நெல்லை மாவட்டத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலனை பாதுகாக்க பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் துணை நிற்பது அவசியம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அலிஃப் பிலால் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தனியார் பள்ளி மாணவர்களின் சமூக வலைதள பதிவின் காரணமாக ஏற்பட்ட மோதல், மாணவர்களுக்கிடையே பகையை உருவாக்கி இதில் ஒரு […]
Category: மாவட்ட செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்; தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..
தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள். தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை இன்று (23.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் […]
ஆன்லைனில் பட்டாசு விற்பனை எனும் பெயரில் மோசடி; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..
ஆன்லைனில் பட்டாசு விற்பனை எனும் பெயரில் மோசடி நடைபெறுவதாகவும், இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் நடைபெறும் இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளதாவது, இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி, இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் […]
தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனர்; மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் கீழே கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்கைகுட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல். இவர், கடந்த 20.10.2024 அன்று ரெட்டியார்பட்டி ஆட்டோ ஸ்டான்டில் கீழே கிடந்த சுமார் 42 கிராம் தங்க செயினை எடுத்து உரிய முறையில் ஊத்துமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பேச்சியம்மாள் […]
சந்தை பாதையை சரி செய்ய கோரி நுழைவு கட்டணம் செலுத்த மறுத்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புதன்கிழமை வாரசந்தையில் ஆடு மாடு கோழிகளுக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சியில் இருந்து சீட்டு பண வசூலிக்க கூடாது என கூறி விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.உசிலம்பட்டி தினசரி சந்தை திடலில் வாரம் புதன்கிழமை ஆடு மாடு கோழிகளுக்கு வாரச்சந்தை நடைபெறும் இதில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் வருகின்ற ஆடு மாடு கோழிகளுக்கு சீட்டு பணம் வசூல் செய்வார்கள். சந்தையின் பாதை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறியும் […]
புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு விழா.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் ஒரு கோடி செலவில் புதிய மருத்துவ ஆய்வக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை ஆய்வகம் புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய மருத்துவ ஆய்வகம் […]
உசிலம்பட்டியில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் 3 அம்சக் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி பணியாளர்கள் தங்களது மூன்று அம்ச கோரிக்கை அரசிடம் முன்வைத்தும் நிறைவேற்றாத அரசை கண்டித்தும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்படி; விற்பனையாளர்களுக்கு அனைத்துவகை பொருட்கள் எடை குறைவாக இருந்தால் அபராத தொகை விலையை இருமடங்காக உயர்த்தியதை கண்டித்தும் அரசு உப்பு தேயிலை மட்டுமே விற்க வேண்டும் என்ற உத்தரவு இருக்கும் நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர் சங்க […]
உசிலம்பட்டியில் முன்னாள் எம் எல் ஏ பி.என்.வல்லரசு 24வது நினைவு நாள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மதுரை மேற்கு மாவட்டம் கட்சி சார்பாக ஆசாத் ஹிந்து சர்க்கார் விழா மற்றும் முன்னாள் எம் எல் ஏ பி என் வல்லரசு 24 வது நினைவு நாளில் அஇபாபி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள பி என் வல்லரசு நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கி வைத்த ஆசாத் ஹிந்து சர்க்கார் விழா மற்றும் பி.என்.வல்லரசு 24 வது […]
உயிரை காவு வாங்க காத்திருக்கும் காவிரி குடிநீர் கேட்டு வாழ்வு தொட்டி
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஆர்.எஸ.மங்கலம் பேரூராட்சி பரக்கத் தெரு பிரிட்டோ ஸ்கூல் எதிர்புறம் காவிரி குடிநீரை கட்டுப்படுத்துவதற்காக தொட்டி அமைக்கப்பட்டு பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது.பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக்கூரியும் கடமைக்காக ஏனோ தானோ என்று சரியான திட்டமிடல் இல்லாமல் தற்காலிகமாக சரி செய்கின்றனர்.அருகில் பிரிட்டோ மழலையர் தொடக்கப் பள்ளி செயல்படுவதால் உடைந்து கிடக்கும் தொட்டியில் சிறுவர்கள் விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.குறுகிய சாலையில் ஒருபுறம் காவிரி குடிநீருக்காக தோண்டப்பட்டு மேடு பள்ளமாகவும் மறுபுறம் […]
உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வி பி செல்வி மஹாலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ மாநில பொதுச் செயலாளர் பி வி கதிரவன் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில நிர்வாகிகள் ராஜா பாஸ்கர பாண்டியன் வாடி வேல் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி மாயன் எ.எஸ் ரவி பால்சாமி நகர செயலாளர் சபரி ஒன்றிய செயலாளர் ஆச்சி ராஜா ஆனந்து மகளிர் அணி கலா குமார் அம்பிகா மற்றும் […]
இலவச மாபெரும் கண் சிகிச்சை முகாம்
உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் இலவச மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது பள்ளி தாளாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை அமுதபப்ரியா முன்னிலைவகித்தார்கள். இலவச கண் சிகிச்சை முகாமினை நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் மம்மி டாடி உரிமையாளர் நிஜாமுதீன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தார்கள் .பெற்றோர்கள்/ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தார்கள்.கண் குறை பாடு கண்ணில் சதை வளர்ச்சி கிட்டப் பார்வை தூரப்பார்வை […]
கெமிக்கல் ஆலை கழிவுகளால் விவசாயம் பாதிப்பு; ஆலையை மூட தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை..
சிவகாசி தாலுகா காக்கி வாடன் பட்டி கிராமத்தில் கெமிக்கல் ஆலையின் நச்சுக் கழிவுகளால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நச்சு ஆலையை விரைவில் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA. நாராயணசாமி தெரிவித்துள்ளதாவது, சிவகாசி தாலுகா காக்கி வாடன் பட்டி கிராமத்தில் கெமிக்கல் ஆலை உள்ளது. இந்த கெமிக்கல் ஆலையின் கழிவுகள் அனைத்தும் ஓடையிலும், உபயோகமற்ற கிணற்றிலும் […]
ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்; தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தல்..
ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையில், தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குலைக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்ட மதச்சார்பின்மையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம், எந்த அரசமைப்புச் சட்டத்தின் […]
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..
தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் உத்தரவின் படி, தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் வட்டாரம் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, குலசேகரமங்கலம் பஞ்.யூனியன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குலசேகரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில் […]
சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண் மீட்பு; உதவும் பணியில் பசியில்லா தமிழகம்..
சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி செய்யப்பட்டு வடகரை அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக காவல்துறை மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது. பசியில்லா தமிழகம் குழுவினர் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் அனுமதியின் பேரில் சங்கரன்கோவில் பகுதிக்கு விரைந்து சென்றனர். சங்கரன்கோவிலுக்கு விரைந்து […]
தமிழ் மண்ணில் விஷக்கருத்தை விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு..
விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றிய தனது முகநூல் பதிவில், இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு தனது கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்கு சில கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ளார். ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் […]
விபத்தில்லா மாசற்ற தீபாவளி கொண்டாட தென்காசி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்..
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 31.10.2024 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பும் பட்டசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும், பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிக்க வேண்டும். பெரியவர்கள் உடனிருக்கும் போது பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் […]
தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை; கவிஞர் பேரா பாராட்டு..
சென்னை மழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா பாராட்டியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், பருவமழை பாதிப்புகளிலிருந்து மக்களை குறிப்பாக சென்னை மக்களை காப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுத்த துரிதமான முன்னெச்சரிக்கைகளால் பாதிப்புகள் ஏதும் இன்றி சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பாராட்டி இருப்பதும் பெருமைப்படத் […]
கடையம் யூனியன் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு..
கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள இந்திரா நகரில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்திரா நகரில் உள்ள, 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வாட்டர் டேங்கின் பில்லர்கள் மிகவும் பழுதடைந்த காரணத்தினால், அதனை சரி செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக வாட்டர் […]
“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டிய தென்காசி மாவட்ட எஸ்.பி..
தென்காசி தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன், தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்பதை வடிவமைத்த மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டி பரிசு வழங்கினார். தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் […]