திருவாடானை அருகே மாவிலங்கையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரர் மற்றும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயிலின் ஆறாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, சிறப்பாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரமிக்க காளைகள் பங்கேற்றன. அதேபோல, இந்தக் காளைகளை அடக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து துடிப்புமிக்க காளையர்களும் கலந்துகொண்டனர்.வீரர்களின் கரகோஷங்களுக்கிடையே மஞ்சுவிரட்டு களைகட்டியது. கடுமையான பலப்பரீட்சைக்குப் பிறகு, […]

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (லோக் அதாலத்)தேசிய மக்கள் நீதிமன்றம் .!

இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப்அலிகான் உத்தரவின்படி பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (லோக் அதாலத்) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி அறிவு தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலை வகித்தார். மேலும் 112 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 1,83,62,412/-ஒரு கோடியே எண்பத்தி மூன்று லட்சத்து அறுபத்தி இரண்டு ஆயிரத்து நானூற்றி பன்னிரெண்டு அறிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த இளம் வழக்கறிஞர்கள் […]

தொண்டியில் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் .! 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அழகப்ப பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை இணைந்து நடத்தும் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் சமகால சுற்றுச்சூழல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஜெ.ஜே. லியோன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலர் புல்லூர் ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் போது ராஜா ஆகியோர் முன்னிலை […]

சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 13ம்நாள் மண்டகப்படியையொட்டி வடக்கு ரத வீதிவேளாளர் வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. காலை வைகை ஆற்றில் இருந்து மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உறவின்முறை சங்கத்தில் மாரியம்மனுக்கு […]

18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளை மூத்த உறுப்பினர்கள் க.கு ஜப்பார், இபுறாஹிம் முஹம்மது முபாரக் ஆகியோர் தலைமையில் காதர் சாஹிப் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அலி அஹமது கிராத் ஓதி துவக்கி வைத்தனர். மன்சூர் ஆலிம்  சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களிடையே கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு ஊர் சார்ந்து சுகாதாரம் மரங்களை நட்டு அதனை பராமரித்தல் போக்குவரத்து […]

குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்.!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை உழவர் நல துறையின் கீழ் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று பற்றி விளக்க உரையாற்றினார்.        உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா விவசாயிகள் அடையாள அட்டை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் மற்றும் […]

கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி முகாம்.!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் பொதுமக்களின் குறைகளை குறித்தும் கேட்டறிந்தார்.  மேலும் இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி மேற்படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாகவும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோன்று சிசிடிவி […]

திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் இலவச நோட்புக் எழுதுபொருள் ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அழகசுந்தரம் தலைமை தாங்கினார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோட்புக் எழுது பொருட்களை வழங்கினார் பள்ளி ஆசிரியை ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளும் […]

கெமிக்கல் பால்; மூவர் கைது..

தென்காசி அருகே கெமிக்கல் பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பகுதியை சேர்ந்த நபர் பாலில் கெமிக்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.   இதனையடுத்து, தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து பால் தயாரித்து அது […]

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என் வல்லரசு பிறந்தநாள் விழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வாளாகத்திலுள்ள முன்னாள் எம் எல் ஏ அ இ பார்வர்ட்பிளாக் தேசியச் செயலாளர் பி.என் வல்லரசு நினைவிடத்தில் 79 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம் எல் ஏ பி. வி. கதிரவன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என் வல்லரசு நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநிலச் செயலாளர்கள் பி. […]

உசிலம்பட்டியில் பள்ளியில் பள்ளி குழந்தைகளின் இரத்த வகை கண்டறியும் முகாம் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்குழந்தைகளின் ரத்தம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டறியும்a பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாணவர்களின் இரத்த வகை இலவசமாக கண்டறியப்பட்டு அரசின் கல்வி இணையதளத்தில் பதியப்பட்டது. மேலும் ரத்தம் எந்த வகை என்று மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் இரத்த வகைகளை அறிந்து கொள்ள ஏதுவாகவும், […]

சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டத்திற்கு முகூர்த்த கால் நடுவிழா நடைபெற்றது

ம.துரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் 16ஆம் நாள் மண்டகப்படியாக வரும் செவ்வாய்க்கிழமை காவல்துறை குடும்பத்தார் சார்பாக திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டம் நிகழ்ச்சிக்கு தேர் தயார் படுத்துவதற்காக முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. தேர் நிலையில் நடைபெற்ற விழாவிற்கு காவல்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர். தேர் பராமரிப்பாளர்கள் ஆசாரியார்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். […]

அகமதாபாத் கோரமான விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி மரணம்..

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 லண்டனுக்கு நண்பகல் நேரத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி சேதடைந்தது. இந்த கோரவிபத்து, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விமான விபத்தில் பயணம் செய்த 242 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள […]

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்து: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கிப் புறப்பட்ட நிலையில் சில நொடிகளில் விபத்திற்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகைகள் கிளம்பிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழ் நாடு பிரலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் அனைத்து கட்சி கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள மஹாலில் அனைத்து கட்சி கூட்டம் தமிழ் நாடு பிரலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்றது. தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை தலைவர் ராஜா பாண்டியன் தலைமையில் பொது செயலாளர் பூபதி ராஜா முன்னிலையில் கீழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கைரேகை சட்டத்தை கண்டித்து போராடிய போராளிகள் உயிர் தியாகத்தால் பிரிட்டிஷ் அரசு கள்ளர் சீரமைப்புத் துறையை உருவாக்கி இன்று வரை கள்ளர் […]

தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வி. விருமாண்டி தலைமையில் விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் அஜய் பாண்டி, தாலுகா செயலாளர்கள் சாத்தப்பன், நாகராஜ், பெத்தணசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்ட விளக்கவுரை யாக மதுரை மாவட்டம் தலைவர் ஜோதி ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சந்தானம் உசிலம்பட்டி தாலுகா […]

ராமநாதபுரத்தில் கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் : தொடரும் சட்டவிரோத செயல்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே டாட்டா சுமோ காரில் கடத்தி வரப்பட்ட 2,659 கிலோ (58 மூட்டைகள்) ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் தமீம் ராஜா மற்றும் ஆர்.ஐ முத்துராமலிங்கம் ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெறுவது கவலை அளிக்கிறது. இதற்கு முன்பு, ராமநாதபுரம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்டம் முழுவதும் […]

ஏர்வாடியில் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா முத்தரையர் நகரில் கட்டிட தொழிலாளியான செல்வராஜ் (விழுப்புரத்தைச் சேர்ந்தவர்) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது முதல் மனைவியின் மகன் மணிகண்டன் (வயது 22) மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜுக்கு முதல் மனைவி முனியம்மாள், மகன் மணிகண்டன் மற்றும் மகள் கோமதியும், இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் மகன் சுரேஷ், மகள் தேவி ஆகியோர் உள்ளனர். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.இதனிடையே […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 7000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன் வைகைஆற்றுக்கு சென்று அங்கு அக்னிகரகம் ஜோடித்து பூஜைகள் செய்தார்.அங்கிருந்து புறப்பட்டு வடக்குரதவீதி, மார்க்கெட்ரோடு வழியாக மந்தைக் களத்தில் அமைக்கப்பட்டிருந்தபூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தனர் முன்னதாக ஜனவரி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் கோவிந்தம்மாள் தெரு வழியாக பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தது பின்னர் மந்தை களத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை […]

குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு..

தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்து உள்ளார். இது பற்றிய முழுமையான வானிலை அறிவிப்பில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், ஆகிய 4 தாலுகாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஆந்திரா ஒரிசா ஒட்டிய வங்க கடல் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!