இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியானநிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. 100-க்கும் அதிகமான டிரோன்கள் ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிக்க நாடு தயாராக உள்ளது. இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் […]
Category: செய்திகள்
பாஜக அரசு தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி..
பாஜக அரசு தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.. அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த […]
இது புதுசா இருக்குண்ணே புதுசா இருக்கு! ரயிலின் கழிவறை குழாயைத் திருடி “தண்ணி” அடித்த “மது” பிரியர்கள்..
மதுரை கோட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறை குழாய்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது.. மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள குழாய்களில் கழிவறை குழாய்கள் அவ்வப்போது மாயமாகுவதாகவும் இதன் காரணமாக கழிவறையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் ரயில் பெட்டியில் உள்ள […]
பழநியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை முன்னிருத்தி நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தின் சார்பாக துண்டு பிரசுரம் வழங்கல்..
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் பழனி பேருந்து நிலையம் அருகில் 100 சதவீதம் வாக்குப்பதிவை முன்னிருத்தி, தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கோடைக்கால நீர் மோர் பந்தல் அமைக்கபட்டு நீர் மோர் பாக்கெட் மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர், கோடைக்காலம் முடியும் வரை பழனியின் முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக நீர் மோர் […]
இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து “சங்கல்ப் பத்ரா” பாஜகவின் தேர்தல் அறிக்கை..
இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் […]
தமிழகம் வந்த ராகுல்காந்தி!கண்டும் காணாமல் இருந்த கமல்ஹாசன்! காரணம் என்ன.?
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசா ரம் செய்து வருகிறார்.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை நிச்சயம் பெற்றுவிடலாம் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பி இருந்தனர்.ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் கை […]
அரியலூர் தலித் சிறுமி பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 நபருக்கு எதிராக மேல்முறையீடு செய்க! தமிழ்நாடு அரசுக்கு டாஸ் மாநில செயலாளர் ஜெபசிங் கோரிக்கை..
அரியலூர் தலித் சிறுமி பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 நபருக்கு எதிராக மேல்முறையீடு செய்க! தமிழ்நாடு அரசுக்கு டாஸ் மாநில செயலாளர் ஜெபசிங் கோரிக்கை.. அரியலூர் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது தலித் சிறுமியை 2016ம் ஆண்டு குற்றவாளியான இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் மூன்று நபர்களுடன சேர்ந்து பல நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி பின்பு படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மீது […]
நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு! பதட்டத்தில் மும்பை..
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் முக்கிய நடிகர் சல்மான் கான். இவர் மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருக்கும் தனது வீட்டில் தற்போது தங்கி இருக்கிறார்.இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் துப்பாக்கிகளால் சுட்டவாறு சல்மான்கானின் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. மொத்தமாக மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள், இந்த விஷயம் தொடர்பாக பாந்த்ரா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் […]
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்! பரபரப்பும் பதட்டமும் நிறைந்த சமீபத்திய தகவல்கள்..
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – பரபரப்பும் பதட்டமும் நிறைந்த சமீபத்திய தகவல்கள்.. ஆயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்துவருகிறோம் என இஸ்ரேல் ராணுவ தலைமையகம் தகவல் இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம். மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய […]
ஈரான்-இஸ்ரேல் இடையே நேரடி ராணுவப் போர் மூண்டது! பதட்டத்தில் மேற்காசிய நாடுகள்.
ஈரான்-இஸ்ரேல் இடையே நேரடி ராணுவப் போர் மூண்டது! பதட்டத்தில் மேற்காசிய நாடுகள். இஸ்ரேலை குறிவைத்து பல நூறு ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் தாக்குதல். ஈரான் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான் ஆகிய நாடுகள் தாக்கி அழித்து வரும் சூழலில், பல ஏவுகணைகள் இலக்கை அடைந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை கூட்ட இஸ்ரேல் அழைப்பு. கடந்த ஏப்ரல் 1-ம் […]
மோடியின் பத்தாண்டு கால ஆட்சி பாசிச ஆட்சியாக உள்ளது. ஒரே நாடு ஒரே மதம் ஒரே உணவு என்று பாசிச கொள்கையை திணிக்கிறார் மோடி!- கருணாஸ் கடும் தாக்கு
இந்தியா கூட்டணி சார்பில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் சு. வெங்கடேசனை ஆதரித்து நடிகர் கருணாஸ் பிரச்சாரம்.. மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்த நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதானி, அம்பானி, விஜய் மல்லையா, போன்றவர்களுக்கு 17 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார் மோடி. சாமானிய மக்களை வாட்டி வதைக்கிறார் 36 ஆவது இடத்தில் இருந்த இந்தியாவை பொருளாதாரத்தில் 140 […]
விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசி தாக்குதல்..
விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசி தாக்குதல்.. பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல். தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில், முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்எல்ஏ வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மீண்டும் பிரசாரம். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி […]
தகர டப்பாவாக அறுந்து ஓடிய மதுரை மாநகர அரசு பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வாகன ஓட்டிகள்! கட்டு கம்பியை வைத்து கட்டிய அவலம்..
அறுந்து தொங்கிய அரசு பேருந்து தகரம் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வாகன ஓட்டிகள்! கட்டுக் கம்பி வைத்து கட்டிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர்.. மதுரை மாடக்குளத்தில் இருந்து மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்து(TN58N0932) வழக்கம்போல திருப்பரங்குன்றம் பணிமனை செல்வதற்காக மாடக்குளத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் அருகே வரும் பொழுது திடீரென வலது புறம் பின் சக்கரம் அருகே சுமார் 3 அடி நீளமுள்ள […]
அரசுப்பேருந்தில் போஸ்டர் ஒட்ட முயன்ற பாஜக பிரமுகர்; தடுத்த ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கி மண்டை உடைத்த கொடூரம்..
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் பல்வேறு விதிகளை விதித்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி பாஜகவினர் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாஜக தொடர்பான போஸ்ட்டரை அரசு பேருந்தில் ஒட்டமுயன்ற பாஜக பிரமுகரை தடுத்த பேருந்து ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. நெல்லை மேலப்பாளையம் குறிச்சி என்ற பகுதியை சேர்ந்தவர் […]
அதிகாரத் திமிரில் உள்ள பா.ஜ.க.வை மீண்டும் விட்டால் திருப்பூரை மணிப்பூராக்கி விடுவார்கள்!-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளாசல்..
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருப்பூர் அவிநாசியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பரப்புரை ஆற்றி வருகிறார். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையில் பிரதமரின் ஒட்டுமொத்த பரப்புரையும் […]
பாஜகவை எதிர்க்கவில்லை என்று கூறுகின்றனர்; அதற்காக பாஜகவினரை சுட்டா வீழ்த்த முடியும்?-எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..
பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூரில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தேர்தலுக்குப் பிறகு உண்மையில் யார் காணாமல் போவார்கள் […]
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரிப்பு !
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேசிய கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று மதியம் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடிக்கு பிடித்த அரசியல் தலைவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். நாடாளுமன்றம் செல்லும் போது உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும. ராமநாதபுரம் என்றால் மோடிக்கு தனி பிரியம். மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் போட்டியிடுகிறார். 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய […]
இன்னும் 6 நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு..
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் வருகிற 19ம் தேதி (வெள்ளி) வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்ற பணம், நகை, மதுபானம், போதைபொருள், பரிசு பொருட்கள் என சுமார் ரூ.305 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், […]
பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி உயிரிழந்த சோகம்..
பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி உயிரிழந்த சோகம்! கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்த பரிதாபம்! வீடு ஒன்றில் பாம்பு நுழைந்ததாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு பாம்பும் பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் உமர் அதனை காட்டுக்குள் விடுவதற்காக கேட்டு வாங்கியபோது அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
நிலக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் அண்ணன், தம்பி, இருவர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
நிலக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் அண்ணன், தம்பி, இருவர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மகன்கள் ராஜ் வயது 46, காசிராஜன் வயது 42. இருவரும் அண்ணன் தம்பிகள். 2 பேரும் அழகாபுரியில் விவசாயம் செய்து பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த பூக்களை நிலக்கோட்டை பூ சந்தையில் பூக்களை விற்பதற்காக காலையில் தனது டிவிஎஸ் […]
You must be logged in to post a comment.