அணி தலைவர் ஹரி மா.த. நாகு ஆச்சாரி பொதுச் செயலாளர் கருப்பசாமி மதுரை வடக்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை மாவட்ட பிரதிநிதி ஆனந்தன் மாவட்ட […]

சோழவந்தானில்கரும் புகையை கக்கி க்கொண்டு சாலையில் சென்ற அரசு பேருந்தால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன‌ அவற்றில் பல பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி ஓட்டை உடைசலாக உள்ளது சில பேருந்துகளில் கரும்புகை கக்கிகொண்டு செல்லும் அவலம் உள்ளது. சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் அதிகளவிலான கரும் புகைகளை வெளியிட்டு செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிக அளவு கரும்புவை வெளியிடுவதால் காற்று […]

அதிமுக சார்பில் சித்தாலங்குடியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் சித்தாலங்குடியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார்சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார்முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் முன்னாள் யூனியன் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!