மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சென்னையில் போரட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் 15 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் , அவர்கள் வேறு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் போது புதிய பணியாளர்களாகவே கணக்கில் கொள்ளப்படும் சம்பளம் குறைந்துவிடும். அதனால்தான் அவர்களது அடிப்படை உரிமைகளை கேட்டு […]
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி சிறப்பு வழிபாடு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும் உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாவதை யொட்டியும் அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வி. முத்து தலைமையில் நடைபெற்றது. திருவேடகம் கிரி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராஜா, , மீனு ஆனந்த் முருகன் ,கருப்பட்டி கண்ணன் விரும்பி, திலீப் பண்ணை செல்வம், […]
கமுதியில் லஞ்சம் வாங்கிய விஏஓ ப்ரோக்கர் கைது.!
கமுதியில் லஞ்சம் கேட்ட VAO, ரசாயனம் தடவிய ரூ.4,000-உடன் கையும் களவுமாக சிக்கினார்! இராமநாதபுரம்: வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த ஒருவரிடம், கமுதி தாலுகா தவசிக்குறிச்சி VAO பிரேமானந்தன் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், நேராக இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசை அணுகினார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.4,000-ஐ ஏற்பாடு செய்தனர். VAO-வின் உத்தரவுப்படி, அந்த பணத்தை கமுதியை சேர்ந்த S.P. டிரேடர்ஸ் உரிமையாளர் […]
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூரில் முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி முத்து பரப்புடன் தொடங்கிய விழா ஏழு நாட்கள் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்களுடன் நடைபெற்றது. இரவு கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன. செவ்வாய்க்கிழமை வழுதூரில் இருந்து கரக ஊர்வலம் கொண்டு […]
மாற்றுத்திறன் படைத்தோரை மகிழ்வித்த வனத்துறை..
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அருவியில் குளிக்க செய்து மகிழ்வித்த தென்காசி மாவட்ட வனத்துறையை பொது மக்கள் பாராட்டினர். தென்காசி மாவட்டம் பொதிகை மலையின் வனப் பகுதிகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சுற்றுலா பகுதியாக விளங்கும் குற்றால அருவிகளையும் உள்ளடக்கியது ஆகும். இந்த அருவிகளில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குளிப்பதற்கு வந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் மற்றும் […]
சோழவந்தானில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களில் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிசேதம்
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல் பயிர்கள் அழுகும் நிலைக்கு சென்றுள்ளது மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்ப நகர் மீனாட்சி நகர் ஆலங்கொட்டாரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி செய்யாத நிலையில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது […]
சோழவந்தான் பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகளால் பயணிகள் பொதுமக்கள் கடும் அவதி
மதுரை மாவட்டம் செக்கானூரணி பணிமனையில் இருந்து இயக்கப்படும் நிலக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் கல்லூரி செல்லும் பேருந்து நிலக்கோட்டையில் இருந்து வரும் பொழுது தென்கரை பாலத்தில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வராமல் நேரடியாக மாரியம்மன் கோவில் வழியாக திருமங்கலம் செல்வதால் இந்த பேருந்துக்காக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது இதனால் சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்த பகுதியில் காத்திருக்கும் பயணிகள் வெகு நேரமாக […]
ம.சு.பல்கலை கழக விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெறாத மாணவி..
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்து துணை வேந்தரிடம் மாணவி பட்டம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெறும் 650-க்கும் மேற்பட்டோர் பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்நிலையில் ஜீன் […]
உசிலம்பட்டி அருகே 20க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள்உடன் தவெக பொதுச் செயலாளர் ஆலோசனை
உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் – 20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2 வது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை […]
புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு..
தென்காசி மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் பொறுப் பேற்று கொண்டார். முன்னதாக தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த லாவண்யா அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தென்காசி புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தென்காசி உட்கோட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் 11.08.2025 அன்று பொறுப் பேற்றுக் கொண்டார். புதிய கோட்டாட்சியருக்கு அரசு அலுவலர்கள் […]
தினசரி, வாரச் சந்தை அடிக்கல் நாட்டு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2.25 கோடி மதிப்பீட்டில் தினசரி வாரச்சந்தை அடிக்கல் நாட்டு விழா சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசு , காந்தி , வீராசாமி , சாரங்கன் , ஹபீபா சிராஜ்தீன் ,மகாலட்சுமி பாண்டியன், அன்னபூரணி நாகராஜன், பத்மாவதி சிவகுமார், சிவசக்தி […]
மண்ணுக்கும் மக்களுக்கும் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று வழங்கினர்
உசிலம்பட்டி அருகே பிரபல நடிகர் சௌந்திரராஜா வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 9ஆவது ஆண்டை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கி ஊக்கப்படுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் நடிகர் சௌந்திரராஜா, சசிக்குமாரின் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி விஜய், கார்த்தி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் துணை நடிகராகவும், வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபலமான இவர்., நடிகர் […]
விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தகர் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்கும் 58 கால்வாய் திட்டத்திற்கு சோதனை அடிப்படையில் மட்டுமே வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது., வைகை அணையில் உள்ள 58 கால்வாய் மதகு பகுதியை 67 அடியிலிருந்து 65 அடியாக குறைத்து இந்த 58 கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்., இந்நிலையில் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை […]
சோழவந்தான் அருகே கனமழைக்கு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியகுடும்பத்தினர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு காலனி பகுதியில் குடியிருக்கும் முத்துக்குமார் அழகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் காலனி மேட்டு தெருவில் குடியிருந்து வருகின்றனர் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று இரவு வீட்டில் மேற் கூரை சரிந்து வீட்டிற்குள் விழுந்ததில் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மழை பெய்த போது சடசடவென்று சத்தம் கேட்ட நிலையில் வீட்டிற்குள் […]
சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள் மாணவ மாணவியர்..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது ஊத்துக்குளி கிராமம் இங்கே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கிருந்து சோழவந்தான் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்தா பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கு பல்வேறு மாணவ மாணவியர் சென்று படித்து வருகின்றனர் அதேபோல கல்லூரி மாணவர்களும் படித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த ஊருக்கு காலை எட்டு பதினைந்து மணிக்கு வரும் பேருந்து கடந்த ஒரு மாதமாக வரவில்லை இது குறித்து […]
வாடிப்பட்டி பகுதியில்தொடரும் திருட்டு ,வழிப்பறி.இரவு போலீஸ் ரோந்து பணியைதீவிர படுத்த பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆடி 18 அன்று வழிபாடு செய்த பின் நீரேத்தான் அகிலாண்டேஸ்வரி ஓந்தாய் அம்மன், அங்காள பரமேஸ்வரி வாலகுருசாமி, மற்றும் மேட்டு நீரேத்தான் அங்காள பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றனர். அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன் மேட்டு நீரேத்தான் வாடிப்பட்டி சாலையில் பர்னிச்சர் கடையில் இரவு காவலாளியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த முக […]
குற்றாலத்தில் இரவில் குளிக்க பணம் வசூல்?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே பொது மக்களை குளிக்க அனுமதித்து வரும் நிலையில், இரவு 8.00 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வனத் துறையினர் குளிக்க அனுமதித்து வருவதாக பொது மக்களிடயே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிப்பது உள்ளிட்ட அத்து மீறல்களில் ஈடுபடும் வனத் துறையினர் […]
உசிலம்பட்டி பிஎம்டி கல்லூரி வாசல் முன்பு விபத்து ஏற்படுவதை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டிஎஸ்பியிடம் மனு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர்கள் பயின்று வருகின்றனர்,இக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது,கடந்த ஒரு மாதத்திற்குள் பல விபத்துகள் நடந்து விட்டன,கடந்த வாரம் நடந்த விபத்தில் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் உயிர் இழந்துவிட்டார்,இக்கல்லூரி வாசல் முன்பு வேகத்தடை அமைத்து வேகமாக வரும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி தடுப்புகளை வைத்து […]
அரசு பேருந்தில் லக்கேஜ் எடுப்பதில் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணியால் பரபரப்பு. காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி லக்கேஜ் எடுக்க வைத்த நடத்துனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து திருமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஐஸ் பாக்ஸ் பார்சல் கொண்டு சென்றுள்ளார் சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து வட்ட பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது நடத்துனர் அவரிடம் ஐஸ் பாக்ஸிற்கு இரண்டு லக்கேஜ் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த பயணி ஒரு லக்கேஜ் தான் எடுப்பேன் என பிடிவாதம் பிடித்துள்ளார் இதனை யடுத்து அவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறிய நடத்தினர் ஐஸ் […]
உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் பாஜ நிர்வாகி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள்.சிசிடிவி காட்சியுடன் புகாரளித்து 25 நாட்களாகியும் போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு
மதுரை மாவட்;டம் எழுமலை அருகே உள்ளது பாப்பிநாயக்கன்பட்டி கிராமம்.இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜா (55).இவர் பேரையூர் மற்றும் திருமங்கலத்தில் ஆட்டோ கண்சல்டிங் தொழில் செய்து வருகின்றார்.மேலும் பா.ஜ கட்சியில் தற்போது விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார்.இவர் கடந்த 13.7.25 அன்று தனது வீட்டில் இரவில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.திடுக்கிட்டு எழுந்த வீட்டின் பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த போது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]
You must be logged in to post a comment.