கீழக்கரையில் தொடரும் மின்வெட்டு: மின்வாரியத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரையில் முன்னறிவிப்பின்றி தொடர்ச்சியாக மின்தடை செய்வதை கண்டித்தும், மின்கணக்கு எடுக்கக்கூடிய கணக்காளர்கள் கால தாமதமாக கணக்கெடுப்பதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழக்கரை துணை மின்நிலையத்திற்கு கீழ் மொத்தம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், மின் இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப மின் ஊழியர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மின் கம்பியாளர், ஊழியர்கள் பற்றாக்குறை […]

புளியரை சோதனை சாவடியில் மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு..

புளியரை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை தென்காசி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில், இரண்டு சார்பு ஆய்வாளர்கள், நான்கு காவல் ஆளினர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

ரேசன் கடை கேட்டு பொதுமக்களுடன் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல் பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள மேல பெருமாள் பட்டி கிராமத்திற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதாகவும் அதுவும் மாதத்தில் ஒரு நாள் மட்டும் ரேஷன் பொருட்கள் இந்த இரு கிராமத்திற்கும் வழங்குவதாகவும் இவ்வாறு வழங்குவதும் முன்னறிவிப்பின்றி திடீரென வழங்குவதால் வேலைக்கு […]

உசிலம்பட்டியில் நட்டாத்தி நாடார் பள்ளி பரிபாலன சபை சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.

உசிலம்பட்டி நட்டாத்தி நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி பரிபாலன சபை சங்கப் பதிவு எண். 35 /1961 மதுரை மாவட்டம் புதிய நிர்வாக குழு தேர்வாகி பதவி ஏற்றனர்.உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி பரிபாலன சபை தலைவர்  வி.பிரசாத் கண்ணன் செயலாளர் எஸ் எம் எஸ் ஆர் நடராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பி சி ஆர் நடராஜன் ஏ எஸ் கே எஸ் […]

தென்காசி நகராட்சியில் தூய்மை காவலர்களுக்கு சமபந்தி விருந்து..

தென்காசி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது. சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமபந்தி விருந்தினை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலர் ராபின், நடிகர் (திருப்பாச்சி) பெஞ்சமின், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், […]

அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி-யை அடுத்துள்ள எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் இன்பராஜ், 2016 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் சேர்ந்த இந்த இளைஞர் தற்போது அசாம் மாநிலம் நிஹாம்பள்ளி முகாமில் இந்திய இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.,இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மதிய வேளையில் மலை பகுதியில் உள்ள தங்களது முகாமிற்கு இராணுவ வாகனம் மூலம் உணவு எடுத்து செல்லும் போது இவர்கள் சென்ற இராணுவ வாகனம் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.,இதில் […]

“டாம்ப்கால்” நடமாடும் சித்தா மருந்துகள் விற்பனை நிலையம்; கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படும் விதம் “டாம்ப்கால்” நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையத்தினை (24.12.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நடமாடும் டாம்ப்கால் விற்பனை நிலையம் குற்றால அருவிகளின் அருகில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தரமற்ற, உரிமம் பெறப்படாத மருந்துகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் […]

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னேற விளையும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னேற விளையும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்  மத்திய இரும்பு, கனரக தொழில் துறை இணை அமைச்சர் ஸ்ரீபூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா, தமிழக பால்வளம், கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: சிக்கிய கடையின் உரிமையாளர்..!புண்ணிய ஸ்தலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்…

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு இவர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தம் மாறி விட்டு அதன் பின் கடற்கரை ஓரமுள்ள தனியார் குளியல் மற்றும் உடைமாற்றும் அறைகளில் உடைமாற்றிவிட்டு கோயிலுக்குள் தரிசனத்திற்காக கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய், மகள் மற்றும் மகன் உட்பட நான்கு பேர் ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் […]

தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவச மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் ,தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடி கிராமத்தில் சில்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக கால்நடை மாட்டு தீவனம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு ஆலக்குடி கிராமத்தின் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் த சுகன்யா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மாட்டுத்தீவனம் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் ஆலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாட்டுத் தீவனம் வாங்கி சென்றனர் . கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடை மாட்டு தீவனம் வழங்கும் […]

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி..

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்,மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 90க்கும் மேற்பட்ட ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் […]

உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை  தெற்கு மாவட்டம் தி மு க சார்பாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நகர திமுக சார்பாக மருத்துவமனையில் உள்ள 100தூய்மை பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . விழாவில் திமுக உசிலம்பட்டி நகரச் செயலாளர்  எஸ் ஒ ஆர் […]

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை..

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர். தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் சரவணன் தலைமையில் வருகை தந்த தொண்டர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கும், வடக்கு வீதியில் […]

நெல்லையில் மின்வாரிய இணைப்பு பணி; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மஜகவினர் கலெக்டரிடம் மனு..

நெல்லை மாவட்டத்தில் ஒரே முகவரியில் உள்ள மின் இணைப்புகளை இணைக்கும் பணிகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் மின்வாரியம் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் கடும் மின் கட்டண உயர்வுக்கு […]

ஆர் எஸ் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24/12/2024) மின் தடை..

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் என் மங்கலம் உப மின் நிலையத்தில் இன்று (24.12. 2024) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால்  ஆர் எஸ் மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள்மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திரா நகர், ஆவரேந்தல் பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், A.R.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் இன்று (டிச.24) காலை 10 மணி முதல் 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும் […]

இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் சார்பாக அரசு மகளிர் கலைக் கல்லூரி நுகர்வோர் தினவிழா…

இராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்கம் மற்றும் நுகர்வோர் நல மன்றம் வணிகவியல் துறை அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைந்து தேசிய நுகர்வோர் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  இராமநாதபுரம் நுகர்வோர் நல சங்கம் தலைவர் பிரேம்சதிஸ் , செயலாளர் லதா இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் இளங்கோ , ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார்  கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் தலைவர் செய்யது இப்ராஹிம் ,  இராமநாதபுரம் வட்டாரம் குழந்தை […]

உசிலம்பட்டி தி மு க நகர் கழக சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 250 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோடு எஸ் கே பி மஹாலில் தி மு க நகர் கழகம் சார்பாக துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தி மு க நகர் கழகம் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் 250 பேருக்கு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா […]

மண்டபத்தில் உள்துறை அமைச்சர் பதவி விலக கோரி விடுதலை சிறுத்தையினர் ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் :இந்திய அரசியலமைப்பு சட்டமேதை  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இழிவு படுத்தி பேசிய உள் துறை அமித் ஷாவை கண்டித்தும், அமித் ஷா பதவி விலகக் கோரியும் மண்டபம் ஒன்றிய விசிகவினர் மண்டபம் பேரூரில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றனர்.  மண்டபம் ஒன்றிய செயலாளர் சீ.கோ.ஆறு,  ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்  கோவிந்தராஜ்,  இந்திய ஜனநாயக பேரவை மாநிலத் துணைச் செயலாளர் சிறுத்தை முத்து வாப்பா,  மீனவர் அணி மாவட்ட […]

ஆதரவற்ற பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் அமைப்பினர்; பொதுமக்கள் பாராட்டு..

குற்றாலம் பகுதியில் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த ஆதரவற்ற பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி, கவுன்சலிங் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே சாலையில், ராகிணி என்ற 55வயது பெண் ஆதரவற்ற நிலையில் குற்றாலம் பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆதரவற்று இருந்த இந்த பெண்மணி மீட்கப்பட்டு குற்றாலம் கலைவாணர் […]

துபாயில் கிரீன் குளோப் மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்..

இன்று (22-12-2024) Green Globe மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) இணைந்து நடத்திய இரத்ததான முகாம், துபாயின் ஜதாஃப் பகுதியில் உள்ள Dubai Health Blood Donation Centreல் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர். Green Globe சார்பில், இரத்த தானத்தில் பங்கேற்ற அனைவருக்கும் துபாய் ஹெல்த் மையத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்  ஏற்பாடுகளை Green Globe அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் மற்றும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!