தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 05.02.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவது, புகையிலை தடுப்பு பணி குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வது, பருவ கால நோய்கள் தடுப்பு பற்றிய நடவடிக்கைகள், இள வயது திருமணம் மற்றும் இள வயது கர்ப்ப தடுப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பொது […]
Category: மாவட்ட செய்திகள்
உசிலம்பட்டி தேவர் கல்லூரி அருகில் போதை மாத்திரை,கஞ்சா விற்ற 4 பேர் கைது
உசிலம்பட்டியில் தேவர் கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது.,உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் சந்தேகப்படும் படி நின்றிருந்த 4 பேரிடம் சோதனை நடத்தியதில் அவர்களிடமிருந்து 200 போதை […]
சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் குவிந்துள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் சிலை அருகே மது பிரியர்களால் காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் குவிந்து கிடக்கின்றது இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காலை முதல் இரவு வரை காமராஜர் சிலையின் பின்புறம் அமர்ந்து மது அருந்துபவர்கள் காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகளை அங்கேயே விட்டுச் சென்று விடுகின்றனர் இதனால் சுகாதாரத் கேடு ஏற்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக […]
ரூ.4 ஆயிரம் இருந்தால் போதும். கெட்டுப் போன உணவையும் விற்கலாம். சுகாதாரத்துறையினரின் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி
கெட்டுப்போன கிரில் சிக்கனால் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாக காரணமான தனியார் உணவகம் மீது நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறையினர் மீது பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றுகரையில் உள்ள தனியார் உணவகமானபிரிடா ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 20க்கு மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதில் இன்னும் 8 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் இதில் கூடைப்பந்தாட்ட […]
கீழக்கரையில் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அல் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா நிறுவனர் வழக்கறிஞர் நஃபீல் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஹஜ் உம்ரா சேவை மற்றும் ஹலால் ஷாப்பி மற்றும் டவுன்ஷோர் கார்மெண்ட்ஸ் என்ற ஆண்கள் ஆடையகம் போன்றவை விற்பனை செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கு கீழக்கரை துணை சேர்மன் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் , திமுக அயலக அணி மாவட்ட தலைவர் ஹனீஃபா ,தமுமுக மாநில துணை செயலாளர் சலிமுல்லாஹ் […]
சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு. மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தியும் ஏற்பட்டதுஇதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீதி 13 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர் சோழவந்தான் வைகை பாலம் அருகே உள்ள பிரபல அசைவஹோட்டலில் நேற்றைய முன் தினம் இரவு கூடை பந்தாட்டவிளையாட்டு வீரர் பிரசன்னா உட்பட 10 பேரும் மற்றும் குழந்தை உட்பட 12 பேரும் இங்குள்ள தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் […]
ஹைதராபாத் நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷன்; கீழக்கரை மாணவன் சாதனை
ஹைதராபாத்தில் நடந்த நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷனில் மூன்றாவது இடம் பெற்று கீழக்கரை மாணவன் அப்துல்லா சாதனை படைத்துள்ளார். நேஷனல் அகாடமி பள்ளியில் பயிலும் ஷகீல் மைதீன் என்பவரது மகன் அப்துல்லா என்ற மாணவன் 24 பள்ளிகளுக்கு இடையே நடந்த குவிஸ் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து இரு பள்ளிகள் மட்டுமே இதில் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேஷனல் அகாடமி பள்ளி மற்றும் மதுரையைச் சார்ந்த மற்றொரு […]
செங்கோட்டை அரசு பள்ளியில் அழகிய ஓவிய கண்காட்சி..
செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியரின் அழகிய ஓவியப் படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி 05.02.2025 புதன் கிழமை நடைபெற்றது. மின்நகா் ஹியூமன் அப்லிப்ட் டிரஸ்ட் இயக்குநா் ரெங்கநாதன் தலைமை தாங்கி ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்தார். மின்நகா் சுற்றுச் சூழல் விஞ்ஞானி விஜய லெட்சுமி, வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்ல இயக்குநா் திருமாறன் மற்றும் தேசிய பசுமைப் படையின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி […]
டெல்லியை நோக்கிய பயணத்தில் திமுக மாணவரணி..
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாணவர் அணியினர், மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி பயணம் மேற்கொண்டனர். ஒன்றிய பாஜக அரசின் பல்கலைக் கழக நிதிக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறி முறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக […]
ஆதாய கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அடிதடி வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..
சிவகிரியில் ஆதாய கொலை வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் செங்கோட்டையில் அடிதடி வழக்கின் இரண்டு குற்றவாளிகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குமரபுரம் சமுத்திரவேல் என்பவரின் மகன் தங்கமாரி (34) என்பவரை சிவகிரி காவல் துறையினர் […]
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சாவூர் மாநகர கலந்தாய்வு கூட்டம்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாநகர கலந்தாய்வு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஏ.வி.எம்.ஆனந்த், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார். செய்தி தொடர்பாளர் முருகேசன். இளைஞரணி செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்த கூட்டத்தில், வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும். இந்த கூட்டத்தில் மாவட்ட, […]
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம் ,பூதலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பூதலூர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர் . பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் , செவிலியர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து […]
ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் . ! மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர் இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை […]
வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வனச்சரக வனதுறையினருக்கு கமுதி டீ.கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வன உயிரின வேட்டை நடப்பதாகவும் வன உயிரனங்களின் இறைச்சி விற்பனை செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து. சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வனபாதுகாப்புபடை உடன் தனிப்படை அமைக்கப்பட்டு வன உயிரினங்களை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை தேடும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டீ. கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆட்காட்டி பறவையை சுட்டு […]
வெளிப்பட்டணம் ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டணம் தாயுமானவர் சுவாமி கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலயம் இங்கு ஸ்ரீ மகா கணபதி, பாலமுருகன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஆலயத்தின் முன் அமைந்துள்ள குண்டத்தில் அக்னி வார்த்து யாகசாலை நடைபெற்று பூர்ணாகுதியும் சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை மங்கள வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்து வானில் கருடன் வட்டமிட்டபடியே விமான […]
மதுரையில் துணை முதலமைச்சரை வரவேற்ற திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ
ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தபோது திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தார் இதில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்
சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் அமெரிக்க இரட்டைய பட்ட திட்டம்
கல்வித் துறையில் புதிய முன்னேற்றமாக, கல்வி குழும பள்ளிகள் மற்றும் அகாடமிகா இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (Academica International Studies, USA) இணைந்து அமெரிக்க இரட்டைய பட்ட திட்டத்தை (American Dual Diploma Program) அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 14 மாநிலங்களில் 205 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பங்காளித்துவத்தில் கொண்டு செல்லும் அகாடமிகா, உலகளவில் 55 நாடுகளில் 50,000 மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், இந்திய மாணவர்கள், இந்திய உயர்நிலை […]
தஞ்சையில் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடை பயிற்சி.
தஞ்சையில் தொடர்ந்து நடைபெறும் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சி… இன்று காலை நடைபெற்ற நடைபயிற்சியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் துவங்கப்பட்ட நடப்போம் நலம்பெறுவோம் என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை தொடரும் வகையில், மாதந்தோறும் முதல் ஞாயிறன்று 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சியை தஞ்சை சத்தியா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது . அந்த வகையில் இன்று காலை நடைபெற்ற […]
சோழவந்தான் பேருந்துக்காக மூன்று மணி நேரம் காத்திருந்த பயணிகள்.போக்குவரத்து துறையின் தொடரும் அலட்சியம்
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இருந்து சோழவந்தான் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் காத்திருந்த அவலம் அரங்கேறியது முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் மக்கள் பல்வேறு பணிகளுக்கு வெளியூருக்கு சென்று வரும் நிலையில் திருமங்கலம் மற்றும் செக்கானூரணியில் இருந்து சோழவந்தான் மற்றும் அதன் சுற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் செக்கானூரணி பேருந்து நிலையத்தில் இரண்டாம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பேருந்துக்காக வெயிலில் […]
லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது நாட்டை அந்நிய நாட்டுக்கு காட்டி கொடுப்பதற்கு சமம் காங் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி ஆவேசம்.!
தேவகோட்டையில் தியாகி கே.எம்.சுப்பையா 107 வது பிறந்த நாள் விழா, தியாகிகள் தின விழா கே.எம். எஸ். சிந்தனைச் சோலை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. நிறுவுநர் தெய்வசிகாமணி வரவேற்றார். செயலாளர் துரை தமிழ்ச்செல்வன் அறிக்கை வாசித்தார். இவ்விழாவில் கே.எம்.எஸ். படத்தை திறந்து வைத்து காங். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி பேசுகையில், இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை முத்து இவ்விழாவில் பங்கேற்று உள்ளார். பாராட்டுக்கள். இஸ்ரோ விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகள் செய்து அதில் […]
You must be logged in to post a comment.