ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே களக்குடி விலக்கு அருகே ராமேஸ்வரம் – திருச்சி அரசு பேருந்து இன்று காலை 9:45 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் வடவயல் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கார்த்திக் 27, அண்ணாமலை நகரைச் சேர்ந்த பொக்காரு மகன் பால ராம்கி 30 ஆகிய இருவரும் அரசு பேருந்தின் முன் புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே இறந்தனர். […]
Category: மாவட்ட செய்திகள்
உசிலம்பட்டியில் காவலர்களாக தேர்வான 6 மாணவர்களை உசிலம்பட்டி எம் எல் ஏ பாராட்டினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் கல்வி அறக்கட்டளையின் போட்டி தேர்வுகளுக்கு மாணவ மாணவிகள் இலவசமாக பயின்று வருகின்றனர். போட்டி தேர்வுகளில் மாணவ மாணவிகள் காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற உசிலம்பட்டி கிராமப்புற மாணவர்களான லட்சுமணன், குணால், தனிக்கொடி, அஜித்குமார், விஜய், சிவன்ராஜ் என்ற 6 பேர் தேர்வாகியுள்ளனர்., காவலர் தேர்வில் தேர்வாகி காவலராகியுள்ள 6 மாணவர்களுக்கு பாராட்டு விழா […]
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “KEELAI COMMUNITY CENTRE” அறிமுக நிகழ்ச்சி..
ஜக்கிய அரபு அமீரகம் துபாயில் தேராவில. உள்ள கராச்சி தர்பார் உணவகத்தில் “KEELAI COMMUNITY CENTRE’ ரின் அறிமுக நிகழ்ச்சி 01/12/2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு, இறந்தவர்களுக்கான உதவி மற்றும் பல விஷயங்களை வருங்காலங்களில் எவ்வாறு கையாளரவது மற்றும் கீழக்கரை சமுதாய மக்களுக்கு எப்படி உதவிக்கரம் நீட்டுவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வினை கீழக்கரையைச் சார்ந்த அப்துர் ரஹ்மான், SKV ஷேக், ஜெய்னுலாப்தீன், ஃபயாஸ், […]
தென் மாவட்டங்களில் பலத்த காற்று: செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு; தென்காசி வெதர்மேன் ராஜா தகவல்..
தென் மாவட்டங்களில் இன்று (02.12.2024) பலத்த காற்று வீசும் எனவும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை இழுப்பதால் கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் காற்று வீசுவது போல இன்று தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 […]
பகுதி நேர வேலை (PART TIME JOB) எனும் பெயரில் மோசடி; இருவர் கைது..
ஆன்லைன், சமூக வலைதளங்கள் மற்றும் போலியான இணையதளங்கள் மூலம் ஆஃபர் எனும் பெயரில் தினமும் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் விளம்பர ஆஃபர்களை நம்பி பலர் மோசடி கும்பல்களிடம் சிக்கிக் கொள்வதும், தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவில் புகாரளிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், சைபர் கிரைம் காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மோசடி குறித்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பகுதி நேர வேலை என்ற பெயரில் முதலீடு செய்ய […]
சட்ட விதிகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..
சட்ட விதிமுறைகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போதும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும் போதும் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வமான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆறு கால்நடை சந்தைகளும், இரண்டு சோதனை சாவடிகள் புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் அமைந்துள்ளன. இம்மாவட்டத்திலுள்ள கால்நடை சந்தைகளில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் […]
பல கோடி மதிப்புமிக்க திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது..
பலகோடி மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலையானது, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின் அயராத முயற்சியால் லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது. இது குறித்த தமிழ்நாடு காவல்துறையின் செய்திக்குறிப்பில், கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலை மதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது. இது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடுபோன சிலைகள் […]
உசிலம்பட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள அ.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பசுக்காரன்பட்டி கிராமம் அருகே அமைந்துள்ள பந்தாணி கண்மாய் கரையை சுற்றி இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ராஜாகோவிந்தசாமி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜெயக்கண்ணன்.துணை ஆளுநர் கணேசன் ஆகியோர் தலைமையில் பழங்கள் தரும் நாவல் மரக்கன்றுகள் பெரு நெல்லி,மா, வேம்பு,தான்றிக்காய் மற்றும் புளியமரக்கன்றுகள் என 250 மரக்கன்றுகளை தானமாக […]
உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் பொறுப்பு அசோக்குமார் தலைமையில் நகராட்சி தலைவி சகுந்தலா துணைத்தலைவி தேன்மொழி பொதுப்பணி மேற்பார்வையாளர் பாலமுருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர். நகராட்சி அண்ணா திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தினர். அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சிக்கு தமிழக அரசு போதிய நிதி வழங்க வேண்டும் எனவும் நகராட்சி நிரந்தர ஆணையாளர் மற்றும் பொறியாளர் மற்றும் நகராட்சி மேற்பார்வையாளர் நியமனம் […]
உசிலம்பட்டி பகுதியில் அனைத்து கடைகள் அடைத்து போராட்டம் .
ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 10.10.2024 முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து கட்டிடத்துக்கும் மற்றும் குடோன்க்கும் வாடகைக்கு 18/- சதவீதம் ஜிஎஸ்டி வரி ஆர்சிஎம்/ எப்சிஎம் முறையில் விதித்து அதைக் கட்ட அறிவித்துள்ளது. அனைத்து வணியர்களுக்கும் சுமையை ஏற்படுத்தும் இந்த உத்தரவை ரத்து செய்யவும். இந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்து ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நீக்கம் செய்யவும் ஒன்றிய மாநில அரசை வலியுறுத்தி இந்த ஒரு […]
செங்கோட்டை பகுதியில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ஆர்வத்துடன் திறந்து வைத்த பள்ளிக் குழந்தைகள்..
செங்கோட்டை பகுதியில் சமூக நல ஆர்வலர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் பள்ளி குழந்தைகளால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிட புணரமைப்புப் பணி முடிவுற்று அவ்வகுப்பறை மாணாக்கர் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, ஆசிரியர் பயிற்றுனர் சுப்புலெட்சுமி, குழு ஒருங்கிணைப்பாளர் வெங்காடம்பட்டி […]
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கான கிட் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் தமிழமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.உசிலம்பட்டி அரசு தலைமை பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமணையில் பிரசவ வார்டில் உள்ள 39 குழந்தைகளுக்கும், குழந்தைகள் கிட் உபகரணம் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கான […]
தென்காசி மாவட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழியேற்பு..
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் […]
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி கலந்து கொண்டு பேசும்பொழுது மனித உரிமைகள் மற்றும் கடமைகளை பற்றி மாணவர்கள் புரியும் வண்ணம் சிறப்பாக பேசினார். மாணவர்கள் மனித உரிமைகளையும் கடமைகளையும் கட்டாயம் தெரிந்து […]
பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா?; கேள்வி எழுப்பிய காந்தியவாதி..
பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா? என வடகரை பகுதி சமூக செயற்பாட்டாளர் வாவாமைதீன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மனுநீதி நாளில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில், தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் கல்குளம் சாலை மற்றும் ஒச்சான் ஓடையில் பாலம் கட்டுவதற்காக 2018 இல் இருந்து ஆறு ஆண்டுகளாய் பல மனுக்கள் கொடுத்திருக்கிறேன். 2019-ல் தென்காசி கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து வருவாய்த்துறை பொதுப்பணித்துறை நில அளவு துறை அனைத்து துறைகளும் களப்பணி […]
தென்காசியில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தென்காசி மாவட்டத்தில் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0 நிகழ்வு 25.11.2024 முதல் 24.12.2024 வரை மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும், அனைத்து ஊராட்சிகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் பாலியல் வன்முறைக்கு […]
உலகப் பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தின நிகழ்ச்சி
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு பள்ளிக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை கொடுத்த மதுரை ஆயி என்ற பூரணம் கலந்து கொண்டு பேசும்போது பெண்களை மதித்தல், பெண் கல்வி, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தல், […]
சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகள் அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாம்பவர் வடகரை ஊரின் மேற்கில் அனுமன் நதி ஆற்றுப்படுகை அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் […]
தமிழ்நாடு முதலமைச்சரின் ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி..
“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் மூலம் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நம் தாய் திருநாடாம் தமிழக மண்ணில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அனைவரும் சரியான ஊட்டச்சத்து நிலையில் உள்ளனர் என்பதை உறுதி செய்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் […]
பூமியின் பசுமையை பாதுகாக்க பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி பள்ளி குழந்தைகள் சாதனை..
பூமியின் பசுமையை பாதுகாக்கும் விதமாக பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி நெல்லை மற்றும் நாகர்கோவில் பள்ளி குழந்தைகள் சாதனை படைத்துள்ளனர். விதைப்பந்துகள் மூலம் பூமியில் பசுமையை விதைக்கும் பணியை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பூ. திருமாறன் முன்னெடுத்து வருகிறார். விதைப்பந்துகள் பற்றியும் அதனை தயாரிக்கும் முறைகள் குறித்தும் பள்ளி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் இணைத்து வருகிறார். அந்த வகையில் சமூக ஆர்வலர் பூ.திருமாறன் வழிகாட்டுதலின் படி, […]