நவ. 6-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..

சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில், நவ. 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, […]

ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைப்பு- இன்று முதல் அமல்..

சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியிருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. […]

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவர்-கலெக்டர் கமல் கிஷோர் பாராட்டு..

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவரை மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் பாராட்டினார். இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் […]

பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பு!! விஜய் நடத்திய மாநாடு பற்றி திருமாவளவன் பரபரப்பு கருத்து..

அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது! – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். சில நிலைப்பாடுகளையும் முன்மொழிந்துள்ளார். தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் […]

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் சார்பாக  தேவர் ஜெயந்தி விழாவில் மாநில தலைவர் மு ராஜபாண்டியன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் த பூபதி ராஜா முன்னிலையில் துணைச் செயலாளர் ஆர் சௌந்திரபண்டியன் தேனி மாவட்டத் தலைவர் க. விலக்கு எம் முருகன் மதுரை மாவட்ட அமைப்பு செயலாளர்கள்  ஆர் வீரணன் மாவட்ட பொறுப்பாளர் ஏ ஜெய வீரணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு […]

சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகள்; நெல்லை சரக டிஐஜி பரிசுகள் வழங்கி பாராட்டு..

நெல்லையில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பள்ளி குழந்தைகளை நெல்லை சரக டிஐஜி பா.மூர்த்தி பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினார். நெல்லை செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் வகுப்பில் மாணவர் சபரி இஷாந்த் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு பெற்றார். இரண்டாவது வகுப்பில் மாணவர் ரியோ மார்வினும், மூன்றாவது வகுப்பில் மாணவி மீரஜாவும், நான்காவது வகுப்பில் மாணவி பிளெஸ்ஸியும், ஐந்தாவது வகுப்பில் […]

தென்காசியில் புறவழி ரயில் பாதை; பாவூர்சத்திரத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கை -தென்காசி எம்எல்ஏ வலியுறுத்தல்..

தென்காசி ரயில் நிலையத்தில் புற வழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான பாண்டியராஜா இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் ரயில் தேவைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிப்பு செய்யக்கூடிய வசதிகள் […]

மோசமான நிலையில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் சேவை; பொதுமக்கள் அவதி..

தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒன்றிய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது வங்கி கணக்குகள் மற்றும் வர்த்தக கணக்குகள், ஏடிஎம், ஜி.பே, போன்பே போன்ற மூன்றாம் தர செயலிகளின் பணப் பரிமாற்றத்திற்கு இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவை இன்றியமையாததாக உள்ளது. அனைவரிடமும் 5ஜி ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ள நிலையில், தற்போது தான் பிஎஸ்என்எல் […]

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்றனர். 

2024- 2025 ஆம்ஆண்டின் மதுரை வருவாய்  மாவட்ட தடகளப்போட்டிகள் ஆயுதப்படை மைதானத்தில்  நடைபெற்றது. மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில்   உசிலம்பட்டி அருகே உள்ள கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள்  8 பேரகள்  ஈரோட்டில் நடைபெறும் மாநில போட்டிக்கு  தேர்வு பெற்றுள்ளனர் .தடகள  விளையாட்டுப் போட்டியில் 14 வயது பிரிவு  மாணவிகள் மித்ரா  வட்டு எறிதலில்  இரண்டாம் இடமும்              செளமியா  400 மீ  ஓட்டம்  இரண்டாம் இடமும்  […]

உசிலம்பட்டியில் பள்ளியில் ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக புத்தாடை மற்றும் துணிமணிகள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கு தீபாவளி புதிய துணிமணி மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது. இப்பள்ளியில் கடந்த 1981-1985 கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து தங்கள் படித்த பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் வருடம் தோறும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வருடம் தோறும் தீபாவளிக்கு தாய் தந்தை இல்லாத மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு புதிய துணிமணிகள் மற்றும் […]

செங்கோட்டையில் புதிதாக 50 CCTV கேமராக்கள் இயக்கத்தினை துவங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட எஸ்.பி

செங்கோட்டையில் புதிதாக 50 CCTV கேமராக்கள் இயக்கத்தினை துவங்கி வைத்து, பொது மக்களிடையே மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் குற்ற செயல்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், நடைபெற்ற குற்ற சம்பவங்களின் குற்றவாளிகளை கண்டறியும் விதமாக பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து செங்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் முன்னிலையில், செங்கோட்டை காவல் நிலைய பெண் […]

13 வருஷத்துக்கு முன்னாடி விஜயை போல் இதே கோவத்தோடு தான் நானும் வந்தேன். ஆனால் அவருடைய கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒத்து போகவில்லை சீமான் பேட்டி..

13 வருஷத்துக்கு முன்னாடி விஜயை போல் இதே கோவத்தோடு தான் நானும் வந்தேன். ஆனால் அவருடைய கொள்கையும் என்னுடைய கொள்கையும் ஒத்து போகவில்லை சீமான் பேட்டி.. நான் தனித்து தான் போட்டியிடுவேன்.. என்னுடைய பயணம் உறுதியானது..! நீங்கள் பெரியாரை ஏற்றுக்கொள்வதால் திராவிடத்தையும் ஏற்கிறீர்கள்..! நாங்க அது திருட்டு மாடல், தீஞ்சி போன மாடல் என்கிறோம்.. விஜய் குறித்து சீமான் கருத்து. திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் கூறியுள்ளார், இது எங்கள் கொள்கைக்கு நேர் […]

தவெக நடத்திய பிரமாண்டமான மாநாடு! விஜய் ஆற்றிய உரை என்ன..

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெற்றது. மேடை ஏறிய தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் இருக்கும் இந்த காலகட்டத்தில், என்ன காரணத்துக்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் பேசியதாவது, “என்னை மாற்றியது மக்களாகிய நீங்கள். எல்லாவற்றையும் தீர்மானிப்பதும் நீங்கள். என்னிடம் இருப்பது […]

மழையால் கடுமையாக பாதிப்படைந்த மதுரை! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை!- முதலமைச்சர்..

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரையில் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு; மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் […]

உங்களால் தான் மதுரை வெள்ளத்தில் மிதக்குது!- தமிழக அரசை விளாசிய ராமதாஸ்..

மதுரை மாநகரம் வெள்ளத்தில் மிதப்பதற்கு தமிழக அரசின் மோசமான செயல்பாடே காரணம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். இது குறித்த எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது: மதுரை மாநகரில் நேற்று பகலில் 10 நிமிடங்களில் 4.5 செ.மீ அளவுக்கும், மொத்தமாக 11 மணி நேரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்த நிலையில், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் […]

தென்காசி மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. விரைவில் 21வது கால்நடை கணக்கெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கும் இந்தப்பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணியினை மேற்கொள்ள தென்காசி மாவட்டத்தில் 169 கால்நடை […]

திருவனந்தபுரம் இரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரையை இணைப்பதா?; வைகோ எம்.பி கண்டனம்..

திருவனந்தபுரம் இரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரையை இணைப்பது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என கூறி வைகோ எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை இரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என 22.10.2024 அன்று தினமலர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. இரயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. இது குறித்து ஏற்கனவே நான் பலமுறை […]

செங்கோட்டை அரசு நூலகத்தில் நூல் திறனாய்வு மற்றும் நூல் வெளியீடு..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் நெல்லையைச் சேர்ந்த செல்வி. சூடாமணி எழுதிய எம்மண்ணின் நட்சத்திரங்கள் என்ற கட்டுரை நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதிமூலம் மற்றும் இணைச் செயலாளர் செண்பகக் குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் செல்வி. சூடாமணி சிறந்த திறனாய்வு செய்த 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் எழுத்தாளர் […]

புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..

புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடல் தமுமுக-காவல்துறை இணைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அடையாளம் தெரியாத நபர் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.  தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததன் அடிப்படையில், அவரின் உடலை திருநெல்வேலி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் […]

சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி..

சாலை விபத்தில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து  ரூ.25 இலட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21.10.2024 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!