நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு தற்போது வியாழன் தோறும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வியாழன் தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் சனிக்கிழமை நெல்லைக்கு காலை […]
Category: மாவட்ட செய்திகள்
திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளர் அதிரடி கைது..
ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளர் அதிரடி கைது.. திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி (வயது 46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து வந்தார். அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த […]
முதல்வர் ஸ்டாலின் விட்ட டோஸ்.. “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்தான பின்னணி..
முதல்வர் ஸ்டாலின் விட்ட டோஸ்.. “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்தான பின்னணி.. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உள்துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலேயே ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதால், முதல்வர் ஸ்டாலின் உள்துறை செயலகத்தில் […]
“ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகள் வழங்கப்பட உள்ளது; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் “ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகள் வழங்கப்பட உள்ளது; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2024ஆம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் “ஜீவன் ரக்ஷா பதக்” விருதானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், […]
கோடை விடுமுறையை நீட்டித்து மாணவர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த பள்ளிக்கல்வித்துறை..
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ந்தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என பல தரப்பட்டவர்களும் கருத்து தெரிவித்தனர். இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் […]
ஏர்வாடி தர்காவில் தங்கும் விடுதிகள் ஆய்வு !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வரும் யாத்திரைகளிடம் தங்கும் விடுதிகளில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது தங்கு விடுதிகளின் உரிமம் மற்றும் விடுதியில் அறைகளை பார்வையிட்டார் மேலும் தங்கும் விடுதிகளில் முறையாக கட்டணம் அட்டவணை ஒட்டிருக்க வேண்டும் என்றும் தங்கும் யாத்திரைகளுக்கு முறையாக ரசீதுகள் வழங்க வேண்டும் என்றும் […]
ஏர்வாடி தர்காவில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு ! மாவட்ட ஆட்சியர் உத்தரவு !! வட்டாட்சியர் பழனிக்குமார் அதிரடி ஆய்வு !!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு மே 10ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை யாத்திரைகள் வரும் வாகனங்களுக்கு ஆட்டோ, பைக் 30 ரூபாயும் கார், சுமோ போன்றவைகளுக்கு 80 ரூபாயும் சுற்றுலா பேருந்து மற்றும் சரக்கு வாகனத்திற்கு 100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு ஏர்வாடி ஊராட்சியின் மூலம் ஏல குத்தகை விடப்பட்டது இதில் 10 லட்சத்து 40 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த குத்தகைக்காரர் விதிகளை மீறி […]
ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடி அதிரடி கைது..
ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடி அதிரடி கைது.. ஆலங்குளம் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட சிவலார்குளம் பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில், கடந்த 29.05.24 ஆம் தேதி அன்று சிவலார்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன்களான மகேஷ்(25), கஜேந்திரன்(22), பெர்லின்(24) மற்றும் […]
அரசு பள்ளிகளில் பிஎஸ்என்எல் உடன் சேர்ந்து இணையதள வசதி! அசத்தும் தமிழ்நாடு அரசு..
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது, தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளது.மொத்தமுள்ள […]
தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை- 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியுள்ளது.இதன் எதிரொலியால், தமிழகத்தில் வரும் 1, 2, 3ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, தமிழகத்தில் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து, 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளில் இருந்து மக்களை காக்க வேண்டும்-பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் அறிக்கை..
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் ரம்மி என்பது ஆக்டோபஸின் […]
மதுரையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை; அப்போலோ மருத்துவர்கள் சாதனை..
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் மதுரை அப்போலோ மருத்துவர்கள் சாதனை.. மதுரை அப்போலோ மருத்துவமனை தனது பயணத்தில் தொடர்ச்சியாகப் பல வெற்றிப்படிகளைக் கடந்து வருகிறது. அதில் மற்றொரு சிறப்பம்சமாக தற்போது 50க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் மருத்துவத்துறையில் தனது நிபுணத்துவத்தையும் நிலைநாட்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக 50க்கும் மேற்பட்டோருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து அவர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. […]
தென்காசி மாவட்டத்தில் ஏழு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு; மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 07 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு; மாவட்ட எஸ்.பி அதிரடி.. தென்காசி மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த 07 நபர்கள், மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சங்கரன்கோவில் சுடலையாண்டி என்பவரின் மகன் சுரேஷ்(27) மற்றும் வல்லம் பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகளான பெருங்கோட்டூர் பிச்சையா […]
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போகிறது. இது போன்ற மாணவிகளின் கல்லூரி கனவை நிறைவேற்றும் பொருட்டு […]
கொம்பூதி கிராமத்தில் விவசாய விழிப்புணர்வு கூட்டம் !
இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி ‘கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் விவசாயிகளிடையே ஒழுங்கு முறை விற்பனைகூடம் பற்றியும் குளிர்பதன சேமிப்பு கிடங்கு பற்றியும் விழிப்புணர்வு இருப்பதில்லை என்றும் வழிவழியாக விவசாயிகள் பாரம்பரிய சேமிப்பு முறையினையே பின்பற்றுகிறார்கள் என்றும் […]
யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்த பெண் தலைமை காவலரின் மகன்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..
யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகன்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.. பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகனை பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார். தாய்லாந்தில் நடைபெற்ற 3 வது பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் சைலா அவர்களின் மகன் முகில்வர்ஷன் (14) என்பவர் போட்டியில் […]
கோனேரி கிராமத்தில் பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பருத்தியைத் தாக்கும் பல்வேறு விதமான பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்தும்,பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் முக்கியத்துவம்குறித்தும் விளக்கினார்.மேலும் மாணவி தாமரைச்செல்வி தெரிவிக்கையில் இராமநாதபுரத்தில் விளையும் பணப்பயிர்களுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்று பருத்தி. பருத்தியை அதிகம் […]
திரைப்பட நடிகர் ஃபஹத் ஃபாசில் 41 வயதில் ஏடிஹெச்டி எனும் மூளை சார்ந்த மனநலப் பிரச்சனை தனக்கு கண்டறியப்பட்டிருப்பதாகக் கூற,அந்த டாபிக் வைரலாகி இருக்கிறது! டாக்டர். ஃபரூக் அப்துல்லா விரிவான விளக்கம்..
திரைப்பட நடிகர் . ஃபஹத் ஃபாசில் 41 வயதில் ஏடிஹெச்டி எனும் மூளை சார்ந்த மனநலப் பிரச்சனை தனக்கு கண்டறியப்பட்டிருப்பதாகக் கூற, அந்த டாபிக் வைரலாகி இருக்கிறது. ஏடிஹெச்டி ( ADHD ) என்பது அட்டென்சன் டெஃபிசிட் ஹைப்பர் ஏக்டிவ் டிசார்டர் என்பதன் சுருக்கமாகும். அந்தப் பெயரின் நேரடி தமிழாக்கம்! கவனக்குறைவுடன் கூடிய அதீத துறுதுறுப்பை உண்டாக்கும் மூளை மனநலம் சார்ந்த பிரச்சனை என்பதாகும். பெரும்பாலும் இந்த பிரச்சனை , குழந்தைப் பருவத்தில் கண்டறியப்படும். சிலருக்கு வளர் […]
அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்: குழந்தைகள் உள்பட 18 பேர் பலி- நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்..
அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்: குழந்தைகள் உள்பட 18 பேர் பலி- நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்.. அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களை புயல் பந்தாடியது. அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த பல கார்களை புயல் கவிழ்த்து போட்டது. மேலும் அங்குள்ள ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த […]
பழனி அடிவாரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அகற்றம்..
பழனி அடிவாரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அகற்றம்.. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என […]
You must be logged in to post a comment.