மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை காக்கிற ஆறுமாத தொடர் போராட்டம் வெற்றி!; பாராளுமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.. மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறுகையில், மதுரை ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிடக் கோரி ரயில்வே நில பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பல்லாயிரக் கணக்கான கையெழுத்துகளை பெறும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து மதுரைக்காகத்தான் என்கிற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நமது தொடர் முயற்சியின் விளைவாக […]
Category: செய்திகள்
திருமங்கலம் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு..
திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு.. திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவில் வாசலில் நேற்று இரவு 7 மணி அளவில் எலக்ட்ரிக்கல் வேலைக்கான பொருட்கள் வைப்பது போன்ற ஒரு பெட்டி இருந்துள்ளது. இதனை பார்த்த கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் […]
கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கிட வேண்டும்; தென்காசி ஆட்சியரிடம் கோரிக்கை..
கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார் பட்டியில் உள்ள, அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தை சமீபத்தில், தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைப் பார்வையிட முதலியார் பட்டி வந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க […]
ராமநாதபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மையம் ஆய்வு !
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த அரசு பொதுத்தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டதுடன், கண் பார்வையற்ற மாணவி தேர்வு எழுதி வருவதை பார்வையிட்டு உதவியாளர் உரிய உதவிகளை வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுதிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார். மேலும் […]
பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை; நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு..
பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.. தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தோணி வியாகம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாத்திமாராஜ் என்பவர் தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி […]
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்மந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. அனைத்து வகையான மாற்றுத் […]
ரயிலில் கடத்தி வரப்பட்ட 90 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்..
ரயிலில் கடத்தி வரப்பட்ட 90 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்.. சென்னை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருள் கடத்துவதாக மத்திய போதை தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மதுரை ரயில்வே நிலையத்தில் வைத்து ரயிலில் வந்த பயணி பிரகாஷ் என்பவரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், அவரிடம் இருந்து சுமார் 30 கிலோ இடையிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து இதன் […]
இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள் இரண்டு பேர் வாங்குகிறார்கள்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரை..
இந்தியாவை இரண்டு பேர் விற்கிறார்கள். இரண்டு பேர் வாங்குகிறார்கள். இந்தியாவை விற்கும் மோடி அமித்ஷா. இந்தியாவை வாங்கும் இரண்டு பேர் அதானி அம்பானி. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வளர்ச்சி மூன்றாவது இடத்தில் இருந்து தற்போது 164 வது இடத்தில் இருக்கிறது. இதுதான் மோடி ஆட்சியின் அவல நிலை. யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் மோடியை தனிப்பட்ட முறையில் அல்ல பாசிச பாஜக பிஜேபி கூட்டத்தினரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காகத் […]
திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் கையூட்டு பெற்ற இருவர் சஸ்பெண்ட்; இணை இயக்குனர் அதிரடி..
திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கையூட்டு; இருவரை சஸ்பெண்ட் செய்து மதுரை மாவட்ட நலப்பணி இணை இயக்குனர் அதிரடி நடவடிக்கை.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட நலப் பணி இணை இயக்குனர் செல்வராஜ், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், பிணவறையில் உடற்கூறு […]
இராஜபாளையம் தொகுதியில் அரசு பள்ளிகளுக்கு 10000 நோட்டு புத்தகங்கள்; சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 71 வது பிறந்த முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு 10000 நோட்டு புத்தகங்கள்; சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். விருதுநகர் மாவட்டடம் இராஜபாளையத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் இராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளி & எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்களை […]
தேர்தலுக்காக எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை பாடி வருகிறார் மோடி; திருநாவுக்கரசு எம்.பி.பேட்டி..
எம்ஜிஆர் ஜெயலலிதா புகழை தேர்தலுக்காக பாடி வருகிறார் மோடி. ஓட்டுக்காக அவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவில் கூட்டணியில் இல்லை என்பதால் அவர்கள் இரண்டு பேரின் புகழைப்பாடி வாக்குகளை சேகரிக்க பார்க்கிறார் என திருநாவுக்கரசு எம்.பி. கூறியுள்ளார். இது குறித்த திருநாவுக்கரசு எம்.பி அளித்த பேட்டியில், தற்போது பொது மேலாளர் தலைமையில் ரயில்வே ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். இதன் மூலம் எம்பிக்கள் தங்களது தொகுதி சம்பந்தமான ரயில்வே கோரிக்கைகளை முன்வைக்க முடிகிறது. […]
மதுரை ரயில்வே மைதானம் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை; மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தகவல்..
மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப் படவில்லை என தெற்கு ரயில்வே மேலாளர் திட்ட வட்டமாக தெரிவித்து உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில்வே நிலைய அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், […]
தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்; தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி..
தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்; தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி.. சென்னை – போடி ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும், பொது மக்கள் நலன் கருதி மதுரை – போடி பாசஞ்ஞ்சர் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். திண்டுக்கல் – லோயர் கேம்ப் வரை 123 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை […]
அரசு பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்..
தேசிய அறிவியல் தினத்தை ஒட்டியும், முதன் முதலில் தமிழகத்தைச் சார்ந்த அறிவியல் விஞ்ஞானி சர் .சி .வி . ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்த தினத்தை ஒட்டி, அரசு ஊராட்சி பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்; சர். சி .வி . ராமன் உருவ முகமூடி அணிந்து மாணவ, மாணவிகள் பங்கேற்பு.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ. மாணவிகள் தேசிய அறிவியல் தினத்தை […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி-3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு-1 ( கி.பி 1299-1922) உஸ்மானிய பேரரசு என்பது நமது தாத்தா காலத்தில் முடிவடைந்த இஸ்லாமிய கிலாபத்தாகும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு, முஸ்லீம்களை சிதறடித்து, முஸ்லீம்களின் தலைமைகளை சிதறடித்து, முஸ்லீம்களின் ஒற்றுமையை முடிவுக்கொண்டு வந்து, வளமான உஸ்மானிய பேரரசை வட்டிக்கு கடன் வாங்க வைத்து தேசியம் என்ற பெயரில் முஸ்தபா கமால் பாட்சா என்ற மேற்கத்திய சிந்தனைகளை கொண்டவர் மூலம் துருக்கியின் கிலாபத்தை சிதைத்த சூழ்ச்சிகளையும் உஸ்மானிய கிலாபத்தின் […]
பழனியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை; போலீசார் விசாரணை..
பழனியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை; போலீசார் விசாரணை.. பழனி அருகே புஷ்பத்தூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் மனைவி விஜயலட்சுமி (வயது 48). குமாரசாமி அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். குமாரசாமி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார் விஜயலட்சுமியும் சொந்த வேலை காரணமாக மடத்துக்குளம் சென்றுவிட்டார். இந்நிலையில் மதியம் விஜயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது […]
தேனி மாவட்டம் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் 09.03.2024 அன்று நடைபெற உள்ளது..
தேனி மாவட்டம் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் 09.03.2024 அன்று நடைபெற உள்ளது.. தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவினால் வரும் 09.03.2024-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட உள்ளது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்டம் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட சார்பு நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட […]
பழனி கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்!- தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளை சீல் வைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை..
பழனி கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்!- தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளை சீல் வைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை.. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகள் மலையடிவாரம், பேருந்து நிலையம் அருகில் மற்றும் ரயில் நிலைய சாலையில் உள்ளன. இந்த கடைகள் பல்வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. தற்போது தேவஸ்தானத்திற்கு கடைகள் உள்ள இடம் தேவைப்படுவதால் காலி செய்யக்கோரி வாடகைதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. காலி செய்ய மறுத்து கடைக்காரர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில் […]
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை (MAEF) மூட ஒன்றிய அரசு உத்தரவு!-எஸ்டிபிஐ கட்சி கண்டனம்..
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை (MAEF) மூட ஒன்றிய சிறுபான்மை அமைச்சகம் (MoMA) உத்தரவிட்டுள்ளதற்கு எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சிறுபான்மை முஸ்லிம்களுக்கான உரிமையை மறுக்கும் ஒன்றிய அரசின் ஒரு பகுதி நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ள அவர், “பிரதமர் மோடி தனது அனைத்து மேடைகளிலும் அனைவருக்கும் உள்ளடங்கிய வளர்ச்சி (சப் கா சாத், சப் கா விகாஸ்) பற்றி பேசுகையில், சிறுபான்மை விவகார அமைச்சகம் (MoMA) மௌலானா ஆசாத் […]
பசியோடு வந்த என்னை அரவணைத்தது ஆசிரியர்கள் தான். பள்ளி ஆண்டு விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் நெகிழ்ச்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவனம் பட்டி ரோட்டில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக வடக்கு ஒன்றிய செயலாளர், சீமானத்து ஊராட்சி மன்ற தலைவருமான அஜித்பாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் மாணவர்களுக்கு தான் படித்த பள்ளி இதுதான் எனவும் இந்த அளவிற்கு நான் மேல் வருவதற்கு உறுதுணையாக இருந்தது. ஆசிரியர்கள் மட்டும்தான் எனவும் தாயாகவும் தந்தையாகவும் பார்த்துக் கொள்வது ஆசிரியர்கள் தான். பசியோடு வந்தாலும் தாயின் […]
You must be logged in to post a comment.