ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் உசிலம்பட்டி மாணவனுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரைச் சேர்ந்த கார்த்திக் – இந்திரா தம்பதியின் மகன் வியாஷ் ஆத்விக்., ஸ்கேட்டிங் போட்டியில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் . தமிழக CISCE பள்ளிகளுக்கு இடையிலான சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தனது பயிற்சியாளர் ஆனந்த் பாபு முயற்சியில் பங்கேற்றுள்ளார். இந்தப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் என்று தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழக அணி சார்பில் தேர்வாகி உள்ளார். பதக்கம் வென்று […]

உசிலம்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் வைத்த ப்ளக்ஸால் பொதுமக்கள் குழப்பம்

திமுகவில் இணையப் போவது ஒபிஎஸா ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ.உசிலம்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் வைத்த ப்ளக்ஸால் பொதுமக்கள் குழப்பம. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அஇஅதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகின்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக மீட்புக் குழு என தணி அணியாகி பா.ஜவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்ததால் மீண்டும்; தனித்து […]

1000 ஆண்டு பழமை வாய்ந்தசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் 1.52 கோடி மதிப்பில்புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் மிகவும் பிரிசித்தி பெற்றது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் 1.52 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்வதற்கான பூமி பூஜை நடைபெற்றது பூமி பூஜையில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் […]

சோழவந்தான் அருகே தென்கரை நவநீத கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ ஆறாவது நாள் விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அருகிலிருந்து சீர்வரிசை சுமந்து வந்தனர் தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை மாற்றுதல், பாத பூஜை, நடைபெற்று மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோபாலாஎன தாங்கள் மனம் உருகி வேண்டினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. […]

சோழவந்தான் பேரூராட்சியில் 1.5 கோடி மதிப்பில் நவீன மின் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணி நிறைவடைந்து மின் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். மூலதன மானிய திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோழவந்தான் பேரூராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் நவீன மின் எரிவாயு தகனமேடை கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணி நடைபெற்று கடந்த சில நாட்களுக்கு […]

தவெக 2வது மாநில மாநாட்டிற்கு வந்த கோத்தகிரியை சேர்ந்த இளைஞர் இறப்பு.

தமிழக வெற்றிக்கழக சார்பில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்ற நிலையில் மாநாட்டிற்கு வந்த நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயதானரோஷன் இவர் குன்னூர் தொகுதி தமிழக வெற்றி கழக இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் . என்பவருடன் TN02AX2005 என்ற காரில் மதுரை மாநாட்டிற்கு வந்தபோது இன்று மதியம் 3 40 மணியளவில் மயக்கம் ஏற்பட்டு மாநாட்டு மருத்துவ முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று ஊருக்கு திரும்பும் போது […]

சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மின்சாரம் தடைபட்டதால்பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளான மேலக்கால் திருவேடகம் சோழவந்தான் பசும்பொன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் திடீரென மழை பெய்ததால் மின்சாரம் முன்னறிவிப்பின்றி திடீரென துண்டிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகல் முழுவதும் வெயில் சுமார் 104 டிகிரிக்கு மேல் வாட்டி வதக்கிய நிலையில் இரவு 8 மணிக்கு மேல் திடீரென கரு மேகங்கள்சூழ்ந்து பலத்த மழை கொட்டியது இதனால் சோழவந்தான் சுற்றுப்பகுதிகளான […]

சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேசும் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் கருத்தரங்கு சந்திரன் பேலஸ் மகாலில் நடைபெற்றது. ஜே சி ஐ மதுரை மீனாட்சி தலைவர் சொர்ணாம்பிகா தலைமையேற்று துவக்கி வைத்தார். ஜவுளி நிறுவனர் பி எஸ் மணி, ராஜாராம் முன்னிலை வகித்தனர். பயிற்றுவிப்பாளர் காயத்ரி வரவேற்றார். மாணவ மாணவர்களின் ஆங்கில உச்சரிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் நிறுவனர் மகாலட்சுமி பயிற்றுவித்தார். இதில் […]

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளால் பொதுமக்கள் அவதிஒரு வழி பாதையாக மாற்ற கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் நகருக்குள் வியாபாரம் நிமித்தமாகவும் பணிகளுக்காகவும் வந்து செல்கின்றனர் தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சோழவந்தான் நகரம் ஆக்கிரம்புகளாலும் போக்குவரத்து நெருக்கடிகளாலும் சிக்கி திணறி வருகிறது குறிப்பாக பிரசித்தி பெற்ற ஜெனகை […]

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா.

உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக தேவர் சிலை அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 81 வது பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவில் ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் டி . சரவணகுமார் தலைமையில் சேடபட்டி வட்டார தலைவர்கள் புதுராஜா, ஜெயராஜ் செல்லம்பட்டி வட்டார தலைவர் செந்தில் உசிலம்பட்டி வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன் ஆகியோர் முன்னிலையில் […]

புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்

பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் பெயர் பலகையை அகற்றிய வருவாய் துறை மற்றும் காவல்துறையினரை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல். ஆர்ப்பாட்டம் நடத்தினர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த வாரம் வந்து திறந்து வைத்த பெயர் பலகையினை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வருவாய் மற்றும் காவல்துறையினர் அகற்றினர்.பொது இடங்களில் […]

மின் கட்டணத்திற்கான குறுந்தகவல் அனுப்பாமல் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி

சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணங்களுக் காண மின் கணக்கீட்டை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மின்வாரியம் அனுப்புவது வழக்கம் ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு சில மின் இணைப்புக்கு மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள் எது என்ற குருந்தகவல் அனுப்பாமல் திடீரென மின்கட்டணம் கட்ட வேண்டிய கடைசி நாள் முடிந்து விட்டதாக கூறி மின்வாரிய பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வீடு […]

தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் சங்கம் முக்கிய கோரிக்கை..

தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர் எனக் கூறி, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் […]

சோழவந்தான் அருகே இலவச பேருந்து மற்றும் சாலை வசதி கேட்டு பெண்கள் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு சிமநாதபுரத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பில்கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த வெங்கடேசன் எம் எல் ஏ தொடர்ந்து இதுபோன்று பொதுமக்களின் கோரிக்கைகள் முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றி வருவதாக வருவதாக கூறினார் அப்போது அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதிக்கு மகளிர் இலவச பேருந்து வருவதில்லை எனவும் ஒரே ஒரு பேருந்து காலை மற்றும் […]

கடையில் பணம் திருடிய நபர் அதிரடி கைது..

புளியங்குடி பகுதியில் கடையில் இருந்து பணம் திருடிய நபரை அதிரடியாக கைது செய்த காவல் துறையை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள ஓர் கடையில் கடந்த 16.08.2025 அன்று மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்து உள்ளார். இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஷாம் சுந்தர் மற்றும் சார்பு […]

சோழவந்தான் பகுதியில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கான திறப்பு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சி வடகாடுப்பட்டி கிராமத்தில் வனபகுதிக்கு உரிய பகுதியில் தார் சாலை அமைக்க சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார் இந்த பகுதியில் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி முதல் சுமார் 200 மீட்டர் தூரமுள்ள வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சாலை அமைக்க கோரி இந்த பகுதி பொதுமக்கள் சுதந்திரம் அடைந்த நாள் முதல் சுமார் […]

மன்னாடிமங்கலம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் விவசாய நிலங்களுக்குள் மின் வயர்கள்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கண்மாய் கரையில் முத்தையா கோவில் செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் விவசாய பகுதிகளுக்குள் மின் வயர்கள் இருப்பதால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர் இந்தப் பகுதியில் உள்ள மின் கம்பத்திலிருந்து விவசாயப் பகுதிகளுக்கு செல்லும் மின் வயர்கள் தரையில் செடி கொடிகளுக்கு மத்தியில் இருப்பதாகவும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் மேச்சலுக்கு செல்லும்போது விவசாய செடிகளை உட்கொள்ளும் கால்நடைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் […]

தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தகுதி வாய்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.08.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது […]

மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்

கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் “அன்னை சாரதா நடமாடும் மருத்துவ முகாம்” என்ற தலைப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் சங்கர் நகர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்காக சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில், கோவை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர் தலைமை தாங்கினார். மருத்துவர் நந்தா கிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டு, […]

சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா

அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் அன்பு சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வித் துறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து வெள்ளி விழா கண்ட கணினி பயிற்றுநர் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர் பழனி அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், பெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஹரி பிரகாஷ் வரவேற்புரை வழங்கிய இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!