மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகள் மற்றும் உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில்., வணிக வளாக கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடை என ஆயிரக்கணக்கான கடைகளில் கடந்த ஒரு வார காலமாக உசிலம்பட்டி நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.,பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நெகிழி பயன்படுத்தி வரும் கடைகளிடம் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.,அவ்வாறு இந்த ஒரு வார காலத்தில் […]
Category: செய்திகள்
அனைத்து அரசு பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த பத்திரிகை செய்தியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்காங்கே பாலியல் துன்புறுத்தல்கள், ஃபோக்ஸோ நடவடிக்கைகள் தினந்தோறும் நடந்து வருகிறது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களை கடுமையாக தாக்குவது, மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் செயல்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது. பள்ளியில் உள்ள துப்புரவு வேலைகளை, மாணவ மாணவிகளை […]
உசிலம்பட்டி அருகே 200 ஆண்டு பழமையான குளத்தை கண்டறிந்து தூர்வாரி மீட்டெடுத்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் திருக்கோவில் இந்த கோவிலை சுற்று புதர் மண்டி காணப்படுவதோடு சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவற்றை சுத்தம் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.நிதி பற்றாக்குறை காரணமாக இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் கால தாமத படுத்தி வந்த சூழலில், இது குறித்து அறிந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞமான திமுக மதுரை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான குழுவினர் […]
பயணிகள் கவனத்திற்கு; சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்பு..
பயணிகள் கவனத்திற்கு: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்பு.. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அடுத்த மூன்று நாள்களுக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை நோக்கி வரும் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வேலைவாய்ப்பு, வணிகம், மருத்துவ உதவிகள் மற்றும் கல்வி என பல காரணங்களுக்காக தினசரி பெரும்பாலான மக்கள் […]
ஆசிரியை மீது ஒரு தலை காதல்! பள்ளிக்குள் வைத்து குத்திக் கொலை! இளைஞர் வெறிச் செயல்.. அதிர்ச்சியில் தஞ்சாவூர்..
தஞ்சாவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியரை பள்ளி வளாகத்திலேயே வைத்து இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சின்னமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி, வயது 26. இவர், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்கள் ஆனதாக கூறப்படுகிறது. இவரை அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் மதன்குமார். […]
பழனி அருகே கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி ஆகியவை பறிமுதல்..
பழனி அருகே கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி ஆகியவை பறிமுதல்.. திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை DSP. செந்தில் இளந்திரையனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா ,காவலர்கள் காளிமுத்து, கணேசன் ஆகியோர் பழனி சத்திரப்பட்டி டோல்கேட் அருகே அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே […]
முடிவுக்கு வரும் டிஜிட்டல் கிராப் சர்வே! திண்டுக்கல் முதலிடம்! இனி விவசாயிகள் அடங்கல் வாங்குவதில் சிக்கலா.?
வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன. நாடு முழுவதும் எண்மத் தொழில்நுட்பத்தில் பயிர்க் கணக்கீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில வாரியாக வேளாண்மை சாகுபடி பரப்புகளைத் துல்லியமாக மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்புப் பணிகளுக்காக இந்த எண்மத் தொழில்நுட்பப் பயிர்க் கணக்கீட்டை நடத்த […]
மனைவியைப் பிரியும் ஏ.ஆர். ரஹ்மான்! தனியுரிமையை மதிக்குமாறு கோரும் மகன்! வேதனையை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ரஹ்மான்..
ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக அறிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு செவ்வாய்க்கிழமை (நவ. 19) இரவு அறிவித்தார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானும் அதனை உறுதி செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். […]
கனமழை எதிரொலி: ராமநாதபுரம் உட்பட 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!- ஆட்சியர்கள் அறிவிப்பு..
கனமழை எதிரொலி: ராமநாதபுரம் உட்பட 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!- ஆட்சியர்கள் அறிவிப்பு.. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் 23 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கு அடுத்த 2 […]
பிராங் மூலம் பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை..
பிராங்க் என்ற பெயரில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோஷியல் மீடியாக்களில் Like, Share மற்றும் Followers க்கு ஆசைப்பட்டு Prank செய்வதாக கூறி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சமூக ஊடகங்களில் அதிகப்படியான Like, […]
மேக்கரை அருகே எருமைச்சாடி தனியார் நீர்வீழ்ச்சி மூடல்..
தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே செயல்பட்டு வந்த எருமைச்சாடி தனியார் நீர்வீழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட மேக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பல தனியார் நீர்வீழ்ச்சிகள் செயல்பட்டு வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல நீர் வீழ்ச்சிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் ஒன்றிரண்டு நீர் வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளிடம் ரூ100, 200, 300 என கட்டணம் […]
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் திமுக அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, கையில் குடை பிடித்த நிலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் (SH-39) நெடுஞ்சாலையில் தேவை இல்லாத இடத்தில் சாலையை கடந்து செல்ல திறந்தவெளி அமைத்தும், தேவைப்படும் இடங்களில் அமைக்காமல் இருப்பது பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பின்றி உள்ளதாகவும் கூறி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், […]
தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 23.11.2024 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி.1) துறை, நாள் 19.11.1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி, உள்ளாட்சிகள் தினமான 01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, 23.11.2024 அன்று காலை 11.00 […]
கூத்தாநல்லூர் நகராட்சியின் தொடர் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து SDPI கட்சி நடத்திய மாபெரும் கூத்தாநல்லூர் நகராட்சி முற்றுகை போராட்டம் | ஏராளமானோர் பங்கேற்பு..
கூத்தாநல்லூர் நகராட்சியின் தொடர் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து SDPI கட்சி நடத்திய மாபெரும் கூத்தாநல்லூர் நகராட்சி முற்றுகை போராட்டம் | ஏராளமானோர் பங்கேற்பு.. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் 1), ஊரில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப தவறியது, 2), குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகள் படுமோசமானதை கண்டும் காணாமல் இருப்பது, 3), பல லட்சம் மக்கள் வரி பணத்தை செலவு செய்து புதிய பேருந்து நிலையம் கட்டி மாடுகளுக்கும், போதை பிரியர்களுக்கும் தாரை வாத்து […]
காட்டு யானைகளை கட்டுப்படுத்த விவசாய நிலங்களுக்கு மின் வேலி; தென்காசி மாவட்ட கவுன்சிலர் அமைச்சரிடம் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை அழித்து வருவதை தடுக்க விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்து தர வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் தென்காசி மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கோரிக்கை மனு அளித்துள்ளார். அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி தெற்கு மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம், திரிகூடபுரம் ஊராட்சி, மற்றும் சொக்கம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. […]
இந்தியாவில் யானைகள் உயிரிழப்பில் தமிழ்நாடு முதலிடம்
இந்தியாவில் தற்போது 29 ஆயிரம் யானைகள் இருக்கின்றன.இவற்றில் 10 சதவீதம், அதாவது சுமார் 3,000 யானைகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான கன்னியாகுமரி, முண்டன்துறை, முதுமலை, நீலகிரி, சத்தியமங்கலம், மேட்டூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் யானைகள், அவ்வப்போது வனத்தை ஒட்டிய கிராமங்களுக்கு வந்து விடுகின்றன. இதனால், மனித மோதல் ஏற்படுகிறது.கடந்த 12 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் யானைகள் தாக்கி சுமார் 200 பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல், மனிதர்களால் சுமார் 220 யானைகள் […]
சொத்து கணக்கு காட்டாவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்: மத்திய நேரடி வரிகள் வாரியம்..
சொத்து கணக்கு காட்டாவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்: மத்திய நேரடி வரிகள் வாரியம்.. வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் வருவாய் குறித்த தகவல்களை, வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்காவிட்டால், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது: வரி மதிப்பீட்டு ஆண்டு 2024 – 25க்கான வருமான வரி கணக்கை தாமதமாக அல்லது திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதற்கு, டிச., 31ம் தேதி […]
கனமழை எதிரோலி: தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தூத்தூக்குடி, நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேதாரணயத்தில் 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோடியக்கரை- 6.8 செ.மீ., வேளாங்கண்ணி-4 செ.மீ., திருப்பூண்டி […]
ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96 லட்சம் மோசடி; இருவர் கைது..
ஆன்லைனில் வீட்டிலிருந்து கொண்டே கை நிறைய சம்பாதிக்கலாம், ஆன்லைன் கேஷ்பேக் ஆஃபர், பொருட்கள் அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைக்கும், குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டு & டெபிட்கார்டு பயன்படுத்தி ஆஃபர் பெறலாம் என்பதாக சமூக வலைதளங்களில் விதவிதமாக விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஃபர்களை நம்பி மோசடியில் சிக்கிக் கொண்ட பலர் தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி சைபர் கிரைமில் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச பங்குச் சந்தையில் ஆன்லைன் […]
திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கிய தென்காசி மாவட்ட எஸ்.பி
தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும், அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில், இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருநங்கைகள் மீது காவல் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் […]
You must be logged in to post a comment.