பழனி பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை தட்டி தூக்கிய  போலீசார்..

பழனி பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை தட்டி தூக்கிய  போலீசார்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் குறி வைத்து பிக்பாக்கெட் திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அடிக்கடி பழனி காவல் நிலையத்திற்கு பக்தர்கள் புகார் கொடுத்த வண்ணம் இருந்த நிலையில் டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் பேருந்து நிலையம் […]

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்..

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.. போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 1300 காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் அறிவித்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் வைத்து தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் […]

நெல்லையில் அருங்காட்சியக நாள் கொண்டாட்டம்; நினைவு பரிசுகள் வழங்கல்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பன்னாட்டு அருங்காட்சியக நாள் கொண்டாட்டம்; நினைவு பரிசுகள் வழங்கல்.. மே 18ஆம் தேதி பன்னாட்டு அருங்காட்சியக நாளாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதல் நிகழ்வாக சிவராம் கலைக் கூடத்தை சார்ந்த இருபது மாணவர்கள் 20 சுதந்திர போராட்ட வீரர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களை வரைந்து அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர். இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வந்திருந்த அனைவரையும் […]

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்திற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு (19.05.2024 மற்றும் 20.05.2024) சிவப்பு நிற (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து. மாவட்ட நிர்வாகத்தால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் (24 X 7) செயல்பட்டு வருகிறது. அவசர கால உதவி மைய எண் 1077 மற்றும் தொலைபேசி […]

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் முக்கிய அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் முக்கிய அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்திற்கு மே-19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையம் தென்காசி மாவட்டம் முழுவதும் 19.05.2024 மற்றும் 20.05.2024 ஆகிய இரண்டு தினங்கள் சிவப்பு நிற (Red Alert) எச்சரிக்கையும் மற்றும் 21.05.2024, 2205.2024 ஆகிய நாட்களுக்கு […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்ககூடு திருவிழா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த வருடமும் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 19ல் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நிகழ்ச்சி துவங்க இருப்பதால் அனைத்து மாநிலங்களிலிருந்து மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருவது தொடர்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் கீழக்கரை வட்டாச்சியர் பழனிக்குமார் முன்னிலையில் […]

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்த 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு […]

பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை  பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் – அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட  தாழ்த்தப்பட்ட  ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற […]

குற்றால வெள்ளப் பெருக்கினால் நிகழும் மரணங்கள்: உடனடி தடுப்பு நடவடிக்கைகள் தேவை; டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..

குற்றால வெள்ளப் பெருக்கினால் நிகழும் மரணங்கள்: உடனடி தடுப்பு நடவடிக்கைகள் தேவை; டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.. குற்றால வெள்ளப் பெருக்கினால் அண்மைக காலமாக நிகழும் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாயி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு 17 வயது அஸ்வின் என்ற சிறுவன் இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய சம்பவம் ஆகும். குற்றாலத்தில் உள்ள பழைய அருவி, பிரதான அருவி […]

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தொடங்கியது, கண் கவரும் மலர் கண்காட்சி..

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மலர்க்கண்காட்சிக்கும் கோடை விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்படும். அவ்வகையில் இந்த மாதம் (மே) 17ஆம் தேதி கொடைக்கானலின் 61வது மலர்க் கண்காட்சியும் கோடை விழாவும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த கோடைத் திருவிழாவில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. திண்டுக்கல் மாவட்ட […]

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!- தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 6 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது. இதில் […]

மூடப்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டவையாகவே இருக்க வேண்டும். அதை மீண்டும் திறக்க அரசு துடிப்பது இயற்கை வளங்களை சிதைக்கும் செயலாகும்!- அன்புமணி ராமதாஸ் அறிக்கை..

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல காரணங்களால் மூடப்பட்ட 26 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இயற்கை வளங்களையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வரும் நிலையில், அந்த நோக்கங்களை சீர்குலைக்கும் வகையில் மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில் செயல்பட்டு […]

நெல்லையில் இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை..

நெல்லையில் இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை.. நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் மணிகூண்டு அருகே இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர மணிக்கூண்டு அருகே மே.17 இரவு இசக்கிமுத்து என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதல் கட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி […]

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா.? யாரும் நம்பாதீங்க அடித்து கூறிய மின்சார வாரியம்..

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது. இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென […]

காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, தி.மு.க. அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது!- சீமான் காட்டமான அறிக்கை..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காட்டில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து, தி.மு.க. அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மூன்று தலைமுறைகளாக வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்களை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி அகற்ற முற்படுவது கொடுங்கோன்மையாகும். திருவேற்காட்டில் கூவம் ஆற்றுக்கு அருகில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் மூன்று தலைமுறைகளை கடந்து 300 […]

பழநியில் அரசு உதவித்தொகை வழங்க மறுக்கும் வங்கியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஒப்படைக்கும் போராட்டம்..

பழநியில் அரசு உதவித்தொகை வழங்க மறுக்கும் வங்கியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஒப்படைக்கும் போராட்டம்.. திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆயக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ,மனைவி புஷ்பா இவர்களுடைய மகள் ராமலட்சுமி (25) இவர் கடுமையான மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்து வருகிறார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் மாற்றத்திறனாளிகள் திட்டத்தின் சார்பில் மாதம் 2000 ரூபாய் வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ராமலட்சுமி என்ற மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிக்கு ஆயக்குடி கிளையில் ஆதார் எண் […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் திடீர் ஆய்வு.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளிகளில் இன்று 17-05-2024 வெள்ளியன்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு , தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர். முனைவர். எஸ்.கண்ணப்பன் அவர்களும், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) த. ராஜேந்திரன் அவர்களும், கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர். . […]

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்..

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்; இயற்கை விவசாயம் குறித்து விளக்கம்.. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி சார்பில் மாணவ ஆசிரியர்களிடையே ஊரக வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம் நடந்தது. இதில் இயற்கை விவசாயம் குறித்தும், விவசாய வளர்ச்சி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் பொ. […]

கோனேரி கிராமத்தில் நவீன பருத்தி எடுக்கும் கருவி ! மதுரை வேளாண் கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு அறிமுகம் !!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியுடன் நவீன முறையில் பருத்தி எடுக்கும் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நவீன பருத்தி எடுக்கும் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் இதனைப் பயன்படுத்துவதனால் வேலையாட்கள் கூலி, போக்குவரத்துக் கூலி முதலான செலவுகள் குறைந்து, […]

செவிலியர் தின விழாவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு..

மதுரை தோப்பூரில் அமைந்துள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் கண்காணிப்பாளர் கனகவேலம்மாள் விழாவிற்கு தலைமை வகித்தார். ஜான்சிராணி, பாத்திமா ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெல்லா பிரசில்லா தனலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் செவிலியர் கோமதி சுற்றுச்சூழல் மேம்படுத்தவும் மருத்துவமனை பசுமை வளாகத்தில் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பச்சை மற்றும் நீல நிறம் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தை வழங்கி நோய்கள் குணமாகும். அதே போல் நமது சுற்றுச்சூழல் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!