கொடைரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!

கொடைரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (04/11/2025) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிற காரணத்தால், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலகுண்டு, கந்தப்பகோட்டை,முருகத்துரான்பட்டி, சாண்டலார்புரம், பள்ளப்பட்டி தொழில் சிப்காட் வளாகம், மாவூர் அணை, பள்ளப்பட்டி, பொட்டிகுளம், மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்ட உள்ளதாக வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மதுரை மாவட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தும் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு வருகின்ற டிசம்பர் 28 ஈரோட்டில் நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இம்மாநாட்டில் கோரிக்கையாக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்கள் நீண்ட கால மத்திய கால விவசாய கடன்கள் டிராக்டர் கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு […]

வாடிப்பட்டி அருகேகல்லூரி மாணவி தற்கொலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கெங்கமுத்தூர் பிச்சால் மகள் தனலட்சுமி (வயது 19). இவர் அழகர் கோயில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியி யல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தனலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி நோய் தாக்கம் அதிகமானதால் மனம் வெறுத்து வாழ்வதைவிட சாவதே மேல் என்று முடிவு செய்து தோட்டத்திற்கு அடிக்கும் […]

சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் மகளிர் பக்த குழு சார்பாக உலக மற்றும் ஊர் நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக நன்மை மற்றும் ஊர் நன்மை வேண்டியும் மண்வளம் சிறக்க மழை வளம் சிறக்க வேண்டியும் கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது. ஐப்பசி அமாவாசை அடுத்த அதாவது தீபாவளி மறுநாள் அன்று மண் எடுத்து பசுவும் கன்றும் செய்து அதற்கு முன்பாக தினந்தோறும் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பத்தாவது நாள் நிறைவாக இரட்டை அக்ரஹார மகளிர் குழு சார்பாக நடைபெற்ற கோலாட்ட நிகழ்ச்சியில் இளம் சிறுவனை கிருஷ்ணனாக பாவித்து முன் செல்ல […]

சோழவந்தான் அருகே தொடர் மழையால் வேர் அழுகல் காரணமாக செம்பட்டை நோய் தாக்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மலைப்பட்டி மேலமட்டையான் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களில் மழை நீர் தேங்கி வடியாமல் இருந்தது இதுகுறித்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர் ஆனால் மழை நீர் வெளியேறாததால் நெல் பயிர்களில் வேர்களில் மழை நீர் தேங்கி வேர் அழுகத் […]

திண்டுக்கல் அருகே பெண்ணை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது, கார், பைக் பறிமுதல்.!

திண்டுக்கல் அருகே பெண்ணை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது, கார், பைக் பறிமுதல்.! திண்டுக்கல், செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே விநாயகா நகர் பகுதியில் சீலப்பாடியை சேர்ந்த மீனாட்சி(25) என்பவர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சீலப்பாடியை சேர்ந்த கோபி(26), காளிமுத்து(23) ஆகிய 2 பேரை கைது […]

சோழவந்தானில் அம முக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் சிறப்புரை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் மேலூர் செ.சரவணன் முன்னிலையில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வீ ராஜன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக […]

“தளபதி”க்கு அறிவுரை வழங்கும் “தல”

கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டநெரிசல் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்தார். தனிநபர் மட்டுமே பொறுப்பாக முடியாது, அனைவருக்கும் பொறுப்பு உள்ளது எனவும், ஊடகங்களின் பங்கு பெரிது எனவும் கூறினார். சினிமாக்காரர்களை குற்றம்சாட்டுவது தவறு, கூட்டநெரிசல் நிகழ்வுகள் பல இடங்களில் நடக்கின்றன என அவர் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக […]

விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் சாயப்பட்டறையை சேலம் நகரில் அமைப்பதா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..

விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் சாயப்பட்டறையை சேலம் நகரில் அமைப்பதா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.. சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஜவுளி பூங்காவில் நீர், நிலம் மற்றும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான சாயப்பட்டறைகள் அமைக்க அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விவசாயத்தையும், குடிநீர் ஆதாரங்களையும் மேம்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அவற்றை அழிப்பதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. சேலம் மாநகர எல்லையில் உள்ள ஜாகிர் பாளையத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிப்காட் வளாகத்தில், 119 […]

இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும், நிலக்கேட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை..

இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும், நிலக்கேட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை.. தகுதியற்றதாக சான்றளிக்கப்பட்ட பழுதடைந்து இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும், நிலக்கேட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்டார வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது,கூட்டத்திற்கு பொறுப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார்,பொறுப்பாளர் […]

தமிழகத்தில் துரோகம் செய்தவர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான்; முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்…

துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காவே, என்னுடைய கருத்தை சொன்னேன. இன்றும், அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கத்தில்தான் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றேன். அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அவர்கள் தமிழகம் […]

25-26 சட்டமன்ற அறிவிப்பு எண் 41 ன் படி தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி திறப்பு..

25-26 சட்டமன்ற அறிவிப்பு எண் 41 ன் படி தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி திறப்பு.. திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள திருக்கோயில்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெற்று கீழ்க்கண்ட 10 திருக்கோவில்களில் அமைக்கப்படும்என்ற அறிவிப்பின்படி 10 திருக்கோவில்களில் தொடுதிரை தகவல்பெட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.இன்று காலை  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியை பக்தர்களின் பயன்பாட்டிற்கு […]

நெல்லை, மதுரை, சென்னை உட்பட தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாக வாய்ப்பு!

நெல்லை, மதுரை, சென்னை உட்பட தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாக வாய்ப்பு! தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் ஆனால் கிழக்கு திசை காற்று முற்றிலும் தடைபட்டு மேற்கு திசை காற்று வீசுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை தொய்வு நிலையை அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. பருவமழை காலத்தில் வெப்பநிலை உயர காரணம் என்ன? கிழக்கு திசை காற்று தடைபட்டு தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசுகிறது மேலும் கடல் காற்று உள் […]

ஆத்தூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்றது..

ஆத்தூர்  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம். (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான  பயிற்சி. மாவட்ட ஆட்சித் தலைவர்   கலந்து கொண்டார். செம்பட்டி தனியார் திருமண மஹாலில், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்,  (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான  பயிற்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம்,  ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட,  வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு […]

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 2, 2a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்..

 தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 2, 2a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. 2025 நவம்பர் 2ஆம் தேதி பயிற்சி கட்டணம் ஏதும் இல்லாமல் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொண்டு பயிற்சி […]

சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 இளம்பெண்கள் உடல்கள்..

சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 இளம்பெண்கள் உடல்கள்.. சென்னை எண்ணூர் கடற்கரையில், கல்லூரி மாணவி உட்பட நான்கு பெண்களின் உடல்கள் ஒரே நேரத்தில், கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. நான்கு உடல்களையும் மீட்ட போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போலீஸாரின் முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஷாலினி (வயது -18) என்பவர் தனியார் கல்லூரி மாணவி என்றும், தேவகி பவானி காயத்ரி ஆகிய 3பேரும் ஜவுளிக்கடையில் பணியாற்றுபவர்கள் எனத் […]

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கேரளா முழுவதும் விரிவாக்கம்.!

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கேரளா முழுவதும் விரிவாக்கம்.! திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இது குறித்து தெரிவித்துள்ளதாவது. மண்டல மகர விளக்கு காலங்களில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் நடக்கும் விபத்துக்களில் இறக்கும் பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற விதிமுறை இருந்தது. இனி மண்டல […]

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்’ உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்.!

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்’ உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவை- நாகர்கோவில், நாகர்கோவில் – கோவை, -எக்ஸ்பிரஸ் ரெயில்கள், நாளை (1-ந்தேதி) மற்றும் 6, 8, 11, 13, 15 ஆகிய தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, […]

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செங்கோட்டையன் செயல்படுவதாகக் கூறி, அவரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் […]

உசிலம்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோட்டில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணை அமைப்புச் செயலாளரும், மாவட்ட தலைவருமான பிரபுராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வினோத் குமார், மாவட்ட துணைத்தலைவர் மகாராஜன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவது குறித்தும்,பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், தேர்தலில் வெற்றிக்கு எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு ஆலோசனை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!