அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை..

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேருந்து நிலையங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மேலும் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொண்டலூர் அரசு […]

சோழவந்தானில் தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்த மறியல் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் ஒன்பதாம் தேதி தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் தலைமையில் மற்றும் தொழிற்சங்கம், தொழிலாளர்கள் சார்பில் அகில இந்திய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கம் கந்தவேலு தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளர் பொன்ராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அ.வேல்பாண்டி மறியலை விளக்கி பேசினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் […]

சோழவந்தானில் வெறி நாய் கடித்து சிறுமி உட்பட 2பேர் படுகாயம்

சோழவந்தானில் வெறி நாய் கடித்ததில் ஆறு வயது சிறுமி உட்பட இருவர் படுகாயம் காயமடைந்த இருவருக்கும் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் கள்ளர் தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெறி நாய் சுற்றித்திரிந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் கூறிவந்த நிலையில் வெறி நாயை பிடிப்பதற்கு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சோழவந்தான் கள்ளத்தெருவில் வசிக்கும் […]

உசிலம்பட்டியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் மற்றும் பாலஸ்தீன் நாடுகள் பாதிப்படைந்ததை முன்னிட்டும். இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் ஈரான் நாடுகள் மீது தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் அகில இந்திய செயல் தலைவர் எஸ். நம்பிராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் கே. தவமணி செயலாளர் வி. […]

உசிலம்பட்டி தினசரி சந்தையில் எம் எல் ஏ அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தினசரி சந்தையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய எம் எல் ஏ அலுவலகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தினசரி சந்தை பகுதியில் பழைய சட்டமன்ற தொகுதி அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் உசிலம்பட்டி எம் எல் ஏ அய்யப்பன் புதிய கட்டிடம் கட்டித்தர தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். […]

விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது குறித்து விஜய்-இடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என ஆர் பி உதயகுமார் பதில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில் வழிபாடு செய்த பின் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும், எங்கள் குறித்து எங்களிடம் கேட்க வேண்டும் மாத்தி மாத்தி கேட்டால் எப்படி […]

உசிலம்பட்டியில் மறைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க நாள் பேரணி

உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வணக்க பேரணி நடைபெற்றது இந்தப் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வீரவணக்க பேரணிக்கு மாநில துணைத்தலைவர் ஆர் உதயகுமார் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது . இந்த வீரவணக்க பேரணியில் தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட அவைத் தலைவர் தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் இந்தப் பேரணியில் விவசாய பெருமக்கள் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகளும் மகளிர் விவசாய அணியினர் கலந்து கொண்டனர் . […]

மாதாந்திர மின் பராமரிப்பு பணி; ஜூலை.05 மின் தடை..

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் 05.07.2025 (நாளை) சனிக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.   திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் உப மின் நிலையங்களில் 05/07/2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற […]

நெல்லையில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை..

நெல்லையில் “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் நடந்தது. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது. ஜூலை 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பிரச்சார பரப்புரை மற்றும் […]

தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடனுதவி..

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம், செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுகடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.   இது பற்றிய செய்திக் குறிப்பில், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் […]

நாமும் முதல்வரிடம் ஸாரி கேட்போம்…. அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு….-முன்னாள் அமைச்சர் ஆர்பி

 உயிர் திரும்பி வருமா? முதல்வர் ஸாரி கேட்கிறார், நாமும் ஸாரி கேட்க வேண்டும் ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு உங்களுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை என ஸாரி சொல்ல வேண்டும் – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேல திருமாணிக்கம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கலந்து […]

அலங்காநல்லூர் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை ரூ.15 ஆயிரம் அபராதம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2023 ஆண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த அச்சம்பட்டியைச் சேர்ந்த மணி மகன் விஜய்(26) என்பவரை அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வாடிப்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி செல்லையா குற்றவாளி விஜய்க்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் […]

கொடிமங்கலத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம்

கொடிமங்கலத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் இரண்டுகூடுதல் பள்ளி கட்டிடம் முன்னாள் அமைச்சர்செல்லூர்ராஜு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் திரவியம் பரவை பேரூர் செயலாளர் ராஜா கொடிமங்கலம் கிளைச் செயலாளர் கருப்பண்ணன் இளைஞரணி […]

கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் இலவச நோட்டு மற்றும் எழுதுபொருள் வழங்கும் விழா நடைபெற்றது அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராபின்சன் செல்வகுமார் வரவேற்றார். பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் சுமார் 25 ஆயிரம்ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் […]

வாடிப்பட்டியில் தனியார் பள்ளியில் ஆர்டிஇ மூலம் சேர்ந்த குழந்தைக்கு கூடுதல் கட்டணம் கட்ட கோரி பள்ளி வாகனத்தை அனுப்ப மறுக்கும் நிர்வாகம், பெற்றோர்கள் கதறல்

மதுரை வாடிப்பட்டியில் உள்ள தனியார்(நம் வித்யா மந்திர்) பள்ளியில் சித்தாலங்குடியை சேர்ந்த அஜித் மற்றும் பவித்ரா தம்பதியின் மகளான முஹிஷா கடந்த கல்வி ஆண்டில் மத்திய மாநில அரசின் ஆர்டிஈ திட்டம் மூலம் எல்கேஜி வகுப்பில் சேர்ந்தார். பெற்றோர் இருவரும் தினக்கூலி பணியாளராக பணிபுரிந்து வருவதால் தங்களது குழந்தையினை பள்ளி வாகனத்தில் அனுப்பி வந்தனர். கடந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் கட்டிய அவர்கள் இந்த ஆண்டு யுகேஜி வகுப்பு சென்று அவருக்கு […]

தாமோதரன் பட்டியில் ஆபத்தான முறையில் நாடக மேடையில் கல்வி கற்கும் மாணவர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என வாடிப்பட்டி யூனியன் அதிகாரிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பள்ளியை இடித்துவிட்டு பள்ளியில் படித்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள […]

அடிப்படை வசதிகளை செய்து தர கோரி உசிலம்பட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம், ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது., இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் கலந்து கொண்ட நிலையில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது., இக்கூட்டத்தில் வார்டு பகுதியில் சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தருவதில்லை என திமுக நகர் மன்ற உறுப்பினர்களே கடும் வாக்குவாததில் ஈடுபட்டனர்., மேலும் உசிலம்பட்டி புதிய பேருந்து […]

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணி நிறைவு பெறும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணி நிரந்தர தூய்மை பணியாளர்களாக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி பணி நிறைவு பெறும் பணியாளர்களுக்கு மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பாக பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது பணி நிறைவு ஓய்வு பெற்ற கமலா,செம்பா, ரங்கம்மாள், இந்திராணி, பல்லாக்காள், லோகிதாஸ், லிங்கம்மாள் ஆகியோரை சிஐடியு தூய்மை பணியாளர்கள் சங்கம் இணைப்பு மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக சான்றிதழ் கொடுத்து சந்தனமாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் சிஐடியு மேட்டுப்பாளையம் […]

அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் 10க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டி கடந்த ஜனவரி மாதம் அமைச்சர்கள் நேரு மற்றும் மூர்த்தி ஆகியோர் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்த நிலையில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 வணிக வளாகங்கள் ஏலம் விடாத நிலையில் ஒரு கடைக்கு ரூபாய் 5000 வீதம் மாதம் ரூபாய் ஒரு லட்சம் வரை அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் பேருந்து நிலையம் திறந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை பல […]

புதுப்பட்டியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்அருகே அழகாபுரி ஊராட்சியில் கழிவுநீர் தேங்குவத அலங்காநல்லூர் அருகே அழகாபுரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி தெருக்களில் ஆறாக ஓடுவதாகவும் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலப்பதால் குடிநீரை குடிக்கும் பொதுமக்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படுவதாகவும் இது குறித்து அழகாபுரி ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் அழகாபுரி ஊராட்சியில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!