ராமநாதபுரம் போலீசாரின் தரமான சம்பவம்.!

பூட்டிய வீட்டை உடைத்து தடையமின்றி தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளையன்.! ஊரு விட்டு ஊரு மாநிலம் வீட்டு மாநிலம் தேடி சென்று கைது செய்த போலீசாரின் தரமான சம்பவம்.!! ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அமிர்தா நகரில் தனது கணவர் அரபு நாட்டில் வேலை செய்வதால், தனது மகனுடன் ‘லோக அம்பாள்’ என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 12.04.2025-ம் தேதி இரவு 09.00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டில் இருவரும் […]

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது .!

*2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது* ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் தனது தந்தை பெயரில் உள்ள இடத்தை தன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய சிவகங்கை மாவட்டம்   இளையான்குடி  தாலுகாவை   சேர்ந்தவர் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கீழக்கொடுமலூர் கிராம நிர்வாக அலுவலர் […]

மோர் பண்ணை கிராமத்தில் 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

ஆர்எஸ் மங்கலம் அடுத்த மோர் பண்ணை கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா மோர் பண்ணை மீனவ கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் […]

ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவியை தாக்கிய ஆறு பேர் கொண்ட கும்பல்.!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரனான முரளி ஜெகன் தற்போது பூட்டான் மாநில எல்லை பகுதியில் பணியாற்றி வருகிறார். முரளி ஜெகன் தனது சொந்த ஊரான ஏனாதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய வீட்டு ஒன்றை கட்டியுள்ளார். புதிய வீட்டை முரளி ஜெகன் பெரியப்பா ராமச்சந்திரன் அபகரிக்க முயற்சிப்பதாக முரளி ஜெகனின் தாய் […]

அதிகாரிகளின் அலட்சியம்.! நீதிமன்றத்தில் போராடி வெற்றி .!!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த களிமண் குண்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது மீன்பிடித் தொழிலாகும் நாட்டுப் படகு கரைவலை மீனவர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கடற்கரையை ஒட்டிய சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பினை அந்தப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் சிலர் ஆக்கிரமித்து தோப்பு வைத்து அதன் பின்னர் அந்த வழியே மீனைப் பிடித்து கரைக்கு கொண்டு செல்லும் மீனவர்களுக்கு அதிக […]

தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சி பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம், புளியங்குடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தினசரி அங்காடி மற்றும் வாசுதேவ நல்லூரில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட […]

இன்ஸ்டால் பிரபலம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்.!போலீசார் பிடித்து விசாரணை.!!

நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்கள் மீது தொண்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என இன்ஸ்டால் பிரபலம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்: போலீசார் பிடித்து விசாரணை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த தொண்டி பகுதியை சேர்ந்து சபீனா இவர் வீட்டில் இருந்த  கடந்த சில மாதங்களுக்கு முன் 6/12 சவரன் தங்கம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போனதாக தொண்டி காவல் […]

சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவன் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்குவதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் திரன்டனர் இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் நெரிசல் ஏற்பட்டது மேலும் கள்ளழகர் இறங்கும் நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பிளஸ் ஒன் படிக்கும் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கினர் அதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை பிளஸ் ஒன் மாணவன் […]

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிந்தா கோஷமிட்டு வரவேற்றனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோரும் சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கம் இந்த ஆண்டு முதல் முறையாக ஜெனக நாராயண பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் […]

உசிலம்பட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியின் 90 வது ஆண்டு விழாவில் – 90 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., தற்போது 90 ஆண்டை கடந்த நிலையில் 90வது ஆண்டு விழா இன்று பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் நடத்தப்பட்டது., இந்த விழாவில் கடந்த 90 ஆண்டுகளில் இப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் பணியாற்றிய ஆசிரியர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கு கேடையங்களை வழங்கி வாழ்த்து பெற்றனர்., தொடர்ந்து ஆண்டு விழாவில் முன்னாள் மாணவ மாணவிகளின் சந்திப்பு […]

திமுக நகரம் சார்பாக கழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக கழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கவுண்டன்பட்டியில் நடைபெற்றது. திமுக பொதுக் கூட்டத்திற்கு உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தலைமை வைத்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி சரவணகுமார் வரவேற்றார் தலைமைக் கழக பேச்சாளர் சேப்பாக்கம் வே.பா பிரபாகரன் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கிப் பேசினர். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் டி. முத்துராமன் மாநில நிர்வாகிகள் […]

கைப்பிடி சுவற்றின் விளிம்பில் அமர்ந்து ஆபத்தை உணராமல் கைபேசியில் கவனமாக பேசிக் கொண்டிருந்த பெண்ணின் செயல்..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முதல் தளத்தில், கைபிடி சுவரின் விளிம்பில் ஒரு பெண் ஆபத்தான நிலையில் அமர்ந்து கைபேசியில் கவனமாக பேசிக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கட்டிடத்தின் உயரத்தையும்,கைபிடி சுவற்றின் குறுகலான அமைப்பையும் கருத்தில் கொள்ளாமல், எந்தவிதமான பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் அவர் அமர்ந்திருந்தது பார்ப்பவர்களை அச்சத்தை ஏற்படுத்தியது. சிறிது நிலை தடுமாறினாலும் அவர் கீழே விழுந்து  பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும்.நல் வாய்ப்பாக அவர் எந்தவித காயமும் இன்றி தப்பினார். இது போன்ற […]

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் விண்ணைப் பிளந்த நமச்சிவாயா கோசத்தோடு வடமிலுத்து நெகிழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது ஆண்டுக்கு ஒரு முறை […]

வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு அதிமுக சார்பில் வீரவணக்கம்: போரில் வெற்றி பெறவும் சிறப்பு வழிபாடு..!

நேற்று, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார் அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் வீரவணக்கம் செய்து அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் […]

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பெரியபட்டினம் அணியினருக்கு முதல் பரிசு..

இராமநாதபுரத்தில் மல்லி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சார்பாக லிமிட்லெஸ் டர்ஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசினை பெரியபட்டினம் A அணியினரும் இரண்டாவது பரிசினை குப்பன் வலசை அணியினரும் மூன்றாவது பரிசினை கீழக்கரை அணியினரும் நான்காவது பரிசினை பெரியபட்டினம் B பெற்றனர். சிறந்த கோல் கீப்பருக்கான விருதினை PFC A அணியின் மசூத் குப்பன் வலசை அணியின் மாசானம் ஆகியோர் […]

கீழக்கரையில் சிசிடிவி கேமராக்கள் வழங்கிய செல்வந்தர்கள் .! சார்பு ஆய்வாளர் வேண்டுகோள்.!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வீர கணேஷ் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து வருவதாகவும் கூடுதலாக கேமராக்கள் தேவைப்படுவதால் தங்கள் முன் வருமாறு தொழிலதிபர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் தலைவரும் தொழிலதிபருமான உமர் களஞ்சியம் மற்றும் ராமநாதபுரம் டுடேஸ் புட்வேர் உரிமையாளரும் தொழிலதிபருமான காசிம் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் வழங்கினர். இதனை அகமது அதில் முஹம்மது பிலால் அப்துல்லாஹ் ஆகியோர் […]

சோழவந்தான் சிவாலயங்களில் சனி பிரதோஷம் விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால்,தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல் மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சுவாமி அம்பாளை தொடர்ந்து சிவ பக்தர்கள் சிவ சிவ என்று பாடி வந்தனர். எம்விஎம் குழுமம்தலைவரும் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில்,டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் பக்தர்களுக்கு சனி […]

கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் 4.ம் ஆண்டு கிடா முட்டு போட்டி

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடா முட்டு சண்டை நடந்து வந்தது. அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நேற்று கிடாய் முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன.இந்நிகழ்ச்சிக்கு கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி,, கர்ணன் சதீஷ் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கமிட்டி நிர்வாகிகள் பவித்திர பால்பாண்டி கேப்டன் அப்பாசாமி ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் எம்எல்ஏ கதிரவன் கிடா முட்டு போட்டியில் […]

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடந்தது.10ம் நாள் உபயதார் சங்கங்கோட்டை கிராமத்தார் சார்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. 11ம் நாள் விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா கொடி இறக்கம் நடந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் ஆடி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இங்கு அம்மன் வண்ணப் பூக்களால் மின்னொளி அலங்காரத்தில் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. […]

தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சாமி கோவிலில் திருதேரோட்டம்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடைபெற்றது. அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா நடந்தது. மூன்றாம் நாள் திருக்கல்யாணமும், நான்காம் நாள் திருத்தேர் நான்கு ரத வீதியும் உலாவும் நடந்தது. இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று சுவாமி அம்பாளும் ரிஷப வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர். காடுபட்டி சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!