டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதில்..

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதில்.. 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், மத்திய அரசுக்கு அந்த முன்மொழிவு அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் பெறவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் […]

பொருட்கள் வாங்க விருப்பம் இல்லையா! ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..

பொருட்கள் வாங்க விருப்பம் இல்லையா! ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு.. நியாய விலைக் கடைகளில் சில ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்காமல் இருப்பர். சிலர் வேறு நபர்களிடம் அளித்து பொருள் வாங்க சொல்வார்கள். அவர்களுக்காக தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பொருள் வாங்க விருப்பமில்லாதோர் ரேஷன் அட்டையை பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) ஆக www.tnpds.gov.in இணையதளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

உலகப் பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு பள்ளிக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை கொடுத்த மதுரை ஆயி என்ற பூரணம் கலந்து கொண்டு பேசும்போது பெண்களை மதித்தல், பெண் கல்வி, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தல், […]

‘போன்பே’ உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி:!-பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை..

‘போன்பே’ உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி:!-பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை.. போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவகை பண மோசடி நடந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்தப்படுவதன் மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுவதாக சமீபத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் போன் பே வழியாக அவர்களுக்கு தெரியாமல் […]

பரமபதம் ஆடும் ஆபரணத் தங்கம்! இன்று சற்று குறைந்தது..

தங்கம் விலை மீண்டும் ஏறி வருகிறது. கடந்த 17-ந்தேதி வரை அதன் விலை குறைந்து வந்து, இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை கொடுத்த நிலையில், தற்போது அதன் விலை ‘கிடுகிடு’வென ஏறி வருகிறது.கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதன் பின்னர் விலை அதிகரித்து 19-ந்தேதி ரூ.56 ஆயிரத்தையும், 21-ந்தேதி ரூ.57 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை நேற்று முன்தினமும் அதிகரித்தது.நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு […]

அதிமுக நலனுக்காக தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி அம்மா!- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்..

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி நூற்றாண்டு விழாவை தான் வரவேற்பதாகவும், அதிமுக நலனுக்காக அரசியல் சரிபடாது என தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார். தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்று வரும் இந்த விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை […]

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை (நவ. 25) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் – புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவ. 26ஆம் தேதி தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், […]

திருப்பூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு!! புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு..

எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. நவ.23 அன்று காலை கட்சி கொடியேற்ற நிகழ்வுடன் பொதுக்குழு நிகழ்ச்சி தொடங்கியது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ […]

இந்த உலகின் தலைசிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான்! அவரது மனைவி சாய்ரா பானு விளக்கம்…

இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் […]

சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகள் அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாம்பவர் வடகரை ஊரின் மேற்கில் அனுமன் நதி ஆற்றுப்படுகை அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் […]

மகாராஷ்டிரா – ஜார்கன்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள்!!பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது! தொல். திருமாவளவன் அறிக்கை

மகாராஷ்டிரா – ஜார்கன்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள்!! பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது! தொல். திருமாவளவன் அறிக்கை.. – கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள திருமதி பிரியங்கா காந்தி அவர்களுக்கும்; ஜார்கண்ட் மாநிலத்தின்ல் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வயநாடு இடைத்தேர்தலில் திரு. ராகுல் காந்தி அவர்கள் பெற்றதை விடக் கூடுதலாக வாக்குகள் […]

தமிழ்நாடு முதலமைச்சரின் ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி..

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் மூலம் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நம் தாய் திருநாடாம் தமிழக மண்ணில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அனைவரும் சரியான ஊட்டச்சத்து நிலையில் உள்ளனர் என்பதை உறுதி செய்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் […]

மீண்டும் கிடு கிடுவென எகிறும் ஆபரணத் தங்கம் விலை!

தங்கம் விலை தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் (நவ.22) அதிகரித்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை இறங்குமுகமாக காணப்பட்டு வந்தது. பவுனுக்கு ரூ.3,000 வரை குறைந்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி இந்த வாரத்தில் தொடர்ந்து 5வது நாளாக இன்று தங்கம் […]

கன மழை! நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்! ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேதனை..

வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக தீவு பகுதியான ராமேசுவரத்தில் 69 ஆண்டுகளுக்கு பிறகு மேகவெடிப்பு காரணமாக 44 செ.மீ. கொட்டித் தீர்த்தது.நேற்று இரண்டாவது நாளாகவும் மாவட்டம் முழுவதும் 329 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.வரலாறு காணாத இந்த மழைப்பொழிவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் […]

அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி-க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு..

அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு.. அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்துள்ளது. தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்தது. அதன் […]

பூமியின் பசுமையை பாதுகாக்க பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி பள்ளி குழந்தைகள் சாதனை..

பூமியின் பசுமையை பாதுகாக்கும் விதமாக பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி நெல்லை மற்றும் நாகர்கோவில் பள்ளி குழந்தைகள் சாதனை படைத்துள்ளனர். விதைப்பந்துகள் மூலம் பூமியில் பசுமையை விதைக்கும் பணியை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பூ. திருமாறன் முன்னெடுத்து வருகிறார். விதைப்பந்துகள் பற்றியும் அதனை தயாரிக்கும் முறைகள் குறித்தும் பள்ளி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் இணைத்து வருகிறார். அந்த வகையில் சமூக ஆர்வலர் பூ.திருமாறன் வழிகாட்டுதலின் படி, […]

உசிலம்பட்டியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக ரவிச்சந்திரன் பணியாற்றி வந்த நிலையில் அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் (பொது) நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக கரூர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியாற்றிய சண்முகவடிவேல் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டு இன்று புதிய வருவாய் கோட்டாட்சியராக (ஆர்டிஓ) பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர் .உசிலை மோகன்

சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்து கோரிக்கை

சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளர் . ஆர். என். சிங் அவர்களை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.இரணியல் நிலையத்தில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் 16729/30 புனலூர் – மதுரை விரைவு ர‌யி‌ல் காரைக்கால் வரை நீட்டிக்கவும், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் பாசஞ்சர் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை.2சமீபத்தில் கட்டிய புதிய ரயில்வே பாலத்தில் வளைவு […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; பாதுகாப்பு உபகரணங்களை நேரில் ஆய்வு செய்த தென்காசி எஸ்.பி..

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஶ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், மாவட்டத்திலுள்ள கடனாநதி, ராமாநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் மற்றும் முக்கிய ஆறு, குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் விதமாக மாவட்டத்தில் 22 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தேவையான உதவிகளை செய்யும் விதமாக அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் […]

நெல்லை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றினை பொறுத்தவரை தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சுமார் 2100 கன அடி தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. மழையின் அளவை பொறுத்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!