கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு.. ராஜபாளையத்தில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 2013ம் வருடம் பரவிய டெங்கு காய்ச்சல் மூலம் 20க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பலியாகினர். இதனை தொடர்ந்து 42 வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புக்காக ஒப்பந்த முறையில் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது […]
Category: செய்திகள்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்; தனியார் பள்ளி தமிழ் ஆசிரியை தமிழக முதல்வருக்கு கோரிக்கை..
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்; தமிழ் ஆசிரியை தமிழக முதல்வருக்கு கோரிக்கை.. மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). பஞ்சாலை தொழிலாளி. மதுரை விளாங்குடி விசாலாட்சி மில்லில் வேலை பார்த்து வந்த இவர் மில் ஏலம் போய்விட்டபின் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகள் கார்த்திகா (வயது 34) எம்.ஏ.பி.எட் எம்.பில் வரை படித்தபின் மதுரை அனுப்பானடியில் உள்ள […]
முதல்ல பூத்ல ஆள போடு! அப்புறம் வந்து போட்டி போடு! பாஜகவை பங்கம் செய்த எஸ்.பி.வேலுமணி!
முதல்ல பூத்ல ஆள போடு! அப்புறம் வந்து போட்டி போடு! பாஜகவை பங்கம் செய்த எஸ்.பி.வேலுமணி!
தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவி செய்த மனித நேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் மூதாட்டிக்கு உதவிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.. தள்ளாடிய நிலையில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மூதாட்டிக்கு உதவும் விதமாக அவரை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி வீட்டில் இறக்கிவிட்ட ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன். ஆலங்குளத்தில் இன்று (26.03.2024) பாதுகாப்பு பணியை முடித்து விட்டு மீண்டும் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். […]
சிரித்தால் பல் தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் மோடியுடன் சிரித்து பேசும் இந்த படங்களில் என்ன தெரிகிறது.? தூத்துக்குடியில் படத்தை தூக்கி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி..
தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-திமுக எம்.பிக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை. மக்களுக்கு பாதிப்பு என்றால் அரசு ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும்.அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மக்கள் வெள்ளத்தில் தூத்துக்குடி பாதிப்படைந்தபோது நான் தான் வந்தேன்.புயல், வெள்ளத்தின்போது திமுக அரசு துரிதமாக செயல்படவில்லை.அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவுடன் […]
அதிமுக,பாஜக இரண்டு கட்சிகளையும் தூத்துக்குடியில் பொளந்து கட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..
மக்களவை தேர்தல் முன்னிட்டு போட்டியிடும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாய் இறங்கியுள்ளனர்.அந்த வகையில், தூத்துக்குடி, ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.அதன்படி, கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் உள்ள சிந்தலக்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்யும் கட்சி திமுக. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மறக்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். அதைக்கூட […]
ராமநாதபுரம் தொகுதியில் ஓ . பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் !!
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே நாளில் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார் . இந்த நிலையில் இன்று( 26.03.2024 )தெற்கு காட்டூரை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் என்ற 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். […]
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் !
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் பாரதி நகர் பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியின் தொண்டர்களோடு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் உடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கண். இளங்கோ மாவட்ட செயலாளர் நாகூர் கனி, தொகுதி பொறுப்பாளர் வெண்குளம் ராஜு உட்பட கட்சி நிர்வாகிகள் […]
என்னம்மா இப்படி பன்றீங்களேமா! ஒரு நியாயம் வேனாமா!சின்னம், தேர்தல் வாக்குறுதி ம்ஹூம்.ஆனால் 5 தொகுதியில் போட்டி! பகீர் கிளப்பிய ஜெயலட்சுமி..
தேனி, திருச்சி,கோவை உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், சின்னம்,தேர்தல் வாக்குறுதிகள் -எதுவும் இல்லாமல் – மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை கிளப்பிய ஜெயலலிதா மகள்.? ஜெயலட்சுமி.. நெற்றியில் திலகம் ஜெயலலிதா போல் பச்சை நிற சேலை முழுக்கை சட்டையணிந்து அப்பாவி தனமாக அரசியல் களத்தில் குதித்த எம்ஜிஆர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் பிரேமா (எ) ஜெயலட்சுமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்றும் டி என் ஏ […]
செத்தாலும் எங்களது சின்னம்தான். கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் சின்னத்தைப் பெற்று போட்டியிட முடியாது! ஆவேசமாக பேசிய துரை வைகோ அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்கள்..
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய திமுக மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, திருச்சி, பெரம்பலூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் 5 லட்சத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வா். குறிப்பாக திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ வெற்றி பெறுவாா். […]
எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது! தேனி ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்: ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 ஓபிஎஸ்.,க்களால் பரபரப்பு..
ராமநாதபுரத்தில் OPS களுக்கு இடையே கடும் போட்டி அப்செட்டில் தேனி ஓபிஎஸ். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல். ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.
பா.ம.க., வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி..
பா.ம.க., வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார். ‘நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை’ என இ.பி.எஸ் கூறியிருந்தார். இது குறித்து அன்புமணி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுக்காலமாக பா.ம.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாங்கள் எங்கும் செல்லவில்லை. நாங்கள் இங்கே […]
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்பு மனு தாக்கல்..
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்.. INDIA கூட்டணியின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், […]
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்..
ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்.. அசோக்குமாரின் வங்கி கணக்குகளில் 6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாயும், மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரமும் இருப்பு உள்ளது. அசோக்குமார் தனது கையிருப்பில் ரூ.10 லட்சமும், மனைவியின் கையிருப்பில் ரூ.5 லட்சமும் உள்ளது. அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவருடைய […]
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்..
தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.கே.கமல் கிஷோரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் […]
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது..
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது.. மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில் தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி-3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -26 (கி.பி 1299-1922) உஸ்மானிய பேரரசர் முஹம்மது அல் பாதில் அவர்கள் அந்த தேவாலயத்தின் அழகால் அதிசயித்து போனார். ஹேஜியா ஷோபியா(Hagiya sofiya church)என்ற அந்த தேவாலயம் உலக புகழ் பெற்றது. ஹேஜியா ஷோபியா என்ற ஒரு விலைமாது உலகின் மிகச்சிறந்த அழகியாக இருந்தார். உலகின் பணக்காரர்களுக்கும்மன்னர்களுக்கும்தனது அழகை மிகப் பெரிய பொருள்களுக்கு விற்றார். காண்ஸ்டாண்டி நோபிள் நகரில் ரோம மன்னர்ஹேஜியா ஷோபியாவின்அழகில் மெய்மறந்து போனார். அவளை திருமணமும் […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை ஆசிரியர் சையது ஆப்தீன் வாழ்த்து..
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு வாழ்த்து கூறியுள்ளார். பத்தாம் […]
திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது..
திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது.. திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நகரத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் அஜய்குமார், விஜய்ஆதிராஜ், மோகன்சுந்தர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை […]
நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்..
நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்.. நேற்று இரவு (26/03/2024) நிலக்கோட்டை அருகே பறக்கும் படையைச் சேர்ந்த பிரவீன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வத்தலக்குண்டு -நிலக்கோட்டை வழியாக பெரிய குளத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாயை கைப்பற்றி நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி இடத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் […]