ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர். கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைகளில் அதிக அளவில் தாக்குதல் நடத்தி உள்ளது. பயணிகள் பயன்படுத்தும் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக பயன்படுத்தியது. 8-ம் தேதி இரவு 300 முதல் 400 டிரோன்கள் […]
Category: செய்திகள்
ராணுவ நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம்: ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!!
பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த நிலையில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இந்திய ராணுவ […]
போர் பதற்றம்; ஜம்மு-காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை!உதவி எண் அறிவிப்பு!!
ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22.4.2025-அன்று சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவிமையம் தொடங்க உத்தரவிட்டு, அதனடிப்படையில் உதவி மையம்தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with […]
முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட் என்பவர் புதிய போப்பாக தேர்வு..
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26 ஆம் தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் […]
இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு..
இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய எல்லைப் பகுதி நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் முப்படைத் தளபதிகளையும் இன்று சந்தித்து […]
மணல் ஜல்லி விலையை குவாரி உரிமையாளர்கள் குறைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
தமிழகத்தில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான எம் சாண்ட் பீ சாண்ட் மணல் மற்றும் ஜல்லி; விலையை; குவாரி உரிமையாளர்கள் சமீபத்தில் ரூபாய் ஆயிரம் அதிகமாக உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் இவ்விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக என கருதிய தமிழக அரசு ரூ.1000 விலை குறைவாக வழங்கச் சொல்லி குவாரி உரிமையாளர்;களுக்கு உத்தரவிட்டது. ஆனால் குவாரி உரிமையாளர்கள் விலையை குறைக்காமல் அரசாங்க உத்தரவு தங்களுக்கு வரவில்லை எனக்கூறி புதிய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது . ஆனால் […]
மன்னை கவ்வும் பாகிஸ்தான்! பிரதமர் ஷெபாஷ் செரீப் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம்.?
பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்ததால், அதனை அடக்க இந்திய ராணுவமும் களத்தில் இறங்கியது. பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, உயர் அதிகாரிகளுடன் நேற்று இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத் மற்றும் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, கராச்சி, பெஷாவரிலும் ஏவுகணை தாக்குதலை இந்தியா […]
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி..
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் பேரணி நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனது தலைமையில் முன்னாள் […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -21 வஃக்ப் சட்ட திருத்த மசோதா, ஆக்ரமிப்பாளர்களை, சொத்துக்களை கையகப்படுத்தி கொள்ளும் சூழலை ஏற்படுத்துகிறது. இதில் “வரம்பு சட்டம் ” என்பது வஃக்ப் சொத்தை ஆக்ரமித்து வைத்து இருப்பவர்கள் , 12 ஆண்டுகள் அனுபவித்தல் விதிப்படி சொந்தமாக்கிக் கொள்வார்கள். இதனால் வஃக்பின் பெருமளவு சொத்துக்கள் குறைந்து விடும்.குறிப்பாக பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்ரமிப்பில் உள்ளன. இவையெல்லாம் இல்லாமல் ஆகிவிடும். ஓய்வு பெற்ற புனே […]
தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாக்கா மாற்றம்!-யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கான பரிந்துரையை ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி இருந்தார்.இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் ரகுபதிக்கு இயற்கை வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளது.அண்மையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறையும் ராஜகண்ணப்பனுக்கு […]
உசிலம்பட்டியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ அளவீட்டு மதிப்பீட்டு முகாம்.
மதுரை மாவட்டம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி வட்டார வள மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் .அ.ரேணுகா அவர்கள் வழிகாட்டுதலின் படி மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மருத்துவ அளவீட்டு மதிப்பீட்டு முகாம் உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் மற்றும் மதுரை மாவட்டம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமி நாதன் ,மற்றும் பெ.பாரத் குமார் செயல் திறன் உதவியாளர் அறிவுறுத்தலின் படி வட்டாரக் கல்வி அலுவலர்கள் திலகவதி மற்றும் தேவி , முன்னிலையிலும் […]
திருவாடானை பிடாரி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா
திருவாடானை பிடாரி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா அதிவிமரிசையாக நடந்தது..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இராமநாதபுரம தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி என்ற பிடாரி அம்மன் பூக்குழி உற்சவ விழாவையொட்டி கிடந்த ஏப்ரல் 28 தேதி கொடியேற்றதலுடன் விழா துவங்கியது. அன்றிலிருந்து பக்தர்கள் விரதம் இருந்து மது குடம் தலையில் ஏந்தி மீதி உலா வந்தனர் முன்னதாக கோவில் பூசாரி மற்றும் பக்தர் கையில் தீச்சட்டி உடன் வீதி உலா வந்தனர். இன்று […]
கடல்பாசி உலர் தளம் கட்டிட பணி தரமற்ற முறையிலும் பணிகள் மந்தமாகவும் நடைபெறுவதாக புகார்:
கடல்பாசி உலர் தளம் கட்டிட பணி தரமற்ற முறையிலும் பணிகள் மந்தமாகவும் நடைபெறுவதாக புகார்: தரமாகவும் விரைந்தும் கட்டித்தர கோரிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே எம்.ஆர். பட்டினம், பாசிப்பட்டினம், உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பெருமளவிலான மீனவ மக்கள் பாசி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த பாசிகள் கடல் மணற் பரப்பில் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் குறைவான விலைக்கே விற்பனையாகிறது. இதனால் இந்தப்பகுதியில் கடற்பாசி உலர்தளங்கள் அமைத்து அதன் மூலம் […]
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்! முதலிடம் பிடித்த மாவட்டம் எது? – முழு விவரம் இங்கே!
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணியளவில் வெளியிட்டார். இதில் வழக்கம்போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் […]
ஃபோன் அடிக்க்ஷனில் இருந்து தப்பிக்க இளைஞர்களுக்கு மாணவர்களுக்கும் பயிற்சி .!
போதைக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு ஒரு ‘அடிக்சன் கில்லர்’ இருப்பது போல் ஃபோன் அடிக்க்ஷனில் இருந்து மீள்வதற்கு தொடங்கப்பட்ட நல்ல ஒரு பயிற்சி முகாம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள அரிய ஒரு வாய்ப்பு. இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு பெரியபட்டினம் கால்பந்து குழு சார்பாக கோடை கால கால்பந்து மற்றும் விளையாட்டு பயிற்சி முகாம் – போன் அடிக்க்ஷனில் இருந்து விடுபடலாம் என நம்பிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் […]
திருவாடானை பண்ணவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் அமைந்துள்ள பண்ணவயல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முத்துமாரியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் மங்களகரமாகத் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மலர் அலங்காரம், தீபாராதனை போன்றவை பக்தி சிறப்புடன் நடைபெற்றன. மேலும், ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் கிராம மக்கள் ஒன்றுகூடி கும்மி, கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை […]
இறக்கமே இல்லாமல் எகிறும் தங்கம் விலை! அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் நகை பிரியர்கள்..
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது. மே 6 அன்று அதிச்சி தரும் விதமாக இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. இந்தநிலையில், இன்று மீண்டும் […]
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழிகொட்டும் மழையில் பூக்குழி பாதையை பாதுகாத்த சங்கங் கோட்டை கிராமத்தார்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சோழவந்தான் எம் வி எம் மருது திரையரங்கு அருகில் உள்ள மந்தை களத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அதற்காக நேற்று காலை முதல் பூ வளர்க்கும் நிகழ்வு நடைபெற்று பூக்குழி இறங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தது இதற்கான மண்டக படிதாரர்களான சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூ […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -20 கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு உயர்நீதி மன்றங்களில் வஃக்ப் தொடர்பான 120 க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது. நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களில் ஜெயின்,சீக்கியர் மற்றும் மற்ற சிறுபாண்மை உள்ளிட்ட பிற மதத்தினருக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. இது முஸ்லிம்களின் தனிப்பட்ட பிரச்சினை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் […]
ஆபரேஷன் சிந்தூர்! சாதித்த சிங்கப் பெண் கர்னல் சோஃபியா குரேஷி..
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இதற்குப் பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் […]
You must be logged in to post a comment.