பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; தமிழகத்திற்கு வருகை புரிகிற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை […]
Category: செய்திகள்
மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை கோடாரியால் வெட்டி கொலை செய்த கொடூர தந்தை! நாடு முழுவதும் பேரதிர்ச்சி..
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஆவர். இந்தநிலையில் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்தார். ஆனால் தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தனது குழந்தைகளுக்கு […]
முதல்வருக்கு கொடுக்க வேண்டும் என, தடுப்புச் சுவரை தாண்டி சென்று ஸ்வீட் வாங்கிய ராகுல் காந்தி வைரல் வீடியோ..
தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தருவதற்காக சாலை தடுப்பை தாண்டி கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கிய காட்சிகளை காங்கிரஸ் – திமுக கட்சியினர் வைரல் ஆக்கி வருகின்றனர்..
எந்நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம்: பதட்டத்தில் மேற்காசிய நாடுகள்..
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று உள்ளது. இதன் மீது, இஸ்ரேல் கடந்த வாரம் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் மரணம் அடைந்தனர். இதில், படையின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் […]
பராமரிப்பு பணி: சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து..
பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, பெங்களூருவில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வரும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12608) வருகிற 17 மற்றும் 24-ந் தேதிகளில் காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு, மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12609) வருகிற 17 மற்றும் 24-ந் தேதிகளில் சென்னை […]
பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க அரசமைப்புச் சட்டம் காக்க அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதியேற்போம்- திருமாவளவன் அறிக்கை..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான ‘மதச்சார்பற்ற நாடு’ என்பதை மாற்றி இந்தியாவை ‘மதம் சார்ந்த நாடு’ என அறிவிப்பதற்கும், மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை […]
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கை ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் வெளியீடு !!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே நவாஸ்கனி தேர்தல் அறிக்கை 2024 வெளியிட்டார். வேட்பாளர் கே நவாஸ்கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடந்த ஐந்தாண்டு காலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் நம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சமரசம் இல்லாமல் குரல் கொடுத்திருக்கிறேன். தேசிய சராசரியை விடவும், மாநில சராசரியை விடவும் பன்மடங்கு அதிகமான பங்களிப்பை நாடாளுமன்றத்தில் சிறப்பாக வழங்கி இருக்கிறேன். பாஜக அரசின் வஞ்சகப் […]
கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போதை பொருளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ! கீழக்கரையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரட்டி டிஜிபி அலுவலகம் முற்றுகையிட படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை !!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பாக மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கண்டித்தும் , கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் 3 நபர் மீது கத்தியால் குத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் , கீழக்கரையில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் […]
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு..
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்; புதிய நிர்வாகிகள் தேர்வு.. தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சு.குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வே.கிருபா சம்பத், மாவட்ட பொருளாளர் வே.நல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில் பட்டதாரி ஆசிரியர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்டு. அது தொடர்பாக ஆசிரியர்கள் நலன் குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் […]
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு..
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ தின உறுதி மொழி ஏற்பு.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சமத்துவ தின உறுதிமோழியை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 12 ஆம் நாள் ஆண்டு தோறும் சமத்துவ நாள் ஆக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை […]
தொல்.திருமாவளவன் மீது, டிஜிபி சங்கர் ஜிவால் இடத்தில் இந்து மக்கள் கட்சி பரபரப்பு புகார்..
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவுறுத்தலின் பேரில் அக்கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான அருண் நேருவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது, உண்மைக்கு புறம்பான சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான விஷயங்களை தன்னுடைய பிரசார உரையில் குறிப்பிட்டுள்ளார்.மோடி மீண்டும் பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தேவாலயங்கள், மசூதிகளுக்கும் […]
உலகில் அமைதி நிலவவும், இந்தியாவில் நல்லாட்சி மலரவும் இந்நன்னாளில் இறைவனை பிரார்த்திக்கிறேன், “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் ரமலான் வாழ்த்து..
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிலையில், கீழை நியூஸ் மற்றும் […]
திருமங்கலம் அருகே பயங்கரம்: சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது மோதி அந்தரத்தில் பறந்து சென்ற கார்:ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட ஐந்து பேர் பலி, நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்..
திருமங்கலம் அருகே பயங்கரம்: சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது மோதி பறந்து சென்ற கார்:ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட ஐந்து பேர் பலி நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்.. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தளவாய் புரத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை கனகவேல் மகன் மணி […]
உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்தது ஆரியபட்டி கிராமம்.இக்கிராமத்தில் உள்ள காலணிப் பகுதியில் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்தக் காலணிப்பகுதியில் சாக்கடை வசதி தண்ணீர் வசதி எரிமேடை மயானம் பொதுச்சாவடி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக் கொடுத்தும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்;;;படுகின்றது.இது தொடர்பாக சாலை மறியல் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லை.இதனால் ஆத்திரமடைந்த […]
கீழக்கரையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள், மற்றும் பொது இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடினர். சிறப்பு தொழுகையில் இறைவனை வணங்கி அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்தனர் . குறிப்பாக இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடந்த 30 நாட்கள் நோன்பை கடைபிடித்து இறுதியில் ரம்ஜான் பண்டிகை […]
பெண் வழக்கறிஞரை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல்! பெங்களூருவில் பரபரப்பு..
பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது பெண் வக்கீல் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். மேலும், “உங்களது பெயரில் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட பார்சல் திரும்பி வந்துள்ளது. அந்த பார்சலில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் உள்ளது. அதுபற்றி மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளார். அத்துடன் இதுதொடர்பாக மும்பை போலீசார் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். அதன்படி, மும்பை […]
இந்த வாரம் முழுவதும் சுட்டெரிக்க போகும் வெயிலும், சுள்ளென்று பெய்யும் மழையும்..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், […]
தமிழகத்தில் வடமாநிலத்தினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்!- சீமான்..
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சி னையில் தி.மு.க.வினருக்கும், எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் வடமாநிலத்தினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்.சின்னத்தை முடக்கினாலும் நாம் […]
உசிலம்பட்டியில் சாக்கடை வசதி கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 5வது வார்டைச் சார்ந்தது இருளப்ப தேவர் தெரு. இத்தெருவில் சாக்கடை வசதி முறையாக பராமரிப்பு இன்று கிடப்பதால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படுவதாகவும் உடனடியாக அதனை சரி செய்ய கொடுக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர் சந்திரனிடம் நகராட்சி அதிகாரிகளிடமும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை .இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று கீழப்புதூரில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் […]
தென்காசியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், தென்காசி பாறையடி தெரு, காயிதே மில்லத் நகரில் வைத்து, நோன்பு பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிஸான் அணி மாநிலச் செயலாளர் தென்காசி முகம்மது அலி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மின்சார வாரிய செயற்பொறியாளர் ரபீக் பின் உசைன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக் […]
You must be logged in to post a comment.