கல்வியின் தரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி திருச்சியில் தமீமுன் அன்சாரி பேட்டி.!

திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையும் விழா திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஹோட்டலில் நடந்தது நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், முன்னால் எம்எல்ஏ வுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது  ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நல பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக வெற்றி […]

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கிய அமைச்சர் .!

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு […]

தஞ்சாவூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீர்வரிசையுடன் பொங்கல் பரிசு.!

  தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை கரும்பு , புத்தாடை , பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது  தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினார்கள் .  தஞ்சை மாநகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 பேர் என மொத்தம் 610 பேர் தினமும் தஞ்சை மாநகர் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]

தஞ்சாவூரில் நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் விழா.!

விழிம்பு நிலை நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ தஞ்சையை அடுத்துள்ள பூதலூர் நரிக்குறவர் காலனியில் கோலப்போட்டியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை. தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் மற்றவர்களை களை போல் விழிம்பு நிலை நரிக்குறவர் இன மக்களும் பொங்கல் கொண்டாட தஞ்சை ஜோதி அறக்கட்டளை ஏற்பாடில் கோலப்போட்டி நடைபெற்றது 30 பேர் கோலப்போட்டியில் பங்கேற்று வண்ணக்கோலமிட்டு அசத்தினர். […]

மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப்  பணி அடிக்கல் நாட்டு விழா.!

 மதுரை மாநகராட்சி உத்தங்குடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையேற்றனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் நகராட்சி […]

பாப்பாகுடி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் பாவை பவுண்டேசன் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் கலாச்சார போட்டிகள் மற்றும் நடனங்கள் நடைபெற்றன. போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பெண்கள் சேவை மையம் ஒருங்கிணைந்த நிர்வாகி மோகனப்பிரியா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பாவை பவுண்டேசன் மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபுதாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

இதயா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தில் இதயா மகளிர் கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணமேரி தலைமையில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்துமேரி , அருட்சகோதரி மேரிசந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வழக்கறிஞர் சென்னம்மாள் பங்கேற்று தமிழ் பாரம்பரிய குறித்தும் சட்டங்கள் பற்றியும் மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார்

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் .!

 மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையிலும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞர் கரும்மான முத்துக்குமார் அவர்கள் முன்னிலையிலும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை காவல்துறை குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ஐஸ்டின்பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிகழ்ச்சியில் ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு ஸ்டார் குரு அவர்களால் நலத்திட்ட […]

தஞ்சாவூரில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி .!

தஞ்சாவூரில், சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி .புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பேரணி தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை பனகல் பில்டிங் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 309 ன் படி புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய […]

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.!

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,செங்கிப்பட்டி கிராமத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் இலவச கற்கை மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.    பொங்கல் விழாவில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.    பொங்கல் கொண்டாட்டத்தை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மொபைல் செயலி துவக்கம்..

தமிழ்நாடு அரசால் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய அலைபேசி செயலி (Mobile App) தொடங்கப்பட்டு உள்ளது. இச்செயலியை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் துவங்கி வைத்து அதன் இலட்சினையை (Logo) அறிமுகப்படுத்தினார். இது பற்றிய தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாடு அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தினை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 10 ஆகஸ்ட் 2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு […]

மூளைச்சாவில் உயிரிழந்து உடல் உறுப்புக்களை தானம் வழங்கிய வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசிபாண்டி மகன் தங்கப்பாண்டி வயது 27 இவர் 2 நாட்களுக்கு முன்பாக நண்பர்களுடன் காரில் திருச்சி பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் கார் கதவு திறந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டு தங்கப்பாண்டி சம்பவ இடத்திலே இறந்தார் இவர் உடல் உறுப்பு தானம் செய்ததால் மதியம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யும் பொழுது உசிலம்பட்டி கோட்டாட்சியர் சண்முக வடிவேல் தாசில்தார் பாலகிருஷ்ணன் […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா.!

இராமநாதபுத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குனர்கள், கோபிநாத், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். அலுவலகத்தின் முன்பகுதியில் தமிழர் திருநாளாம் தைபெங்கல் திருநாளை முன்னிட்டு செங்கரும்புகள் கட்டி வைத்து சமத்துவ பொங்கலிட்டு பால் பொங்கியது போல் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என கூறி ஒருவருக்கு ஒருவர் தங்களின் […]

பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோவிலின் கட்டுமான பணிகளை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ஆய்வு – தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையான கட்டமைப்பு என பெருமிதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி திருக்கோவில்., பிரசித்தி பெற்ற இக்கோவிலின் புரணமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது., இந்த கட்டுமான பணிகளை இன்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் நேரில் ஆய்வு செய்தார்., கோவிலின் உள்கட்டமைப்பு, சங்கிலி கருப்பசாமி சிலை, அர்த்த மண்டபம் உள்ளிட்டவற்றின் வேலைப்பாடுகளை கண்டு வியந்த எம்எல்ஏ அய்யப்பன், இந்த கட்டமைப்புகளை காணும் போது தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்ப […]

செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

செங்கம்  அரசு அலுவலர்கள் சமத்துவப் பொங்கல் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி  உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலமிட்டு, கரும்புகள், வாழைக்கன்றுகள் மற்றும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இதில் பாரம்பரிய முறைப்படி புடவை அணிந்து வந்து பெண் அலுவலர்கள் குலவையிட்டபடி, பொங்கல் பானையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி ஏலக்காய் உள்ளிட்டவற்றை கொண்டு பொங்கல் வைத்தனர். இதைத்தொடர்ந்து குத்து விளக்கேற்றி […]

அண்டம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் வட்டம் அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது தலைமை ஆசிரியர் முனைவர் மு. பிரசன்னா தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி அனைவரும் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் லோகநாதன் கலந்து கொண்டனர். விழாவில் நாட்டு நலப்பணி இளம் சிறார் செஞ்சிலுவை சங்கம் பள்ளி […]

ரயில்வே துறையை கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரயில்வே துறையை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பாளர் கட்டி அப்துல் காதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரவண சமுத்திரம் மஸ்ஜிர் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யது நாகூர் ஹாஜி தலைமை தாங்கினார். ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் முகமது இக்பால், செயலாளர் காசியார், பொருளாளர் பீர் முகம்மது, துணைச் செயலாளர் […]

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு..

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், போலி லிங்குகள் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘போலியாக வரும் Link-குகளை கிளிக் செய்வதற்கு முன் பல முறை சிந்தித்துப் பாருங்கள்’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியை மண்டல தலைவர் முகேஷ் சர்மா கொடியை அசைத்து துவக்கி வைத்தார். வீடியோ..

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் 4 சார்பாக 18 வார்டுகளுக்கு ஒரு வாகனம் வீதம்18 தூய்மை பணி மேற்கொள்ளும் வாகனத்தை கொடியாசித்து தெற்கு மண்டல தலைவர் முகேஷ் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம், சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர்கள் அலாவுதீன், மாரிமுத்து, ராமநாதன், சரவணகுமார் மற்றும் அவர்லேண்ட் மேலாளர் […]

கடையநல்லூர் காவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டு..

கடையநல்லூரில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புளியங்குடி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பொது நல சேவை அமைப்பு சார்பில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றிய சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமை தாங்கினார். அப்துல் கலாம் பொது நல அமைப்பின் தலைவர் சின்னராஜ், செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் காந்தி, ஆலோசகர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!