நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதள பாதாளத்திற்கு சென்ற பாமக- மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது..

தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ளது.இந்த நிலையில் […]

பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி..

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட […]

மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி – ஜூன் 8-ல் பதவியேற்பு??

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதற்கு ஏதுவாக 17-வது மக்களவையை கலைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை […]

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் CBCID முன் நேரில் ஆஜர்!

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்பரம் இரயில் நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணம் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், அந்த மூன்று பேரில் முக்கிய நபர் நயினாருக்கு சொந்தமான ஹோட்டலின் ஊழியர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து நயினார் […]

2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள்!முழு விவரம்..

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்களின் விவரங்கள். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. திண்டுக்கல் தொகுதியில் […]

தனித்து நின்று சாதித்து காட்டியது நாம் தமிழர் கட்சி! தேர்தல் ஆணைய அங்கீகாரமும் பெறுகிறது..

தனித்து போட்டியிட்டு சாதனை படைத்த நாம் தமிழர் கட்சி. மூன்றாம் இடம் பிடித்த தொகுதிகள்: கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை திருச்சி மற்றும் புதுவை. 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற இடங்கள்: சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், நாகை, தென்காசி மயிலாடுதுறை, திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி. அதிகபட்சமாக சிவகங்கையில் எழிலரசி 1,63,412 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் […]

பிஜேபி கூட்டணியில் தான் இருப்பேன், சந்திரபாபு நாயுடு திட்ட வட்டம்..

ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் பேட்டி. தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்து மக்களுக்கு நன்றி. எனது வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நாம் பார்த்து இல்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது. என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்- சந்திரபாபு நாயுடு திட்டவட்டம். என்டிஏ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி செல்கிறேன்- சந்திரபாபு நாயுடு.

தென்காசி தொகுதியில் 7-வது முறையாக தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி..

தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.அவர் இதேபோல் ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.இந்த முறையுடன் சேர்த்து டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் தொடர்ந்து 7 முறை போட்டியிட்டார். கடந்த 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தென்காசி தொகுதியை குறிவைத்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி அவை அனைத்திலும் […]

பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக,நாதக ஆகிய கட்சிகளுக்கு முறையாக எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது..

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 28 தொகுதிகளில் அதிமுகவும், 11 தொகுதிகளில் பாஜகவும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், தற்போது பெற்ற வாக்குகள் அடிப்படையில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கக் கூடும் என தெரிகிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் நேற்று எண்ணப்பட்டன. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. முன்னதாக இந்த தேர்தலில், […]

வத்தலகுண்டு பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

வத்தலகுண்டு பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் நிலக்கோட்டை குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் காவலர்கள் ஜெயச்சந்திரன், பாலமுருகன், முருகன், கார்த்திக் […]

உத்தர பிரதேச மக்கள் விவேகத்துடன் செயல்பட்டுள்ளனர்’!-பிரியங்கா காந்தி மகிழ்ச்சி..

மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. அதே சமயம், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா வெற்றி பெற்றுள்ளார். அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியிலும் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு […]

ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் நடிகர் பவன் கல்யாண்?..

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் 21 தொகுதிகளில் ஜனசேனா கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. படிப்படியாக வெற்றி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் […]

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..

ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 134 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று […]

திமுக அரசின் பணிகளின் அறுவடைதான் இந்த வெற்றி”- முதலமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு..

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளில் ஏற்கனவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு […]

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு பலத்த அடி!-கே.பாலகிருஷ்ணன்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பா.ஜ.க.வின் அதிகார பலம், தில்லுமுல்லுகள், பண பலம், வெறுப்பு பேச்சுகள் இவைகளை முறியடித்து பா.ஜ.க.வின் தனித்த ஆட்சிக்கு வாக்காளர்கள் முடிவு கட்டியுள்ளனர். பா.ஜ.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட உத்தரப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. படுதோல்வியடைந்துள்ளது. திட்டமிட்டு திணிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வாக்காளர்கள் தவிடுபொடியாக்கியுள்ளார்கள். மோடியின் (சார் சோ பார்) 400+ […]

40க்கு 40 என்ற பிரம்மாண்ட வெற்றி”:தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி விறு விறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 தொகுதிகளிலும் அசத்தலான வெற்றியை வெற்றுள்ளது. 21 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் 10, சிபிஎம், சிபிஐ, விசிக 2 , மதிமுக, […]

தமிழகத்தில் 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்!-சத்யபிரதா சாகு தகவல்..

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் ‘இந்தியா’ கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், […]

ஆட்சி அமைப்பது குறித்து நாளை அவசர கூட்டம்! ராகுல் காந்தி சூசகம்..

பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 230-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:அரசியல் அமைப்பு நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது. அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.அரசு எந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது. பா.ஜ.க. மட்டுமின்றி சி.பி.ஐ, அமலாக்கத் துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.இது […]

அயோத்தியில் பா.ஜ.கவை கைவிட்ட ராமர்: பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் […]

ராமநாதபுரம் தொகுதி: பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் படு தோல்வி! நவாஸ் கனி அபார வெற்றி..

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. நடைபெற்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் போட்டியிட்டனர். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!