தஞ்சாவூர் லயன்ஸ் கோல்டன் ஹாலில் தஞ்சாவூர். மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் லயன்ஸ் வழக்கறிஞர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதென்றும் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றக் கூடாது என்றும் அரசியல் சட்டம் ஏழை. எளிய சாமானிய மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக காப்போம் என உறுதிமொழி யேற்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் சந்திரமோகன்,வழக்கறிஞர் ராஜ் மோகன். […]
Category: மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!!
கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!! *தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு சென்னையில் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் குடும்ப அட்டைக்காரர்களுக்கு வழங்கினார் கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உடன் இருந்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பாபு
பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை மாற்றியமைக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் .!
பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தைமாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம்.! ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் சந்தித்து கடிதம் வழங்கினார். இது […]
கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிக்கு ஜன.9ம் தேதி 9 ரயில்கள் மாற்றுபாதையில் இயக்கம்
கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக நாளை ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை அன்று (ஜனவரி 9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய ஒன்பது ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி […]
கீழக்கரையில் கள்ளத்தனமாக மது விற்பனையை தடுக்க கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளதனமாக மது பாட்டில் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய கோரியும் கள்ள சந்தையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இதற்கு துணை போகும் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் ரவி தலைமை […]
மதுரையில் தலைமை ஆசிரியர்கள் நடத்திய குழந்தைகளுக்கான தற்காப்பு பாதுகாப்பு நிகழ்ச்சி.!
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் HCL foundation மற்றும் OFERR நிறுவனமும் இணைந்து எனது பள்ளி நிகழ்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். OFERR நிறுவனத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரி ஜெய்சங்கர், HCL foundation program officer ராஜலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு !
சுரக்குடிப்பட்டி, வெண்டையம்பட்டி, இராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை வெள்ள பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட சுரக்குடிப்பட்டி, இராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கடும் மழை வெள்ளத்தால் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகியது.இதனால் மீண்டும் நாற்று வாங்கி நடவு செய்யவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.உரிய இழப்பீடு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் […]
அய்யனார் குளம் பகுதி விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம்,அய்யனார் குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க முயற்சிப்பதாக அதிகாரிகள் மீது புகார் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அய்யனார்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த புயல் மழை காரணமாக அறுவடைக்கு முன்பே வயல்களில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரிய […]
உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் தஷ்விக்(4).யுகேசி படிக்கின்றான்.நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியவன் வீட்டின் அருகில் விளையாட்டிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடிய போது வீட்டின் அருகிலுள்ள துரைராஜ் என்பவரின் கிணற்றில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி தாலுகா போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து கிணற்றிலிருந்த சிறுவனின் உடலை மீட்டனர்.போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது […]
70 வயசுல டைவர்ஸ் பொய்யா ஏமாத்தி மோசடி எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை.!
‘ ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 70 வயசுல என் புருஷன் என்னை டைவர்ஸ் பண்ணிட்டாருன்னு பொய்யா ஏமாத்தி மோசடி செஞ்ச பாவிங்க.. 250 சவரன் நகையவும் பணத்தையும் ஏமாத்திட்டாங்க..- எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பித் தள்ளிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை… ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் போஸ் தேவர். இவருக்கு பஞ்சவர்ணம் மற்றும் பாக்கியம் என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். போஸ் கடந்த 2022 டிசம்பர் 1ஆம் […]
கீழக்கரையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்க்கான பயிற்சி.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில் மன்றத்தின் நுடப (TNSCST) சார்பாக தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு என்ற தலைப்பில் ஆறு நாட்களில் இரண்டு கட்டங்களாக பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வர் ஷேக்தாவூது தலைமை தாங்கி பேசுகையில் பயிற்சி முகாமின் முக்கியத்துவத்தையும், தொழில் துறையில்அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் பயிற்சி முகாமின் மாணவர்கள் புதிய திறன்களைப் பெறும் அவசியத்தையும் […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,தொன்ராயன்பாடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை ஆற்ற வந்த மகிமை ராகினி (பெண்கள் சுகாதார தன்னார்வலர் மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் )பெண்களுக்கான புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? மார்பக புற்றுநோய் என்றால் என்ன? கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? என்பதை பற்றி தெளிவாக கலந்து கொண்ட […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ்சி திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்.! 50-க்கும் மேற்பட்டோர் கைது .!!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சிபிஎஸ் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது கேணிக்கரை […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ராமநாதபுரத்தில் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!
ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டி பிளாக் அருகே தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெறக்கோரியும் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் சுப.த.திவாகர், குணகேசரன், ராமர், இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், முன்னாள் எம்.பி பவானிராஜேந்திரன், மண்டபம் ஒன்றியம் பிரவீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர் […]
தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா
பாரத் கல்வி குழுமத்தின் சார்பாக தமிழர்கள் தைத்திருநாளாம் பொங்கல் விழாவை பாரத் கல்லூரி வளாகத்தில், ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டு துறையும், பாரத் மகளிர் மன்றம் மற்றும் உள்தர உறுதி கட்டுப்பாட்டு துறை இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டா டினர். பாரத் கல்லூரியின் இப் பொங்கல் விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பர உடையான சேலை, தாவணி .வேஷ்டி, சட்டை ஆகிய உடைகளை அணிந்து மேலும் பொங்கலை மண் அடுப்பு, மண்பானை, கரும்பு இவைகளை […]
கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கறவை மாடுகளுடன் இலவசமாக பால் வழங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் முத்துப்பாண்டி. வெண்மணி சந்திரன். மானூத்து மகேந்திரன். மானூத்து ஜெயபாண்டி .சி பி எம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகன் விக்கிரமங்கலம் ரவி. கேசம் பட்டி ஜெயக்குமார் வடக்கம்பட்டி குருசாமி வடக்கம்பட்டி ரவி. கருமாத்தூர் ஜெயராஜ் தளபதி ராமர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் […]
தஞ்சாவூரில்,கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பொங்கல் போனஸ் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொங்கல் போனஸ் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் என தமிழக முழுவதும் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையொட்டி தஞ்சையில் தலைமை தபால் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐசிசி டியு மாவட்ட தலைவர் கே .ராஜன் தலைமை வழங்கிய தலைமை வகித்தார்.ஏஐசிசிடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயபால் ,நடராஜன் , அல்போன்ஸ் ,ஏ ஐ சி டபிள்யூ எஃப் நகர […]
ராமநாதபுரம் அரண்மனையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்யக்கோரியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க கோரியும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூபாய்1000 உடனே வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இதில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் […]
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற தங்கம் பறிமுதல் .! 3 பேர் கைது.!!
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற தங்கம் பறிமுதல் : 3 பேர் கைது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கட்டதி வரப்பட்ட 11கிலோ 300 கிராம் தங்கத்தினை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். தமிழகம் அருகே இலங்கை இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள், பீடியிலைகள், பலசரக்கு பொருட்கள் கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. கடத்தல் குறித்து இந்திய, இலங்கை […]
மண்டபம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்து.!
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே தலை குப்புற கவிழ்ந்து விபத்து: நால்வருக்கு காயம்: அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு யாத்திரையாக வந்த ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்ப போது மண்டபம் அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நால்வர் காயம் அதிர்ஷ்டவசமாக அனைவரும் […]
You must be logged in to post a comment.