முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் அனைவரும் […]
Category: செய்திகள்
திருப்பூரில் காவல் துறை அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்; கொலையாளி மணிகண்டன் என்கவுன்ட்டரில் பலி..!
மடத்துக்குளம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுன்டரில் பலியானார். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் சட்டப் பேரவை அதிமுக உறுப்பினா் மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நாயக்கனூரைச் சோ்ந்த மூா்த்தி (65), தனது மகன்கள் […]
கலைஞர் கருணாநிதி நினைவு தினம்
சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிபள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் மாலை அணிவித்து மரியாதை […]
புதிய உச்சத்தை எட்டியது தங்கம் விலை:நகை பிரியர்கள் அதிர்ச்சி..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்சிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் […]
குருவித்துறை மன்னாடி மங்கலத்திற்கு பேருந்து வராததால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை மற்றும் மன்னாடிமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் பேருந்துகள் வராததால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குருவித்துறைக்கு காலை 6 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வந்து செல்லும்2167 என்ற தடம் கொண்ட மதுரை பி சி பி பேருந்து கடந்த ஒரு வாரமாக வரவில்லை என பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர் இந்த பேருந்து தான் இரவு 10:30 மணிக்கு […]
சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 4ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலைமேகம் பாப்பாத்தி பந்தல் வேலை பார்ப்பவர் இவரது மகன் கருப்பு சமயநல்லூர் அருகேஊர்மெச்சிகுளம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார் . இந்லையில் இன்று பள்ளிக்கு செல்லாமல் இவரது வீட்டிற்கு வந்த நிலக்கோட்டை சேர்ந்த இவருடைய தாய்மாமன் முருகன் என்பவருடன் சமயநல்லூர் வைகை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் இறங்கி குளிக்க சென்றுள்ளார் அப்போது அதிகளவு தண்ணீர் வந்ததால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் இழுத்துச் […]
மன்னாடிமங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடுத்தெருவில் மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் நடுத்தெரு பகுதியில் சாய்ந்த நிலையில் பல மாதங்களாக மின்கம்பம் உள்ளதாகவும் பலமுறை மின்வாரிய பணியாளர்களிடம் கூறியும் மின்கம்பத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மழைக்காலங்களில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டுமென இந்த […]
மன்னாடிமங்கலம் மகா சக்தி முச்சந்தி அம்மன் நண்பர்கள் சார்பில் 15 ஆம் ஆண்டு அன்னதான விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் அருள்மிகு மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 148 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி காப்புக் கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது 30 ஆம் தேதி இளைஞர்கள் மற்றும் மார்நாடு நண்பர்கள் சார்பாக கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது 31 ஆம் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரம் நடைபெற்று அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது 1ம் தேதி தெற்கு தெரு சார்பாக […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சங்கங்கோட்டை கிராமத்தார்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சங்கங்கோட்டை கிராமத்தார்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்கங் கோட்டை கிராம சாவடி முன்பாக அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இதில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர் தொடர்ந்து நேற்று இரவு சக்தி கரகம் எடுத்து […]
உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா தவெக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை திறந்து வைத்தார்.
மதுரை பாலமேட்டில் மதுரை சாலையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லாணை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன் மற்றும் தளபதி பிரியன் நடராஜன் உடன் இருந்தனர் . உடற்பயிற்சி கூட உரிமையாளர்,உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் தமிழக வெற்றிக்கழக மாநகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலஞ்சி டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினம்..
இலஞ்சி டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கு […]
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு.
காரைக்கால் முதல் தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை மார்கமாக ரயில்வே திட்டத்தை மீண்டும் துவங்கி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைப்பது, சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பகல் நேர விரைவு வண்டிகளை இயக்குவது, அறந்தாங்கி பகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகள்., விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி, இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது, தங்கச்சிமடம் ரயில் […]
58 கிராம பாசனவிவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடைபெற்றது, இதில் 58 கிராம பாசன கால்வாயில் பயன் பெறும் கண்மாயை சேர்ந்த 35 கண்மாய் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வைகைஅணையில் தற்பொழுது முழுக்கொள்ளவை எட்டியுள்ள சூழ்நிலையில் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கடந்த வாரத்தில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்தும் […]
ஆர்எஸ்எஸ்-ன் ஊது குழலாக தமிழக ஆளுநர் செயல்படுவதா?
ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்-ன் ஊது குழலாக செயல்படுவதாகவும், தமிழகத்தின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் முடக்கி வருவதாகவும் கூறி ஆளுநருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை முடக்குகின்ற வகையில் நாள்தோறும் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்-ன் நச்சுக் […]
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அதிமுகவுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் கதிரடி தீர்ப்பு. அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து உங்களுடன்_ஸ்டாலின்- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம். தற்போது மனு தாக்கல் செய்த சி.வி. சண்முகம் […]
போக்குவரத்து மாற்றம் பற்றிய காவல்துறை அறிவிப்பு..
சங்கரன் கோவில் ஆடித்தபசு திருவிழாவை (07.08.2025) முன்னிட்டு போக்கு வரத்தில் பின்வருமாறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1. திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் ராஜபாளையம், மதுரை செல்லும் வழி: திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் சண்முக நல்லூர் விலக்கு வழியாக சின்ன கோவிலான் குளம், சூரங்குடி, தர்மத்தூரணி, நடுவக் குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கை மேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன் கோவில், ரயில்வே பீடர் ரோடு, TB junction […]
ஸ்ரீ மாரியம்மனை கடந்த பத்து நாட்களாக வழிபட்டு முளை கொட்டு உற்சவ விழா.!
உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வழுதூர் பகுதியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் முளைப்பாரிகள் தலையில் சுமந்து ஊர்வலம் ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது வழுதூர் கிராமம் இந்த பகுதியில் உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து கிராமப் பகுதிகளில் விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ மாரியம்மனை கடந்த பத்து நாட்களாக வழிபட்டு முளை கொட்டு உற்சவ விழா நடைபெற்றது கடந்த 27 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது ஞாயிற்றுக்கிழமை […]
எட்டாத உயரத்தில் தங்கம் விலை: சவரன் ரூபாய் 75 ஆயிரத்தை தாண்டியது..
கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வரும் சூழலில், நேற்று போல் இன்றும் மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக அவ்வப்போது உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. கடந்த ஜூன் 14-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,320-க்கும், சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையாகி சாதனை படைத்தது. இந்தியாவில் தங்கம் விலை […]
திருப்பூர் அருகே பயங்கரம்: விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரி வெட்டிக் கொலை..
திருப்பூர் அருகே விசாரணை நடத்த சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்(வயது 52) செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தங்கபாண்டியன் தனது தந்தை மூர்த்தியைக் கடுமையாக […]
வத்தலகுண்டு அருகே, சூடான ரசத்தில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு:காவல்துறை விசாரணை..
வத்தலகுண்டு அருகே, எழுவனம்பட்டியில் குலசாமி கோவில் திருவிழாவின் போது, சமையல் செய்து வைத்திருந்த சூடான ரசத்தில் விழுந்து, இரண்டு வயது குழந்தை திங்கள்கிழமை பலியானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த, ஏழுவனம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (35) இவரது உறவினர் நந்தகோபால் என்பவரது குலசாமி கோவில் திருவிழா ஆடிப்பெருக்கு அன்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் உறவினர்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சாப்பாடு, சாம்பார், ரசம் உள்ளிட்ட சமையல் செய்யப்பட்டு இருந்தது. […]