அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும்; உலக எய்ட்ஸ் நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 1986-ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழ்நாடு அரசு, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியில் கடந்து வந்த 39 ஆண்டு காலப் பணியானது மிக நெடியதும், வெற்றிகரமானதும் ஆகும். புதிய எச்.ஐ.வி தொற்றினை முற்றிலும் தடுக்கும் விதமாக மாநில அரசின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு […]

வத்தலக்குண்டு  தக்காளி சந்தையில் தொடர் மழை காரணமாக,   வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை கடும் உயர்வு. ஒரு கிலோ ரூ 90-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..

வத்தலக்குண்டு  தக்காளி சந்தையில் தொடர் மழை காரணமாக,   வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை கடும் உயர்வு. ஒரு கிலோ ரூ 90-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி. அனைத்து காய்கறிகள் விலையும் உயர்வு. வத்தலக்குண்டு  தக்காளி சந்தையில் தொடர் மழை காரணமாக,   வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை கடும் உயர்ந்துள்ளது. இதனால், சனிக்கிழமை  ஒரு கிலோ தக்காளி ரூ 90-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு  நிலக்கோட்டை பகுதிகளில் தக்காளி விளைச்சல்  நவம்பர், டிசம்பர் […]

வலுவிழந்த டிட்வா புயல்: பாம்பன் பாலத்தில் மீண்டும் ரயில் இயக்கம்..

ராமேஸ்வரம் பாம்பன் பாலம் வழியாக மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டிட்வா புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) அதிகாலை, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உள்ளது. […]

டிட்வா புயல் எதிரொலி; திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அவசர உதவி எண் அறிவிப்பு..

டிட்வா புயல் எதிரொலியால் நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், திருச்சி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில் அவசர உதவி எண்கள் அறிவித்துள்ளனர்.அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 1077 மற்றும் 0431 2418995 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் […]

வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்! நாளை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பு..

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது, வடக்கு – வடமேற்கு திசையில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை (நவ., 30) அதிகாலை வட தமிழகம், புதுவை மற்றும் வடக்கு ஆந்திரக் கடல் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதோடுமட்டுமின்றி, கரையைக் கடக்கும்போது, புயலின் மையப்பகுதி சென்னை கரையிலிருந்து வெறும் 25 கி.மீ. […]

ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ள மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள்: கலந்தாய்வு மூலம் நிரப்புவதில் தாமதம் ஏன்?- அன்புமணி ராமதாஸ் கேள்வி..

ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ள மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்கள்: கலந்தாய்வு மூலம் நிரப்புவதில் தாமதம் ஏன்?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு நிலைகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கும் நிலையில், அவற்றை பதவி உயர்வு மற்றும் இட மாறுதல் கலந்தாய்வுகளின் மூலம் நிரப்பாமல் தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது. ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சிலருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை வழங்க வேண்டும் என்பதற்காகவே தமிழக […]

தி.மு.க என்ற கோட்டையை யாராலும் உடைக்க முடியாது:-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு!

கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையோட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் மனிதநேய உதய நாள் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.மேலும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராசா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நடிகர் வடிவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் பேசிய நடிகர் வடிவேலு, கலைஞர் வழியில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்தி வருகிறார். பெண்களுக்கு […]

இலங்கை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு காத்திருக்கும் தமிழக பயணிகளுக்கு மாற்று விமானம் மற்றும் உரிய உதவிகளை வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:-நவாஸ் கனி எம்பி கோரிக்கை..

திட்வா புயலில் காரணமாக இலங்கை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு காத்திருக்கும் தமிழக பயணிகளுக்கு மாற்று விமானம் மற்றும் உரிய உதவிகளை வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நவாஸ்கனி எம்பி கோரிக்கை; இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில்., திட்வா புயலில் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு இணைப்பு விமானம் மூலம் பயணித்த தமிழக […]

சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி

சோழவந்தான் அருகே அரசு பள்ளி சுற்றுச் சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் பல வருடங்களாக செயல்படுவதாக மாணவிகள் பெற்றோர்கள் குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர் பள்ளி அருகிலேயே மழை நீர் வடிகால் கால்வாய் […]

சென்னை மக்களே தயாராகுங்க; உஷாரா இருங்க: இரவில் இருந்து அதிகரிக்கும் மழை : வானிலை மையம் எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதியில் நிலவி கொண்டு இருக்கும் டிட்வா புயலின் நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியா வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமுதா,”டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், புதுவையிலிருந்து […]

விக்கிரமங்கலம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் துவக்கி வைத்தார்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை ஏற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன், செல்லம்பட்டி வட்டாரம் மருத்துவ அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொது மருத்துவம் கண் மருத்துவம் ரத்த பரிசோதனை சர்க்கரை பரிசோதனை, உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுக்கு முதல் உதவி […]

புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோக்கு ‘நோ’  காவல்துறை உத்தரவு!!

புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோக்கு ‘நோ’  காவல்துறை உத்தரவு!! 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்பு மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஆனால், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு, மக்கள் பாதுகாப்பை கருத்தில் […]

பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுத்த முதல்வர் 55 மாதமாக ஏமாற்றலாமா?- பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்?

பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுத்த முதல்வர் 55 மாதமாக ஏமாற்றலாமா?- பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்? அடுத்த தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்குறுதியை காப்பாற்றுங்கள்; தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தல்: தமிழக அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வதாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். […]

மைக்கேல்பாளையத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மைக்கேல்பாளையத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை அருகே,  மைக்கேல்பாளையத்தில் சனிக்கிழமை  நடைபெற்ற,  நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கிராம மக்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அருகே,  மைக்கேல்பாளையத்தில் தமிழக அரசு சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நிலக்கோட்டை  வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அலுவலர் சிவக்குமார், கோட்டூர்   ஊராட்சி மன்ற […]

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.!

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.! இந்த ரயிலை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வரும் “காசி – தமிழ் சங்கமம்” என்ற கலாச்சார நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் காசி ஆகிய இரு பகுதிகளின் கலை, பண்பாடு, மரபு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முக்கிய நோக்கம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக […]

நீலகிரி மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக  சில கிராமங்களை புதிதாக உருவாக்கி, சில ஊராட்சிகளின் எல்லையை மறுவரையறை செய்து அரசு உத்தரவு..

நீலகிரி மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக  சில கிராமங்களை புதிதாக உருவாக்கி, சில ஊராட்சிகளின் எல்லையை மறுவரையறை செய்து அரசு உத்தரவு.. தமிழக அரசு கிராமப்புற நிர்வாகத்தை மேம்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களை எளிதாக்கவும், நிர்வாக வசதிக்காக சில கிராமங்களை புதிதாக உருவாக்கி, சில ஊராட்சிகளின் எல்லையை மறுவரையறை செய்து வருகிறது. இதனால் குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த உதவுகிறது. கிராம ஊராட்சிகளை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக திகழ்வது நிர்வாகத் […]

ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கி விட்டார்; அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..

பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அது சமயம் ராமதாஸ் கூறியதாவது; எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என் உயிரைத்தான் அவர் பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையை பறித்தார், நான் சிந்திய வியர்வை வீணாகிப் போய்விட்டது. உரிமையை இனி யாரும் […]

திக் திக் “டிட்வா”: தமிழகத்தை நெருங்கும் புயல்! பல்வேறு மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் நிலவியுள்ள டிட்வா புயலின் தாக்கத்தால் இன்றும், நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் பிற்பகல் 1.30-க்கு வெளியிட்ட தகவலின்படி, நேற்று (28-11-2025) இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (29-11-2025) காலை 08.30 மணியளவில், […]

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் […]

டிட்வா புயலால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு..

டிட்வா புயலால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் டிட்வா புயல் இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. டிட்வா புயலால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. மேலும் காணாமல் போன 100-க்கும் அதிகமானவர்களைத் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!