விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..!

பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை: விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..! மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காததால், இந்த ஆட்சியராவது எங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஒன்று திரண்டு வந்த மீனவ மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் […]

வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை.! பொதுமக்கள் குற்றச்சாட்டு.!!

வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்..!     ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் நிர்வாகம் திடீரென […]

தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை.!

தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை தாய் உள்ளிட்ட யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் இரண்டு நாளாக முயற்சி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் நீர் தேக்க பகுதி அமைந்துள்ளது இப்பகுதியில்   (மே 26 அன்று) ஆண் குட்டி யானை ஒன்று தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு ஆற்று மீனவர்கள் மூலமாக தகவல் கிடைத்தது  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் […]

சோழவந்தானில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி திட்டத்தையொட்டி அன்னதானம் நடைபெற்றது

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தையொட்டி மாவட்ட செயலாளர்கள் விஜயன்பன் கல்லாணை, விஷால் கிருஷ்ணா, ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. அன்பில் சுரேஷ், பாண்டி மாணிக்கம், செயற்குழு தீபா, ராமநாதன், முத்து கண்ணன் ,சங்கிலி, ராஜா,கருப்பட்டி ஜனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் பெண்கள் பொங்கல் பானை ஊர்வலம்

உசிலம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தெப்பத்து கருப்பசாமி கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் அம்மன் பூதவாகனத்தில் எழுந்தருளினர். பெண்கள் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி ஷத்திரியகுல இந்து நட்டாத்தி நாடார்கள் உறவின் முறை மற்றும் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி ஷத்திரியகுல நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து பொங்கல் வைத்து திருவிழாவில் கலந்து கொண்டனர். வைகாசி பொங்கல் திருவிழாவில் பத்திரகாளி அம்மனுக்கு அலங்கார தீபாரதனை மற்றும் […]

குடிநீர் குழாயில் கசிவு

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் சாமண்ணா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கிருந்து மேட்டுப்பாளையம் பொது மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் வழியாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பூஸ்டர் தொட்டி மூலம் 8 வார்டுற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது இரண்டு நாட்களுக்கு முன்பதாக குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் யுபிஎல் அருகில் பழுதுபட்டது பழுது நீக்கும் பணியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்கள் இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளனர் பருவமழை மற்றும் […]

தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மழையினால் பாதிக்கப்பட்ட சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் நேரில் ஆய்வு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது கோவை மாவட்டம் சிறுமுகை லிங்காபுரத்தை சேர்ந்த முத்தம்மாள் என்பவர் வீடு மழையினால் பாதிக்கப்பட்டது முத்தம்மாள் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இவர் வீடு மழையால் பாதிக்கப்பட்டது இந்நிலையில் பல்வேறு கட்ட பணி மற்றும் பேரிடர் கலாய்வுக்காக கோவை வந்த தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறுமுகையில் முத்தம்மாள் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு வீடு கட்டித் தர […]

காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து கட்டிடம் சேதம்!

நீலகிரி எல்லநல்லி உள் வட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கேத்தி காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதம் அடைந்தது நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியில் புதிதாக […]

பரவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை மாவட்டம் பரவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்திற்கு பாஜக மண்டல் தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார்முன்னாள் மாவட்டசெயலாளர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார் ஊர்வலத்தில்பரவை பாலாஜி பிச்சை. ஆனந்தன் ஜெகநாதன். துரைபாஸ்கர் இருளப்பன். அழகுராஜா MK .முருகன். கண்ணன் ,ரமணி,ராஜபாண்டி, முருகானந்தம். கார்த்திகேயன் , மணிநாகராஜ்,தனபால், தமிழ்மாநிலகாங்கிரஸ் தலைவர் ராமு அமமுக. செயலாளர் நாகேந்திரன் அதிமுக சரவணன் மகாதேவன்,செந்தில் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ஊர்வலம் பரவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று […]

மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார் அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில் உரிய மரியாதை தரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மரியாதை வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை இதனை கண்டித்து சமயநல்லூரில் அரசு பள்ளி எதிரே தேனூர் கிராமத்தினர் மற்றும் அரசியல் சமூக அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். […]

உசிலம்பட்டியில் வைகாசி பொங்கல் திருவிழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள தில்லை நாயகபுரம் ஊரில் அருள் பாலிக்கும் மகா ஈஸ்வரி அருள் மிகு பத்திரகாளியம்மன் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. உசிலம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் அம்மன் சிம்மவாகனத்தில் ஊர்வலம் மற்றும் இன்று காலை பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி ஷத்திரியகுல இந்து நட்டாத்தி நாடார்கள் உறவின் முறை மற்றும் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி ஷத்திரியகுல நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் […]

கூடை பந்தாட்ட போட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு பள்ளி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி மாலை மின்னொளியில் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. சோழவந்தான் கூடை பந்தாட்ட கழக சேர்மன் தொழிலதிபர் டாக்டர் எம். மருதுபாண்டியன் போட்டியினை துவக்கி வைத்தார். இதில் சென்னை கோவை மதுரை திண்டுக்கல் சிவகங்கை தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் சென்னை வி .கே […]

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளைகளின் சார்பாக ஒன்றிய அரசின் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாவட்டத் தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், புளியங்குடி பிலால் வடகரை சையது அலி, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாத் […]

உடன்காட்டுப்பட்டியில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொடிக்குளம் 5 ஊர் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி உடன்காட்டுப்பட்டியில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ராமன் வரவேற்றார். இதில் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை […]

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் தேவர் மகாலில் மதுரை மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் உசிலம்பட்டி ஒன்றிய ஐந்தாவது மாநாடு நடைபெற்றது.

பட்டாசு வெடித்ததில் சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்

மதுரைசெக்கானூரணி தேவர் சிலை அருகே சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்தில் ஒருவர் படுகாயம் மராமத்து பணிக்காக மேல் மாடியில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது அருகில் சுப நிகழ்ச்சிக்கு ஊர்வலமாக சென்றவர்கள் பட்டாசு வெடித்ததில் அதிர்வு ஏற்பட்டு கட்டடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே குடியிருந்து வருபவர் சின்னத்திரை நடிகை சந்திரசேகரி இவரது கணவர். கணேசன் இவர்களின் வீட்டின் […]

உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கார் மோதி பலி.

உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் குஞ்சாம்பட்டியில் தேனியில் இருந்து வந்த கார் பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதியது. இதில் மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட 4 பேர்கள் சம்பவ இடத்தில் பலி. மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.ஜோதிகா வயது 20 லட்சுமி வயது 55 பாண்டிச்செல்வி வயது28 குழந்தை பிரகலாதன் வயது 2 மற்றும் ஜெயபாண்டி கருப்பாயி வயது 65 […]

தேவகோட்டை நகர சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடை பெற்றது. வைகாசி மாதத்தில் வரும் வளர் பிறை பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் மகிழ்ச்சி , செழிப்பும் பெருகும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் இன்று வைகாச மாத வளர் பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு பல்வேறு மஞ்சள், சந்தனம்,பால், […]

இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி  .!

இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றலான மன்னர் என்.குமரன் சேதுபதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 18 அணிகள் 216 வீரர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டானது மூன்று நாட்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் பெரியபட்டினம் அணியும் இராமநாதபுரம் சேதுபதி அணியும் விளையாடின இதில் பெரிய பட்டிண அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணி பெரியபட்டிணம் முதல் […]

சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாச சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் திருக்கோவில் சுற்றி வலம் வந்தனர் அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய நமச்சிவாயா என்று வலம் வந்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!