மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 முதல் 2021 காலகட்டத்தில் இருந்த பா.நீதிபதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், இன்று காலை உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மதுரை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.,
Category: செய்திகள்
ஆலங்குளத்தில் தொழிலாளர் சிறப்பு முகாம்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் 20.05.2025 செவ்வாய்க் கிழமை அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில் திருநெல்வேலி தொழிலாளர் நலத் துறை, தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் […]
லஞ்சம் கேட்கும் நிருபர்கள். ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் முடிவு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பூச்சம்பட்டி ஆண்டிபட்டி ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளர் ஆகிய இருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பத்திரிக்கை நிருபர்கள் எனக் கூறி சிலர் ஊராட்சி செயலாளர்களிடம் 100 நாள் வேலைகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் […]
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்பி உதயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சி புதூர் முப்பிலையான் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளார் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் மகேந்திரன் மாணிக்கம் கருப்பையா, ராஜேஷ் கண்ணா, துரை தன்ராஜ் மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் […]
விராலிப்பட்டி, சி புதூர் கிளை கழகங்களில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிபட்டி சி புதூர் கிளைக் கழகங்களில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா மணிமாறன் […]
100 நாள் நாள் வேலை திட்டத்தில் முறைகேடு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூச்சம்பட்டி ஆண்டிபட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை உறுதி திட்ட செயலாளக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன மேலும் இது தொடர்பாக வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த மாதம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் புகார் மனு அளித்தனர் அதில் என் எம் எம் எஸ் செயலி மூலம் மக்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்து […]
சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் பேருந்துகளால் பொதுமக்கள் பயணிகள் அவதி
சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையின் நடுவில் நின்று விடுவதால் பொதுமக்கள் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்து டிஎன் 58 என்24 45 என்ற 999 என்ற எண் கொண்ட சோழவந்தான் பனிமனை கிளையில் உள்ள பேருந்து பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப் பேருந்து அனுப்பப்பட்டுள்ளது இந்த பேருந்தும் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பயணிகளுடன் செல்லும்போது திடீரென பழுதாகி சாலை நடுவே நின்று விடுகிறது இதனால் வெளியூர்களுக்கு […]
வாடிப்பட்டி பேரூராட்சிரூ.1.09 கோடி மதிப்பிடில் அலுவலக கட்டிடம் கட்டுமான பணிபேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் புதிதாக மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுமான பணிநடந்து வருகிறது. இந்த பணியினை பேரூராட்சி உதவி இயக்குனர் மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சித் தலைவர் மு.பால் பாண்டியன், இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி, சுகாதார பணி மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இருந்தனர்.
சோழவந்தான் அருகே ரிஷபம் ஸ்ரீ சோனை சாமி கும்பாபிஷேக விழா நடைபெற்றது
. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் அருள்மிகு ஸ்ரீ சோனை சாமி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோ பூஜை செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ராக்காயி அம்மன் , பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு பால் ,தயிர், வெண்ணெய், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரிஷபம் […]
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் தசாவதார நிகழ்ச்சி.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 12ஆம் தேதி வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதனைத் தொடர்ந்து யாதவர் சமூகத்தினர் சார்பாக தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் ஜெனக நாராயண பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து […]
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை கொண்டாடிய திமுகவினர்..
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொள்ளாச்சியில் கடந்த 2019 நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரும் […]
ராமநாதபுரம் போலீசாரின் தரமான சம்பவம்.!
பூட்டிய வீட்டை உடைத்து தடையமின்றி தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளையன்.! ஊரு விட்டு ஊரு மாநிலம் வீட்டு மாநிலம் தேடி சென்று கைது செய்த போலீசாரின் தரமான சம்பவம்.!! ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அமிர்தா நகரில் தனது கணவர் அரபு நாட்டில் வேலை செய்வதால், தனது மகனுடன் ‘லோக அம்பாள்’ என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 12.04.2025-ம் தேதி இரவு 09.00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டில் இருவரும் […]
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது .!
*2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது* ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் தனது தந்தை பெயரில் உள்ள இடத்தை தன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்தவர் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கீழக்கொடுமலூர் கிராம நிர்வாக அலுவலர் […]
மோர் பண்ணை கிராமத்தில் 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
ஆர்எஸ் மங்கலம் அடுத்த மோர் பண்ணை கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா மோர் பண்ணை மீனவ கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் […]
ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவியை தாக்கிய ஆறு பேர் கொண்ட கும்பல்.!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரனான முரளி ஜெகன் தற்போது பூட்டான் மாநில எல்லை பகுதியில் பணியாற்றி வருகிறார். முரளி ஜெகன் தனது சொந்த ஊரான ஏனாதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய வீட்டு ஒன்றை கட்டியுள்ளார். புதிய வீட்டை முரளி ஜெகன் பெரியப்பா ராமச்சந்திரன் அபகரிக்க முயற்சிப்பதாக முரளி ஜெகனின் தாய் […]
அதிகாரிகளின் அலட்சியம்.! நீதிமன்றத்தில் போராடி வெற்றி .!!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த களிமண் குண்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது மீன்பிடித் தொழிலாகும் நாட்டுப் படகு கரைவலை மீனவர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கடற்கரையை ஒட்டிய சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பினை அந்தப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் சிலர் ஆக்கிரமித்து தோப்பு வைத்து அதன் பின்னர் அந்த வழியே மீனைப் பிடித்து கரைக்கு கொண்டு செல்லும் மீனவர்களுக்கு அதிக […]
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது; மது பாட்டில்கள் பறிமுதல்..
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத் தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த கீழப்பாவூர் […]
தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்..
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சி பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம், புளியங்குடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தினசரி அங்காடி மற்றும் வாசுதேவ நல்லூரில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட […]
இன்ஸ்டால் பிரபலம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்.!போலீசார் பிடித்து விசாரணை.!!
நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்கள் மீது தொண்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என இன்ஸ்டால் பிரபலம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்: போலீசார் பிடித்து விசாரணை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த தொண்டி பகுதியை சேர்ந்து சபீனா இவர் வீட்டில் இருந்த கடந்த சில மாதங்களுக்கு முன் 6/12 சவரன் தங்கம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போனதாக தொண்டி காவல் […]
சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவன் உயிரிழப்பு.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்குவதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் திரன்டனர் இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் நெரிசல் ஏற்பட்டது மேலும் கள்ளழகர் இறங்கும் நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பிளஸ் ஒன் படிக்கும் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கினர் அதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை பிளஸ் ஒன் மாணவன் […]
You must be logged in to post a comment.