மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட இந்த புகையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மதுரை அவனியாபுரம் பகுதியை அடுத்துள்ள வெள்ளைக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. சமீபத்தில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு தீ எரிந்த நிலையில் போராடி தீயணைப்பு துறையினர் அனைத்தனர். இந்த நிலையில் வெள்ளைக்கல் குப்பை கிடங்கு அருகே […]
Category: மாவட்ட செய்திகள்
மதுரையில் ஆன்லைனில் மோசடி; வாங்காத லோனிற்கு பணத்தை கட்டக்கூறி இளம் பெண்ணை மிரட்டிய கும்பல்..
மதுரையில் ஆன்லைன் லோன் எனும் பெயரில் வாங்காத லோனிற்கு பணத்தை கட்டகூறி, வாட்ஸ்அப்பில் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக படம் அனுப்பி இளம்பெண்ணை மிரட்டிய கும்பல் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 42வயது நிரம்பிய பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் Kredit bee app என்ற ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். அதனை மாதாந்திர அடிப்படையில் முழுவதுமாக லோனை கட்டி முடித்துள்ளார். […]
தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..
தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன் குளத்தில் பூலுடையார் கோவில் ஆடி கொடை விழா இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பந்தல் மற்றும் மின் அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிலையில், பகலில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் 20க்கும் […]
மலையிட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மலையிட பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண்.66, வீட்டு வசதி மற்றும் […]
தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.11.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினை […]
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மூதாட்டிக்கு உயர்தர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; அரசு மருத்துவ குழுவினர் சாதனை..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 97 வயது மூதாட்டிக்கு, உயர்தரமான எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர். ஜெஸ்லின் தலைமையிலான மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் இரத்தினம்மாள். வயது 97. வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு தென்காசி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்தார். அவருக்கு வலது கால் தொடை எலும்பு முறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்தார். ஆனால் அவருக்கு இருதய […]
மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா..
மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல உறுப்புக் கல்லூரிகளான மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் பொறியியல் கல்லூரிகளின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பட்டம் வழங்கும் விழா மதுரை கீழக்குயில் குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை அமைப்பின் தலைமைச் செயல் […]
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் இராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து மரியாதை..
இலஞ்சியில் டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தின விழா நடந்தது. இதில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புகள் மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் தலைமை வகித்தார், உதவி பேராசிரியர் ஷீலா […]
இளைஞர்களை குறி வைக்கும் போதை ஆசாமிகள்; இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த மஜக வலியுறுத்தல்..
இளைஞர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விநியோகம் செய்யும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பாளை ஃபாரூக் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா, மண்டல இளைஞர் அணி அஷ்ரப், மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, மாவட்ட துணை செயலாளர் முருகேசன், […]
மாற்றுத்திறனாளிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்த மகத்தான திட்டங்கள்; மனிதநேயமிக்க முதல்வருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட பயனாளிகள்..
தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்துள்ளன. மனிதநேயமிக்க தமிழ்நாடு முதல்வருக்கு தென்காசி மாவட்ட பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தில் உயர எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் உறுதுணையாக நிற்கும் மக்கள் அரசாக திகழ்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோர் தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து […]
கேரள மாநில நிலச்சரிவு; தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிதியிலிருந்து ரூ.5 கோடி நிவாரண உதவி..
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடிக்கான காசோலையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்முடைய ஆழ்ந்த வருந்தங்களையும் இரங்கலையும் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக […]
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி..
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 3 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (வயது 52) த/பெ. முருகையா என்பவர் நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் […]
மண்டபம் அருகே வேளாண்மைத் துறையின் கலந்துரையாடல் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் சார்பில் விவசாயிகள் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம்.கே.அமர்லால் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா பேசுகையில் தென்னையில் குரும்பைகள் […]
மாலங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாலங்குடி கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வேளாண்மை துறை இணைந்து டிஜிட்டல் பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா வேளாண் இணை இயக்குனர் ச.கண்ணையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ம.தி.பாஸ்கரமணியன், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம். கே. அமர்லால் மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், மண்வளங்களை பாதுகாப்பது குறித்தும் பேசினார். உதவி வேளாண் […]
தென்காசியில் நடந்த மாற்றுத் திறனாளிகள் கடனுதவி முகாம்..
தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த வங்கிகடன் மானியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தல் தொடர்பாக வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாமில் 25.07.2024 அன்று […]
மின் கட்டண உயர்வை கண்டித்து,திருவாடானையில் தேமுதிகவினர் ஆர்பாட்டம்..!
திருவாடானையில் தேமுதிக சார்பில் மின் கட்டணத்தை உயர்த்தியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் தேமுதிக சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், மின் கட்டணத்தை குறைக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பெண்கள் கையில் மண்ணெண்ணெயில் எரியும் விளக்குகளை […]
உத்தரகோசமங்கையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: கீழக்கரை வட்டாட்சியர் பங்கேற்பு.!
பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்றுவரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி “மக்களுடன் முதல்வர்” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ‘உத்தரகோசமங்கை’ யில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகமது வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் ராமநாதபுரம் தாலுகா குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிடு, மின்சாரத் துறையை அரசே தொடர்ந்து நடத்திடுக, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் மாதம்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைபடுத்திடுக’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது. இதில் ராமநாதபுரம் தாலுகா குழு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் ,மதுரை மாவட்ட ஊனத் தடுப்பு சார்பில் செல்லம்பட்டி ,எழுமலை, தொட்டப்ப நாயக்கனூர் பகுதியில் இருக்கும் தொழு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தொழு நோயாளிகளின் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி ,பருப்பு, சீனி ,எண்ணெய் ஆகியவற்றை நலத்திட்ட […]
போலீசார் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட் திருடி சென்ற இளைஞர்கள்; சிசிடிவி காட்சி..
மதுரையில் போலீசார் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட்டை திருடி சென்ற இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை மாநகர் பகுதிகளில் சாலை விபத்துகளின் போது உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது நடைமுறையில் இருப்பதால் பெரும்பாலானோர் முறையாக தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் […]