சட்ட விதிகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

சட்ட விதிமுறைகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போதும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும் போதும் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வமான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆறு கால்நடை சந்தைகளும், இரண்டு சோதனை சாவடிகள் புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் அமைந்துள்ளன. இம்மாவட்டத்திலுள்ள கால்நடை சந்தைகளில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் […]

பல கோடி மதிப்புமிக்க திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது..

பலகோடி மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலையானது, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின் அயராத முயற்சியால் லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது. இது குறித்த தமிழ்நாடு காவல்துறையின் செய்திக்குறிப்பில், கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலை மதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது. இது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடுபோன சிலைகள் […]

உசிலம்பட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள அ.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பசுக்காரன்பட்டி கிராமம் அருகே அமைந்துள்ள பந்தாணி கண்மாய் கரையை சுற்றி இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ராஜாகோவிந்தசாமி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜெயக்கண்ணன்.துணை ஆளுநர் கணேசன் ஆகியோர் தலைமையில் பழங்கள் தரும் நாவல் மரக்கன்றுகள் பெரு நெல்லி,மா, வேம்பு,தான்றிக்காய் மற்றும் புளியமரக்கன்றுகள் என 250 மரக்கன்றுகளை தானமாக […]

உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் பொறுப்பு அசோக்குமார் தலைமையில் நகராட்சி தலைவி சகுந்தலா துணைத்தலைவி தேன்மொழி பொதுப்பணி மேற்பார்வையாளர் பாலமுருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர். நகராட்சி அண்ணா திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தினர். அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சிக்கு தமிழக அரசு போதிய நிதி வழங்க வேண்டும் எனவும் நகராட்சி நிரந்தர ஆணையாளர் மற்றும் பொறியாளர் மற்றும் நகராட்சி மேற்பார்வையாளர் நியமனம் […]

உசிலம்பட்டி பகுதியில்  அனைத்து கடைகள் அடைத்து  போராட்டம் .

ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 10.10.2024 முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து கட்டிடத்துக்கும் மற்றும் குடோன்க்கும் வாடகைக்கு 18/- சதவீதம் ஜிஎஸ்டி வரி ஆர்சிஎம்/ எப்சிஎம் முறையில் விதித்து அதைக் கட்ட அறிவித்துள்ளது. அனைத்து வணியர்களுக்கும் சுமையை ஏற்படுத்தும் இந்த உத்தரவை ரத்து செய்யவும். இந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்து ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நீக்கம் செய்யவும் ஒன்றிய மாநில அரசை வலியுறுத்தி இந்த ஒரு […]

செங்கோட்டை பகுதியில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ஆர்வத்துடன் திறந்து வைத்த பள்ளிக் குழந்தைகள்..

செங்கோட்டை பகுதியில் சமூக நல ஆர்வலர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் பள்ளி குழந்தைகளால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிட புணரமைப்புப் பணி முடிவுற்று அவ்வகுப்பறை மாணாக்கர் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, ஆசிரியர் பயிற்றுனர் சுப்புலெட்சுமி, குழு ஒருங்கிணைப்பாளர் வெங்காடம்பட்டி […]

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கான கிட் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் தமிழமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.உசிலம்பட்டி அரசு தலைமை பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமணையில் பிரசவ வார்டில் உள்ள 39 குழந்தைகளுக்கும், குழந்தைகள் கிட் உபகரணம் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கான […]

தென்காசி மாவட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழியேற்பு..

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் […]

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு

மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி கலந்து கொண்டு பேசும்பொழுது மனித உரிமைகள் மற்றும் கடமைகளை பற்றி மாணவர்கள் புரியும் வண்ணம் சிறப்பாக பேசினார். மாணவர்கள் மனித உரிமைகளையும் கடமைகளையும் கட்டாயம் தெரிந்து […]

பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா?; கேள்வி எழுப்பிய காந்தியவாதி..

பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா? என வடகரை பகுதி சமூக செயற்பாட்டாளர் வாவாமைதீன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மனுநீதி நாளில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில், தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் கல்குளம் சாலை மற்றும் ஒச்சான்  ஓடையில் பாலம் கட்டுவதற்காக 2018 இல் இருந்து ஆறு ஆண்டுகளாய் பல மனுக்கள் கொடுத்திருக்கிறேன். 2019-ல் தென்காசி கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து வருவாய்த்துறை பொதுப்பணித்துறை நில அளவு துறை அனைத்து துறைகளும் களப்பணி […]

தென்காசியில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தென்காசி மாவட்டத்தில் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0 நிகழ்வு 25.11.2024 முதல் 24.12.2024 வரை மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும், அனைத்து ஊராட்சிகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் பாலியல் வன்முறைக்கு […]

உலகப் பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு பள்ளிக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை கொடுத்த மதுரை ஆயி என்ற பூரணம் கலந்து கொண்டு பேசும்போது பெண்களை மதித்தல், பெண் கல்வி, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தல், […]

சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகள் அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாம்பவர் வடகரை ஊரின் மேற்கில் அனுமன் நதி ஆற்றுப்படுகை அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் […]

தமிழ்நாடு முதலமைச்சரின் ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி..

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் மூலம் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நம் தாய் திருநாடாம் தமிழக மண்ணில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அனைவரும் சரியான ஊட்டச்சத்து நிலையில் உள்ளனர் என்பதை உறுதி செய்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் […]

பூமியின் பசுமையை பாதுகாக்க பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி பள்ளி குழந்தைகள் சாதனை..

பூமியின் பசுமையை பாதுகாக்கும் விதமாக பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி நெல்லை மற்றும் நாகர்கோவில் பள்ளி குழந்தைகள் சாதனை படைத்துள்ளனர். விதைப்பந்துகள் மூலம் பூமியில் பசுமையை விதைக்கும் பணியை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பூ. திருமாறன் முன்னெடுத்து வருகிறார். விதைப்பந்துகள் பற்றியும் அதனை தயாரிக்கும் முறைகள் குறித்தும் பள்ளி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் இணைத்து வருகிறார். அந்த வகையில் சமூக ஆர்வலர் பூ.திருமாறன் வழிகாட்டுதலின் படி, […]

உசிலம்பட்டியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக ரவிச்சந்திரன் பணியாற்றி வந்த நிலையில் அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் (பொது) நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக கரூர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியாற்றிய சண்முகவடிவேல் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டு இன்று புதிய வருவாய் கோட்டாட்சியராக (ஆர்டிஓ) பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர் .உசிலை மோகன்

சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்து கோரிக்கை

சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளர் . ஆர். என். சிங் அவர்களை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.இரணியல் நிலையத்தில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் 16729/30 புனலூர் – மதுரை விரைவு ர‌யி‌ல் காரைக்கால் வரை நீட்டிக்கவும், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் பாசஞ்சர் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை.2சமீபத்தில் கட்டிய புதிய ரயில்வே பாலத்தில் வளைவு […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; பாதுகாப்பு உபகரணங்களை நேரில் ஆய்வு செய்த தென்காசி எஸ்.பி..

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஶ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், மாவட்டத்திலுள்ள கடனாநதி, ராமாநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் மற்றும் முக்கிய ஆறு, குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் விதமாக மாவட்டத்தில் 22 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தேவையான உதவிகளை செய்யும் விதமாக அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் […]

நெல்லை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றினை பொறுத்தவரை தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சுமார் 2100 கன அடி தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. மழையின் அளவை பொறுத்து […]

உசிலம்பட்டி – நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகள் மற்றும் உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில்., வணிக வளாக கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடை என ஆயிரக்கணக்கான கடைகளில் கடந்த ஒரு வார காலமாக உசிலம்பட்டி நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.,பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நெகிழி பயன்படுத்தி வரும் கடைகளிடம் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.,அவ்வாறு இந்த ஒரு வார காலத்தில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!