தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58). இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து […]
Category: மாவட்ட செய்திகள்
தன்னைக் காப்பாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த மாணவன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் கள்ளழகர் தரிசனம் செய்தனர் இந்த நிலையில் வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவர்கள் இருவர் உயிருக்கு போராடிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதில் விருதுநகர் […]
அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் பப்பாளி உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட துணைச் செயலாளர் விமல் ராஜ் ஒன்றிய செயலாளர்கள் ரவி ஜெயபிரகாஷ் பேரூர் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
உசிலம்பட்டியில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி
பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூவர்ண தேசிய கொடி பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக மூவர்ணக் தேசிய கொடி பேரணி நடைபெற்றது. ஜம்முவில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்த்து அழித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முப்படை வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை ரோடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் […]
விக்கிரமங்கலம் ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா பால்குடம் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமம் இந்து நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சக்தி கரகம் எடுத்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாடார் மகாஜன […]
அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் பலி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சிவகங்கை மாவட்டம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிநடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த மதுரை சத்திரப்பட்டி அருகே உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாழி என்பவரை வலது மார்பில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு […]
அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆய்வு
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் கோவில்பட்டியில் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூட்டத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
உசிலம்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சி நடைபெற்றது.
உசிலம்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சி நடைபெற்றது. திமுக அரசின் நான்காண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உசிலம்பட்டி பொது இடங்களில் காணொளி காட்சியாக திமுக கட்சியின் சாதனைகளை ஒளிபரப்பி வருகின்றனர். உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பாக எல் இ டி திரையின் மூலம் உசிலம்பட்டி நகராட்சி சார்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சியை திமுக நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் […]
சோழவந்தான் அருகே தச்சம்பத் துசதுர்வேத மகா கணபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா
சோழவந்தான் அருகே தச்சம்பத்து ஆறுமுகம் திருக்கோவில் அருகே உள்ள சதுர்வேத மகா கணபதி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது நேற்று முன்தினம் முதல் காலயாக பூஜை தொடங்கி நடைபெற்றது இந்த நிலையில் நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜையும் மாலை மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது இன்று அதிகாலை 5 மணி அளவில் நான்காம் கால யாக பூஜை நடைபெற்று சரியாக காலை 9 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தில் சோழவந்தான் தச்சம்பத்து திருவேடகம் மேலக்கால் […]
தென்கரை காளியம்மன் கோவில் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர். பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை காளியம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிரமத்திற்கு உள்ளாகினர் மன்னாடிமங்கலம் பகுதியில் இருந்து திருமங்கலம் செல்லும் குடிநீர் குழாயில் தென்கரை காளியம்மன் கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறிய பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பேருந்துகளை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டிய […]
பாலமேடு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் சம்பவ இடத்தில் வாலிபர் பலி. சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் முடுவார்பட்டி சாலை வழியாக மதுரைக்கு தனது நண்பருடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளையம்பட்டி – முடுவார்பட்டிபிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சுமோ கார் ஒன்று கணேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த அடிபட்டு கணேசன் சம்பவ […]
உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 முதல் 2021 காலகட்டத்தில் இருந்த பா.நீதிபதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், இன்று காலை உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மதுரை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.,
ஆலங்குளத்தில் தொழிலாளர் சிறப்பு முகாம்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் 20.05.2025 செவ்வாய்க் கிழமை அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில் திருநெல்வேலி தொழிலாளர் நலத் துறை, தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் […]
லஞ்சம் கேட்கும் நிருபர்கள். ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் முடிவு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பூச்சம்பட்டி ஆண்டிபட்டி ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளர் ஆகிய இருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பத்திரிக்கை நிருபர்கள் எனக் கூறி சிலர் ஊராட்சி செயலாளர்களிடம் 100 நாள் வேலைகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் […]
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்பி உதயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சி புதூர் முப்பிலையான் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளார் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் மகேந்திரன் மாணிக்கம் கருப்பையா, ராஜேஷ் கண்ணா, துரை தன்ராஜ் மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் […]
விராலிப்பட்டி, சி புதூர் கிளை கழகங்களில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிபட்டி சி புதூர் கிளைக் கழகங்களில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா மணிமாறன் […]
சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் பேருந்துகளால் பொதுமக்கள் பயணிகள் அவதி
சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையின் நடுவில் நின்று விடுவதால் பொதுமக்கள் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்து டிஎன் 58 என்24 45 என்ற 999 என்ற எண் கொண்ட சோழவந்தான் பனிமனை கிளையில் உள்ள பேருந்து பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப் பேருந்து அனுப்பப்பட்டுள்ளது இந்த பேருந்தும் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பயணிகளுடன் செல்லும்போது திடீரென பழுதாகி சாலை நடுவே நின்று விடுகிறது இதனால் வெளியூர்களுக்கு […]
வாடிப்பட்டி பேரூராட்சிரூ.1.09 கோடி மதிப்பிடில் அலுவலக கட்டிடம் கட்டுமான பணிபேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் புதிதாக மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுமான பணிநடந்து வருகிறது. இந்த பணியினை பேரூராட்சி உதவி இயக்குனர் மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சித் தலைவர் மு.பால் பாண்டியன், இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி, சுகாதார பணி மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இருந்தனர்.
சோழவந்தான் அருகே ரிஷபம் ஸ்ரீ சோனை சாமி கும்பாபிஷேக விழா நடைபெற்றது
. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் அருள்மிகு ஸ்ரீ சோனை சாமி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோ பூஜை செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ராக்காயி அம்மன் , பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு பால் ,தயிர், வெண்ணெய், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரிஷபம் […]
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் தசாவதார நிகழ்ச்சி.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 12ஆம் தேதி வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதனைத் தொடர்ந்து யாதவர் சமூகத்தினர் சார்பாக தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் ஜெனக நாராயண பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து […]
You must be logged in to post a comment.