மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள், கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு […]

ஆடு திருடர்கள் இருவர் கைது; 11 ஆடுகள் மீட்பு..

ஆடு திருடர்கள் இருவர் கைது; 11 ஆடுகள் மீட்பு.. தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த.ஆடு திருடர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை மேய்த்து வரும் பட்டமுத்து என்ற நபர் அவருக்கு சொந்தமான 03 ஆடுகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் துரிதமாக விசாரணை […]

சுய உதவி குழுக்களுக்கு சிறந்த சேவையாற்றிய வங்கிகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்று வழங்கல்..

நெல்லையில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2022-23-ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் வழங்கினார். 2022-23 […]

சோழவந்தான் அருகே பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

சோழவந்தான் அருகே பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி சோழவந்தான் அருகே ராயபுரத்தில் அமைந்துள்ள சர்வதேச பொதுப்பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கண்காட்சி” பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும், பள்ளி நிறுவனத் தலைவர் .செந்தில் குமார், பள்ளியின் தாளாளர் குமரேசன், உதவி தலைமை ஆசிரியர் அபிராமி மற்றும் டயானா, ஒருங்கிணைப்பாளர்கள் சுபா […]

திருப்பரங்குன்றம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..

திருப்பரங்குன்றம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கிராமத்தில் ஆதி சிவன் நகரில் ரூபாய் 55 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்காக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெயர்த் தெடுக்கப்பட்ட சாலையை இதுவரை சீரமைக்காததால், கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லக்கூடிய குழந்தைகள், முதியோர் கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், இருசக்கர வாகனங்கள் நாள்தோறும் பழுது ஏற்பட்டு வருவதால், கூலி தொழிலாளர்கள் இருக்கும் […]

போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும்; மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேட்டி..

போதைப் பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். பத்தாண்டுகளில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமான மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றாமல், ஒரு தனி நபருக்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக, மதுரைக்காக, தமிழகத்துக்காக இந்த அரசு இயங்க மறுக்கிறது. எனவே இந்த அரசு யாருக்கானது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது. மதுரை எம்பி.சு. வெங்கடேசன் […]

மதுரையில் பெண்களிடம் வழிப்பறி; இளைஞர்கள் இருவர் அதிரடி கைது..

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் தனியாக செல்போன் பேசி செல்லும் பெண்களிடம் செல்போன் வழிபறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது. மதுரை மாநகர் அவனியாபுரம் அருகே உள்ள CSA ஆலை பெரியசாமி நகர் முன்பு கடந்த மாதம் 21-ஆம் தேதி மதியம் வைத்தீஸ்வரி என்ற பெண் செல்போன் பேசிக்கொண்டு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை டூவீலரில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அப்பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இச்சம்பவம் […]

குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய வேண்டாம்!- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா..

குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய வேண்டாம்!- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.. பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர். முதற்கட்டமாக சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்து காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இதனையடுத்து, பெங்களூரு தெற்கு […]

கற்றலில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட போலீசார்..

கற்றலில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட போலீசார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில், விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி மேற்பார்வையில், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர் குழு மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை இடைநிற்றல் செய்த 15 மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு பள்ளி படிப்பின் […]

சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாள் விழா; திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

சோழவந்தான் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா; திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் சோழவந்தான் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த தின விழா திமுக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் அன்னதானம் வழங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச் செல்வன், […]

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க கூட்டம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தீர்மானம்..

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தீர்மானம்.. தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம், வைகை வடகரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மைக்கல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சூசை அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல இளைஞர் அணி தலைவர் சிவா வரவேற்றார். மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை […]

தென்காசி மாவட்ட காவல் துறை; செய்தித் தொகுப்பு..

தென்காசி மாவட்ட காவல் செய்திகள்.. லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் திருடிய மூன்று நபர்கள் கைது.. ஆய்க்குடி குதியில் அமைந்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் காவலாளி வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கலையரங்கதில் இருந்த லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவற்றை திருடி சென்றதாக அதன் மேலாளர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு மேற்படி திருட்டில் ஈடுபட்ட சிந்தாமணியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ் (35), […]

நெல்லையில் மகளிர் தின போட்டிகள்; காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தகவல்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின சிறப்பு போட்டிகள்; காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தகவல்.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளதாக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார். இது பற்றிய அருங்காட்சியக செய்திக் குறிப்பில், அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி, NPNK – நல்லதைப் பகிர்வது நம் கடமை கலைப் பண்பாட்டு மன்றம், ஸ்டார் கோச்சிங் சென்டர் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் மற்றும் மகளிர் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -2 (கி.பி 1299-1922) அந்த அழகியபெண், சூஃபி ஞானி அதப்பாலி அவர்களின் மகள் என்று கவிஞர் அஹ்மது சொன்னபோது, அந்த அழகிய இளைஞர் உஸ்மான் ஆச்சரியப்பட்டு போனார். அந்தப் பேரழகிதான் அன்றைய உலக அழகி மல்காத்தூன் என்பதையறிந்த உஸ்மான் அவர்கள், சூஃபி ஞானி அதப்பாலியிடம், அவரது மகளை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டார். உஸ்மான் அவர்கள் செல்ஜூக்கியர்கள் இடமிருந்து சில பிரதேசங்களை பரிசாக பெற்று அதன் […]

மதுரைச் சிறுவனுக்கு அமெரிக்காவின் உலக சாதனைக் குழு (World Record Committee) சான்றிதழ்..

மதுரையைச் சேர்ந்த சிறுவன் கலை இளமணி ஜெ. அதீஸ்ராம் கடந்த 2023 டிசம்பர் 24 அன்று மதுரை,புளியங்குளம், கேரன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுதலில் 90 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்து சாதனை புரிந்தார். இச்சாதனையை அங்கீகரித்து அமெரிக்காவில் உள்ள உலக சாதனைக் குழு (World Record Committe) 28.02.2024 அன்று சான்றிதழ் அளித்துள்ளது.    தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்ப விளையாட்டில் பெயர் பெற்ற மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஜெ. அதீஸ்ராம் […]

தென்காசி மாவட்ட காவல் துறையின் வாகனங்கள் பொது ஏலம்..

தென்காசி மாவட்ட காவல் துறையின் வாகனங்கள் பொது ஏலம்.. தென்காசி மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் 02.03.2024 அன்று காலை 10 மணிக்கு குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 03 இருசக்கர வாகனங்களும் 01 நான்கு சக்கர வாகனமும் ஏலம் விடப்படுகின்றன. வாகனங்களை 01.03.2024 முதல் 02.03.2024 காலை 09.00 மணி வரை நேரில் வந்து பார்வையிடலாம். இதில் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இரு சக்கர […]

தில்லையேந்தல் ஊராட்சி அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர்பிறந்தநாள் விழா !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சி அரசு பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . இந் நிகழ்ச்சியில் ஒன்றியச்செயளாலர் உதயகுமார் , மாவட்ட பிரதிநிதி கல்யாணசுந்தரம், பொருளாளர் இராமகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன், தமீம், செல்லத்துரை கிராம தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தில்லைசீமை ந.ரகுமான் செய்திருந்தார்.

முதுகுளத்தூரில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி சேரமன் ஏ.ஷாஜஹான் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் விளங்குளத்தூர் ஆதரவற்றோர் மையத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு கறி பிரியாணி உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர் கழக செயலாளர் ஏ.ஷாஜஹான், முன்னாள் துணை சேர்மன் பாசில் அமீன், தூவல் ஹரிமுத்துராமலிங்கம், முன்னால் மாவட்ட துணை செயலாளர் ஆர்.செல்லமணி, ‘முகம்மது இக்பால், மூர்த்தி, தூவல் மதியழகன், ஷாகுல் ஹமீது, விளங்குளத்தூர் […]

பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பேரணி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெரியபட்டிணத்தில் 2024 – 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி திருப்புல்லாணி வாட்டாரக் கல்வி தொடக்க கல்வி அலுவலர் கோ. உஷாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்தது நிலையத்திலிருந்து ஊரின் பிராதான சாலைகள் மற்றும் தெருக்களின் வழியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த பதாகைளுடன் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இப்பேரணில் பெரியபடட்டிணம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சி மன்றத் […]

ஆறு மாத தொடர் போராட்டம் வெற்றி!; மதுரை பாராளுமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை காக்கிற ஆறுமாத தொடர் போராட்டம் வெற்றி!; பாராளுமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.. மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறுகையில், மதுரை ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிடக் கோரி ரயில்வே நில பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பல்லாயிரக் கணக்கான கையெழுத்துகளை பெறும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து மதுரைக்காகத்தான் என்கிற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நமது தொடர் முயற்சியின் விளைவாக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!