இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவி சுவாதி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் மஞ்சள் மற்றும் நீல நிறப் பொறித்த பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்து அதன் செய்முறையை பற்றியும் அதன் பயன்களையும் விளக்கினார். எந்தெந்த பூச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டு மென்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் […]
Category: செய்திகள்
4-ம் கட்ட தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குப்பதிவு..
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 […]
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை! கவர்னர் மாளிகை விளக்கம்..
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை! கவர்னர் மாளிகை விளக்கம்.. தமிழ்நாடு கவர்னர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகை எந்த ஒரு […]
ஊட்டியை சுற்றிப் பார்க்க ‘நூறு ரூபாய்’ போதும்! போக்குவரத்து கழகத்தின் சூப்பர் திட்டம்..
ஊட்டியை சுற்றிப் பார்க்க ‘நூறு ரூபாய்’ போதும்! போக்குவரத்து கழகத்தின் சூப்பர் திட்டம்.. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது ‘சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை’ இயக்கி வருகின்றது. கோடைக்காலம் தொடங்கினால், ஊட்டியைச் சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்துவிடுவது வழக்கம். ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது ‘சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை’ இயக்கி வருகின்றது. […]
தஞ்சாவூரில் சத்யா நடை பயிற்சி சங்க கூட்டம் !
தஞ்சாவூர் ராஜப்பா நகர் 1ஆம் தெரு அலுவலகத்தில் சத்யா நடை பயிற்சி சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கௌரவ தலைவர் செல்வம் தலைமை தாங்கினார், தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் வரவேற்பு உரை ஆற்றினார் .துணைத் தலைவர்கள் கண்ணாடி குமார், லயன் ஜெயபால் ,ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் ,ராஜசேகரன், முரளி, சுப்பிரமணியன், சுகுமார், நாகராஜன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .மாவட்ட பொருளாளர் பார்த்தசாரதி நன்றியுரை கூறினார் .கூட்டத்தில் சத்தியா […]
பழனியில் மாற்றுத்திறனாளி மாணவி சுமையா பானு, தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..
பழனியில் மாற்றுத்திறனாளி மாணவி தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை.. திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானு ஒரு கண் பார்வை கொண்டவர், மேலும் கை விரல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு அமையப்பெற்றவர். தன்னம்பிக்கை மிக்க மாணவியான சுமையா பானு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது உதவியாளர் இன்றி தானே தேர்வை எழுதினார். தேர்வில் […]
எனது கையை உடைத்தது இவர் தான்:கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்: கூச்சலிட்ட சவுக்கு சங்கர்..
எனது கையை உடைத்தது இவர் தான்: கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்: கூச்சலிட்ட சவுக்கு சங்கர்.. பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசிய டி யூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி […]
Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா…
Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா ஹனி மஹாலில் நேற்று 12.05.2024 மாலை 6 மணி அளவில் KRPA club தலைவர் நைனா முகமது லாபிக் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வருகை தந்த சச்சின் சுரேஷ் RRPC President, கணேஷ் ஹேமா THPA Club Thanjavur, கிருஷ்ணகுமார் THPA PresidKilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா ஹனி மஹாலில் […]
முதலியார்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பங்கேற்பு..
தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் பங்கேற்பு.. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி பகுதியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் கலந்து கொண்டார். தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. காந்தி நகரில் உள்ள, பக்கீர் […]
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு..
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு; காவல்துறையினர் பங்கேற்பு.. தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் வருகின்ற 01.07.2024 அன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு […]
கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலை மடக்கி பிடித்த பழனி நகர காவல்துறையினர்..
கத்தியை காட்டி பணம் பறித்த கும்பலை மடக்கி பிடித்த பழனி நகர காவல்துறையினர்.. பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் கத்தியை காட்டி பணம் மற்றும் கைபேசியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட நபர் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து நகர காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் அறிவுரையின்படி சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் சண்முகநதி பைபாஸ் பகுதியில் […]
விறுவிறுப்பாக தொடங்கியது 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு..
விறுவிறுப்பாக தொடங்கியது 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு.. 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. ஆந்திரத்தில் 25, தெலங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் 13, […]
“கீழை நியூஸ்” ஆரூடம் பலித்தது! சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..
சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! குண்டாஸ் போடப்படுமா? என தலைப்பிட்டு கடந்த 8 ம் தேதி செய்திகள் வெளயிட்டு இருந்தோம், இன்று அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 5 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த கைது […]
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் ! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!
ராமநாதபுரத்தில் இருந்து பாரதி நகர் பட்டணம் காத்தான் ராம்நகர் குயவன்குடி சாத்தான்குளம் வாலாந்தரவை வழுதூர் விளக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காவேரி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது இதனை தொடர்ந்து உடைச்சியார்வலசை அருகே அய்யன் கோவில் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் பணி நடைபெற்ற பின்பு முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி […]
சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன்!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் மகன் நாகூர்கனி(99). இவர் முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்(ஐஎன்ஏ). நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஏ}வில் சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்திய விடுதலைக்காக போராடியவர். பின்னர் இந்திய சுதந்திரத்திற்க்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். இவர்ருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் அளித்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் […]
திருப்பூர் அருகே கள்ளக் காதலியை கொலை செய்து உடலை வைத்து காரில் ரவுண்ட் அடித்த கள்ளக் காதலன்: கொடை ரோடு அருகே ரவுண்டு கட்டி தூக்கிய போலீசார்..
திருப்பூர் அருகே கள்ளக் காதலியை கொலை செய்து உடலை வைத்து காரில் ரவுண்ட் அடித்த கள்ளக் காதலன்: கொடை ரோடு அருகே ரவுண்டு கட்டி தூக்கிய போலீசார்.. திருப்பூர் அருகே பல்லடத்தில் கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை, கொடைரோடு அருகே உடலை புதைக்க முற்பட்டபோது இரண்டு வாலிபர்கள் பிடிபட்டனர். உடலை ஏற்றி வந்த கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் […]
பரமக்குடியில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை !
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அக்னி நட்சத்திரம் அதாவது கத்திரி கோடை வெயில் என்பதால் மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பரமக்குடியில் சுமார் ஒரு மணி நேரம் கரு மேகங்கள் இருள் சூழ இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கு களை எரியவிட்டபடியும், மற்றொருபுறம் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கும் காட்சியையும் நம்மால் காணப்படுகிறது மேலும் இந்த […]
பரமக்குடியில் மக்களின் தாகத்தை நீக்கிய மருந்து நிறுவனம்! மோர் அருந்தி தாகம் தணிந்த பொதுமக்கள் !!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருப்பதி மொத்த மருந்து விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை நீக்கும் வகையில் 15 நாட்கள் குறிப்பாக ஒவ்வொரு நாளும், மோர், சர்பத் உள்ளிட்ட பானங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் மேலும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு என்பதால் அவ்வழியாகச் சென்ற மாணவர்கள்,பெற்றோர்கள், உள்ளிட்ட பலரும் தங்களின் தாகத்தை நீக்கி சென்று தங்களது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பார்க்கச் சென்றனர் […]
அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளரின் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை !
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42).காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஷர்மிளா தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப்டிவிஷன் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஷர்மிளா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளிருந்த பீரோவில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து அலங்காநல்லூர் […]
இலங்கை பொருளாதரத்தில் நலிவடைந்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது ! இலங்கை அமைச்சர் அஹ்மத் சாதிக் பேட்டி !!
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது என்று இலங்கை இளைஞர் பாராளுமன்றம்வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் கூறினார்.தஞ்சை பூக்கார 1-ம் தெருவைச் சேர்ந்தவர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ். இவர் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம்வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி […]